search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் தொழிலாளி பலி
    X

    விபத்தில் தொழிலாளி பலி

    • மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
    • இதில் அருகில் இருந்த ஜல்லி குவியல் மீது விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டது.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் அரசு மரத்து வீதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (52) கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு தனது வீட்டிலிருந்து குருவரெட்டியூர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அருகில் இருந்த ஜல்லி குவியல் மீது விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

    இதுகுறித்து அம்மாபேட்டை சப்- இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த அருணாச்சலத்திற்கு ஞானசுந்தரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    Next Story
    ×