search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண்டைக்காடு பகவதியம்மன் கோவில்"

    • தமிழக முதல்வர் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து கூறுவது கிடையாது.
    • கொரோனா தொற்றை நாம் தடுப்பூசியினாலும், ஆன்மீகத்தாலும் வென்றோம்.

    மணவாளக்குறிச்சி:

    குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசி திருவிழாவில் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடந்த 87 வது சமய மாநாட்டில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் குத்து விளக்கேற்றினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    500 ஆண்டு கால கனவு அயோத்தி கோவில் மூலம் நனவாகி உள்ளது. ஆன்மீகம் தழைக்கும் நாடு நன்றாக இருக்கும். இப்போது உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.

    இதற்கு காரணம் நம் நாட்டின் ஆன்மீகம்தான். ஆன்மீகத்துடன் தேசியமும் வளர்கிறது. நான் பிறந்த இந்து மதத்தை பின்பற்றுகிறேன். என் மதம் பற்றி பேசினால் மதவாதி என்கிறார்கள். மதவாதி என்கிறவர்களை நான் எதிர்க்கிறேன்.

    தமிழக முதல்வர் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து கூறுவது கிடையாது. வாழ்த்து சொல்ல மறுப்பது ஏன்? என்று தெரியவில்லை. எல்லா பண்டிகைக்கும் வாழ்த்துகளை பரிமாறுவது தான் நல்ல பண்பு.

     

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்தில் புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்ட காட்சி. அருகில் விஜய்வசந்த் எம்.பி., மேயர் மகேஷ் மற்றும் பலர் உள்ளனர்.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்தில் புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்ட காட்சி. அருகில் விஜய்வசந்த் எம்.பி., மேயர் மகேஷ் மற்றும் பலர் உள்ளனர்.

    நாடும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நாட்டு மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்கு ஆன்மிகமும், தேசியமும் அவசியம். கொரோனா தொற்றை நாம் தடுப்பூசியினாலும், ஆன்மீகத்தாலும் வென்றோம்.

    ஏனென்றால் நம் உணவு பழக்கம் முறை, அழுத்தமான ஆன்மீகம்தான். பெருமாள் கோயில்களில் துளசி தீர்த்தம் தருவார்கள். அதில் விஞ்ஞானம் உள்ளது. ஜூன் 21-ந் தேதி உலக யோகா தினம் கடை பிடிக்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு நாளும் யோகா தினம்தான். நம் நாட்டு பழக்கவழக்கங்கள் அப்படி அமைந்துள்ளது. விவேகானந்தர் வெளிநாடு செல்லும்போது இந்தியாவை விரும்பினேன் என்றார். வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும்போது இந்தியாவை வணங்குகிறேன் என்றார். இந்தியாவின் பண்பாடு, கலச்சாரம் நல்ல வாழ்வியலை தருகிறது. இந்து மதம் இதை சொல்லிக்கொடுக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கேரள பெண் பக்தர்கள் இரு முடிக்கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.
    • இங்கு ஆண்டுதோறும் மாசிக்கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடப்பது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இரு முடிக்கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.

    இங்கு ஆண்டுதோறும் மாசிக்கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு மாசிக்கொடை விழா வரும் மார்ச் 5-ந் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் 14-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி கொடை பந்தல் கால் நாட்டு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடந்தது. பந்தல்கால் நாட்டுவிழாவை முன்னிட்டு இன்று காலை 4.30 மணிக்கு திரு நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு மேல் நிறை புத்தரிசி பூஜை, 8.45 மணியளவில் பந்தல்கால் நாட்டு விழா நடந்தது.

    இதில் அமைச்சர் மனோதங்கராஜ், நாகர்கோ வில் மாநகராட்சி மேயர் மகேஷ், குமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாக இணை ஆணையர் ஞானசேகர், ஸ்ரீகாரியம் செந்தில்குமார், மராமத்து பொறியாளர் அய்யப்பன், பெரிய சக்கர தீவெட்டி குழு தலைவர் முருகன், குளச்சல் நகர்மன்ற தலைவர் நசீர், ஓன்றிய தி.மு.க. செயலாளர்கள், சுரேந்திரகுமார், பேருர் செயலாளர்கள் சுஜெய் ஜாக்சன், ரெஜிலின் ராஜகுமார், குளச்சல் நகர செயலாளர் நாகூர்கான், குளச்சல் சபீன், மண்டைக்காடு பேரூராட்சி கவுன்சிலர்கள் ராபர்ட் கிளாரன்ஸ், சோனி, ஹைந்தவ சேவா சங்க தலைவர் கந்தப்பன், பொதுச்செயலாளர் ரெத்னபாண்டியன், செயலாளர் முருகன், செயற்குழு உறுப்பினர் வைகுண்டராஜன், வேலாயுத விமல குமார், கோபாலகிருஷ்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து சமய மாநாடு திடலில் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 86 வது சமய மாநாடு பந்தல்கால் நாட்டு விழா நடந்தது. இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மதியம் 1 மணிக்கு உச்ச பூஜை, தொடர்ந்து அன்னதானம் நடந்தது. மாலை 6 மணிக்கு அம்மன் தங்க ரதத்தில் திரு வீதி உலா, 6.15 க்கு திருவிளக்கு பூஜை, 6.45 க்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு அத்தாழ பூஜை ஆகியவை நடக்கிறது.

    மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை பந்தல்கால் நாட்டு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் மனோதங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    மண்டைக்காடு பகவதி யம்மன் திருக்கோயிலில் புனரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. மாசிக்கொடை திருக்கொடியேற்றத்திற்கு முன்பு பணிகளை நிறைவு செய்ய முயற்சி நடக்கிறது. திருப்பணிகளை பழமை மாறாமல் செய்ய வேண்டும். இது கைவினை கலைஞர்களின் நுட்பமான பணி.மாசிக்கொடைக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வருகை தருகிறார். பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும்.பாரதிய ஜனதாவின் சவாலை தி.மு.க. சந்திக்கும். தி.மு.க. கொள்கை அடிப்படையில் கூட்டணி வைத்துள்ளது. தேர்தலுக்காக கூட்டணி வைக்கவில்லை. பாரதிய ஜனதா நம்பிய வர்களை கழுத்தறுக்கும் கட்சி. உதாரணத்திற்கு மகாராஷ்டிராவில் சிவ சேனாவை கழுத்தறுத்தது.பாரதிய ஜனதா பாவமன்னிப்பு கேட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×