search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Telugu Desam Party"

    • கூட்டணி குறித்து ஜனசேனாவுடன் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்துவார்கள்.
    • தெலுங்கானா மாநிலத்தில் டார்கெட் 75 என்ற இலக்குடன் பா.ஜ.க. சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளது.

    தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 30-ந் தேதி நடக்கிறது. இதில் ஆளும் சந்திரசேகரராவ் கட்சி காங்கிரஸ் பா.ஜ.க போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் ஆந்திர முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் களத்தில் இறங்கப் போவதாக அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தெலுங்கானா மாநில தெலுங்கு தேசம் கட்சி தலைவர் காசானி கூறியதாவது

    தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 87 இடங்களில் போட்டியிடும்.

    விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். முதல் பட்டியலில் 30 வேட்பாளர்களின் பெயர்கள் இருக்கும்.

    2-வது வேட்பாளர் பட்டியல் உடன் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும். தெலுங்கானா மாநிலத்தில் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் தெலுங்கு தேசம் கூட்டணி அமைக்கும்.

    கூட்டணி குறித்து ஜனசேனாவுடன் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்துவார்கள்.

    தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.வும் நடிகருமான என்.டி. ராமராவின் மகன் நந்தமுரிபாலகிருஷ்ணா தலைமையில் போட்டியிடுவோம். அவர் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தெலுங்கானா மாநிலத்தில் டார்கெட் 75 என்ற இலக்குடன் பா.ஜ.க. சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாண் கட்சிகள் இடம்பெறும் என பரபரப்பாக பேசப்பட்டது.

    இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிட போவதாக அறிவித்துள்ளது பா.ஜ.க. தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பழிவாங்கும் நடவடிக்கையாக ஜெகன்மோகன் ரெட்டி அரசு ஆட்சியை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    • முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கூட்டணியில் இல்லாவிட்டாலும் பா.ஜ.க.விற்கு நெருக்கமாக உள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவர் மீது மேலும் 3 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 வழக்குகளில் அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பைபர் நெட் முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் கோரிய மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.

    இந்நிலையில் டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திரபாபு நாயுடுவின் மகன் நாராலோகேஷ் நேற்று திடீரென சந்தித்து பேசினார்.

    உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள ஜெயிலில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டுள்ளார். பழிவாங்கும் நடவடிக்கையாக ஜெகன்மோகன் ரெட்டி அரசு ஆட்சியை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும் ஆந்திரா தெலுங்கானா மாநிலத்தில் கூட்டணி அமைப்பது குறித்தும் அமித்ஷா நாரா லோகேஷ் இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.

    இந்த சந்திப்பின்போது ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தேஸ்வரி, மத்திய மந்திரி கிஷண்ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.

    ஆந்திராவை பொருத்தவரையில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. கணிசமான வாக்குகளை பெறவில்லை. இதனால் ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க. அதிக கவனத்தை செலுத்தவில்லை.

    அந்த மாநிலத்தில் 9 பாராளுமன்ற தொகுதி 48 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட பா.ஜ.க. முனைப்பு காட்டி வருகிறது.

    தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது.

    இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தனியாக போட்டியிடவில்லை. சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட விவகாரம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

    ஐதராபாத் வளர்ச்சியில் சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் பெரும் பங்கு வகித்ததாக இந்த பகுதி மக்கள் கருதுகின்றனர். தெலுங்கானா மாநிலத்தில் வளர்ச்சி அடைந்து உள்ள பா.ஜ.க. டார்கெட் 75 என்ற இலக்குடன் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.

    அதனால் தெலுங்கானாவில் பா.ஜ.க. கூட்டணியில் தெலுங்கு தேசம், பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய கட்சிகள் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதனால் தெலுங்கானா மாநில அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

    ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கூட்டணியில் இல்லாவிட்டாலும் பா.ஜ.க.விற்கு நெருக்கமாக உள்ளார். அவர் அனைத்து திட்டங்களிலும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

    இதனால் ஆந்திராவில் பா.ஜ.க. நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. 

    • டெல்லியில் இருந்து வக்கீல்கள் வந்தாலும் சந்திரபாபு நாயுடுவை வெளியே கொண்டு வர முடியாது.
    • பெண்களை இழிவு படுத்தி பேசுவது வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் ஆசிய ஆடவர் டென்னிஸ் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சகோத் மைனேனிக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது.

    விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ரோஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    சந்திரபாபு நாயுடுவை சிஐடி கைது செய்த பிறகு யாரை கொல்லலாம் என தெலுங்கு தேசம் கட்சியினர் யோசித்து வருகின்றனர்.

    டெல்லியில் இருந்து வக்கீல்கள் வந்தாலும் சந்திரபாபு நாயுடுவை வெளியே கொண்டு வர முடியாது.

    பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி தனது தொகுதியிலும் வீட்டிலும் பெண்களிடம் என்ன மாதிரி நடந்து கொள்வார் என்பது அவரது பேச்சில் தெரிய வந்துள்ளது.

    பெண்களை இழிவு படுத்தி பேசுவது வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும். என்னை இழிவாக பேசி ஒரு வார காலமாகியும் அவர் மன்னிப்பு கேட்காததால் அவர் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்க முடிவு செய்து உள்ளேன். சகோ மைனேனி சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் பல பதக்கங்களை வென்றாலும் அவரை ஊக்கவிக்கவில்லை. உதவி தொகையும் வழங்காமல் பாகுபாடு காட்டினார்.

    ஆனால் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஜாதி மதம் அரசியல் கட்சி வேறுபாடு இன்றி ஊக்குவித்து வருகிறார். அரசு வேலையுடன் கூடிய பயிற்சி மையம் விரைவில் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பணத்தை ரஷ்யா, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளார்.
    • 2-வது முறையாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெறும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், காக்கிநாடா, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துவரம்புடி சந்திர சேகர ரெட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

    இவர் நேற்று தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி சேர்வதற்காக பல கட்டங்களாக தெலுங்கு தேசம் கட்சியினரிடம் ரூ.1400 கோடியை பெற்றுள்ளார்.

    தெலுங்கு தேசம் கட்சியினரிடம் பெற்ற பணத்தை ரஷ்யா, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளார்.

    இந்த விவரங்கள் அனைத்தும் மத்திய அரசிடம் உள்ளது. அதனால்தான் பவன் கல்யாண் தெலுங்கு தேசம் கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்து தேர்தலில் சந்திக்க போவதாக மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.

    2-வது முறையாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெறும். அப்போது ஜெகன்மோகன் ரெட்டி முதல்-மந்திரியாக பதவி ஏற்பதும் தெலுங்கு தேசம் கட்சி காணாமல் போவதும் ஒரே சமயத்தில் நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநிலத்தில் அமைச்சர்கள் மட்டும் தான் பெண்களா? மற்றவர்கள் பெண்கள் இல்லையா?
    • அமைச்சர் ரோஜா படத்தின் டிரெய்லர் மட்டும் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா ஆபாச படத்தில் நடித்ததாக கூறி தெலுங்கு தேசம் கட்சியினர் சட்டசபையில் சிடிக்கள் காட்டினர். இதுகுறித்து அந்த கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்தியநாராயணா மூர்த்தி சமீபத்தில் பேசினார்.

    இதற்கு பதிலளித்த அமைச்சர் ரோஜா தன்னை நிர்வாண வீடியோவில் நடித்ததாக சித்ரவதை செய்கின்றனர் என கண்ணீர் விட்டு அழுதார். இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் மாநில மகளிர் அணி தலைவி வாங்கலபுடி அனிதா கூறியதாவது:-

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி மற்றும் அவர்களது மருமகள் பிராமணியை தரக்குறைவான வார்த்தைகளில் பேசிய ரோஜா மீது காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

    மாநிலத்தில் அமைச்சர்கள் மட்டும் தான் பெண்களா? மற்றவர்கள் பெண்கள் இல்லையா? கடந்த காலங்களில் சட்டசபையில் ரோஜா பேசிய வார்த்தைகளை யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.

    பண்டாரு சத்தியநாராயணா மூர்த்தி பேசியதை மறைக்க ரோஜா கண்ணீர் விட்டு அழுதபடி பேசினார். ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ரோஜாவை பற்றி பேசியதால், 200 போலீசார் பண்டாரு சத்தியநாராயணா மூர்த்தியின் வீட்டிற்கு வந்து கைது செய்தனர்.

