search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரம் அருகே  சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி
    X

    சங்கராபுரம் அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

    • வெங்கடேசன் வீட்டின் முன்பு மழைநீர் தேங்குவதை தடுக்க தரைத்தளம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டினார்.
    • எதிர்பாராதவிதமாக வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து வெங்கடேசன் மீது விழுந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த வடசெட்டியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 53) கட்டிட தொழிலாளி. இவர் தனது வீட்டின் முன்பு மழைநீர் தேங்குவதை தடுக்க தரைத்தளம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டினார். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து வெங்கடேசன் மீது விழுந்தது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் போலீசார் இடிபாடுகளை அகற்றி பலியான வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மனைவி குமுதவள்ளி கொடுத்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் லோகேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×