search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி"

    • அவசர காலம் தவிர மற்ற நேரங்களில் மின் விநியோகத்தை நிறுத்தக் கூடாது என மின்கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • மின்னகத்தின் நுகர்வோர் சேவை மைய எண்ணான 94987 94987 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம்.

    சென்னை:

    தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு மின்சார வாரியம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார வாரியம் மாநிலம் முழுவதும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. அவசர காலம் தவிர மற்ற நேரங்களில் மின் விநியோகத்தை நிறுத்தக் கூடாது என மின்கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் தொடங்கி உள்ளதால் மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு மின்சார வாரியம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

    மின் தொடர்பான புகார்களை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயலியில் அளிக்கலாம் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்து உள்ளது. மேலும் மின்ன கத்தின் நுகர்வோர் சேவை மைய எண்ணான 94987 94987 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக இனிமேல் அதிவேகத்தில் மக்கள் குறைகளை தீர்க்க வேண்டும் என்று அரசு சார்பாக உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி புகார் கொடுத்த 2 மணி நேரத்துக்குள் மின்தடை தொடர்பான புகார்களை சரி செய்ய வேண்டும். மின்சார வயர்கள் தொடர்பான பிரச்சினையை 5 மணி நேரத்துக்குள் தீர்க்க வேண்டும். பெரிய பிரச்சினைகள், டிரான்ஸ்பார்மர் பிரச்சினைகளை 10 மணி நேரத்துக்குள் தீர்க்க வேண்டும் என மின்சார வாரிய அதிகாரி களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • காரைக்குடி கிட் அண்டு கிம் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
    • பல்வேறு பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள மானகிரி கிட் அண்ட் கிம் பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரி வளாகத்தில் ஸ்டீல் ஸ்ட்ரைப்ஸ் வீல்ஸ் லிமி டெட் நிறுவனம் சார்பில் நேர்முக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    இந்த வளாக நேர்முக தேர்வில் கல்லூரியின் சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட் ரானிக்ஸ் கம்யூனி கேஷன், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என பல் வேறு பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் 35 மாணவர்கள் தேர்வு பெற்றனர். கல்லூரி முதல்வர் முனைவர் பார்த்த சாரதி நேர்முக தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்க ளுக்கு வேலைவாய்ப்புக் கான பணி நியமன ஆணை களை வழங்கினார். மாண–வர்களை கல்லூரி தலை வர் அய்யப்பன் வாழ்த்தி னார்.

    நிகழ்ச்சியில் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண் டனர்.

    • அன்னை பாத்திமா கல்லூரி பேராசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது.
    • ஜம்பலபுரம் என்ற கிராமத்தை மேம்படுத்த தேர்வு செய்துள்ளது.

    மதுரை

    நாடு முழுவதும் கிராமப்புறங்களை மேம்படுத்த, 'உன்னத் பாரத் அபியான்' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ், பின்தங்கிய கிராமங்களில் கல்வி நிறுவனங்கள் மூலம் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன. இதில் நாட்டில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பின்தங்கிய, மக்கள் தொகை, 30 ஆயிரத்துக்குக் குறைவான எண்ணிக்கை கொண்ட கிராமங்களை தேர்வு செய்து அக்கிராமத்தின் கட்டமைப்புகளை மேம்படுத்த அரசுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்.

    இதன்படி திருமங்கலம் ஆலம்பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பேரையூர் வட்டத்தைச் சேர்ந்த ஜம்பலபுரம் என்ற கிராமத்தை மேம்படுத்த தேர்வு செய்துள்ளது. இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட உள்ள கல்லூரி பேராசிரியர்களுக்கு கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் இரண்டு நாட்கள் பயிற்சி வகுப்பு மத்திய அரசு நிதி உதவியுடன் நடந்தது. இதில் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் தமிழ் துறை தலைவர் முனியாண்டி கலந்துகொண்டு பயிற்சி பெற்றார். அவரை கல்லூரி தாளாளர் எம். எஸ். ஷா, பொருளாளர் சகிலா ஷா, கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர், சக பேராசிரியர்கள் ராமுத்தாய், ஜோதி, ஆறுமுக ஜோதி மற்றும் உடற்கல்வி இயக்குனர் நாராயண பிரபு உள்ளிட்டோர் பாராட்டினர்.

