search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamilisai Soundararajan"

    • தமிழக முதல்வர் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து கூறுவது கிடையாது.
    • கொரோனா தொற்றை நாம் தடுப்பூசியினாலும், ஆன்மீகத்தாலும் வென்றோம்.

    மணவாளக்குறிச்சி:

    குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசி திருவிழாவில் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடந்த 87 வது சமய மாநாட்டில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் குத்து விளக்கேற்றினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    500 ஆண்டு கால கனவு அயோத்தி கோவில் மூலம் நனவாகி உள்ளது. ஆன்மீகம் தழைக்கும் நாடு நன்றாக இருக்கும். இப்போது உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.

    இதற்கு காரணம் நம் நாட்டின் ஆன்மீகம்தான். ஆன்மீகத்துடன் தேசியமும் வளர்கிறது. நான் பிறந்த இந்து மதத்தை பின்பற்றுகிறேன். என் மதம் பற்றி பேசினால் மதவாதி என்கிறார்கள். மதவாதி என்கிறவர்களை நான் எதிர்க்கிறேன்.

    தமிழக முதல்வர் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து கூறுவது கிடையாது. வாழ்த்து சொல்ல மறுப்பது ஏன்? என்று தெரியவில்லை. எல்லா பண்டிகைக்கும் வாழ்த்துகளை பரிமாறுவது தான் நல்ல பண்பு.

     

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்தில் புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்ட காட்சி. அருகில் விஜய்வசந்த் எம்.பி., மேயர் மகேஷ் மற்றும் பலர் உள்ளனர்.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்தில் புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்ட காட்சி. அருகில் விஜய்வசந்த் எம்.பி., மேயர் மகேஷ் மற்றும் பலர் உள்ளனர்.

    நாடும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நாட்டு மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்கு ஆன்மிகமும், தேசியமும் அவசியம். கொரோனா தொற்றை நாம் தடுப்பூசியினாலும், ஆன்மீகத்தாலும் வென்றோம்.

    ஏனென்றால் நம் உணவு பழக்கம் முறை, அழுத்தமான ஆன்மீகம்தான். பெருமாள் கோயில்களில் துளசி தீர்த்தம் தருவார்கள். அதில் விஞ்ஞானம் உள்ளது. ஜூன் 21-ந் தேதி உலக யோகா தினம் கடை பிடிக்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு நாளும் யோகா தினம்தான். நம் நாட்டு பழக்கவழக்கங்கள் அப்படி அமைந்துள்ளது. விவேகானந்தர் வெளிநாடு செல்லும்போது இந்தியாவை விரும்பினேன் என்றார். வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும்போது இந்தியாவை வணங்குகிறேன் என்றார். இந்தியாவின் பண்பாடு, கலச்சாரம் நல்ல வாழ்வியலை தருகிறது. இந்து மதம் இதை சொல்லிக்கொடுக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வாழ்க்கையில் எப்போதும் பல சிக்கல்கள் இருக்கும்.
    • நம்மால் உயரமுடியும். யோகா, தியானம் நமக்கு வலிமையை தருகிறது.

    புதுச்சேரி:

    மகான் அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு 2-வது சர்வதேச ஆன்மிக மாநாடு ஆரோவில் யூனிட்டி மையத்தில் நடந்தது.

    இந்த மாநாட்டில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    வாழ்வில் அமைதி பல நேரங்களில் ஒரு சக்தியை தருகிறது. அன்னை, அரவிந்தர் அதனை கண்டறிந்து ஒரு பகுதியை உருவாக்கியுள்ளனர். அதன் மூலம் அமைதியையும், வலிமையையும் நாம் பெற்று வருகிறோம்.

    கடலில் அலையானது எப்போதும் அடித்துக் கொண்டே இருக்கும். அதனை நிறுத்த முடியாது. அதே போல வாழ்க்கையில் எப்போதும் பல சிக்கல்கள் இருக்கும். அதனை பாறைகள் போல் உறுதியாக எதிர்கொள்ளவேண்டும்.

