search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "truck"

    • ஓய்வெடுப்பதற்காக லாரியை நிறுத்தினார்.
    • ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    பெருமாநல்லூர் :

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே காட்டம்பட்டியில் உள்ள இன்டேன் கியாஸ் சேமிப்பு கிடங்கில் கியாஸ் இறக்கிவிட்டு சென்னை நோக்கி காலி டேங்கர் லாரி சென்றுகொண்டிருந்தது. லாரியை ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த ரவி (வயது 38) என்பவர் ஓட்டிச் சென்றார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்து பழங்கரை பைபாஸ் சாலையின் அருகில் லாரிகளை நிறுத்தி ஓய்வெடுக்கும் இடத்தில் ஓய்வெடுப்பதற்காக லாரியை நிறுத்தினார். அப்போது டிரைவர் இருக்கையின் இடது புறம் திடீரென தீ பிடித்திருப்பதை கண்ட டிரைவர் ரவி உடனே தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினார். அதற்குள் தீ மளமளவென பரவியது. இதையடுத்து டிரைவர் எட்டிக் குதித்து தப்பியோடினார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அவிநாசி மற்றும் திருப்பூர் வடக்கு தீயணைப்பு படையினர் 2வாகனங்களில் 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் லாரியின் முன் பகுதி முழுவதும் எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து அவிநாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெல்லை:

    ரெயில் உதிரி பாகங்களை ஏற்றிக் கொண்டு கன்னியாகுமரியில் இருந்து கனரக லாரி ஒன்று குஜராத் மாநிலத்திற்கு சென்றது.

    இன்று அதிகாலை 1 மணியளவில் நெல்லை ரெட்டியார்பட்டி அருகே டி.வி.எஸ். நகர் 4 வழிச்சாலையில் சென்ற போது டீசல் இல்லாமல் திடீரென சாலையில் நின்றுவிட்டது.

    இதற்கிடையே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கல்லூரி பஸ்சில் சுற்றுலா சென்றனர்.

    அவர்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு மீண்டும் சொந்த ஊர் திரும்பினர். கல்லூரி பஸ்சை முனியசாமி என்பவர் ஓட்டிச் சென்றார். கிளீனராக வீரசெல்வம் என்பவர் இருந்தார்.

    கல்லூரி பஸ் இன்று அதிகாலை டி.வி.எஸ். நகர் பகுதிக்கு வந்தபோது ஏற்கனவே டீசல் இல்லாமல் நின்ற கனரக லாரியின் பின்னால் வேகமாக சென்று மோதியது.

    இதில் டிரைவர் முனியசாமி, கிளீனர் வீரசெல்வம், மாணவிகள் அன்னை தெரசா, ரஞ்சிதா, சசிகலா, பொன்மலர், சாந்தி உள்பட 15 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிறிதளவு காயம் அடைந்த 12 மாணவிகள் குணம் அடைந்து இன்று காலை ஊர் திரும்பினர். இதில் சுமித்ரா, முனியசாமி, வீரசெல்வம் ஆகிய 3 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இடங்கண சாலையை அடுத்த சாத்தம்பாளையத்தில் சின்ன ஏரி அமைந்துள்ளது.
    • சின்ன ஏரியில் கடந்த சில மாதங்களாக ஜே.சி.பி. உதவியுடன் டிப்பர் லாரியில் பல லோடு மண் அள்ளி விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது.

    காகாபாளையம்:

    சேலம் அருகே இடங்கண சாலையை அடுத்த சாத்தம்பா–ளையத்தில் சின்ன ஏரி அமைந்துள்ளது. இது சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியில் கடந்த சில மாதங்களாக ஜே.சி.பி. உதவியுடன் டிப்பர் லாரியில் பல லோடு மண் அள்ளி விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது.

    இது குறித்து அந்த ஊர் பொதுமக்கள் இடங்கண சாலை வட்டார வளர்ச்சி அதிகாரி மற்ரும் உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

    இதையடுத்து சாத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை சின்னம்பட்டி பிரதான சாலையில் உள்ள இடங்கணசாலை கிராம நிர்வாக அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

    அங்கு சாமியானா பந்தல் அமைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று பொது மக்கள் தெரிவித்தனர்.