    ஆனால், தெலுங்குப் பெண்கள் மீது தொடர்ந்து தகாத கருத்துகளை தெரிவித்து வருபவர்கள் மீது புகார்கள் வந்தாலும், காவல்துறை நடவடிக்கை எடுப்பது இல்லை.

    ரோஜாவை யாரும் பெண்ணாக கருதுவதில்லை. ஒய்.எஸ்.ஆர் காங்கிரசில் உள்ளவர்கள் அமைச்சர் ரோஜாவை வெறுக்கிறார்கள். அமைச்சர் ரோஜா பெண்களிடம் அனுதாபம் பெறுவதற்காக ஒரு நாள் அழுதார்.

    ஆனால் 4½ ஆண்டுகால ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து பெண்களும் கதறி அழுகிறார்கள். அமைச்சர் ரோஜா படத்தின் டிரெய்லர் மட்டும் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் ஒரிஜினல் படத்தைக் வெளியிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சந்திரபாபு நாயுடு பொது வாழ்வில் இருந்து துண்டிக்கப்பட்டிருப்பது தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
    • என்.டி.ஆரின் மகளும் சந்திரபாபு நாயுடுவின் மனைவியுமான புவனேஸ்வரி மற்றும் அவரது மருமகள் பிராமணி ஆகியோர் தற்போது கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கியுள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில முன்னாள் முதல்- மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதனை தொடர்ந்து சாலை பணிகளில் ஊழல் நடந்ததாக அவரது மகன் லோகேஷ் மீது சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இன்னும் சில மாதங்களில் ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த முக்கியமான காலகட்டத்தில் சந்திரபாபு நாயுடு பொது வாழ்வில் இருந்து துண்டிக்கப்பட்டிருப்பது தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    சந்திரபாபு நாயுடு ஜெயிலில் உள்ளார். அவரது மகன் லோகேஷ் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்பதால் கட்சியை வழிநடத்த அடுத்த கட்ட முயற்சிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    என்.டி.ஆரின் மகளும் சந்திரபாபு நாயுடுவின் மனைவியுமான புவனேஸ்வரி மற்றும் அவரது மருமகள் பிராமணி ஆகியோர் தற்போது கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கியுள்ளனர். முக்கியமாக தெலுங்கு தேசம் கட்சியை வழிநடத்த போகும் முக்கியமான பொறுப்பு பிராமணி வசம் சென்றுள்ளது.

    புவனேஸ்வரி மற்றும் பிராமணி இருவரும் தீவிர அரசியலில் களமிறங்க திட்டமிட்டுள்ளனர்.

    தற்போது ஆந்திர மாநிலத்தில் நடந்து வரும் போராட்டங்களில் பிராமணி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மேலும் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, நடிகை ரோஜா உள்ளிட்டவர்களையும் விமர்சித்து வருகிறார்.

    ரோஜா உள்ளிட்ட ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் தலைவர்களும் பிராமணியை தாக்கத் தொடங்கியுள்ளனர். இதுவரை வெளிப்படையாக அரசியல் ரீதியாக எந்த செயல்பாட்டிலும் இறங்காத பிராமணியை குறிவைத்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் பேசுவது பொது மக்களால் கவனிக்கப்படுகிறது.

    கடந்த 2012-ம் ஆண்டு 16 மாதங்கள் ஜெகன்மோகன் ரெட்டி ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார். அப்போது ஜெகன்மோகனின் தாய் விஜயம்மா சகோதரி ஷர்மிளா இருவரும் முன் நின்று அவரது கட்சியை வழிநடத்தினார்கள். அவர்கள் சுமார் 3000 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி தலைமை வெற்றிடத்தை நிரப்பினார்கள். இப்போது அதே நிலை சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ளது.

    சந்திரபாபு நாயுடுவின் மருமகள் பிராமணி என்.டி.ராமராவின் மகன் நடிகர் பாலகிருஷ்ணனின் மகள் ஆவார். என்.டி.ஆர்.பேத்தி என்பதால் ஆந்திர மாநிலத்தில் பொதுமக்களிடையே கூடுதல் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

    • இந்தியாவை உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற மீண்டும் மோடி பிரதமராக வேண்டும்.
    • ஆந்திராவில் மீண்டும் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே புதலாபட்டில் தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அந்த கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:-

    இந்தியாவை உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற மீண்டும் மோடி பிரதமராக வேண்டும். மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு மூன்றாவது வாய்ப்பை வழங்க வேண்டும் .