    தற்கால சூழலில் தற்கொலைகள் அதிகம் நிலவுகிறது. அவர்களால் சிக்கல்களை எதிர்கொள்ள முடியவில்லை. முன்னோர்கள் எப்படி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.

    காலை தியானத்தோடு யோகா பயிற்சி செய்து வருவதன் மூலம் மிகப்பெரும் மனசக்தியை அடைய முடியும். அதன் மூலம் எத்தகைய சிக்கல்களையும் உங்களால் சமாளிக்க முடியும். இதைத் தான் ஆன்மிகம் சொல்கிறது.

    மகாபாரதம், அரவிந்தர், அன்னை ஆகியோரின் கதை, பேச்சுக்களை கேட்டால் தன்னம்பிக்கை, சுயகட்டுப்பாடு பெற முடியும். அதன் மூலம் நம்மால் உயரமுடியும். யோகா, தியானம் நமக்கு வலிமையை தருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கவர்னர் தமிழிசை மணக்குள விநாயகர் கோவிலுக்கு வந்தார்.
    • இத்தாலி நாட்டைச் சேர்ந்த 15-க்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மணக்குள விநாயகரை தரிசிக்க வந்தனர்.

    புதுச்சேரி:

    டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை கடந்த 2 நாட்களுக்கு முன்பு கவர்னர் தமிழிசை சந்தித்தார்.

    புதுவை திரும்பிய கவர்னர் தமிழிசை மணக்குள விநாயகர் கோவிலுக்கு நேற்று மாலை வந்தார். மணக்குள விநாயகரை வழிபட்ட அவருக்கு ஆள் உயர மாலை அணிவிக்கப்பட்டது. மாலையை அணிந்தபடி மகிழ்ச்சியுடன் கோவிலை கவர்னர் தமிழிசை வலம் வந்தார். அப்போது இத்தாலி நாட்டைச் சேர்ந்த 15-க்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மணக்குள விநாயகரை தரிசிக்க வந்தனர்.

    அவர்களுடன் கவர்னர் தமிழிசை கலந்துரையாடினார். தொடர்ந்து இத்தாலி சுற்றுலா பயணிகள் கவர்னர் தமிழிசையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    பின்னர், காரில் ஏறிய கவர்னர் தமிழிசையிடம் பஞ்சாப்பை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர்.

    உடனடியாக அவர் காரில் இருந்து இறங்கி பஞ்சாப் சுற்றுலா பயணிகளுடனும் புகைப்படங்கள் எடுத்து கொண்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டார்.

    • புதுச்சேரி மாநில விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
    • நடிகர் விஜய்யை போல், இன்னும் பல புதியவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.

    ஆலந்தூர்:

    தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று டெல்லியில் மத்திய மந்திரி அமித் ஷாவை சந்தித்து பேசினார்.

    பின்னர் அவர் இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் டெல்லி சென்றது, அவசரப் பயணம் அல்ல. ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பயணம் தான். எனது டெல்லி பயணத்திற்கும், பஞ்சாப் மாநில கவர்னரின் திடீர் ராஜினாமாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இதைப்போல் டெல்லியில் மத்தியமந்திரி அமித் ஷாவை சந்தித்து பேசியதும், திடீர் சந்திப்பு அல்ல. ஏற்கனவே திட்டமிட்ட சந்திப்புதான்.

    அவரிடம் புதுச்சேரி மாநில சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில், மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், சூரிய மின் சக்தி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். புதுச்சேரி மாநில விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

    மேலும் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆலோசனை நடத்தினேன்.

    நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை, நான் முழு மனதுடன் வரவேற்று, அவரை வாழ்த்துகிறேன். நமது நாடு, ஜனநாயக நாடு. இங்கு இவர் தான் அரசியலுக்கு வரவேண்டும், அவர் வரக்கூடாது என்று எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.