    • சேலத்தில் லாரியை முந்தி செல்ல முயன்ற கல்லூரி மாணவர் காயமடைந்தார்.
    • விபத்தில் சிக்கிய 2 பேரில் ஒரு மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சேலம்:

    கிருஷ்ணகிரி டவுன் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்.

    இவரது மகன் நித்தியானந்தம் (வயது 20). இவர் சேலம் உடையாபட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில், அதே கல்லூரியில் பி.எஸ்.சி 2-ம் ஆண்டு படிக்கும் ஓமலூர் அருகே உள்ள கோட்டை மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த மதியழகன் மகன் ஹரிஷ் (20) என்பவரை அழைத்துக் கொண்டு அயோத்தியாப்பட்டணம் சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள், லாரியில் உரசி இருவரும் கீழே விழுந்தனர்.

    இதில் நித்தியானந்தம் தலையில் பலத்த அடிபட்டு மயங்கினார். அந்த வழியே வந்தவர்கள் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நித்தியானந்தம் சிகிச்சை பெற்று வருகிறார். ஹரிஷூம் காயமடைந்தார்.

    இது குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கல் குவாரியில் அதிக அளவில் விதிமீறல்கள் உள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
    • பொதுமக்கள் துங்காவி பகுதிக்கு வந்து உடுமலை-தாராபுரம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    உடுமலை :

    மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான கல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதில் பல கல் குவாரிகளில் விதி மீறல்கள் இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் மடத்துக்குளத்தையடுத்த துங்காவி மலையாண்டிபட்டினம் பகுதியில் செயல்பட்டு வரும் கல் குவாரியில் அதிக அளவில் விதிமீறல்கள் உள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை கல்குவாரிக்கு சென்ற 2 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆனால் சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் துங்காவி பகுதிக்கு வந்து உடுமலை-தாராபுரம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- கல் குவாரியில் கற்களை உடைக்க, விதிகளை மீறி அதிக சக்தி வாய்ந்த வெடி வைக்கப்படுகிறது.மேலும் அனுமதியற்ற பகுதிகளிலும் தொடர்ச்சியாக அதிக ஆழத்தில் கற்கள் எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் இரவு பகலாக கனரக வாகனங்கள் தொடர்ந்து அதிக வேகத்தில் இயக்கப்படுகிறது.குறிப்பாக இரவு நேரத்தில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.இதனால் ரோடு முழுவதும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி விட்டது. மேலும் லாரிகளில் அதிக அளவில் கற்கள் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது.மேடு பள்ளங்களில் லாரி ஏறி இறங்கும்போது கற்கள் ரோட்டில் விழுகிறது.

    இதனால் ரோட்டில் செல்லும் பொதுமக்களுக்கு உயிருக்கு உத்தரவாதமற்ற சூழல் நிலவுகிறது.இதுவரை கற்கள் விழுந்து பலர் காயமடைந்துள்ளனர்.தோள்பட்டையில் கல் விழுந்து பலத்த காயமடைந்தவரைப் பற்றி நிர்வாகத்தினரிடம் கூறிய போது,தோளில் தானே விழுந்தது.தலையில் விழவில்லையே என்று அலட்சியமாக பதில் சொல்கின்றனர். விதிமீறல்கள் குறித்து தாசில்தார்,ஆர்டிஓ, கலெக்டர், கனிமவளத்துறை என அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது தண்ணீர் லாரியை ஓட்டி வந்த டிரைவர்,பிரேக் பிடிக்கலை என்று கூச்சலிட்டு எதிரே வருபவர்களை விலகச் சொல்லியபடியே வந்திருக்கிறார். அப்போது எதிரில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ஒருவர் முட்புதருக்குள் வண்டியை விட்டதால் உயிர் தப்பினார்.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆனால் பல மணி நேரம் காத்திருந்தும் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வரவில்லை.எனவே வேறு வழியில்லாமல் சாலை மறியலில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே கல் குவாரியில் ஆய்வு செய்து விதி மீறல்களைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழுதடைந்த ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும்.கல் குவாரிக்கு இயக்கப்படும் வாகனங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.பொதுமக்களின் பாதுகாப்புக்கு உறுதியளிக்க வேண்டும்'என்று பொதுமக்கள் கூறினர்.சம்பவ இடத்துக்கு தாசில்தார் உட்பட உயர் அதிகாரிகள் யாரும் வராத நிலையில் வருவாய் ஆய்வாளர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • கொள்ளிடத்தில் மணல் குவாரி செயல்பட்ட போது மணல் ஏற்றிய லாரிகளும் சென்று வருகின்றன.
    • குண்டும் குழியுமாக பாலத்தில் செல்லும் போது பாலம் மேலும் சிதிலமடைய‌ வாய்ப்புள்ளது.

