search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seminary"

    • காளீஸ்வரி கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
    • நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை சட்ட விழிப்புணர்வு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகப்பாண்டி செய் திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் சட்ட விழிப்புணர்வு மன்றத்தின் சார்பில் பெண்களுக்கான சட்டங்கள் குறித்த கருத்தரங்கு நடந்தது. கல்லூரி துணை முதல்வரும், கணினி பயன்பாட்டியல் துறை தலைவருமான முத்துலட்சுமி கலந்து கொண்டு இந்தியாவில் பெண்கள் தொடர்பான சட்டங்கள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு எடுத்து கூறினார். நிகழ்ச்சியில் 2-ம் ஆண்டு மாணவர் ராம்குமார் வரவேற்றார்.

    முடிவில் சிவசுப்பிர மணியன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை சட்ட விழிப்புணர்வு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகப்பாண்டி செய்திருந்தார்.

    • அன்னை பாத்திமா கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை மனித வள மேலாளர் முகமது பாசில் மற்றும் கணிணி அமைப்பு அலுவலர் உதய கதிரவன் செய்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரியில் உள் தர உறுதி குழுவின் சார்பில் ஆசிரியர் திறன் மேம் பாட்டுப் பயிற்சிக் கருத் தரங்கம் நடந்தது. கல்லூரி தாளாளர் எம். எஸ்.ஷா மற்றும் பொருளா ளர் சகிலா ஷா ஆகியோரின் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் தலைமை யில் தாங்கி பேசியதாவது:-

    உயர் கல்வி நிறுவனங் களின் தர மதிப்பீட்டை உறுதி செய்யும் குழு, பாடத் திட்ட அம்சங்கள், கற்பித்தல் முறை, ஆராய்ச்சி, உள் கட்ட மைப்பு, மாணவர் ஆதரவு, ஆளுமை, நிறுவன மதிப்பு கள் போன்ற 7 அளவு கோல் களின் அடிப்படையில் தர மதிப்பீடு செய்து, இந்தியா முழுவதும் உள்ள பல் கலைக் கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டு வழங்கும் மதிப் பெண்கள் அடிப்படையில் தர மதிப்பீடு சான்றிதழ் வழங்கி வருகிறது. இது போன்ற பயிற்சிக் கருத் தரங்கம் மூலம் பேராசிரி யர்கள் தங்களை மேம் படுத்தி கொள்ளவும், கல்லூ ரியின் தரத்தை உயர்த்தி கொள்ளவும் முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை என். எம். ஆர். சுப்புராமன் பெண்கள் கல்லூரி ஆங் கில துறை பேராசிரியர் சிவப்பிரியா தேசிய தர மதிப்பீட்டின் ஏழு அம்சங் கள் குறித்து தெளிவான விளக்கத்தினை எடுத் துரைத்தார். பின்னர் பேராசிரியர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விளக்கத் தினை அளித்தார்.

    முன்னதாக கல்லூரி யின் ஆங்கிலத் துறை தலைவரும், உள் தர உறுதி குழுவின் ஒருங்கிணைப் பாளருமான பேராசிரியர் ராஜ்குமார் வரவேற்றார். கருத்தரங்கில் வணிக மேலாண்மை துறை இயக்கு னர் பேராசிரியர் நடேச பாண்டியன், கல்விசார் நெறியாளர் டாக்டர் நாசர், துறை தலைவர்கள் டாக்டர் முனியாண்டி, பால்ராஜ், டாக்டர் கார்த்திகா, சீனி வாசன், சி.எஸ். கார்த்திகா, சுபஸ்ரீ, தனலட்சுமி, உள் தர உறுதிக் குழுவின் உறுப்பி னர்கள் ஜஸ்டின், சசிகலா உள்ளிட்ட 60-க்கும் மேற் பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன டைந்தனர். இதற்கான ஏற் பாடுகளை மனித வள மேலாளர் முகமது பாசில் மற்றும் கணிணி அமைப்பு அலுவலர் உதய கதிரவன் செய்தனர்.

    • அன்னை பாத்திமா கல்லூரியில் தேசிய மருத்துவ கருத்தரங்கு நடந்தது.
    • பேராசிரியர் சவுபியா பானு நன்றியுரை ஆற்றினார்.

