search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலகக் கோப்பை கிரிக்கெட்"

    • ஆஸ்திரேலிய அணி தங்களுக்கு என தனி செஃப்-ஐ பயன்படுத்தி வருகிறது
    • இந்திய வீரர்கள் சிலர் இதுபோன்று நியமித்துள்ளதால், தானும் வைத்துள்ளதாக ஸ்டோய்னிஸ் கூறுகிறார்

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கியது. வருகிற 19-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. சுமார் ஒன்றரை மாத காலம் நடைபெறும் நீண்ட தொடர் என்பதால், வீரர்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்புவார்கள். அப்போதுதான் தொடர் முழுவதும் திறம்பட விளையாட முடியும்.

    உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உணவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பொதுவாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வீரர்கள் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யும்போது, இந்தியாவின் வெப்பத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாமல் அவதிப்படுவார்கள். அதேபோல் உணவும் அவர்களுக்கு ஏற்றபடி இருக்காது.

    இதனால் பெரும்பாலும் தங்களுக்கென தனி செஃப்-ஐ வைத்துக் கொள்வார்கள். தற்போது, இந்தியா வந்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி தங்களுக்கென தனியாக செஃப்-ஐ ஏற்பாடு செய்துள்ளது.

    இந்த நிலையில், தனது உடதற்குதியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்பிய அந்த அணியின் மார்கஸ் ஸ்டோய்னிஸ் தனக்கென தனி செஃப்-ஐ நியமித்துள்ளார். இவர் போட்டிகளுக்காக இந்தியா முழுவதும் சுற்றி வருகிறார். அவருடன் அவரது செஃப்-வும் இந்தியாவை சுற்றி வருகிறார். இந்த செஃப் பிரெஞ்ச் உணவு தயாரிப்பதில் கைத்தேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.

    "இந்திய வீரர்களின் சிலர் இதுபோன்று தனியாக செஃப் வைத்துள்ளனர். அதனால் எனக்கும் அதுபோன்று யோசனை தோன்றியது" என ஸ்டோய்னிஸ் தெரிவித்துள்ளார். மேலும், "நான் எப்போதும் எனது உணவு மற்றும் போட்டியாக்காக தன்னை தயார்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    சல்தான்ஹா என்ற அந்த செஃப், அமெரிக்காவின் சிகாகோ மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில் உள்ள பிரபலமான ரெஸ்டாரன்டில் பணிபுரிந்தவர். லக்னோ அணியின் கே.எல். ராகுல் பரிந்துரை செய்ததன் பேரில், ஐ.பி.எல். போட்டியின்போது மார்கஸ் ஸ்டோய்னிஸ், இவரை சந்தித்துள்ளார். தற்போது உலகக் கோப்பையின்போது செஃப்-ஆக பயன்படுத்திக் கொண்டார்.

    ஸ்டோய்னிஸ் இந்த உலகக் கோப்பையில் மூன்று போட்டிகளில் விளையாடி 5, 20 (நாட்அவுட்), 21 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

    • அக்டோபர் 14-ந் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அகமதாபாத்:

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் அக்டோபர் 14-ந் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியின்போது, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ரசிகர்கள் சிலர், அவரை நோக்கி "ஜெய் ஸ்ரீராம்" என கோஷமிட்டனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணைய தளத்தில் வைராலாகியது. இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்களை குறிவைத்து முறையற்ற வகையில் ரசிகர்கள் நடந்து கொண்டதாக ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது. 

    இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியதாவது:-

    பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுக்கான விசா வழங்கும் நடைமுறையில் நிலவும் தாமதம், பாகிஸ்தான் ரசிகர்களுக்கு விசா கொள்கை இல்லாதது குறித்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீண்டும் ஐசிசி-யிடம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். மேலும், கடந்த 14-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி வீரர்களை டார்கெட் செய்து மைதானத்தில் நடந்த சம்பவத்தை கண்டித்தும் புகார் அளித்துள்ளோம்.

