search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The worker"

    • சாலையோரம் இருந்த மரம் ஒன்று ரோட்டின் குறுக்கே விழுந்து கிடந்தது.
    • மோட்டார் சைக்கிள் கீழே கிடந்த மரத்தின் மோதி விபத்து ஏற்பட்டது.

    ஈரோடு,

    ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சூறைக்காற்றுடன் பரவலான மழை பெய்தது. இந்த மழையின்போது பெருந்துறை வாய்க்கால் மேடு பகுதியில் சாலையோரம் இருந்த மரம் ஒன்று ரோட்டின் குறுக்கே விழுந்து கிடந்தது.

    அப்போது அவ்வழியாக வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்த தொழிலாளியான செந்தில்(45), மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இரவு நேரம் என்பதால் சாலையோரம் மரம் விழுந்தது தெரியவில்லை. இதனால் அவருடைய மோட்டார் சைக்கிள் கீழே கிடந்த மரத்தின் மோதி விபத்து ஏற்பட்டது.

    இதில் பலத்த காயம் அடைந்த செந்திலை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் ஏற்காடு நெடுஞ்சாலை குமாரசாமிப்பட்டி பகுதியில் மரம் வெட்டியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் உறுதி அளித்தனர்.
    • வெட்டப்பட்ட மர கிளைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் ஏற்காடு நெடுஞ்சாலை குமாரசாமிப்பட்டி பகுதியில் இன்று காலை வின்சென்ட் பகுதியை சேர்ந்த அழகு ராஜன் என்பவர் தனது வேலை ஆட்களை வைத்து எந்திரங்கள் மூலம் அப்பகுதியில் உள்ள பழமை வாய்ந்த அரச மரம் உள்ளிட்ட மரங்களை வெட்டிக் கொண்டு இருந்தார்.

    இதனை பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அனுமதி பெற்று தான் இந்த மரங்களை வெட்டுகிறீர்களா? என்று கேட்டதற்கு இதை சொல்வதற்கு நீங்கள் யார் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அழகு ராஜன், மரம் வெட்டும் பணியை பாதியில் நிறுத்திவிட்டு புறப்பட்டுச் செல்ல முயன்றார். அப்போது அங்கு போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் வந்து அழகு ராஜனை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அரசு அனுமதி இல்லாமல் மரங்களை வெட்டியது தெரியவந்தது.

    இதையடுத்து அழகு ராஜன் மீது மரம் வெட்டியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் உறுதி அளித்தனர். வெட்டப்பட்ட மர கிளைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ராஜேந்திரன் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
    • நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் சித்தேரிக்கரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது47)இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 9-ந் தேதி விழுப்புரம் விராட்டிக்குப்பம் வினோபா நகரைச் சேர்ந்த சரவணன் என்பவரின் புதிய வீடு கட்டும் பணிக்காக 15 அடி உயரமுள்ள சாரம் கட்டி பூசுவேலைகளை பார்த்து வந்துள்ளார். 

    அப்போது தவறுதலாக மேலிருந்து கிழே விழுந்ததில் தலையில் அடிபட்டது. உடனடியாக அருகிலிரு ந்தவர்களின் உதவியுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டிருந்தார். இந்நிலையில் ராஜேந்திரன் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×