    நடிகர் விஜய்யை போல், இன்னும் பல புதியவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அப்போதுதான் அரசியலில் ஆரோக்கியமான போட்டிகள் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பால் கொடுத்து வளர்க்கும் பெண் குழந்தைகள் பாலின தொந்தரவிற்கு ஆளாகாமல் பாதுகாப்பை இந்த சமூகம் வழங்க வேண்டுமென உறுதியேற்போம்.
    • புதிய இந்தியாவை படைப்பதில் பெண்களின் பங்கு இருப்பதை உறுதியேற்போம்.

    புதுச்சேரி:

    பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை 2008-ம் ஆண்டு எடுத்த முயற்சியால், ஆண்டுதோறும் ஜனவரி 24 அன்று, "தேசிய பெண் குழந்தைகள் தினம்" கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று தெலுங்கானா மாநில கவர்னரும் புதுச்சேரி துணைநிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில்,

    பெண்ணினம் என்பது மெல்லினம் அல்ல வல்லினம் என்பதை இந்த சமூகம் நிரூபிப்பதற்கு அடித்தளமாக இந்த தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் உறுதியேற்போம்.

    பால் கொடுத்து வளர்க்கும் பெண் குழந்தைகள் பாலின தொந்தரவிற்கு ஆளாகாமல் பாதுகாப்பை இந்த சமூகம் வழங்க வேண்டுமென உறுதியேற்போம்.

    புதிய இந்தியாவை படைப்பதில் பெண்களின் பங்கு இருப்பதை உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.

    • இது ராமர் பொங்கல், அயோத்தி ராமர் பொங்கல் என தெரிவித்ததால் சிறிது நேரம் அங்கு சிரிப்பாலை ஏற்பட்டது.
    • தனியார் பள்ளியில் பயிலும் பிள்ளைகள் பல மொழிகளை கற்கிறார்கள்.

    தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து தை திருநாளை கொண்டாடினார். அப்போது பாஜக தொண்டர்கள் சிலர் இது அக்கா பொங்கல், கவர்னர் அக்கா பொங்கல் என கோஷமிட்ட நிலையில், இடை மறித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இது ராமர் பொங்கல், அயோத்தி ராமர் பொங்கல் என தெரிவித்ததால் சிறிது நேரம் அங்கு சிரிப்பாலை ஏற்பட்டது.

    பொங்கல் விழாவையொட்டி அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

    தனியார் பள்ளிகள் அனைத்திலும் இந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்தி கற்றுத்தர ஏன் இந்த பாரபட்சம். இந்தியை திணிப்பதை தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்று கூறுகிறார்கள். இந்தியை யாரும் திக்கவில்லை. புதிய கல்விக் கொள்கையை யாரும் ஏற்றுக் கொள்ளவே இல்லை என்று சொல்லு போது இதுதான் சமச்சீர் கல்வி இல்லாமல் போகிறது. தனியார் பள்ளியில் பயிலும் பிள்ளைகள் பல மொழிகளை கற்கிறார்கள். அரசு பள்ளி குழந்தைகளுக்கு அது தமிழகத்தில் மறுக்கப்படுகிறது.

    தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் இந்தி கற்றுதரப்படுகிறது என்பதை தெளிவுப்படுத்தினால் தமிழகத்தில் இரு மொழி கொள்கை இருக்கிறதா? மூன்று மொழி கொள்கை இருக்கிறதா? பல மொழி கொள்கை இருக்கிறதா? இல்லையென்றால் பொய் மொழி கொள்கை இருக்கிறதா? என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜிப்மரில் உள்ளிருப்பு டாக்டராக பயிற்சி பெற்று வரும் பெண் டாக்டர் ஒருவரின் செல்போனில் கடந்த செப்டம்பர் 29-ந்தேதி ஒரு மெசேஜ் வந்தது.
    • கவர்னர் உத்தரவின்பேரில் ஜிப்மர் நிர்வாகம் தற்போது மெயில் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேட்டில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது.