    இவ்வாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    • விளையாடும் அனைத்து அணிகளுமே பலமானவை என்பதால் சவால் நிறைந்ததாகவே இருக்கும்.
    • இருப்பினும் நம் மண்ணில் நடப்பதால் இந்திய அணி கோப்பையை வெல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன் பட்டியில் நடைபெற்ற தனியார் விழாவில் கலந்து கொண்ட வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தாண்டு உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும். விளையாடும் அனைத்து அணிகளுமே பலமானவை என்பதால் சவால் நிறைந்ததாகவே இருக்கும். இருப்பினும் நம் மண்ணில் நடப்பதால் இந்திய அணி கோப்பையை வெல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    அணியில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இளம் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    அதேவேளையில் இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் இடம்பெறாதது மற்றவர்களை போலவே எனக்கும் பெரும் வருத்தமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சாதனை புள்ளிவிவரங்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது.
    • அணியின் கலவை சரியாக அமைய வேண்டும் என்பதற்காக சில வீரர்களை தேர்வு செய்ய முடியாமல் போய் விடுகிறது.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு ஆயத்தமாகி வரும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஒரு கேப்டனாகவும், தொடக்க ஆட்டக்காரராகவும் வெளியில் நடக்கும் விஷயங்களை பற்றி கவலைப்படாமல் மனதை நெருக்கடியின்றி எப்படி இயல்பாக வைத்துக் கொள்கிறேன் என்பதே முக்கியம். இன்னும் சொல்லப்போனால் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக எத்தகைய மனநிலையில் இருந்தேனோ அதே மனநிலைக்கு செல்ல விரும்புகிறேன். அப்போது மனதளவில் மிகவும் நல்ல நிலையில் இருந்தேன். போட்டிக்கும் சிறப்பாக தயாராகி (5 சதம் உள்பட 648 ரன் குவித்தார்) இருந்தேன். அந்த சமயம் என்னவெல்லாம் செய்தேனோ அதனை மீண்டும் நினைவுக்குள் கொண்டு வந்து, அதன்படி தயாராக முயற்சிக்கிறேன். அதை செய்ய எனக்கு போதுமான நேரம் இருக்கிறது.

    ஒரு போட்டியின் முடிவு அல்லது ஒரே ஒரு சாம்பியன்ஷிப் என்னை எந்த வகையிலும் மாற்றி விடாது. கடந்த 16 ஆண்டுகளாக எப்படி இருக்கிறேனோ அதே போல் தான் இப்போதும் இருக்கிறேன். எனக்குள் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய தேவை இல்லை. அடுத்த 2 மாதங்களில் எனது இலக்கை எப்படி நிறைவேற்ற போகிறேன் என்பதில் ஒரு வீரராகவும், அணியாகவும் கவனம் செலுத்த வேண்டும். மற்றபடி ஒன்று அல்லது 2 மாதத்திற்காக ஒரு நபர் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை.

    சாதனை புள்ளிவிவரங்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது. உங்களுக்கு என்ன தரப்படுகிறதோ அதை உற்சாகமாகவும் மகிழ்ச்சியுடனும் செய்ய வேண்டும். எது நமக்கு மகிழ்ச்சியை தருகிறது என்பதை தான் நான் சிந்திக்கிறேன். என்னை பொறுத்தவரை சக வீரர்களுடன் இணக்கமான சூழலை கொண்டு வந்து, சிறந்த நினைவுகளை உருவாக்க வேண்டும். உங்களிடம் என்ன இருக்கிறது, என்ன கிடைக்கிறது என்பதை வைத்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

    அணியின் கலவை சரியாக அமைய வேண்டும் என்பதற்காக சில வீரர்களை தேர்வு செய்ய முடியாமல் போய் விடுகிறது. அந்த சமயத்தில் நானும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் வாய்ப்பு கிடைக்காத வீரர்களிடம் அது குறித்து விளக்கம் அளித்திருக்கிறோம். இதே போல் களம் காணும் 11 பேரை இறுதி செய்யும் போதும், வெளியில் இருக்கும் மற்ற வீரர்களிடம் நீங்கள் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பதை தெளிவுப்படுத்தி விடுவோம்.

    சில நேரங்களில் அவர்களது இடத்தில் என்னை வைத்து பார்ப்பேன். 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு என்னை தேர்வு செய்யாத போது, மனம் உடைந்து புலம்பி இருக்கிறேன். ஆனால் கேப்டன், பயிற்சியாளர், தேர்வாளர்கள் ஆகியோர் எதிரணி, ஆடுகளம், எங்களது பலம், பலவீனம் ஆகியவற்றை எல்லாம் கணக்கில் கொண்டே அணியை தேர்வு செய்கிறார்கள். ஆனால் எல்லா நேரமும் நமது தேர்வு சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் தவறு நடக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிரிசிற்குள் நில்லுங்கள் நிம்மதியாக வாழுங்கள் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
    • நெருக்கடியான ஆட்டத்தில் கோலி, ரோகித், ஸ்மித், ரூட் அல்லது எந்த ஒரு முக்கியமான பேட்டரையும் இப்படி மன்கட் முறையில் ரன் அவுட் செய்வதை கற்பனை செய்து பாருங்கள்.

    சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரின் 2-வது போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஷதாப் கானை பரூக்கி மன்கட் செய்தார். இது பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பாபர் அசாம் மிகவும் ஏமாற்றத்துடன் காணப்பட்டார். அவர் ஆப்கான் சீனியர் வீரர் முகமது நபியுடன் நீண்ட வாதத்தில் ஈடுபட்டார். ஆப்கான் வீரர்களிடம் கைகுலுக்கவே மறுத்தார் ஷாஹின் ஷா அஃப்ரீடி.

    இந்தச் சம்பவம் குறித்து இந்திய வீரர் அஸ்வின் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவுரை வழங்கியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலகக் கோப்பை அரையிறுதியில் அல்லது ஒரு நெருக்கடியான ஆட்டத்தில் கோலி, ரோகித், ஸ்மித், ரூட் அல்லது எந்த ஒரு முக்கியமான பேட்டரையும் இப்படி மன்கட் முறையில் ரன் அவுட் செய்வதை கற்பனை செய்து பாருங்கள். அவ்வளவுதான் நரகமே இடிந்து விழுந்தது போல் கூக்குரல்கள் எழும். இன்னும் பலரும் இதனை ஒரு அவுட் ஆக்கும் முறையாக ஏற்றுக் கொள்ளவில்லை.

    இதற்கு ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது. எந்த பேட்டராக இருந்தாலும் என்ன சூழ்நிலையாக இருந்தாலும் பவுலர் கையை சுத்துவதை நெருக்கமாக கவனித்து அதன் பிறகே கிரீசிலிருந்து கிளம்ப வேண்டும். இதைச்செய்யாமல் முன்னாடியே கிரீசை விட்டு வெளியேறி மன்கட் செய்யப்பட்டு அவுட் ஆனால் அந்த பவுலரை கரகோஷம் செய்து பாராட்டி பேட்டரிடம் நீங்கள் இன்னும் கொஞ்சம் யோசித்துச் செயல்பட்டிருக்கலாம் என்றுதான் கூற வேண்டும்.

    பவுலர் ஆக்ஷனை பூர்த்தி செய்யவே இல்லை. அவர் இதனை 5-வது அல்லது 6வது ஓவரில் செய்ய வேண்டியதுதானே" என்ற வாதங்கள் நொண்டிச்சாக்குதான். பவுலர் கையைச் சுழற்றி பந்தை டெலிவரி செய்யத் தயாராகி விட்டு ரன்னர் முனை பேட்டரை ரன் அவுட் செய்ய முடியாது. ஏனெனில், விதிப்படி அது தவறு.

    இப்போது எல்லா அணிகளும் இதைச் செய்வதில்லை. ஆனால் உலகக்கோப்பை வருவதால் நிச்சயம் இதைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. சும்மா ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட் பேசி நாங்கள் என்ன ஆனாலும் அப்படிச் செய்ய மாட்டோம் என்று சொல்வதெல்லாம் எதிரணியினருக்கு ஒரு சாளரத்தை திறந்து விடுவதில்தான் போய் முடியும். எந்த ஒரு அணியும் தங்கள் வழியில் வரும் வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும், ஏனெனில் உலகக்கோப்பையை வெல்வதென்பது வாழ்நாள் சாதனையல்லவா.

    சிலருக்கு வெற்றி பெறுவதுதான் அனைத்தும். மற்ற சிலருக்கு அப்படி இல்லாமல் இருக்கலாம். நாம் இரண்டு நிலைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    கிரிசிற்குள் நில்லுங்கள்! நிம்மதியாக வாழுங்கள்!

    இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.

    • விராட் கோலி அந்த வரிசையை ஏற்கலாம் என்று சில வதந்திகளை கேள்விபட்டுள்ளேன்.
    • விராட் கோலி தனது இடமான 3-வரிசையை விரும்புவதை நாங்கள் அறிவோம்.


    புதுடெல்லி:

    ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியாவில் தொடங்க இன்னும் 41 தினங்களே உள்ளன.