    பூதலூர்:

    பூதலூர் திருக்காட்டுப்பள்ளி சாலையில் விண்ண மங்கலம் கிராமத்தின் அருகில் வெண்ணாற்றில் பாலம் ஒன்று உள்ளது.100 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த பாலத்தின் வழியாக திருக்காட்டுப்பள்ளி, பூண்டி, லால்குடி, தஞ்சை, செங்கிப்பட்டி, திருச்சி உள்ளிட்ட பல ஊர்களுக்கு பயணிகள் பஸ் போக்குவரத்து நடைபெறுகிறது.

    திருக்காட்டுப்பள்ளி‌ காவிரி கரையோரத்தில் இருந்து செங்கல்கள் ஏற்றிய லாரிகளும், கொள்ளிடத்தில் மணல் குவாரி செயல்பட்ட போது மணல் ஏற்றிய லாரிகளும் சென்று வருகின்றன.

    குறுகிய பாலமாகவும் பழுதடைந்து உள்ள பாலமாகவும் இருப்பதால் பாலத்தின் இரு புறமும் வலுவிழந்த பாலம் என்ற நெடுஞ்சாலை துறை சார்பில் போர்டு வைக்கப்பட்டு உள்ளது.

    பாலத்தின் மேற்பகுதியில் வாகனங்கள் செல்லும் தார்சாலை‌ ஆங்காங்கே பெயர்ந்து குண்டும் குழியுமாக பல்லாங்குழி போல காட்சி தருகிறது.

    அதிக பாரத்துடன் குண்டும் குழியுமாக பாலத்தில் செல்லும் போது பாலம் மேலும் சிதிலமடைய‌ வாய்ப்பு உள்ளது.

    மழை பெய்தால் குண்டு குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் போது பாலம் அதிர்வடைகிறது.

    பாலத்தின் இரண்டு பகுதிகளிலும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ள‌ நிலையில் பல்லாங்குழி ஆக காட்சி அளிக்கும் விண்மங்கலம் வெண்ணாற்று பால சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    • பொள்ளாச்சிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது.
    • செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இதில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.பஸ் கணியூர் அடுத்த சோழமாதேவி அருகே சென்று கொண்டிருந்து. அப்போது செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் பஸ்ஸில் இருந்த பயணிகளும் லாரியின் முன்புறம் இருந்த தொழிலாளர்கள் என 20 பேர் இடிப்பாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்கள் மீட்டு கோவை மற்றும் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து மடத்துக்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆசனூரில் இருந்து காரப்பள்ளம் செல்லும் சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை கூட்டம் கரும்பு லாரியை எதிர்பார்த்து சாலை ஓரத்தில் காத்திருந்தது.
    • வனப்பகுதியில் இருந்து வெளியேறி கரும்புகளை ருசித்த யானையை வாகன ஓட்டிகள் செல்பி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    தண்ணீர் மற்றும் உணவு தேடி யானைகள் குட்டிகளுடன் அடிக்கடி இந்த சாலையை கடந்து செல்வது வழக்கம். அப்போது அந்த வழியாக வரும் வாகனங்களை யானைகள் வழி மறிப்பதும், விரட்டுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதே போல் கடந்த சில நாட்களாக கரும்புகளை ருசிக்க யானைகள் குட்டி யுடன் சாலையில் உலா வருவதும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை சாப்பிட்டு வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் ஆசனூரில் இருந்து காரப்பள்ளம் செல்லும் சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை கூட்டம் கரும்பு லாரியை எதிர்பார்த்து சாலை ஓரத்தில் காத்திருந்தது.