    • தூத்துக்குடியை சேர்ந்தவர் சுகிர்தா. இவர் குலசேகரம் மூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார்
    • கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார்.

    நாகர்கோவில் : தூத்துக்குடியை சேர்ந்தவர் சுகிர்தா. இவர் குலசேகரம் மூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார். இவர் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் பரமசிவம் மற்றும் பயிற்சி டாக்டர்கள் ஹரிஷ், ப்ரீத்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பரமசிவத்தை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் பரமசிவத்தை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் பரமசிவத்திற்கு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஆண்மை பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

    தற்பொழுது பாளையங்கோட்டை ஜெயிலில் பரமசிவம் அடைக்கப்பட்டுள்ளார். பயிற்சி டாக்டர்கள் ஹரிஷ், ப்ரீத்தி இருவரையும் பிடிக்க நடவடிக்கை மேற் கொண்டனர்.

    இந்த நிலையில் இருவரும் முன் ஜமீன் பெற்றனர். இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி.போலீசார் ஹரிசுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். சம்மனை ஹரிசின் உறவினர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறியுள்ளனர். மேலும் ப்ரீத்திக்கு சம்மன் அனுப்புவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • சுயநிதி கல்லூரி ஆசிரியர்களுக்கு யு.ஜி.சி. பரிந்துரைத்த ஊதியத்தை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
    • பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

    மதுரை

    சுயநிதி கல்லூரி ஆசிரியர் பாதுகாப்பு மாநாடு மதுரை காமராசர் பல்கலைக் கழக கல்லூரியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மூட்டா தலை வர் செந்தாமரைக் கண்ணன் தலைமை தாங்கினார். மண் டல தலைவர்கள் ரமேஷ் ராஜ், ஞானேஸ்வரன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். செயலாளர் ராபர்ட் திலீபன் வரவேற்றார். மாநாட்டின் முக்கிய நோக் கம் குறித்து பொதுச்செயலா ளர் நாகராஜன் பேசினார்.

    மாநாட்டில் தமிழ்நாடு அரசு சுயநிதி ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கேரள அரசின் சுயநிதி ஆசிரியர்கள் ஒழுங்காற்றுச் சட்டத்தைப் போல் ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும், தமிழ்நாடு அரசு சுயநிதி சுல்லூரிகளை ஒழுங்குபடுத்த தனி இயக்கு னரகம் தொடங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாடு அரசு, சுயநிதி ஆசிரியர்களுக்கு யு.ஜி.சி. பரிந்துரைத்த ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாடு அரசு சுயநிதி கல்லூரிகள் பற்றிய வெள்ளை அறிக்கை வெளி யிட வேண்டும். பொறியியல் கல்லூரிகளில் சுயநிதி பிரி வில் பணியாற்றும் ஆசிரியர் களுக்கு ஏ.ஐ.சி.டி.இ. நிர்ண யித்துள்ள ஊதிய விகிதம்,

    அகவிலைப்படி உள் ளிட்ட பிற படிகளும், ஆசிரி யர் அல்லாத அலுவலர்க ளுக்கு குறைந்தபட்ச கூலிச் சட்டம் 1948-ன் அடிப்ப டையில் ஊதியம் அகவி லைப்படி உள்ளிட்ட பிற படிகளும் ஆண்டு ஊதிய உயர்வு மருத்துவ விடுப்பு மகப்பேறு மருத்துவ விடுப்பு உள்ளிட்ட சலுகைகளும் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட் டன.

    முடிவில் பொருளாளர் ராஜ ஜெயசேகர் நன்றி கூறி னார்.

    • அவர் மாயமான குறித்து மண்டைக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது.
    • தனிஷா குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை.

    மணவாளக்குறிச்சி:

    மண்டைக்காடு அருகே உள்ள கோவிலான் விளை யை சேர்ந்தவர் ஜாண்சன். டெம்போ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் தனிஷா(வயது 19) பக்கத்து ஊரிலுள்ள ஒரு தனியார் கலைக்கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று வழக்கம்போல் காலை கல்லூரிக்கு செல்ல வீட்டிலிருந்து தனிஷா புறப்பட்டு சென்றார். ஆனால் அவர் கல்லூரிக்கு செல்லவில்லை. மாலை வெகு நேரமாகியும் வீட்டிற்கும் திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடினர். ஆனால் தனிஷா குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை.ஆகவே அவர் மாயமான குறித்து மண்டைக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி யை தேடி வருகின்றனர்.

    • புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது.
    • முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விளா அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது.

    முதன்மை நிர்வாக அதிகாரி ஐஸ்வர்யா சரண்சுந்தர் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் மற்றும் தாளாளர் முனைவர் ஆர்.சுவாமிநாதன் கல்லூரியின் சாதனைகள் மற்றும் பாடப்பிரிவுகளைப் பற்றி விரிவாக எடுத்து ரைத்தார். இதில் அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் க.ரவி, முன்னாள் துணை வேந்தர் சொ.சுப்பையா,பூமி குழுமம் தலைவர் நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங் களை வழங்கி வாழ்த்தினர்.

    சோகோ இந்தியா நிறு வன தலைவர் பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு மாண வர்களை காணொலி காட்சி மூலம் வாழ்த்தினார்.இந்த பட்ட மளிப்பு விழாவில் மொத்த மாக 465 மாணவர்கள், 379 மாணவி கள் என மொத்தம் 844 பேர் பட்டம் பெற்றனர். 16 பேர் பல்கலைக்கழக அள வில் ரேங்க் எடுத்து தங்க பதக்கம் பெற்றனர்.

    இக்கல்லூரியானது பிற்பட்ட கிராமப்புற இளை யோர் நலம் கருதி, கடந்த 2016-ம் ஆண்டு 40 என்ற எண்ணிக்கையில் இளங் கலை (கணிதம், கணினி யியல், வணிகப் பயன் பாட்டியல், தகவல் தொழில் நுட்பம்) ஆகிய பாடப் பிரிவுடன் ஆரம்பிக்கப் பட்டது.

    இன்று இளங்கலையில் 19 பிரிவுகளும், முதுகலை யில் 7 பிரிவுகளும் ஆய்வுப் பிரிவு கணிதம் மற்றும் கணிணி அறிவியல் ஆகி யவை தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாணவர்கள் பன்முகத் திறனுடன் மாநில அளவி லும், மாவட்ட அளவிலும் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது தனித் திறமையை வெளிப்படுத்தி வருகின்ற னர். மேலும் மாவட்ட கலெக்டர், மாநில முதல்- அமைச்சர்கள், அமைச்சர் கள், துணை வேந்தர்கள், பல்வேறு ஆளுமை களிட மும் பொற் கரங்களால் பண முடிப்பு களையும், விருதுகளையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்து உள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.

    பட்டமளிப்பு விழாவில் வித்யாகிரி கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் ஹாஜி முகமது மீரா, காரைக்குடி வித்யாகிரி பள்ளி முதல்வர் ஹேம மாலினி சுவாமிநாதன். முன்னாள் எம். எல். ஏ. எச்.ராஜா, நகர்மன்ற தலைவர் சே.முத்துதுரை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • தியாகராசர் கல்லூரியில் 28 ஆண்டுகளுக்கு பின்பு முன்னாள் மாணவர்கள் சந்தித்து கொண்டனர்.
    • பழைய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி

    மதுரை தியாகராசர் கலை கல்லூரியில் 1981- 84-ம் கல்வியாண்டில் இளங்கலை தாவரவியல் பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

    ஒருங்கிணைப்பாளர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். உதவி ஒருங்கிணைப்பாளர் இளஞ்செழியன் வரவேற்றார். ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் கேசவன், பாபுராஜ், சேகர், கண்ணன், செல்வராஜ், சுப்பிரமணியன், சாந்தகுரு ஆகியோரிடம் முன்னாள் மாணவர்கள் வாழ்த்து பெற்றனர்.

    பின்னர் பலர் தங்கள் பழைய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். முடிவில் தியாகராஜன் நன்றிகூறினார்.

    • கல்லூரி சங்கச் செயலர் ரமேஷ் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
    • கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ஜெரின் ஜோஸ் போட்டி நிகழ்வினை ஒருங்கிணைத்தார்கள்.