    திருமங்கலம்

    வருடந்தோறும் செப்டம் பர் மாதத்தை தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைபிடித்து வருவதை முன்னிட்டு திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் தாளாளர் எம்.எஸ்.ஷா மற்றும் பொருளா ளர் சகிலா ஷா ஆகியோரின் ஆலோசனையின்படி ஹாஸ்பிடல் மேனேஜ் மென்ட் துறையின் சார்பில் அனைத்து கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற ஒரு நாள் ஹெல்த் பெஸ்ட்-2023 என்ற கருத்தரங்கம் நடந்தது.

    கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் கரு த்தரங்கை தொடங்கி வைத்து உடல்நலம், உணவு பழக்கம் குறித்து பேசினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அன்னை தெரசா பல்கலைக்கழக பேராசிரியர் கீதாஞ்சலி மாணவிகளுக்கு ஏற்படும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகளை உணவு பழக்க வழக்கத்தின் மூலம் எவ்வாறு தவிர்ப்பது என்பது பற்றி விளக்கி கூறினார். மேலும் பல்வேறு பழங்களில் உள்ள சத்துக்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

    முன்னதாக பேராசிரியர் பொன்மயில் வரவேற்றார். இக்கருத்தரங்க நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மதுரை லேடி டோக் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் பல போட்டிகளில் வெற்றி பெற்ற ஒட்டுமொத்த சாம்பி யன் சுழற்கோப்பையையும், கீழக்கரை தாசிம் பீவி கல்லூரி மாணவிகள் 2-ம் பரிசுக்கான சுழற்கோப்பை யையும் வென்றனர்.

    மாலையில் நடந்த இறுதி அமர்வில் நிர்வாகவியல் பேராசிரியர் நாசர் வாழ்த்துரை வழங்கினார். ஹாஸ்பிடல் மேனேஜ் மென்ட் துறை தலைவர் சுபஸ்ரீ கருத்தரங்க அறிக்கை வாசித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

    நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஹாஸ்பிடல் மேனேஜ் மென்ட் துறை தலைவர் சுபஸ்ரீ தலைமையில் பிரியா, நேயா, ஸ்ருதி, சமீரா, மர்ஷியா, அர்ச்சனா, சிம்சன், பரத், பிரியதர்ஷன், ஹரி கிருஷ்ணா, கலையரசி, சுமித்ரா ஆகிய மாணவ-மாணவிகள் செய்தனர்.

    பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். பேராசிரியர் சவுபியா பானு நன்றியுரை ஆற்றினார்.

    • ராம்கோ பொறியியல் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு கருத்தரங்கு நடந்தது.
    • முடிவில் முதலாம் ஆண்டு மாணவி அனுசுபிக்சா நன்றி கூறினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. 4-ம் ஆண்டு மாணவி திவ்யா வரவேற்றார். விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா, தளவாய்புரம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாள், ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி , விருதுநகர் மாவட்ட ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நவமணி, மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தின் வழக்குப் பணியாளர் செல்வி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு புறதொடர்பு பணியாளர் முத்துலட்சுமி , விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் கோபு, ஏட்டு பொன் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். முடிவில் முதலாம் ஆண்டு மாணவி அனுசுபிக்சா நன்றி கூறினார்.

