search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்தில்"

    • சிகிச்சை பலனின்றி சண்முகம் பரிதாபமாக இறந்தார்.
    • பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் இருந்து பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநில த்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது.

    இந்த சாலை வழியாக கர்நாடகாவிற்கு செல்வ தற்கு குறைந்த தூரம் என்பதாலும் வளைவுகள் குறைவு என்பதாலும் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த வழித்தடத்தை பயன்ப டுத்தி வருகின்றார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கர்நாடகா மாநிலம் ராமாபுரம் பகுதியில் இருந்து தர்பூசணி பாரம் ஏற்றிக்கொண்டு பர்கூர் வழியாக வந்து கொண்டிருந்தது.

    இதில் 6 பேர் பயணம் செய்தார்கள். தொடர்ந்து வரட்ட பள்ளம் அணை வளைவு பகுதியில் சரக்கு வாகனம் வந்த போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.

    இதில் சென்னம்பட்டி சனிசந்தை சித்தகவண்ட னூர், மாரியப்பன் (47) பழனியம்மாள் (44) ராமாயி (45) செவன் (48) மாரிமுத்து (49) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

    கேரளா மாநிலம் திரு ச்சூர் மாவட்டம் கொடுங்க ல்லூர் ரியாஸ் (34) ஓட்டுன ருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    மேலும் சென்னம்பட்டி பூனர் நகர் பகுதியை சேர்ந்த சண்முகம் என்கின்ற குமார் (45) கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை சண்முகம் என்கின்ற குமார் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    • கோர்ட்டு தீர்ப்பு
    • குளச்சல் போலீசார் அஜ்மல்கான் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    குளச்சல், நவ.18-

    குளச்சல் அருகே உள்ள கோடிமுனையை சேர்ந்த வர் ஞானப்பிரகாசம் (வயது 80). இவர் கடந்த 2010 ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ந்தேதி நடந்து குளச்சல் வந்து விட்டு இரவு வீட் டிற்கு திரும்பி சென்றார். சைமன் காலனி பாலம் அருகில் குறும்பனை சாலை யில் நடந்து செல்லும்போது, குறும்பனையிலிருந்து குளச்சல் நோக்கி வந்து கொண்டிருந்த கொம்பன் விளாகத்தை சேர்ந்த லாரி டிரைவர் அஜ்மல்கான் (33) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராமல் ஞானப்பிரகாசம் மீது மோதி யது. படுகாயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். மறுநாள் சிகிச்சை பலனின்றி ஞானப்பிர காசம் பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்து குளச்சல் போலீசார் அஜ்மல்கான் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு இரணியல் ஜே.எம்.கோர்ட்டில் கடந்த 13 வருடமாக நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி அமீர்தீன், அஜ்மல்கானுக்கு 2 வருடம் சிறைத்தண்டனை யும், ரூ.10 ஆயிரம் அபராத மும் விதித்து தீர்ப்பு அளித் தார்.

    வாகன விபத்தில் விவசாயி காயம்

    வேலாயுதம்பாளையம் 

    கரூர் மாவட்டம் கீழ் ஓரத்தை பகுதியைச் சேர்ந்தவர் பால சுப்பிரமணி (வயது 65).

    இவர் தனது மோட்டார் சைக்கிளில் தளவாபா ளையம் செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார்.அப்போது மலையம்பாளையம் பிரிவு அருகே சென்ற போது அங்கிருந்து அதிவேகமாக வந்த கார் நிலை தடுமாறி பாலசுப்ரமணி ஒட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பாலசுப்பிரமணி நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வேலாயு தம்பாளையம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நந்தகோ பால் விபத்து ஏற்படுத்திய கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பள்ளப்பள்ளி பகுதியை சேர்ந்த மஞ்சு நாதன் (32 ) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகிறார்கள்.

    • நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
    • மருத்துவர்கள் சுப்பிரமணியன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஈரோடு, நவ. 8-

    ஈரோடு மாவட்டம் பெரு ந்துறை அருகே ஜம்புளி யம்பட்டி அடுத்த பட்சாங்கா ட்டூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன் மகன் சுப்பிரமணியன் (வயது 24). இவர் பாரத ஜனதா கட்சி நிர்வாகி ஆவார்.

