search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செய்யது ஹமிதா கல்லூரியில் நுண்ணுயிரியல் கருத்தரங்கம்
    X

    செய்யது ஹமிதா கல்லூரியில் நுண்ணுயிரியல் கருத்தரங்கம்

    • செய்யது ஹமிதா கல்லூரியில் நுண்ணுயிரியல் கருத்தரங்கம் நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சார்பில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்ற சிறப்பு கருத்தரங்கம் முதல்வர் சதக்கத்துல்லா தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாணவர்களாகிய மதுரை மருத்துவக் கல்லூரி நுண்ணுயிரியல் துறை விஞ்ஞானி செல்வபிரபு, சென்னை சவிதா மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் சதீஷ்குமார் பாலு ஆகியோர் பங்கேற்று ேபசினர்.

    நோய்க்கு காரணமான நுண்ணுயிரினங்களை கண்டறிவதற்கு பயன்படும் அனைத்து உபகரங்களைப் பற்றியும் அதனை கையாளும் முறைகளைப் பற்றியும் செல்வபிரபு எடுத்துரைத்தார். நானோ அறிவியல் பற்றியும், அதனுடைய வகைகளை குறித்தும், மருத்துவத்தில் நானோ அறிவியலின் தாக்கம் குறித்தும் சதீஷ்குமார் பாலு எடுத்துரைத்தார். இதற்கான ஏற்பாடுகளை நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்கள் ஆனந்த், ஷோபனா, விஜயகுமாரி, சாகுல் ஹமீது ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×