என் மலர்

    நீங்கள் தேடியது "Entrepreneurship"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தொழில்முனைவோர் நிகழ்ச்சி நடந்தது.
    • இந்த அமர்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 138 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் நிறுவன புதுமையாக்க அமைப்பின் சார்பில் "வெற்றிகரமான தொழில்முனைவோர்" என்ற தலைப்பில் ஊக்கமளிக்கும் அமர்வை ஏற்பாடு செய்தது. மதுரை ஜனஜா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனர் ஜான்லாரன்ஸ் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், வணிக உலகில் மாறுபட்ட மற்றும் பரந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் பங்கேற்பாளர்களை கதையின் மூலம் ஊக்கப்படுத்தினார்.

    தொழில்முனைவோரால் வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் விருப்பங்களை அடையாளம் காண்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். நிறுவன புதுமையாக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் வரவேற்றார்.

    உறுப்பினர் முருகன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.தொழில் தொடக்க செயல் ஒருங்கிணைப்பாளர் நாகேசுவரி நன்றி கூறினார்.

    இந்த அமர்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 138 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரிவிலக்கு அளிக்க வேண்டும் என தொழில் முனைவோர் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.
    • அகில இந்திய மருந்து முற்போக்கு தொழில் முனைவோர் சங்க செயற்குழு கூட்டம் மதுரையில் நடந்தது.

    மதுரை

    அகில இந்திய மருந்து முற்போக்கு தொழில் முனைவோர் சங்க செயற்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் பிரபு, மாநில தலைவர் ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் சுந்தர், பொதுச்செயலாளர் ராமசாமி, இணைச் செயலாளர் சஞ்சீவ், பொருளாளர் பாஸ்கர், அவைத்தலைவர் நாகராஜன் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் அனைத்து அத்தியாவசிய மருந்துகளுக்கும் ஜி.எஸ்.டி. வரிவிலக்கு அளிக்க வேண்டும். புதிய மருந்து வரைவு சட்டப்படி மருந்துகள் மீதான தரக்குறைவுக்கு, சந்தைப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இளையான்குடி கல்லூரியில் மாணவர்களுக்கான தொழில் முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் நாசர் நன்றி கூறினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், தொழில் முனைவு, புதுமை மற்றும் தொழில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து ''தமிழ்நாடு மாணவர் கண்டுபிடிப்பாளர்கள்'' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக உறுப்பினர் அப்துல் முத்தலீப் வரவேற்றார். வணிகவியல்துறை தலைவர் நைனா முகம்மது வாழ்த்துரை வழங்கினார். முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொழில் முனைவு, புதுமை மற்றும் தொழில் மைய, கள ஒருங்கிணைப்பாளர் அருமை ரூபன் கலந்துகொண்டு பேசினார். தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் நாசர் நன்றி கூறினார். இதில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்ட்ரல் அரிமா சங்கத்தின் தொழில் முனைவோர்கள் இணைந்து அரசு மானிய கடன் பெறுவது தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.
    • தென்காசி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள் தொழில் மானிய கடன் பெறுவது குறித்து விளக்கினார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் தொழில் முனைவோர்கள் இணைந்து அரசு மானிய கடன் பெறுவது தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வி.ஏ.எம்.நவீன அரிசி ஆலை லட்சுமி சேகர் தலைமை தாங்கினார்.பொன்னொளிர் ஏஜென்சி அருணாச்சல முத்துச்சாமி , கோவா கேட்டரிங் சுரேஷ், எஸ்.ஆர்.எஸ்.ஹார்டுவேர்ஸ் சுப்புராஜ், ரஜினி பத்திர எழுத்தாளர் ரஜினி, கிளாசிக் கம்ப்யூட்டர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


    உடனடி முன்னாள் தலைவர் அருணாச்சலம் வரவேற்றார். கே.ஆர்.பி. நவீன அரிசி ஆலை உரிமையாளர் இளங்கோ தொகுத்து வழங்கினார்.

    பொன் அறிவழகன் தொடக்க உரையாற்றினார்.கோல்டன் டிரேடர்ஸ் செல்வராஜ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள் தொழில் மானிய கடன் பெறுவது குறித்து விளக்கினார். பைம் தொழில் உற்பத்தி நிறுவனத்தின் நிர்வாகி சிவக்குமார் தொழில் ஆரம்பிப்பது குறித்து பேசினார்.நிகழ்ச்சியை ராஜாதி ராஜா நவீன அரிசியாலை ஆனந்த் ,நண்பா கேக் சங்கரபாண்டியன், ராஜாமணி திருமலை கொழுந்து, ஆனந்த், ஹோம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் கே.எஸ். சினேகா பாரதி ஆகியோர் ஏற்பாடு செய்தனர். சுடர் பரமசிவம் நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு கருத்தரங்கம் நடந்தது.
    • திட்ட ஒருங்கி ணைப்பாளர் நாசர் வரவேற்றார். கல்லூரி துணைமுதல்வர் ஜஹாங்கிர் தலைமை தாங்கினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி யில் தமிழக அரசின் தொழில்முனை வோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி தொழில்முனைவோர் மேம்பாட்டு கழகம் மற்றும் காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக தொழில்முனைவோர் மேம்பாட்டு கழகம் இணைந்து புதிதாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கான கடன் வசதிகள் குறித்த கருத்தரங்கை நடத்தியது.

    திட்ட ஒருங்கி ணைப்பாளர் நாசர் வரவேற்றார். கல்லூரி துணைமுதல்வர் ஜஹாங்கிர் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக சருகனி, இதயா கல்லூரி, தொழில்முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கி ணைப்பாளர் ஜெயந்தி மற்றும் காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக, தொழில்முனைவோர் மேம்பாட்டு கழக கள ஒருங்கிணைப்பாளர் அருமை ரூபன் ஆகியோர் கலந்து கொண்டு சிறு, குறு தொழில் முனைவோருக்கு அரசு மற்றும் தனியார் கடன் உதவி நிறுவனங்கள் குறித்து பேசினர்.

    120 மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். இறுதியாக வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் அப்துல் முத்தலிப் நன்றி கூறினார்.

    ×