    இந்நிலையில் சுப்பிர மணியன் நேற்றிரவு வேலை நிமித்தமாக தனது இருசக்கர வாகனத்தில் விஜயமங்கலம் சென்று விட்டு பின்னர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அவர் வாய்ப்பாடி பிரிவு அருகே வந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

    இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர்கள் சுப்பிரமணியன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் பெருந்துறை போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      ராசிபுரம்:

      ராசிபுரம் தாலுகா, நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாக் கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி (வயது 72). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலையில் அவரது மொபட்டில் நாமகிரிப்பேட்டையில் இருந்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.

      இந்த நிலையில் அரியாக்கவுண்டம்பட்டி தெற்கு காலனியை சேர்ந்த வாலிபர் சண்முகம் (20) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் தெய்வசிகாமணி மீது மோதியது. இதில் இரண்டு பேரும் காயம் அடைந்தனர். ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கிருந்து தெய்வசிகாமணி மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

      அங்கு சிகிச்சை பலனின்றி தெய்வசிகாமணி பரிதாபமாக இறந்தார். இது பற்றி நாமகிரிப்பேட்டை போலீசார் வாலிபர் சண்முகம் மீது வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் சண்முகம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

      • பூலாவரி மேம்பாலம் அருகே சென்ற போது ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பஸ் அவர்கள் மீது மோதியது.
      • இதில் தூக்கி வீசப்பட்ட சுந்தரேஸ்வரன், ராவணன் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

      சேலம்:

      சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி உடையார்காடு பகுதியை சேர்ந்தவர் ராவணன்.இவரது மகன் சுந்தரேஸ்வரன் (வயது 25). இவர்கள் இருவரும் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பூலாவரி மேம்பாலம் அருகே சென்ற போது ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பஸ் அவர்கள் மீது மோதியது.

      இதில் தூக்கி வீசப்பட்ட சுந்தரேஸ்வரன், ராவணன் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை அனுப்பி வைத்தனர். பலத்த காயம் அடைந்த சுந்தரேஸ்வரன் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். ராவணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

      மற்றொரு சம்பவம்

      இதேபோல் அரிசிபாளையம் ரத்தினசாமி புரத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் (65). இவர் சத்திரத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் சுப்பிரமணியன் காயம் அடைந்தார். அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலே பரிதாபமாக இறந்தார். இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

      • மொபட் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
      • சந்திரசேகருக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது.

      அறச்சலூர்:

      அறச்சலூர் அருகே உள்ள குள்ளரங்கன் பாளையத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (42) விவசாயி. இவர் தனது சொந்த வேலை காரணமாக சென்னிமலைக்கு தனது மொபட்டில் சென்றார்.

      பின்னர் இரவு ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ஊசிபாளையம் என்ற இடத்தின் அருகே சாலையில் நடந்து சென்ற ஒருவர் மீது மொபட் மோதாமல் இருக்க மொபட்டை திருப்பி உள்ளார்.

      இதில் மொபட் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் சந்திரசேகருக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது.

      உடனே அக்கம் பக்கம் இருந்தவர்கள் சந்திரசேகரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சந்திரசேகர் சிகிச்சை பெற்று வருகிறார்.

      இச்சம்பவம் குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • பொன்மனை பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் தருண்
      • கோயம்புத்தூரில் உறவினர் வீட்டில் தங்கி 9- ம் வகுப்பு படித்து வந்தான்.


      தக்கலை, அக்.7-

      குலசேகரம் அருகே உள்ள பொன்மனை பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் தருண் (வயது 15). இவன் கோயம்புத்தூரில் உறவினர் வீட்டில் தங்கி 9- ம் வகுப்பு படித்து வந்தான்.