    இங்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் எம்.பி.பி.எஸ். எம்.டி. உள்ளிட்ட படிப்புகளை படித்து வருகின்றனர்.

    ஜிப்மரில் உள்ளிருப்பு டாக்டராக பயிற்சி பெற்று வரும் பெண் டாக்டர் ஒருவரின் செல்போனில் கடந்த செப்டம்பர் 29-ந்தேதி ஒரு மெசேஜ் வந்தது.

    போலியான ஐ.டி. மூலம் வந்த அந்த மெயிலில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பயிற்சி வகுப்பு முடிந்தவுடன் தனது அறையில் தனிமையாக சந்திக்க வேண்டும். இல்லாவிட்டால் பயிற்சி மருத்துவர் படிப்பை முடிக்க முடியாது. தேர்ச்சி பெற்றுள்ள எம்.டி. முதலாம் ஆண்டு படிப்பில் தொடர முடியாது என கூறப்பட்டிருந்தது.

    இதேபோல மேலும் சில மருத்துவ மாணவிகளுக்கும் மெயில் வந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண் டாக்டர் இதுகுறித்து ஜிப்மர் நிர்வாகம், ஜிப்மரில் உள்ள பெண்கள் வன்கொடுமை பிரிவு, சைபர் கிரைம் ஆகியோருக்கு மெயில் மூலம் புகார் அளித்தார். 3 மாதமாகியும் இந்த புகாரின்மீது நடவடிக்கை இல்லை.

    இதுகுறித்து கவர்னர் தமிழிசைக்கும் அந்த பெண் டாக்டர் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என கவர்னர் தமிழிசை பெண் டாக்டரின் இணையதள பக்கத்தில் உறுதியளித்தார். கவர்னர் உத்தரவின்பேரில் ஜிப்மர் நிர்வாகம் தற்போது அந்த மெயில் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண்களுக்கு பொருளாதாரத்தில் சுதந்திரம் கிடைத்துவிட்டால் அனைத்திலும் சுதந்திரம் கிடைத்துவிடும்.
    • வங்கியில் பெற்ற கடனை சரியான முறையில் திருப்பி செலுத்தியவர்கள் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்களே.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் தனியார் அமைப்பின் சார்பில் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்த போதிலும் பெண்களுக்கான இந்நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இதில் கலந்து கொண்டுள்ளேன். பெண்களுக்கு பொருளாதாரத்தில் சுதந்திரம் கிடைத்துவிட்டால் அனைத்திலும் சுதந்திரம் கிடைத்துவிடும்.

    பெண்கள் தனக்காக கவலைப்படுவதில்லை. தங்கள் குடும்பத்திற்காக தான் கவலைப்படுகின்றனர். ஒரு ஆண் எத்தனை வயது ஆனாலும் ஆணாகவே இருக்கின்றார். உங்கள் வெளி தோற்றத்தை வைத்து பல விமர்சனங்கள் இருந்தாலும் நம் உள்ளே இருக்கும் இரும்பு மனதில் இந்த நாட்டிற்காக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களை இரும்பு பெண்மணியாக மாற்றும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    வன்முறை என்பது எந்த சமுதாயத்தில் இருந்தாலும் அது தவறு. 10 நபர்களுக்கு கடனுதவி வழங்கினால் அதில் 3 பேர் பெண்களாக இருக்க வேண்டும். அதில் எஸ்.சி, எஸ்.டி சமூகத்தை சேர்ந்தவர் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    வங்கியில் பெற்ற கடனை சரியான முறையில் திருப்பி செலுத்தியவர்கள் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்களே. அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

    பெண்களின் தேவையை அறிந்து அரசு அவர்களுக்கு முன் உரிமை கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இணையதளங்களில் பெண்கள் செய்யும் வணிகம் அதிக அளவில் இடம்பெறுகின்றது. கொரோனா காலகட்டத்தில் ஆண்கள் குடும்பத்தை காப்பாற்றினார்ளோ இல்லையோ பெண்கள் இணையதளம் வாயிலாக பல்வேறு பொருட்களை விற்பனை செய்து குடும்பங்களை காப்பாற்றினர்.