    • அன்னை பாத்திமா கல்லூரியின் நிதி மேலாண்மை கருத்தரங்கம் நடந்தது.
    • பின்னர் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அமைந்துள்ள ஆலம்பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிதி மேலாண்மை பற்றிய 2 நாள் கருத்தரங்கம் கல்லூரி தாளாளர் எம். எஸ். ஷா மற்றும் தலைமை செயல் அதிகாரி சகிலா ஷா ஆகியோரின் ஆலோசனையின் படி நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் தலைமை தாங்கி நிதி மேலாண்மை என்பது பெரு நிறுவனங்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனிமனிதனுக்கும் அவசியம் தேவை. நிதி மேலாண்மை தெளிவு இருந்தால் நிச்சயமாக வெற்றி பெறலாம்.இக்கருத்தரங்கில் பகிரக் கூடிய நிதி பற்றிய அனைத்து தகவல்களையும் மாண வர்கள் தங்களுடைய பட்டப்படிப்பு தேர்வுக்கு மட்டுமல்லாமல் தங்களின் வாழ்வின் வெற்றிக்காகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    முதலாம் நாள் அமர்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செபி அமைப்பின் நிதி மேலாண்மை கல்விப் பிரிவின் ஆலோசகர் டாக்டர் நளினி நிதி சேமிப்பு, நிதி முதலீடு, மற்றும் நிதி பராமரிப்பு போன்றவற்றை பற்றி மிக விரிவாக எடுத்துக் கூறினார். பின்னர் மாணவ மாணவிகள் கேட்ட வினாக்களுக்கு விரிவான பதில் அளித்தார். 2-ம் நாள் அமர்வில் மாணவ மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு நிதி மேலாண்மை பற்றிய குழு விவாதம் நடத்தப் பட்டது. இவ்விவாதத்தில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து உற்சாகமாக கலந்து கொண்டனர். பின்னர் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை நிர்வாக மேலாண்மை துறை இயக்குனர் பேராசிரியர் நடேச பாண்டியன், டாக்டர் நாசர், டாக்டர் திருப்பதி, பி.பி.ஏ. துறை தலைவர் கார்த்திகா பேராசிரியர்கள் அழகு லட்சுமி, கார்த்திக் ஆகியோரின் மேற்பார்வையில் மாணவர்கள் ஜமால், தினேஷ், திவ்யா, பத்மப்பிரியா ஆஃபரின், ரேஷ்மா, மகா, சுவேதா ஆகியோர் செய்தனர். இறுதியில் பேராசிரியர் திருப்பதி நன்றி கூறினார்.

    • காளீஸ்வரி கல்லூரியில் பணி வாய்ப்பு கருத்தரங்கு நடந்தது.
    • முடிவில் வணிகவியல் துறை பேராசிரியர் லட்சுமணகுமார் நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி மற்றும் பணி வாய்ப்பு மையம் சார்பில் அரசு அலுவலகங்களில் தட்டச்சு மற்றும் ஸ்டெனோகிராபி திறன் கொண்டவர்களுக்கு "வேலைவாய்ப்பு" எனும் தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குமரேசன் பேசுகையில், அரசு பள்ளிக்கு செல்வதற்குரிய தகுதிகள் தமிழகம் மற்றும் மத்திய தேர்வாணையங்களில் தேர்வுகளுக்கு தயார் செய்யும் வழிமுறைகள் குறித்து எடுத்து கூறினார். நிகழ்ச்சியில் பணி அமர்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மகேசன் வரவேற்றார். முடிவியல் வணிகவியல் துறை பேராசிரியர் லட்சுமணகுமார் நன்றி கூறினார்.

    • சிறப்பு குழந்தைகளுக்கான சித்த மருத்துவ சிகிச்சை முறை குறித்த 6 நாள் கருத்தரங்கு நடந்தது.
    • மதுரை கோகிலா சித்த மருத்துவமனை சார்பில் ஆயுஷ் செவிலியர்களுக்காக தொடங்கியது.

    மதுரை

    மத்திய ஆயுஷ் அமைச்சகம் நிதி உதவியுடன் ஆயுஷ் செவிலிய சிகிச்சையாளர்க–ளுக்கான "சிறப்பு குழந்தைகளுக் கான சித்த புற மருத்துவ சிகிச்சை முறைகள்" பற்றிய 6 நாட்கள் தொடர் மருத்துவ கருத்தரங்கு மதுரை கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் மதுரை ஆண்டாள்புரம் ஓட்டல் ஸ்ரீதேவியில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    இதனை சென்னை அரசு சித்த மருத்துவக்கல்லூரி முதல் வர் பேராசிரியர் டாக்டர் கே.கனகவல்லி, குத்துவிளக் கேற்றி துவக்கி வைத்தார். மேலும் அவர் ஆயுஷ் தெரபிஸ் டுளுக்கான திறன் மேம் பாட்டு பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார். சித்த மருத்துவத்தின் சிறப்பே புற மருத்துவ முறைகள் தான். சிறந்த முறையில் மருத்துவ ஆவணங்களை பதிவு செய்து புற மருத்துவ சிகிச்சையின் வெற்றியை பதிவு செய்ய வேண்டிய அவசியம், ஆங்கில மருத்துவத்தில் இருப்பது போன்று செவிலிய பணி மட்டுமல்லாமல் நோயாளிக–ளின் உடனிருந்து புறமருத்துவ சிகிச்சையை தொடர்ந்து செய் யும் வாய்ப்பு ஆயுஷ் தெர–பிஸ்டு–களுக்குத்தான் உள்ளது என் றார்.

