search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Telugu Desam Party"

    மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் கடந்த 3 நாளாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை மம்தா பானர்ஜி இன்று நிறைவு செய்தார். #MamataDharna #CBIvsMamata
    கொல்கத்தா:

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரிப்பதற்காக நேற்று முன்தினம் 8 சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென அவரது வீட்டுக்கு சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கொல்கத்தா போலீசார், சி.பி.ஐ. அதிகாரிகளை வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று காவலில் வைத்து, பின்னர் விடுவித்தனர். இதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கும், மம்தா பானர்ஜி அரசுக்கும் மோதல் உருவாகி உள்ளது.

    போலீஸ் உயர் அதிகாரியிடம் மாநில அரசின் அனுமதி பெறாமல் சி.பி.ஐ. விசாரிக்க முயற்சி செய்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார். அதோடு அரசியலமைப்பு சட்டத்தையும், கூட்டாட்சி தத்துவத்தையும் பாதுகாக்கப் போவதாக சொல்லி கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் எதிரில் நேற்று முன்தினம் போராட்டத்தை தொடங்கினார். 

    அவரை தி.மு.க. சார்பில் கனிமொழி, ஆம் ஆத்மி சார்பில் கெஜ்ரிவால், ராஷ்டீரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பல்வேறு தலைவர்கள் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.



    இதற்கிடையே, மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் தர்ணா நடத்தி வரும் மம்தா பானர்ஜியை தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர மாநில முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு சந்தித்து இன்று ஆதரவு தெரிவித்துள்ளார். அப்போது பேசிய நாயுடு, எதிர்க்கட்சிகளின் முக்கிய தூணாக விளங்குபவர் மம்தா பானர்ஜி. வரும் பாராளுமன்ற தேர்தலில் 42 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.

    இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் கடந்த 3 நாளாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை மம்தா பானர்ஜி இன்று நிறைவு செய்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், நீதிமன்றம் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளது. இதனால் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு காக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, தர்ணா போராட்டத்தை நிறைவு செய்கிறேன் என அறிவித்தார். #MamataDharna #CBIvsMamata
    மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் தர்ணா நடத்தி வரும் மம்தா பானர்ஜியை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். #MamataDharna #CBIvsMamata #ChandrababuNaidu
    கொல்கத்தா:

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரிப்பதற்காக நேற்று முன்தினம் 8 சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென அவரது வீட்டுக்கு சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கொல்கத்தா போலீசார், சி.பி.ஐ. அதிகாரிகளை வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று காவலில் வைத்து, பின்னர் விடுவித்தனர். இதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கும், மம்தா பானர்ஜி அரசுக்கும் மோதல் உருவாகி உள்ளது.

    போலீஸ் உயர் அதிகாரியிடம் மாநில அரசின் அனுமதி பெறாமல் சி.பி.ஐ. விசாரிக்க முயற்சி செய்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார். அதோடு அரசியலமைப்பு சட்டத்தையும், கூட்டாட்சி தத்துவத்தையும் பாதுகாக்கப் போவதாக சொல்லி கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் எதிரில் நேற்று முன்தினம் போராட்டத்தை தொடங்கினார். 



    அவரை தி.மு.க. சார்பில் கனிமொழி, ஆம் ஆத்மி சார்பில் கெஜ்ரிவால், ராஷ்டீரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பல்வேறு தலைவர்கள் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் தர்ணா நடத்தி வரும் மம்தா பானர்ஜியை தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர மாநில முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு சந்தித்து இன்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே, 22 எதிர்க்கட்சிகள் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளன. இவையனைத்தும் பிரதமர் மோடி சி.பி.ஐ.யை ஏவி விட்டு மாநில அரசுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டி உள்ளன. #MamataDharna #CBIvsMamata #ChandrababuNaidu
    எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். #ChandrababuNaidu #RahulGandhi
    புதுடெல்லி:

    பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஈடுபட்டு வருகிறார்.