    இரணியல் :

    இரணியல் லெட்சுமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையிலான ஆண்கள் கபடி போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிக்கான தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் சிதம்பரதாணு பிள்ளை தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக சர்வதேச பூப்பந்தாட்ட வீரர் ராஜபெருமாள், இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டன். ராஜரத்தினம் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர். கல்லூரி தலைவர் மற்றும் செயலர் பேராசிரியர் ராஜகோபால், கல்லூரி சங்கச் செயலர் ரமேஷ் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனரும் தலைவருமான ஆறுமுகம் மற்றும் கபடி போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜான் ரஸ்கின், சிவக்குமார் மற்றும் விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ஜெரின் ஜோஸ் போட்டி நிகழ்வினை ஒருங்கிணைத்தார்கள்.

    • குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அறிக்கை
    • உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களிடம் போலீசார் மீது நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டும்.

    மார்த்தாண்டம்:

    கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால் சிங் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- குலசேகரம் பகுதியில் அமைந்துள்ள மூகாம்பிகா மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு பயின்று வந்த சுகிர்தா என்ற மாணவி தற்கொலை செய்வதற்கு தூண்டிய டாக்டர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இதற்கு காரணமான டாக்டர்களை போலீசார் கைது செய்யாதது பரபரப்பை ஏற்படுத்தி வரு கிறது. கல்லூரி நிர்வாகம், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போதிய விடுப்பு கொடுத்தும், போதிய கவுன்சிலிங் கொடுத்தும் வரும் காலங்களில் இத்த கைய சம்பவங்கள் நடை பெறுவதை தவிர்க்க வழிவகுக்க வேண்டும். மேலும் போலீசார் குற்றம் செய்தவர்கள் தப்பிக்காத அளவுக்கு பாரபட்சம் இன்றி உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களிடம் போலீசார் மீது நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விசாரணையில் போலீசார் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
    • குலசேகரத்தில் சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியினர் நீதி கேட்டு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

    திருவட்டார் :

    குலசேகரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ முகாம்பிகா மருத்துவ கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி சுஜிர்தா விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண் டார். சுஜிர்தா தன் கைப்பட எழுதிய கடித்தை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.

    தூத்துக்குடி மாவட் டத்தை சேர்ந்த சுஜிர்தாவின் தந்தை சிவகுமார் குலசேக ரம் போலீசில் புகார் செய்தார். தற்கொலை செய்வதற்கு முன்பு சுஜிர்தா எழுதிய கடிதத்தில் டாக்டர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், 2 பேர் மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக கூறி இருந்தார்.

    இதையடுத்து குலசேகரம் போலீசார் 3 பேர் மீதும் பிரிவு 306 கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இந்த பிரிவின் கீழ் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் குலசேகரம் போலீசார் 5 நாள் ஆன பிறகும் வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள். வழக்குப்பதிவு செய்யப்பட்ட 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து தான் விசாரிக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறை எதையும் விசா ரணை செய்யும் போலீஸ் அதிகாரிகள் பின்பற்ற வில்லை என்று பொது மக்கள் குற்றம் சாட்டுகிறார் கள்.

    கல்லூரி மாணவி தற்கொலையில் உள்ள மர்மத்தை வெளியில் கொண்டுவர வேண்டும். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைத்தால் தான் நேர்மையான முறையில் விசாரணை நடைபெறும் என்று பா.ம.க., நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

    குலசேகரத்தில் சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியினர் நீதி கேட்டு போஸ்டர் ஒட்டியுள்ளனர். ஆனால் இந்த வழக்கில் போலீசார் மவுனம் சாதித்து வருவது வேடிக்கையாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    • நிவேதா கடலூர் பெண்கள் கல்லூரியில் பி. ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
    • இதையடுத்து நிவேதாவின் தந்தை ராஜா பண்ருட்டி போலீசில் புகார் செய்தார்

    கடலூர்:

    பண்ருட்டி விழமங்கலத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் ரேவதி (எ) நிவேதா (வயது 17). இவர் கடலூர் பெண்கள் கல்லூரியில் பி. ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 6-ந் தேதி கல்லூரிக்கு சென்ற அவர் இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து நிவேதாவின் தந்தை ராஜா பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகின்றார்.

    ×