என் மலர்
நீங்கள் தேடியது "An agricultural laborer died"
- சைக்கிளில் சென்று கொண்டிருந்த சின்னச்சாமி மீது நான்கு சக்கர வாகனம் ஒன்று மோதியது.
- விபத்தில் தூக்கி வீசப்பட்ட சின்னசாமி தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
பவானி:
பவானி தொட்டிபாளையம் கிராமம் ஓதுவார் தோட்டத்தில் வசிப்பவர் சின்னசாமி (60). விவசாய கூலி தொழிலாளி. சம்பவத்தன்று சின்னசாமி தனது சைக்கிளில் தொட்டி பாளையம் பகுதியில் இருந்து ஊராட்சி கோட்டைக்கு சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த நான்கு சக்கர வாகனம் ஒன்று சைக்கிளில் சென்று கொண்டிருந்த சின்னச்சாமி மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சின்னசாமி தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பவானி போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று இறந்த சின்னச்சாமி உடலை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ேமலும் இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.






