search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The worker died"

    • வெங்கடேசன் வீட்டின் முன்பு மழைநீர் தேங்குவதை தடுக்க தரைத்தளம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டினார்.
    • எதிர்பாராதவிதமாக வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து வெங்கடேசன் மீது விழுந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த வடசெட்டியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 53) கட்டிட தொழிலாளி. இவர் தனது வீட்டின் முன்பு மழைநீர் தேங்குவதை தடுக்க தரைத்தளம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டினார். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து வெங்கடேசன் மீது விழுந்தது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் போலீசார் இடிபாடுகளை அகற்றி பலியான வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மனைவி குமுதவள்ளி கொடுத்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் லோகேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிர்பாராத விதமாக தவறி தென்னை மரத்தில் இருந்து கீழே விழுந்தார்.
    • மேல் சிகிச்சை க்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சேர்த்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள ஆயிகவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 48). இவருக்கு கன்னியம்மாள் என்ற மனைவியும் மற்றும் 3 மகள்களும் உள்ளனர். சுப்பிரமணி தென்னை மரம் ஏறும் வேலை செய்து வந்தார்.

    இவர் சம்பவத்தன்று வழக்கம் போல் தேங்காய் பறிப்பதற்காக பெருந்துறை வாய்க்கால் மேடு, பள்ள க்காட்டு தோட்டம் பகுதியில் உள்ள ஒருவரது தோட்ட த்திற்கு சென்றார்.

    தொடர்ந்து அவர் அங்கு தென்னை மரத்தில் ஏறிக் கொண்டிருந்தார். அப் போது அவர் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு முதுகு பகுதியில் பலத்த அடிபட்டு படுகாயம் அடைந்தார். தொடர்ந்து மயக்கம் அடைந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கார் மூலம் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த னர். பின்னர் மேல் சிகிச்சை க்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றிபரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
    • இதில் அருகில் இருந்த ஜல்லி குவியல் மீது விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டது.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் அரசு மரத்து வீதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (52) கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு தனது வீட்டிலிருந்து குருவரெட்டியூர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அருகில் இருந்த ஜல்லி குவியல் மீது விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

    இதுகுறித்து அம்மாபேட்டை சப்- இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த அருணாச்சலத்திற்கு ஞானசுந்தரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    ×