    பெண்கள் தற்பொழுது தொழில் முனைவோராக மாறி வருகின்றனர். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதியாக இருக்கும். இதில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் வரவேண்டும். சிறிய அளவில் தொடங்கி பெரிய தொழில் முனைவோராக மாற வேண்டும். பெண்களின் கையில் பொருளாதாரம் இருந்தால் வாழ்வாதாரம் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு அரசாங்கம், மற்றொரு அரசாங்கத்துக்கு கொடுக்கின்ற பணத்தை தடுப்பதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை.
    • திருச்சியில் பிரதமர் பேசும் போது, முதல் வார்த்தையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களோடு இருக்கிறேன் என்றார்.

    புதுச்சேரி:

    மத்திய அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி முதலியார்பேட்டை போலீஸ் நிலையம் அருகே நேற்று நடந்தது.

    நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மத்திய அரசு திட்ட பயனாளர்களுடன் கலந்துரையாடி நலத்திட்டங்களை வழங்கினார்.

    அதைத் தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கக்கூடாது.

    ஏனென்றால் இது மக்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டமாகும். ரூ.1000 கூட செலவு செய்ய முடியாத ஒரு குடும்ப தலைவர் விபத்தில் சிக்கிய போது ஆயூஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் தொகையினால் காப்பற்றப்பட்டுள்ளார். இதனை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு பெண் கூறினார். இது பல லட்சம் மக்களுடைய உணர்வாகும். எனவே நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டுக்கள்.

    மத்திய அரசுக்கு எதிரான கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களாக இருந்தாலும் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் வந்து கலந்து கொள்ள வேண்டும்.

    இதை அரசியலாக பார்க்காமல் அவசியமாக பார்க்க வேண்டும். ஒரு அரசாங்கம், மற்றொரு அரசாங்கத்துக்கு கொடுக்கின்ற பணத்தை தடுப்பதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை. அவர்கள் நேரடியாக கணக்கு வைத்துள்ளனர்.

    ஆகவே தமிழக நிதி தொடர்பாக மத்திய நிதி மந்திரி வெளிப்படையாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழக அமைச்சர் உதயநிதி, பிரதமரை பார்க்கிறார். மறுநாள் காலையில் ஒரு நாளிதழில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து கட்டுரை எழுதுகின்றனர்.

    குஜராத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது பிரதமர் உடனே சென்றார் என்கிறார்.

    அப்போது குஜராத் முதல்-மந்திரி வெள்ளம் பாதித்த பகுதியில் மக்களோடு இருந்தார். ஆனால் தமிழகத்தில் வெள்ளம் பாதித்த போது முதலமைச்சர் எங்கே இருந்தார் என்று எல்லோருக்கும் தெரியும். முதலமைச்சரே அங்கு செல்லவில்லை. ஆனால் பிரதமர் மட்டும் வரவில்லை என்று குறை கூறுகின்றனர்.

    திருச்சியில் பிரதமர் பேசும் போது, முதல் வார்த்தையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களோடு இருக்கிறேன் என்றார்.

    புதுச்சேரியில் நல்ல கலாசாரம் தான் இருக்க வேண்டும். வெடிகுண்டு கலாசாரம் இருக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உடல்நலமும், மனநலமும் நன்றாக இருந்தால் வாழ்வில் வெற்றி பெற முடியும்.
    • சுற்றுலாத் துறை சார்பில் 29-வது அகில உலக யோகா திருவிழா கடற்கரை சாலையில் நடை பெற்று வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு சுற்றுலாத் துறை சார்பில் 29-வது அகில உலக யோகா திருவிழா கடற்கரை சாலையில் நடை பெற்று வருகிறது.

