search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "died in"

    • சாலையோரம் இருந்த மரம் ஒன்று ரோட்டின் குறுக்கே விழுந்து கிடந்தது.
    • மோட்டார் சைக்கிள் கீழே கிடந்த மரத்தின் மோதி விபத்து ஏற்பட்டது.

    ஈரோடு,

    ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சூறைக்காற்றுடன் பரவலான மழை பெய்தது. இந்த மழையின்போது பெருந்துறை வாய்க்கால் மேடு பகுதியில் சாலையோரம் இருந்த மரம் ஒன்று ரோட்டின் குறுக்கே விழுந்து கிடந்தது.

    அப்போது அவ்வழியாக வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்த தொழிலாளியான செந்தில்(45), மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இரவு நேரம் என்பதால் சாலையோரம் மரம் விழுந்தது தெரியவில்லை. இதனால் அவருடைய மோட்டார் சைக்கிள் கீழே கிடந்த மரத்தின் மோதி விபத்து ஏற்பட்டது.

    இதில் பலத்த காயம் அடைந்த செந்திலை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×