    ஆனால் இந்திய அணிக்கு இதுவரை 4-வது வரிசையில் விளையாடக்கூடிய வீரர் உறுதியாக அடையாளம் காணப்படவில்லை.

    இந்த நிலையில் 4-வது வரிசையில் ஆடுவதற்கு விராட் கோலி பொருத்தமானவர் என்று தென்ஆப்ரிக்க அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய அணிக்கு "நம்பர்-4" பேட்ஸ்மேன் யார்? என்று இன்னும் பேசிக் கொண்டு இருக்கிறோம். விராட் கோலி அந்த வரிசையை ஏற்கலாம் என்று சில வதந்திகளை கேள்விபட்டுள்ளேன். அதற்கு நான் மிகப்பெரிய ஆதரவை தெரிவிப்பேன்.

    4-வது வரிசையில் ஆடுவதற்கு விராட் கோலி பொருத்தமானவர் என்று நினைக்கிறேன். நிலைத்து நின்று விளையாடக்கூடிய அவரால் தான் மிடில் ஆர்டரில் எந்த வரிசையிலும் ஆட முடியும்.

     

    ஆனால் அவர் அதை செய்ய விரும்புகிறாரா? என்று எனக்கு தெரிய வில்லை. விராட் கோலி தனது இடமான 3-வரிசையை விரும்புவதை நாங்கள் அறிவோம். அந்த வரிசையில் தான் அவர் தனது அனைத்து ரன்களையும் குவித்தார்.

    அதே நேரத்தில் அணிக்கு என்ன தேவை என்று கருதினாலும் நாம் அதற்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    34 வயதான விராட் கோலி ஒருநாள் போட்டியில் 4-வது வரிசையில் 39 ஆட்டததில் விளையாடி 1,767 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 55.21 ஆகும். அதிகபட்சமாக 139 ரன் எடுத்துள்ளார். இந்த வரிசையில் 7 சதமும், 8 அரை சதமும் அடித்துள்ளார்.

    விராட் கோலி 3-வது வரிசயைில் 210 ஆட்டத்தில் 39 சதத்துடனும், 55 அரை சதத்துடனும், 10,777 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 60.20 ஆகும். அதிகபட்சமாக 183 ரன் குவித்துள்ளார்.

    ஒட்டுமொத்தத்தில் அவர் 275 ஆட்டத்தில் 12,898 ரன் எடுத்துள்ளார். சராசரி 57.32 ஆகும். 46 சதமும், 65 அரை சதமும் அடங்கும். விராட் கோலியும், டி வில்லியர்சும் ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    விராட் கோலி 4-வது வரிசையில் ஆடும் பட்சத்தில் ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஆகியோரில் ஒருவர் 3-வது வீரராக ஆடலாம்.

    காயத்துக்காக ஆபரேசன் செய்து கொண்ட இருவரும் அதில் இருந்து மீண்டு உடல் தகுதி பெற்றதால் ஆசிய கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆசிய கோப்பை போட்டியில் அணியின் நிலை பொறுத்தே உலக கோப்பைக்கு 4-வது வரிசை இறுதி செய்யப்படும். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான், இலங்கையில் இந்த போட்டி நடக்கிறது.

    • உலகக் கோப்பை போட்டி 10 மைதானங்களில் நடக்கிறது.
    • இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் சேப்பாக்கத்தில்தான் அக்டோபர் 8-ந்தேதி நடக்கிறது.

    சென்னை:

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது.

    இதில் போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    உலகக் கோப்பை போட்டியின் 48 ஆட்டங்களும் அகமதபாத், சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத், பெங்களூர், புனே, லக்னோ, தர்மசாலா ஆகிய 10 மைதானங்களில் நடக்கிறது.

    உலகக் கோப்பை போட்டி நடைபெறும் இடங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) குழு ஏற்கனவே பார்வையிட்டு ஆய்வு செய்து இருந்தது.

    இதற்கிடையில் ஐ.சி.சி.யின் தலைமை ஆடுகள பராமரிப்பாளர் உலகக் கோப்பை போட்டி நடைபெறும் மைதானங்களை தற்போது ஆய்வு செய்து வருகிறது.