    இதன் தொடக்க விழாவிற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    யோகா என்பது மனதும், உடலும் ஒருமைப்பட்டு செயலாற்றுவது ஆகும். உடல்நலமும், மனநலமும் நன்றாக இருந்தால் வாழ்வில் வெற்றி பெற முடியும். யோகாசனம் செய்யும் போது மூளைக்கான ரத்த ஓட்டம் அதிகமாக இருக் கும்.

    மூளையில் உள்ள செல்கள் உற்சாகமாக இருக்கும். அதனால் குழந்தைகள் யோகா செய்வது மிகமிக முக்கியம். தினமும் யோகா செய்தால் மனிதனுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பே இல்லை. அந்தளவுக்கு யோகா நமது உடலையும், மனதையும் மிகத் தெளிவாக எடுத்துச்செல்கிறது.

    நம்மை அமைதியாக வைக்கிறது. நம் நாட்டில் செய்த யோகா கலையை இன்று உலகம் முழுவதும் செய்கிறார்கள் என்றால் அதற்கு இந்தியா பெருமைப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    யோகா விழாவில் நாடு முழுவதிலும் இருந்து 600 யோகா கலைஞர்கள் பங்கேற்று செயல்விளக்கம் அளித்தனர்.

    • மழை, வெள்ள பாதிப்புகளை பார்க்க தமிழகம் முழுவதும் செல்லவில்லை.
    • எனக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் அங்கு சென்றேன்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மழை, வெள்ள பாதிப்புகளை பார்க்க தமிழகம் முழுவதும் செல்லவில்லை. தூத்துக்குடிக்கு மட்டுமே சென்றேன். அங்கு மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

    மக்கள் கூறிய கருத்தை நான் வெளிப்படுத்தினேன். அது என்னுடைய கருத்து கிடையாது. மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

    என் சொந்த ஊர். நான் போட்டியிட்ட இடத்தில் எனக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் அங்கு சென்றேன்.

    அமைச்சர் சேகர்பாபு கூறியது போல போட்டியிட செல்லவில்லை. தமிழக அரசில் தலையிட செல்லவில்லை.

    சபாநாயகர் அப்பாவு, இவர் யார் அங்கு ஆய்வு செய்வதற்கு? என கேள்வி எழுப்புகிறார். தி.மு.க.வை குற்றம்சொல்ல வேண்டும் என்ற நோக்கம் இல்லை. ஆனால் தவறு இழைக்கப்பட்டுள்ளது என்பதை கூறினேன்.

    என் சகோதர, சகோதரிகள் துன்பத்தில் பங்கேற்க ஆறுதலுக்காக சென்றேனே தவிர, ஆய்வுக்காக செல்லவில்லை. இதை தி.மு.க.வினர் கொச்சைப்படுத்த வேண்டாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னதாக, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அரசியல் கட்சியை விமர்சிக்கும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை. தி.மு.க.வின் திராவிட மாடல் குறித்து தமிழிசை விமர்சித்து பேசியுள்ளார். இதனால் மத்திய அரசு அவரை கவர்னர் பதவியில் இருந்து திரும்ப பெற வேண்டும் என கூறிப்பிட்டு இருந்தார். மேலும் ஒரு கவர்னர் அரசியல் செயல் குறித்து விமர்சித்துள்ளதற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெள்ள பாதிப்புகளை பார்வையிட புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடிக்கு வந்தார்.
    • தென் மாவட்டங்களில் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முறையாக எடுத்திருக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், வெள்ள பாதிப்புகளை பார்வையிட புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடிக்கு வந்தார்.

    அப்போது விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:-

    * தென் மாவட்டங்களில் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முறையாக எடுத்திருக்க வேண்டும்.

    * தென் மாவட்டங்களில் ஆறு, குளங்கள் எதுவும் தூர்வாரப்படவில்லை.

    * இந்த சூழ்நிலையை மாநில அரசு மிக மோசமாக கையாண்டுள்ளது.

    * மழை வெள்ளத்தை கையாள்வதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×