    அப்போது தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு கரும்பு ஏற்றி கொண்டு ஒரு லாரி வந்தது. கரும்புகளின் வாசனையால் அந்த லாரியை யானைகள் திடீரென வழி மறித்து நிறுத்தியது.

    பின்னர் அதில் இருந்த கரும்புகளை பிடுங்கி ருசித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் லாரியை ஓரமாக நிறுத்தி னார். தொடர்ந்து யானைகள் லாரியில் இருந்த கரும்புகளை ருசித்து அங்கேயே உலாவி கொண்டு இருந்தது.

    இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை ரோட்டோரம் நிறுத்தினர். வாகனங்கள் அனைத்தும் அணி வகுத்து நின்றன. இதனால் தமிழகம், கர்நாடகம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அப்போது வாகன ஓட்டிகள் சிலர் ஆபத்தை உணராமல் யானைகளை செல்பி எடுத்தனர். நீண்ட நேரம் சாலையை வழி மறித்த யானை கூட்டம் தானாக வனப்பகுதியில் சென்றது.

    இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கரும்புகளை ருசித்த யானையை வாகன ஓட்டிகள் செல்பி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆபத்தை உணராமல் செல்பி எடுத்தவர்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    • பேட்டரிகளை ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
    • விபத்தில் அதிர்ஷ்டவசமாக வேன் மற்றும் கண்டெய்னர் லாரி டிரைவர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.

    பல்லடம் :

    பல்லடம் பொங்கலூர் சக்தி நகர் அருகே கோவையை நோக்கி பேட்டரிகளை ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது காங்கேயம் நோக்கி சிமெண்ட் ஏற்றிக்கொண்டு சென்ற வேன் எதிர்பாராதவிதமாக லாரியின் மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறிய கண்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக வேன் மற்றும் கண்டெய்னர் லாரி டிரைவர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். இந்த விபத்தால் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து தகவல் இருந்து உடனடியாக விரைந்து வந்த அவினாசிபாளையம் போலீசார் கன்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

    • லாரி மோதி முதியவர் இறந்தார்.
    • பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சின்னபூலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேதுராமன் (வயது 62). இவரது மனைவி பாண்டியம்மாள்.

    சேதுராமன் நேற்று மதியம் பேரையூரிலிருந்து மோட்டார் சைக்கிளில் இருந்து உசிலம்பட்டி சாலை வழியாக வந்து கொண்டிருந்தார். சின்னப்பூலாம்பட்டி ராமலிங்க சுவாமி கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி மோதியது, இதில் படுகாயம் அடைந்த சேதுராமன் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

    விபத்து குறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    • சென்னிமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.
    • இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    சென்னிமலை நாச்சி முத்து முதலியார் வீதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 65). இவர் சென்னிமலை பகுதியில் லேத் பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவர் சென்னிமலையில் இருந்து பெருந்துறைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பெருந்துறை சென்னிமலை ரோடு வேளாளர் தம்பிரான் கோவில் அருகே வந்த போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சக்திவேல் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி கணவன்-மனைவி லாரி மோதியது விபத்தில் பெண் பலியானார்.
    • இது குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ராஜேஸ்வரி (57). இவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சண்முகம் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று ராஜேஸ்வரிக்கு உடல் நலம் சரியில்லாததால் அவரை மருத்துவமனைக்கு கணவர் சண்முகம் தனது மொபட்டில் அழைத்து சென்றார். மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று கணவன்-மனைவி இருவரும் மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.

    சாந்தி தியேட்டர் பிரிவு அருகே ஈரோடு-சத்தி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக சண்முகம் மொபட் மீது மோதியது. இதில் சண்முகம், ராஜேஸ்வரி இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

    அப்ேபாது அந்த வழியாக சென்றவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கணவன்-மனைவி இருவரையும் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் கோவை அரசு மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார். சண்முகம் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×