    அதன்படி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஐ.சி.சி. தலைமை ஆடுகள பராமரிப்பாளர் ஆன்டி அட்கின்சன் நேற்று ஆய்வு செய்தார். முழு வீச்சில் தயாராகி வரும் ஆடுகள தன்மை, அவுட் பீல்டு உள்ளிட்ட பகுதிகளை அவர் ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.ஐ.பழனி கூறும்போது, "மிகப்பெரிய போட்டிக்கு முன்பு நடத்தப்படும் வழக்கமான ஆய்வு இதுவாகும். அனைத்து வசதிகளையும், நாடுகள் செய்த பணியையும் பார்த்து அவர் மகிழ்ச்சி அடைந்தார்" என்றார்.

    உலகக் கோப்பை போட்டிக்காக ஐ.பி.எல். முடிந்த பிறகு சேப்பாக்கத்தில் எந்த போட்டியும் நடத்தப்படவில்லை.

    உலக கோப்பை போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் 5 ஆட்டங்கள் நடக்கிறது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் சேப்பாக்கத்தில்தான் அக்டோபர் 8-ந்தேதி நடக்கிறது.

    நியூசிலாந்து-வங்காளதேசம் (அக்டோபர் 13), நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் (அக்டோபர் 18), பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் (அக்டோபர் 23), பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா (அக்டோபர் 27) போட்டிகளும் சேப்பாக்கத்தில் நடக்கிறது.

    • இன்ஸ்டா பக்கத்தில் உலகக் கோப்பையை வைத்து எடுத்த புகைப்படங்களை நடிகை மீனா ஷேர் செய்துள்ளார்.
    • ஈஃபிள் டவருக்கு கீழே நின்று உலகக் கோப்பையுடன் நடிகை மீனா எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் குறித்த அட்டவணை சில நாட்கள் முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த தொடருக்காக இந்திய அணி வீரர்கள் நேற்று பயிற்சி முகாமை தொடங்கினர். இந்த முகாமில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலகக் கோப்பை 2023-ஐ நடிகை மீனா அறிமுகப்படுத்தி உள்ளார். ஈஃபிள் டவருக்கு கீழே நின்று உலகக் கோப்பையுடன் நடிகை மீனா எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அவரது இன்ஸ்டா பக்கத்தில் உலகக் கோப்பையை வைத்து எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ள நடிகை மீனா விரைவில் நடைபெற உள்ள ஆண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் வெற்றிக் கோப்பையை அறிமுகப்படுத்தும் பாக்கியம் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார்.

    இதுவரை எந்தவொரு இந்திய நடிகருக்கும் கிடைக்காத பெருமைக்குரிய அங்கீகாரம் எனக்கு கிடைத்திருப்பதில் ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளேன் என நடிகை மீனா தெரிவித்துள்ளார்.

    கணவர் வித்யாசாகர் மறைவுக்கு பிறகு நடிகை மீனாவுக்கு திரையுலகமே ஒன்று திரண்டு நிகழ்ச்சி நடத்தி உற்சாகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக அக்ஷர் பட்டேல் தேர்வு செய்யப்பட்டதற்கு அவரது பேட்டிங் திறனே காரணம்.
    • 17 பேர் கொண்ட அணியில் யாராவது காயமடைந்தால் யுஸ்வேந்திர சாஹல் மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது.

    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியா உலகக் கோப்பையை வென்று 10 ஆண்டுக்கு மேல் ஆகி விட்டதே என்று கேட்கிறீர்கள். நீங்கள் எல்லாநேரமும் உலகக் கோப்பையை வெல்ல முடியாது. இதில் மோசமான நாட்கள் இருக்கும். பெரிய இடைவெளி விழும். இது எல்லாம் சகஜம். விரைவில் சொந்த மண்ணில் உலகக் கோப்பை போட்டி நடக்க உள்ளது. இதில் இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் நமது வீரர்கள் பேட்டிங்கில் அசத்த வேண்டும்.

    உலகக் கோப்பை கிரிக்கெட், ஆசிய கோப்பை, ஆஸ்திரேலியாவில் நடக்கும் தொடர்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானது. அதை ஒப்பிட முடியாது. ஒவ்வொரு தொடரிலும் குறிப்பிட்ட தருணத்தில் எப்படி செயல்படுகிறோம் என்பதை பொறுத்தே முடிவு அமையும். இந்தியா வலுவான அணியாக திகழ்கிறது.

