search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு
    X

    கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர் சதீஷ்குமார் சேட்டு பேசினார்.

    தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு

    • சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு நடந்தது.
    • நிறைவு விழாவில் 4-ம் ஆண்டு மாணவி பிரியதர்ஷினி நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொலை தொடர்பியல் துறை சார்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கை (ELCOWARZ-2023) நடத்தியது.

    பி.எஸ்.ஆர். கல்விக் குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தொடங்கி வைத்தார். இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

    டீன் மாரிச்சாமி வாழ்த்துரை வழங்கினார். மின்னணுவியல் துறைத்தலைவர் வளர்மதி கருத்தரங்கின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார். 4-ம் ஆண்டு மாணவர் அய்யனார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கோவை ''மைண்ட்நோடிக்ஸ் டெக்னாலஜிஸ்'' நிறுவனர் சதீஷ்குமார் சேட்டு கலந்து கொண்டார். அவர் பேசுகையில், மாணவர்கள் தங்களுக்கென்று ஒரு குறிக்கோளை வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றவாறு செயல்புரிய வேண்டும்.

    மாணவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். புதுமையான செயல்திறன் மிக்க கண்டுபிடிப்புகளை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும். தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஆய்வு கட்டுரைகளை உருவாக்க வேண்டும் என்றார்.

    கருத்தரங்கில் தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு ஆய்வு கட்டுரைகளை சமர்பித்தனர். கனெக்சன். போன்ற தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகளும், தொழில் நுட்பம் சாராத போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

    நிறைவு விழாவில் 4-ம் ஆண்டு மாணவி பிரியதர்ஷினி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசியர் ஒருங்கினைப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், ராமலட்சுமி மற்றும் துறைப்பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் இணைந்து செய்திருந்தனர்.

    Next Story
    ×