    இதேபோல பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகிய ஆந்திர முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் வரும் பாராளுன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் களமிறங்கி உள்ளார். இதற்காக அவர் பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்துப் பேசிவருகிறார். 

    இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்துப் பேசினார். 

    ஆந்திராவில் காங்கிரசும், தெலுங்கு தேசமும் எதிர்துருவங்களாக இருக்கும் கட்சிகளாகும். பா.ஜ.க.வுக்கு எதிராக வலிமையான கூட்டணியை உருவாக்க இந்த இரு கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த சந்திப்பைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோரையும் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசவுள்ளார். #ChandrababuNaidu #RahulGandhi
    தெலுங்கானாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் ஒரே மேடையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். #TelanganaAssemblyElections #RahulGandhi #ChandrababuNaidu
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் வரும் 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி அங்கு தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது.

    இந்நிலையில், கம்மம் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடுவும் ஒரே மேடையில் பங்கேற்றனர். அப்போது அவர்கள் பேசியதாவது:



    தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி பாஜகவின் மற்றொரு அங்கம் போல் செயல்பட்டு வருகிறது. மாநிலத்தை ஆட்சி செய்துவரும் சந்திரசேகர ராவ் பிரதமர் மோடிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். எனவே, மாநிலத்தில் சந்திரசேகர ராவ் ஆட்சியையும், மத்தியில் பாஜக ஆட்சியையும் அகற்ற வேண்டும்.

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதாக கூறிய பிரதமர் மோடி தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதனால்
    ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில மக்கள் மகிழ்ச்சியின்றி உள்ளனர்.

    மத்திய அரசின் அமைப்புகளான ஆர்பிஐ மற்றும் சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை மோடி அரசு அழிக்க முயற்சித்து வருகிறது என தெரிவித்தனர். #TelanganaAssemblyElections #RahulGandhi #ChandrababuNaidu
    தெலுங்கானாவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 93 இடங்களிலும், தெலுங்கு தேசம் கட்சி 14 இடங்களிலும் போட்டியிட முடிவாகி உள்ளது. #TelanganaAssemblyElections #Congress #TDP
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் தலைமையிலான ராஷ்டீரிய சமிதி கட்சி ஆட்சி நடந்தது. முதல் மந்திரி சந்திரசேகர ராவ் முன்கூட்டியே தேர்தலை சந்திக்க முடிவு செய்து ஆட்சியை கலைத்தார்.

    இதையடுத்து, தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் 7-ம் தேதி நடக்கிறது. இதனால் அம்மாநிலத்தில் தீவிர பிரசாரம் நடந்து வருகிறது.

    சந்திரசேகர ராவ் தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அவர்கள் தொகுதிகளில் தேர்தல் பணியில் மும்முரமாக உள்ளனர்.

    இதற்கிடையே, தெலுங்கானா தேர்தலில் காங்கிரசும் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.



    இந்நிலையில், தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

    அதன்படி, மொத்தமுள்ள் 119 தொகுதிகளில் காங்கிரஸ் 93 இடங்களில் போட்டியிடுகிறது. தெலுங்கு தேசம் கட்சிக்கு 14 இடங்களும், தெலுங்கானா ஜனசமிதி கட்சிக்கு 8 இடங்களும், சிபிஐக்கு 3 இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளது என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியை வீழ்த்த காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நடிகைகள் விஜயசாந்தி மற்றும் நக்மா, இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் உள்பட பலர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர். #TelanganaAssemblyElections #Congress #TDP
    தெலுங்கு தேசம் கட்சியினரால் தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக நடிகை ரோஜா கூறினார். #ActorRoja #TeluguDesamParty
    நகரி:

    ஆந்திர மாநிலம் நகரியை அடுத்த அகரம்பேட்டையை சேர்ந்த ஒரு பெண் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் அதிவேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