    ஆந்திராவில் மீண்டும் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் .

    தெலுங்கு மக்களுக்கு மூலதனம் இல்லாததால் வெட்கப்படுகிறேன். ஜெகன் மோகன் ரெட்டி அமராவதியையும் மாநிலத்தையும் , பொதுச் சொத்துக்களை கொள்ளையடித்து நாசமாக்கிவிட்டார்.

    ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவர்களின் நாட்கள் எண்ணப்பட்டுவிட்டன என்பதை உணர்ந்துள்ளனர். நேற்று புங்கனூரில் கலவரம் ஏற்படுத்திவிட்டனர். சித்தூர் போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திர ரெட்டியின் கைக்கூலியாகிவிட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

    ஆந்திர மாநிலத்தில் பா.ஜனதாவுடன் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி மட்டுமே கூட்டணியில் உள்ளதாக தெரிவித்துள்ளனர் .

    டெல்லியில் நடந்த பா.ஜனதா கூட்டணிகள் கட்சி தலைவர்கள் கூட்டத்திலும் சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க மக்கள் வாக்களிக்க வேண்டும் என பேசி உள்ளார். இதன் மூலம் அவர் தொடர்ந்து பாஜக கூட்டணியில் சேர முயற்சி செய்வது தெரிய வந்துள்ளது.

    பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆந்திர முதல்அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு அளிக்கவில்லை. அவரும் பா.ஜ.க.வுக்கு ஆதரவளித்து வருகிறார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜெகன்மோகன் ரெட்டி கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

    2 கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு பாஜகவை ஆதரிப்பதால் ஆந்திர மாநிலத்தில் யார் வெற்றி பெற்றாலும் பா. ஜனதாவுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    • அடுத்த ஆண்டு கண்டிப்பாக ஜனசேனா கட்சி ஆந்திர சட்டமன்றத்திற்குள் பெருவாரியான எம்.எல்.ஏ.க்களுடன் நுழையும்.
    • பவன் கல்யாணின் முதல்வர் பதவி கனவு, சந்திரபாபு நாயுடு தரப்பை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

    திருமலை:

    ஆந்திர மாநிலத்தில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது.

    இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி போட்டியிடும் என தெரிகிறது.

    அதற்கேற்ப அக்கட்சியின் தலைவரான நடிகர் பவன்கல்யாண் நேற்று முன்தினம் தனது வாராஹி யாத்திரை தொடங்கினார்.

    கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் காக்கிநாடா அருகே உள்ள கத்திப்புடி பகுதியில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அவரது 'வராஹி' எனப்படும் பிரத்யேக நவீன வசதியுடன் கூடிய வாகனத்தில் நின்றபடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் நானும் ஒருவன். சம்பாதிப்பது மட்டுமே நோக்கமாக இருந்திருந்தால் வெறும் நடிகனாக மட்டுமே இருக்க முடியும்.

    ஆனால் மக்களுக்கு நல்லது செய்வதற்காகத்தான் அரசியலுக்கு வந்தேன். எனது பிள்ளைகளுக்காக சேர்த்த சொத்துக்களை விற்று கட்சி தொடங்கி நடத்தி வருகிறேன்.

    தற்போதைய ஆந்திர முதல்வர், அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் உட்பட அனைவரும் எனது தனிப்பட்ட வாழ்க்கை முறை குறித்து விமர்சிக்கின்றனர்.

    அடுத்த ஆண்டு கண்டிப்பாக ஜனசேனா கட்சி ஆந்திர சட்டமன்றத்திற்குள் பெருவாரியான எம்.எல்.ஏ.க்களுடன் நுழையும்.

    தேவைப்பட்டால் முதல்வராக அமர்வேன். கூட்டணியுடன் வருவேனோ அல்லது தனித்து வருவேனோ என சில மாதங்களில் தெரிந்து கொள்வீர்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பவன் கல்யாணின் முதல்வர் பதவி கனவு, சந்திரபாபு நாயுடு தரப்பை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

    பவன்கல்யாண் மற்றும் பாஜக கூட்டணியுடன் ஆட்சியை பிடிக்க சந்திரபாபு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். அந்த கட்சிகளுக்கு 80 தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் இதுபோன்ற பிரசாரத்தால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆந்திர மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு சட்டமன்ற தேர்தலுக்கான முதல் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
    • பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் மீதான தாக்குதல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களைத் தடுக்க ரக்ஷனா கோசம் என்ற கடுமையான சட்டம் வகுக்கப்படும்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், ராஜமகேந்திரவரம், வேமகிரியில் என்.டி.ராமராவ் நூற்றாண்டு விழா நடந்தது.

    விழாவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு சட்டமன்ற தேர்தலுக்கான முதல் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால் மகாசக்தி திட்டத்தின் கீழ், 18 வயது நிரம்பிய இளம்பெண்கள் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ.1,500 டெபாசிட் செய்யப்படும்.

    பெண்களுக்கு 59 வயது வரை உதவித் தொகை வழங்கப்படும். தள்ளி வந்தனம் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குழந்தையின் கல்விக்காகவும் தாய்மார்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.15,000 டெபாசிட் செய்யப்படும்.

    மாவட்ட எல்லைக்குள் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண வசதி திட்டம் நிறைவேற்றப்படும். தீபம் திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். விவசாயிகளின் துயரத்தை போக்க அன்னதாதா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.

    தெலுங்கு தேசம் ஆட்சியின் 5 ஆண்டுகளில் 20 லட்சம் வேலைகள் உருவாக்கப்படும். மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வேலையில்லாத நபருக்கும் ரூ.3 ஆயிரம் வேலைவாய்ப்பின்மை நிவாரணமாக நிதி வழங்கப்படும்.

    மேலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் மீதான தாக்குதல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களைத் தடுக்க ரக்ஷனா கோசம் என்ற கடுமையான சட்டம் வகுக்கப்படும்.

    மேலும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு 2 குழந்தைகள் என்ற விதிமுறை ரத்து செய்யப்படும்.

    மக்களிடம் கருத்துகளைப் பெற்ற பிறகு தேர்தல் அறிக்கையின் 2-ம் பாகம் தசரா பண்டிகையின் போது வெளியிடப்படும்.

    தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்ததும் இந்த தேர்தல் அறிக்கை முழுவதும் நிறைவேற்றப்படும் என உத்தரவாதம் அளிக்கிறேன்.

    வரவிருக்கும் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்ய வேண்டும்.

    என்னை நம்புங்கள், நான் ஆந்திராவுக்கு பிரகாசமான எதிர்காலத்தை தருவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • உயர்ந்த பொருட்களை பயன்படுத்தும் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி எப்படி ஏழைகளின் பங்காளன் என்று கூறுகிறார்.
    • இவ்வளவு சொத்து மதிப்பை வைத்துக்கொண்டு அவர் தனக்கு சொந்தமாக வீடு இல்லை என பேசி வருகிறார்.

    திருப்பதி:

    தெலுங்கு தேசம் கட்சியின் செய்தி தொடர்பாளர் வெங்கட்ரமணா ரெட்டி கூறியதாவது:-

    ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு கடந்த 2004-ம் ஆண்டு ரூ.1.70 கோடியாக இருந்தது.

    2009-ம் ஆண்டு இடைத்தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தேர்தல் கமிஷனில் சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தில் ரூ.77 கோடி சொத்து உள்ளதாக தெரிவித்து இருந்தார். 2011-ம் ஆண்டு ரூ.445 கோடியாக சொத்து மதிப்பு அதிகரித்தது.

    இந்நிலையில் 2019-ம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு ரூ.510 கோடியாக அதிகரித்து காணப்பட்டது. ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்றதும் பல கோடி ரூபாய் அவரது வங்கி கணக்கிற்கு வந்தது.

    அவரிடம் உள்ள கருப்பு பணத்தை கணக்கிட்டால் பல ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும். இவ்வளவு சொத்து மதிப்பை வைத்துக்கொண்டு அவர் தனக்கு சொந்தமாக வீடு இல்லை என பேசி வருகிறார்.

    அப்படியானால் ஐதராபாத் தாமரை குளம், பெங்களூர் யலஹங்கா, தாடி பள்ளி கடப்பா, புலி வெந்துலா ஆகிய இடங்களில் உள்ள அரண்மனைகள் யாருடைய பெயரில் உள்ளது என்பதை ஜெகன்மோகன் ரெட்டி தெளிவுபடுத்த வேண்டும்.

