என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    முத்துப்பேட்டை கவுசானல் கல்லூரியில் கருத்தரங்கம்
    X

    முத்துப்பேட்டை கவுசானல் கல்லூரியில் கருத்தரங்கம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முத்துப்பேட்டை கவுசானல் கல்லூரியில் கருத்தரங்கம் நடந்தது.
    • கருத்தரங்கத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கவுசானல் கல்லூரி, இலங்கை ஒப்பீட்டு சமயம், சமூக நல்லுறவு துறை கிழக்குப் பல்கலைக்கழகம், ஷான்லகஸ் நிறுவனம் சார்பில் இலக்கியங்களில் தமிழர் அறிவுருவாக்க முறைகள் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. கவுசானல் கல்லூரி கூட்ட அரங்கில் கல்லூரி செயலர் மரிய சூசை அடைக்கலம் தலைமை தாங்கினார். முதல்வர் ஹேமலதா முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் அலங்கானூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதுநிலை கணினி ஆசிரியர் செந்தில்குமார் சிறப்புரை ஆற்றினார்.

    முதுநிலை விரிவுரையாளர் நவரத்தினம் கருத்துரை வழங்கினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி உதவி பேராசிரியர் ராமர் நோக்க உரை ஆற்றினார், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் சிவகுரு வாழ்த்துரை வழங்கினார். அறிவு மணி மைய உரையாற்றினார். முன்னதாக கவுசானல் கல்லூரி தமிழ் உயராய்வு மைய தலைவர் ராஜலட்சுமி வரவேற்றார். முடிவில் உதவி பேராசிரியர் ரேவதி நன்றி கூறினார். கருத்தரங்கத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×