    மேலும் பணியின்போது சொந்த விருப்பு வெறுப்பு இன்றி நோயாளிகளின் பாது–காப்பு மற்றும் முன்னேற் றத்தை கருத்தில் கொண்டு ஆயுஷ் தெரபிஸ்டுகள் பணி புரிய வேண்டும் என அறிவுரை வழங்கினார். கோகிலா சித்த மருத்துவமனை டாக்டர் ஜெ.–ஜெயவெங்கடேஷ் வரவேற்றார். அருப்புக்கோட்டை தி லெமூரியா சித்த மருத்துவ–மனை டாக்டர் பா.மணி–கண் டன் வாழ்த்துரை வழங்கி–னார்.

    கோகிலா சித்த மருத்துவ–மனை மற்றும் ஆராய்ச்சி மைய உறைவிட மருத்துவ அலுவலர் பா.பவித்ரா பரதநாட்டியம் ஆடி அனைவரையும் வியக்க வைத்தார். கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய உயர் நிர்வாக அலுவலர் ச.செந்தில்நாதன் நன்றி கூறினார். ஆயுஷ் தெரப்பிஸ்டுகளுக்கான புற–மருத்துவ செய்முறை பயிற்சி கையேடு புத்தகம் வெளியி–டப்பட்டது.

    கோகிலா சித்த மருத்துவ–மனை ஆராய்ச்சி மைய குழந்தை மற்றும் மகளிர் மருத்துவ பிரிவு மருத்துவர் டாக்டர் தபசினி சிறப்பு குழந்தைகள், மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக் கான பொடி திமிர்தல், தப்பளம் புறவளையம் போன்றவற்றின் முக்கியத்துவம் மற்றும் அதன் செய்முறைகளை நேரிடை பயிற்சியாக செய்து காண்பித்தார்.

    தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி, புது–டெல்லி, கோவா ஆகிய மாநி–லங்களில் இருந்து 30 ஆயுஷ் தெரபிஸ்டுகள் பயிற்சியில் கலந்து கொண்டனர். பயிற்சி தொடர்ந்து 6 நாட்களாக 27-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த மற்றும் வருகை தர உள்ள சித்த மருத்துவ பேராசிரியர்கள், ஆதரவு வழங்கிய தேசிய சித்த மருத்துவ நிறுவனம், மத்திய சித்தா ரிசர்ச் கவுன்சில், தமிழ் நாடு இந்திய மருத்துவ துறை இயக்குனரகம், இந்திய மருத்து–வத்துறை பாண்டிச்சேரி, சாந்தகிரி சித்த மருத்துவக் கல்லூரி, ஆரோக்கிய சித்த மருத்துவமனை, மணிப்பால் மருத்துவக் கல்லூரி சித்த மருத்துவப் பிரிவு மற்றும் அனைத்து தனியார் மருத்துவ–மனைகளுக்கும் கோகிலா மருத்துவமனை நன்றிகளை தெரிவித்துள்ளது.

    • தமிழ் இலக்கியங்களில் புதிய தேடல்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
    • முடிவில் முனைவா் கரிகாலன் நன்றி கூறினாா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் முதுகலைத் தமிழாய்வுத் துறை சாா்பில் தமிழ் இலக்கியங்களில் புதிய தேடல்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

    கல்லூரி முதல்வா் ஜான்பீட்டா் தலைமை வகித்தாா். இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சண்முகலிங்கன், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு நிறுவன முன்னாள் இயக்குநா் பக்தவத்சலபாரதி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

    தோ்வு நெறியாளா் மலா்விழி, உதவிப் பேராசிரியா் தமிழ்ச்செல்வி, முனைவா் சம்பகலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தமிழ்த் துறைத் தலைவா் வைஜெயந்தி மாலா வரவேற்றாா். முடிவில் முனைவா் கரிகாலன் நன்றி கூறினாா்.