      கடந்த வாரம் விடுமுறையில் ஊருக்கு வந்த தருண், நண்பர் மேத்யூ ஜோஸ் என்பவருடன் தக்க லை அருகே மருந்துகோட்டை பகுதியில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்கு மோட் டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து திரும் பிய போது, சித்திரங்கோடு அருகே ரோட்டில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் தருணுக்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் உள்ளவர்கள் இவர்களை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை தருண் பரிதாப மாக இறந்தார்.

      இது சம்பந்தமாக தருணின் தந்தை, கொற்றி கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பே ரில் போலீசார் விசாரணை நடத்தி மோட்டார் சைக் கிளை ஓட்டிய மேத்யூ ஜோஸ் மீது வழக்கு பதிவு செய்தனர். தருண் உடல் பிரேத பரிசோ தனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைக்கப் பட்டது. விடுமு றைக்கு வந்த நேரத்தில் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

      • நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கணேசன் விழுந்தார்.
      • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      பெருந்துறை:

      ஈரோடு மாவட்டம் பெருந்துறை பங்களாவீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 63). இவர் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி. இவர் மகளின் திருமண அழைப்பிதழை உறவினருக்கு கொடு ப்பதற்காக பெருந்துறை ஈரோடு ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

      அப்போது ஒரு மூதாட்டி ரோட்டை கடக்க முயன்றார். இதையடுத்து அவர் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டார். இதனால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கணேசன் விழுந்தார்.

      இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

      அங்கு சிகிச்சை பெற்று வந்த கணேசன் சிகிச்சை பலன் இல்லாமல் உயிர் இழந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், சப்- இன்ஸ்பெக்டர் தங்கதுரை ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • வாழப்பாடி அருகே உள்ள நீர்முள்ளிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் விஜயகுமார் (24).
      • நிலை தடுமாறிய விஜயகுமார் சாலையோர தடுப்பு சுவரில் மோதி படுகாயம் அடைந்தார்.

      சேலம்:

      சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள நீர்முள்ளிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் விஜயகுமார் (24) சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் ஏ.வி.ஆர் ரவுண்டானா பைபாஸ் சாலையில் கொண்டலாம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறிய விஜயகுமார் சாலையோர தடுப்பு சுவரில் மோதி படுகாயம் அடைந்தார். அந்த வழியில் சென்றவர்கள் இவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையில் இருந்த விஜயகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

      • சென்னை - திருச்சி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
      • அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

      விழுப்புரம்:

      திருவெண்ணைநல்லூர் மாண்டூர் பஸ் நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத நபர் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையை நோக்கி சென்ற லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை, அவ்வழியே சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

      இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 108 ஆம்புலன்ஸ்சில் அடையாளம் தெரியாத நபர் பலியானார். அதே சாலையில் திருச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். மாண்டூர் உர நிறுவனம் அருகில் சென்ற போது, பின்னால் வந்த அடையாளம் தெரி யாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

      இதில் சம்பவ இடத்தி லேயே தலை நசுங்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவெண்ணை நல்லூர் போலீசார் இவ்விரு விபத்துகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • இரு சக்கர வாகன விபத்தில் 2 வாலிபர்கள் பலியாகினர்.
      • மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்

      புதுக்கோட்டை

      புதுக்கோட்டை அருகே செம்பட்டிவிடுதியை சேர்ந்தவர் விவேக் (வயது 27). அதேபகுதியை சேர்ந்தவர்கள் சதீஸ்வரன் (28), விக்னேஷ் (24). தொழிலாளர்களான இவர்கள் 3 பேரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் முள்ளூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். வாகனத்தை விவேக் ஓட்டினார். மற்ற 2 பேரும் பின்னால் அமர்ந்திருந்தனர்.

      இந்த நிலையில் முள்ளூர் ரவுண்டானா அருகே வந்த போது தடுப்பு சுவரில் மோதியது. இதில் 3 பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதையடுத்து படுகாயமடைந்த 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

      இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனில்லாமல் விவேக் அன்றைய தினம் இறந்தார். மற்ற 2 பேரும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் சதீஸ்வரனும் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்தார். விக்னேசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

      இதுகுறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      ×