    ஆனால் உலகக் கோப்பை போட்டியின் போது நன்றாக விளையாடியாக வேண்டும். சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக அக்ஷர் பட்டேல் தேர்வு செய்யப்பட்டதற்கு அவரது பேட்டிங் திறனே காரணம். இதை நல்ல முடிவு என்றே சொல்வேன். ஆனால் 17 பேர் கொண்ட அணியில் யாராவது காயமடைந்தால் யுஸ்வேந்திர சாஹல் மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது.

    ஆசியக் கோப்பை போட்டியில் ஆட உள்ள பாகிஸ்தான் சிறந்த அணி. ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப் என்று தரமான பந்து வீச்சாளர்கள் உள்ளனர். சரியான கலவையில் அந்த அணி உள்ளது. இதே போல் இந்தியாவும் பலமிக்க அணி தான். குறிப்பிட்ட நாளில் எப்படி நெருக்கடியை சமாளித்து ஆடுகிறார்கள் என்பதே முக்கியம்.

    இவ்வாறு கங்குலி கூறினார்.

    • ‘சந்திரயான்-2’ தோல்வியால் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.
    • அரை இறுதியில் நியூசிலாந்திடம் 21 ரன்னில் தோற்றது.

    மும்பை:

    இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டப்படி நேற்று மாலை 6.04 மணி அளவில் நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது. இதன்மூலம் இந்தியா புதிய உலக சாதனை படைத்தது.

    'சந்திரயான்-3' வெற்றியை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். தலைவர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பிலும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    'சந்திரயான்-3' வெற்றி தொடர்பாக 5 முறை ஐ.பி.எல். கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்ட டுவீட் வைரலாகி உள்ளது.

    'சந்திரயான்-2' தோல்வியால் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. அரை இறுதியில் நியூசிலாந்திடம் 21 ரன்னில் தோற்றது. 'சந்திரயான்-3' வெற்றியால் தற்போது நடைபெற இருக்கும் உலக கோப்பையை இந்தியா கைப்பற்றுமா? என்று மும்பை இந்தியன்ஸ் அந்த போஸ்டில் தெரிவித்து உள்ளது. இந்த டுவீட் வைரலாகி உள்ளது.

    இந்திய அணி ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) கோப்பையை வென்று 10 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2011-ம் ஆண்டு டோனி தலைமையிலான அணி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது.

    ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பையை கபில் தேவ் தலைமையில் இந்தியா 1983-ம் ஆண்டு முதல் முறையாக கைப்பற்றியது. 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி தலைமையில் இந்தியா 2-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. முன்னதாக 2007-ல் அறிமுக 20 ஓவர் உலகக் கோப்பை அவர் பெற்றுக் கொடுத்தார்.

    தற்போது 13-வது உலகக் கோப்பை போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது. இந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா? என்பதே ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய அணி ஆசிய கோப்பையில் விளையாடுகிறது. பாகிஸ்தான், இலங்கையில் நடைபெறும் இந்தப்போட்டி வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.

    • உலகக் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
    • கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஹாட் ஸ்டார் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

    ஆசிய கோப்பை தொடர் வரும் 30-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்கிறது.

    இதனையடுத்து இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு தயாராக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

    இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஹாட் ஸ்டார் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை மொபைல் பயனார்கள் இலவசமாக பார்க்கலாம் என அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    • இரு அணிகளும் ஐசிசி நடத்தும் தொடர்கள் மற்றும் ஆசியக் கோப்பை தவிர நேரடி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை.
    • இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் சுற்றில் விளையாட உள்ள போட்டி அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    எதிர்வரும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்ய வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகின் பெரிய கிரிக்கெட் மைதானத்தில் உலகக் கோப்பை தொடரின் மிகப் பெரிய மோதல் என இந்தப் போட்டி குறித்து கேப்ஷன் கொடுக்கப்பட்டு வருகிறது.

    வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. 10 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளன. குரூப் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளோடு விளையாட வேண்டும். புள்ளிப் பட்டியலில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்தத் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

    ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்தத் தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

    இந்தச் சூழலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் சுற்றில் விளையாட உள்ள போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

    அதற்கு முன்னதாக ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், பாகிஸ்தானுக்கு இந்திய அணி சென்று விளையாடுவது இயலாத காரியமாக உள்ளது. அதனால், இந்தத் தொடர் வேறு இடத்தில் நடத்தப்படலாம் என சொல்லப்படுகிறது.

    இரு அணிகளும் ஐசிசி நடத்தும் தொடர்கள் மற்றும் ஆசியக் கோப்பை தவிர நேரடி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×