    அந்த அரண்மனைகள் உங்களது பெயரில் இல்லை என்றால் எங்களுக்கு கொடுங்கள் நாங்கள் அனாதை இல்லங்களை நடத்திக் கொள்கிறோம்.

    ஜெகன்மோகன் ரெட்டி அணியும் செருப்பு புல்லோட்டி காம்போ என்ற நிறுவனத்தினால் முதலை தோலால் செய்யப்பட்டது.

    இதன் மதிப்பு ரூ.1.34 லட்சம். அவர் குடிக்கும் மினரல் வாட்டர் ஒரு பாட்டிலின் விலை ரூ.5,500. இப்படி விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்தும் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி எப்படி ஏழைகளின் பங்காளன் என்று கூறுகிறார்.

    அவருடைய சொத்து விவரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சி தெலுங்கானாவில் போட்டியிடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #TDP
    ஐதராபாத்:

    பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானாவில் தெலுங்குதேசம் கட்சி போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 1982-ம் ஆண்டு கட்சி தொடங்கியதில் இருந்து முதல் முறையாக இந்த முடிவை எடுத்துள்ளது.

    இதுபற்றி கட்சியின் மாநில தலைவர் எல்.ரமணா கூறும்போது, “பா.ஜனதா மற்றும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய இரு கட்சிகளும் ஜனநாயகத்துக்கும், அரசியல்சாசனத்துக்கும் எதிராக வேலை செய்கின்றன. ஆளும் டி.ஆர்.எஸ். கட்சி எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறது. எனவே இந்த பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானாவில் போட்டியிடுவதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் பழைய செல்வாக்கை மீண்டும் பெற கட்சி மேலும் கடுமையாக உழைக்கும்” என்று கூறியுள்ளார்.



    2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தெலுங்குதேசம் மால்காஜ்கிரி தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்று எம்.பி.யான மல்லா ரெட்டி, பின்னர் டி.ஆர்.எஸ். கட்சியில் சேர்ந்துவிட்டதும், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டுமே தெலுங்குதேசம் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #TDP #TeluguDesamParty #ChandraBabuNaidu

    மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் கடந்த 3 நாளாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை மம்தா பானர்ஜி இன்று நிறைவு செய்தார். #MamataDharna #CBIvsMamata
    கொல்கத்தா:

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரிப்பதற்காக நேற்று முன்தினம் 8 சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென அவரது வீட்டுக்கு சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கொல்கத்தா போலீசார், சி.பி.ஐ. அதிகாரிகளை வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று காவலில் வைத்து, பின்னர் விடுவித்தனர். இதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கும், மம்தா பானர்ஜி அரசுக்கும் மோதல் உருவாகி உள்ளது.

    போலீஸ் உயர் அதிகாரியிடம் மாநில அரசின் அனுமதி பெறாமல் சி.பி.ஐ. விசாரிக்க முயற்சி செய்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார். அதோடு அரசியலமைப்பு சட்டத்தையும், கூட்டாட்சி தத்துவத்தையும் பாதுகாக்கப் போவதாக சொல்லி கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் எதிரில் நேற்று முன்தினம் போராட்டத்தை தொடங்கினார். 

    அவரை தி.மு.க. சார்பில் கனிமொழி, ஆம் ஆத்மி சார்பில் கெஜ்ரிவால், ராஷ்டீரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பல்வேறு தலைவர்கள் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.



    இதற்கிடையே, மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் தர்ணா நடத்தி வரும் மம்தா பானர்ஜியை தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர மாநில முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு சந்தித்து இன்று ஆதரவு தெரிவித்துள்ளார். அப்போது பேசிய நாயுடு, எதிர்க்கட்சிகளின் முக்கிய தூணாக விளங்குபவர் மம்தா பானர்ஜி. வரும் பாராளுமன்ற தேர்தலில் 42 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.

    இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் கடந்த 3 நாளாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை மம்தா பானர்ஜி இன்று நிறைவு செய்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், நீதிமன்றம் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளது. இதனால் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு காக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, தர்ணா போராட்டத்தை நிறைவு செய்கிறேன் என அறிவித்தார். #MamataDharna #CBIvsMamata
    ×