    விபத்தை ஏற்படுத்திய லாரி அந்த பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்குவாரிக்கு சொந்தமானது என்றும், இந்த கல்குவாரியின் லாரிகளால் இதேபோன்று விபத்துகள் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று, விபத்து நடந்த இடத்திற்கு மிக அருகில் நடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பிலான கிரிக்கெட் போட்டியை காண நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா வந்திருந்தார். அவர் சம்பவம் குறித்து அறிந்ததும் தனது தொண்டர்களுடன் சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதையடுத்து புத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பவானி அர்ஷா அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட நடிகை ரோஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, போலீசார் லஞ்சம் வாங்கி கொண்டு கல்குவாரிக்கு சாதகமாக செயல்படுவதாக ரோஜா பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்த நிலையில், சாலைமறியல் போராட்டம் தொடர்பாக நடிகை ரோஜா மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் நேற்று முன்தினம் கூறினார். இதுதொடர்பாக நடிகை ரோஜா நேற்று நகரியில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சாலை மறியல் போராட்டம் நடந்த 3 நாட்களுக்கு பிறகு என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்றத்திலும் எனக்கு இதே தான் நடந்தது. எந்த தவறும் செய்யாத என்னை ஒரு வருடம் சட்டமன்றத்துக்குள் நுழையவிடாமல் செய்தார்கள்.

    தற்போது நடத்திருப்பதும் ஆளும் கட்சியின் திட்டமிட்ட சதி. முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மகனும், மந்திரியுமான லோகேஷ் கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளும் தெலுங்கு தேசம் கட்சியினரிடம் இருந்து எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. ஆனால் நான் எதற்கும் பயப்படமாட்டேன். நியாயத்துக் காக தொடர்ந்து போராடுவேன். என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை கோர்ட்டில் சந்திப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    திருப்பதியில் தரிசனத்துக்கு வந்த அமித்ஷாவுக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் கருப்பு கொடி காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #BJP #Amitshah
    திருமலை:

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் பா.ஜ.க. மத்திய அரசை கண்டித்து தெலுங்கு தேச கட்சியினர் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அமித்ஷா ஏழுமலையானை தரிசனம் செய்ய நேற்றிரவு திருமலைக்கு வந்தார். அவருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

    இன்று காலை10 மணிக்கு சாமி தரிசனம் செய்தார். அமித்ஷாவிற்கு கோவில் அதிகாரிகள் அனில்குமார் சிங்கால், சீனிவாச ராஜூ ரங்கநாயகி மண்டபத்தில் வைத்து தீர்த்த பிரசாதம் மற்றும் சாமி படம், வழங்கினர். இதையடுத்து காரில் அமித்ஷா திருப்பதிக்கு திரும்பினார்.

    சாமி தரிசனம் செய்த அமித்ஷாவுக்கு சாமிபட பிரசாதம் வழங்கிய காட்சி.

    அமித்ஷா திருப்பதிக்கு வந்த தகவல் தெலுங்கு தேச கட்சியினருக்கு தெரியவந்தது.

    தனி அந்தஸ்து வழங்காததால் ஆத்திரத்தில் இருந்த தெலுங்கு தேச கட்சியினர் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்ட முடிவு செய்தனர். அலிபிரி டோல்கேட்டில் திருப்பதி எம்.எல்.ஏ. சுகுணா, தெலுங்கு தேச கட்சி நிர்வாகி தம்புதி பாஸ்கரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். தகவல் தெரிந்து ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

    அமித்ஷா அலிபிரிக்கு வந்ததும் அவர்கள் கருப்பு கொடி காட்டினர். அப்போது பா.ஜ.க.வினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் பா.ஜ.கவினரும் தெலுங்கு தேச கட்சியினரும் மோதிக்கொண்டனர்.

    அமித்ஷா கண் முன்னாடியே பா.ஜ.க.வினர் தாக்கப்பட்டனர். மோதலை சமாளிக்க போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இதனால் திருப்பதி அலிபிரி டோல்கேட் பகுதி போர்களம் போல் காட்சியளித்தது. இந்த சம்பவங்களால் திருப்பதிக்கு வந்த பக்தர்கள் அவதியடைந்தனர். #BJP #Amitshah
    ×