    • கல்லூரியின் தாவரவியல் துறை சாா்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்துக்கு,கல்லூரி முதல்வா் ஆா்.எழிலி தலைமை வகித்தாா்.
    • திருப்பூா் எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணா்வு தொடா்பான சா்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.

    திருப்பூா்:

    திருப்பூா் எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணா்வு தொடா்பான சா்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரியின் தாவரவியல் துறை சாா்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்துக்கு,கல்லூரி முதல்வா் ஆா்.எழிலி தலைமை வகித்தாா். தாவரவியல் துறை தலைவா் ஆா்.குருசாமி வரவேற்புரையாற்றினாா்.

    இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சவூதி அரேபியா தபுக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் முகமது அலிசயத், கடல் சாா்ந்த இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தி புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவது என்ற தலைப்பில் பேசினாா்.இந்தக் கருத்தரங்கில், தாவரவியல் துறை செயலாளா் அபிநயா, கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் எம்.பி.ஏ. மாணவர்களுக்கான கருத்தரங்கு நடந்தது.
    • இதில் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் எம்.பி.ஏ. மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்கு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி செயலாளர் செல்வராஜன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர்களும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிவரும் பிரவீன் குமார், சிவா தினேஷ், விக்னேஷ் பாபு, சிவராம் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு எம்.பி.ஏ. மாணவர்களுக்கான தொழில் வாய்ப்புகள், நிதி சேவை, மார்க்கெட்டிங் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேசினர். ஆங்கில முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறையைச் சேர்ந்த முத்தமிழ், சகிலா ஆகியோர் ஆங்கில மொழி குறித்து விளக்கினர். டாக்டர் ராஜேஸ்வரி மேலாண்மை குறித்து பேசினார். இதில் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வணிகவியல் சார்பில் கருத்தரங்கு நடந்தது.
    • இளங்கலை வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி, காளீஸ்வரி கல்லூரியின் இளங்கலை வணிகவியல் துறை சார்பில் இலக்கு நிர்ணயம் குறித்த கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துறைத்தலைவர் குருசாமி வாழ்த்தி பேசினார்.

    கல்லூரி முன்னாள் மாணவரும், சிவகாசி தனியார் நிறுவன மனித வள அதிகாரியான தீன தயாள் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டார். இலக்குகளை நிர்ணயம் செய்வதன் நோக்கம், குறிக்கோள்கள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். 2-ம் ஆண்டு மாணவி ஜமுனா தேவி வரவேற்றார். 3-ம் ஆண்டு மாணவி ஸ்ரீமலர் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார். 2-ம் ஆண்டு மாணவி ஜெய ராசாத்தி நன்றி கூறினார். இளங்கலை வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் பாபு பிராங்கிளின் நிகழ்ச்சிக்கான 

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கருத்தரங்கு நடந்தது.
    • நிறுவன புதுமையாக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் நிறுவன புதுமையாக்க அமைப்பின் சார்பில் "வடிவமைப்பு சிந்தனை, விமர்சன சிந்தனை மற்றும் புதுமை வடிவமைப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. கோவை சி.வி.ஓ. விட்டி வைஸ் நிறுவனர் சன்மதி கார்த்திக் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், வடிவமைப்பு சிந்தனையை விமர்சன சிந்தனையுடன் இணைப்பதன் மூலம் வாடிக்கையாளர்களை மைய மாக கொண்ட தீர்வுகளை வழங்கும் படைப்பாற்றலை புதுமை தூண்டுகிறது என்றார். வடிவமைப்பு சிந்தனை என்பது புதிய மற்றும் பழைய தீர்வுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கு வதற்கான உலக ளாவிய பயன்பாடாகும்.

    வணிகத் துறையில் உள்ள இடைவெளியைக் கண்டறிந்து புதுமைகளைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளையும் விளக்கினார். நிறுவன புதுமையாக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் வர வேற்றார். தாவரவியல் துறை உதவிப் பேராசிரியர் முருகன் நன்றி கூறினார். இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 114 மாணவர்கள் பங்கேற்றனர். நிறுவன புதுமையாக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    ×