என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    காளீஸ்வரி கல்லூரியில் கணினி அறிவியல் துறை மாணவர்களுக்கான கருத்தரங்கு
    X

    காளீஸ்வரி கல்லூரியில் கணினி அறிவியல் துறை மாணவர்களுக்கான கருத்தரங்கு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கணினி அறிவியல் துறை மாணவர்களுக்கான கருத்தரங்கு நடந்தது.
    • உதவிப்பேராசிரியர்- கணினி அறிவியல் துறையில் பணிபுரியும் பாலமுருகன் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி கணினி அறிவியல் துறை சார்பில் ''வாய்ப்புக்களுக்கான பாதைகள்'' என்ற தலைப்பில் மாணவர்களை நெறிப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் சிவகாசி யூனோபி டெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குநரும், முன்னாள் மாணவருமான விஜயபாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில் , கணினி அறிவியல் துறையில் உள்ள வேலைவாய்ப்பை எளிதில் எவ்வாறு தெரிந்து கொள்வது? என்பது குறித்த வழிமுறைகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். தகவல் தொழில்நுட்ப பிரிவில் வெவ்வேறான பதவிகள் குறித்து உரையாற்றினார். மாணவர்களிடம் எழுந்த கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

    கணினி அறிவியல் துறை இளங்கலை 3-ம் ஆண்டு மாணவி சகாய மேரி வரவேற்றார். இளங்கலை 3-ம் ஆண்டு மாணவர் சூர்யா நன்றி கூறினார். இதில் இளங்கலை 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு பயிலும் கணினி அறிவியல் துறை மாணவ- மாணவிகள் 160 பேர் கலந்து கொண்டனர்.

    கணினி அறிவியல் துறை பிரியா, பாராட்டுரை வழங்கினார். முதல்வர் பாலமுருகன் முதன்மை உரை ஆற்றினார். உதவிப்பேராசிரியர்- கணினி அறிவியல் துறையில் பணிபுரியும் பாலமுருகன் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

    Next Story
    ×