search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரியில்"

    • லாரியில் இருந்து ஒரு ராட்சத கிராணைட் கல் சாலையில் கீழே விழுந்தது.
    • எந்த ஒரு வாகனமும் வராததால் விபத்துக்கள் எதுவும் நடைபெறவில்லை.

    அந்தியூர், 

    அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது. இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன. மேலும் இந்த வழியாக செல்வதனால் போக்குவரத்து தொலைவு குறைவாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த வழித்த டத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் கர்நாடகாவில் இருந்து ராட்சத கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு வந்த கனரக லாரி மலைப்பாதையின் 2-வது வளைவில் திரும்பும் பொழுது லாரியில் இருந்து ஒரு ராட்சத கிராணைட் கல் சாலையில் கீழே விழுந்தது.

    இதனையடுத்து டிரைவர் அந்த லாரியை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு அங்கேயே நின்றிருந்தார். அதிகாலை நேரம் என்பதா லும், லாரியின் பின்னால் எந்த ஒரு வாகனமும் வராததால் விபத்துக்கள் எதுவும் நடைபெறவில்லை.

    மேலும் சாலை ஓரமாக இந்த கிரானைட் கல் விழுந்திருப்பதால் போக்கு வரத்து பாதிப்பு எதுவும் இன்றி வாகனங்கள் சென்று வருகின்றது. தகவலை அறிந்த பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் தனபால், முருகன் உள்ளி ட்ட போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து கல்லை வண்டியில் ஏற்றும் பணி யில் ஈடுபட்டனர்.

    மேலும் பொக்லைன் எந்திரத்தின் மூலமாக மட்டுமே இந்த கல்லை ஏற்ற முடியும் என்பதால் 2 வாகனங்களை வரவழைத்து ஏற்றும் பணி நடைபெற்றது.

    • ஆசனூரில் இருந்து காரப்பள்ளம் செல்லும் சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை கூட்டம் கரும்பு லாரியை எதிர்பார்த்து சாலை ஓரத்தில் காத்திருந்தது.
    • வனப்பகுதியில் இருந்து வெளியேறி கரும்புகளை ருசித்த யானையை வாகன ஓட்டிகள் செல்பி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    தண்ணீர் மற்றும் உணவு தேடி யானைகள் குட்டிகளுடன் அடிக்கடி இந்த சாலையை கடந்து செல்வது வழக்கம். அப்போது அந்த வழியாக வரும் வாகனங்களை யானைகள் வழி மறிப்பதும், விரட்டுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதே போல் கடந்த சில நாட்களாக கரும்புகளை ருசிக்க யானைகள் குட்டி யுடன் சாலையில் உலா வருவதும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை சாப்பிட்டு வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் ஆசனூரில் இருந்து காரப்பள்ளம் செல்லும் சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை கூட்டம் கரும்பு லாரியை எதிர்பார்த்து சாலை ஓரத்தில் காத்திருந்தது.

    அப்போது தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு கரும்பு ஏற்றி கொண்டு ஒரு லாரி வந்தது. கரும்புகளின் வாசனையால் அந்த லாரியை யானைகள் திடீரென வழி மறித்து நிறுத்தியது.

    பின்னர் அதில் இருந்த கரும்புகளை பிடுங்கி ருசித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் லாரியை ஓரமாக நிறுத்தி னார். தொடர்ந்து யானைகள் லாரியில் இருந்த கரும்புகளை ருசித்து அங்கேயே உலாவி கொண்டு இருந்தது.

    இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை ரோட்டோரம் நிறுத்தினர். வாகனங்கள் அனைத்தும் அணி வகுத்து நின்றன. இதனால் தமிழகம், கர்நாடகம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அப்போது வாகன ஓட்டிகள் சிலர் ஆபத்தை உணராமல் யானைகளை செல்பி எடுத்தனர். நீண்ட நேரம் சாலையை வழி மறித்த யானை கூட்டம் தானாக வனப்பகுதியில் சென்றது.

    இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கரும்புகளை ருசித்த யானையை வாகன ஓட்டிகள் செல்பி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆபத்தை உணராமல் செல்பி எடுத்தவர்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    ×