search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா"

    • தாரமங்கலம் நகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பேசிய வார்டு கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை வைத்தனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் சேம் கிங்ஸ்டன், நகர மன்றத் துணைத் தலைவர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அடிப்படை தேவைகள்

    கூட்டத்தில் பேசிய வார்டு கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து 23-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் வேதாச்சலம் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இதுவரை எந்த அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்து வெளியேறினார்.

    5-வது வார்டு உறுப்பினர் தனபால் பேசும்போது தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் சிற்ப கலைக்கு சான்றாக விளங்கும் ஓர் அரிய பொக்கிஷமாகும்.

    இந்த கைலாசநாதர் ஆலயத்திற்கு பல்வேறு மாவட்டங்கள், மாநி லங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. இங்கு அமைந்துள்ள அதிசய எண்கோண வடிவ தெப்பக்குளமும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

    சுற்றுலா தலம்

    அதேபோல் தாரமங்கலம் நகராட்சியின் பராமரிப்பில் உள்ள தாரமங்கலம் ஏரி 163 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரி தமிழக அரசின் காவிரி உபரி நீர் திட்டத்தில் நீர் நிரம்ப ஏற்பாடு செய்யப்பட்ட ஏரிகளில் ஒன்றாகும். இந்த ஆண்டு உபரி நீர் திட்டத்திலிருந்து தண்ணீர் வெளியேற்றபடாத காரணத்தினால் ஏரி வறண்டு காட்சியளிக்கிறது.

    இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஏரியை தூய்மைப்படுத்தி, தூர்வாரி தண்ணீர் நிரப்பி பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் சுற்றுலாத்தலமாக்க ஏற்பாடுகள் செய்து நகராட்சிக்கு வருவாய் பெருக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    ஏரியை சுற்றுலா தலமாக்கும் முயற்சிக்கு அனைத்து வார்டு உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று உறுதி அளித்தனர்.

    சுகாதார பணிகள்

    14-வது வார்டு உறுப்பினர் பாலசுப்ரமணியம் பேசும்போது, மழைக்காலம் என்பதால் டெங்கு, மலேரியா போன்ற நோய்களை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் எந்திரங்களை அதிக அளவில் பயன்படுத்தி சுகாதாரப் பணிகளை தீவிரபடுத்தமாறு கோரிக்கை விடுத்தார்.

    4-வது வார்டு உறுப்பினர் சாமுண்டீஸ்வரி தனது வார்டு பகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் செய்யவில்லை என்று தலைவர் மற்றும் ஆணையாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆணையாளர் உரிய பரிசீலனை செய்து குறைகள் நிறைவேற்றித் தரப்படும் என்று கூறினார். தொடர்ந்து கூட்டத்தில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • “ஆனி முற்சாரல் ஆடி அடைசாரல்’ என்பார்கள்.
    • இவ்வாலய இரு விமானங்கள் காசி ஆலய விமானம்போல அமைந்துள்ளது.

    திருக்குற்றாலத்தில் ஆடி மாதம் மிகவும் விசேஷமாகும்.

    சுற்றுலா செல்ல ஏற்ற மாதம் இது. "ஆனி முற்சாரல் ஆடி அடைசாரல்' என்பார்கள்.

    குற்றால அருவி நீரில் மூலிகைச் சத்துகள் கலந்து வருவதால் அது மக்களுக்கு அதிக நன்மை தரும்.

    அதனால் குற்றால அருவி நீராடல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

    திருச்சியருகேயுள்ள திருநெடுங்கள நாதர் ஆலயத்தில் ஆடி மாதம் முழுதும் சூரிய ஒளி மூலவர் மீது பட்டு சூரிய பூஜை நடைபெறும்.

    இது ஒரு சிறப்பு என்றால், இவ்வாலய இரு விமானங்கள் காசி ஆலய விமானம்போல அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு ஆகும்.

    "ஆடிப் பட்டம் தேடி விதை', "ஆடியில் காற்றடித் தால் ஐப்பசியில் மழை வரும்', "ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்', "ஆடிச் செவ்வாய் தேடிக் குளி, அரைத்த மஞ்சள் பூசிக் குளி', "ஆடிக் கூழ் அமிர்தமாகும்"

    போன்ற பல்வேறு பழமொழிகளும் ஆடி மாதத்தின் சிறப்புகளை விளக்குகின்றன.

    • ஆப் சீசனில்' பயணம் செய்வது பல விதங்களில் பணத்தை சேமிக்க உதவும்.
    • ஒரே பையுடன் பயணம் செய்வது லக்கேஜ்ஜுக்கு ஏற்படும் செலவுகளை தவிர்க்க உதவும்.

    பயணத்திக்காக பலரும் பல்வேறு வழிகளில் பணத்தை சேமிப்பார்கள். ஆனால், பயணத்தின்போது பணத்தை சேமிப்பதை இழந்துவிடுவார்கள். அப்படி பயணத்தின்போது சேமிக்க சில ஆலோசனைகள் இங்கே..

    எப்போதும் ஆப் சீசனில்' பயணம் செய்வது பல விதங்களில் பணத்தை சேமிக்க உதவும். குறுகிய கால பொது விடுமுறை உள்ள நாட்களை பயணத்துக்காக தேர்ந்தெடுத்தால், பயணத்துக்கான செலவு, தங்குமிடம், உணவு பொருட்கள், நினைவுப் பொருட்கள் என அனைத்தும் மலிவாக கிடைக்கும்.

    வருடத்தில் சில மாதங்கள் அல்லது சில நாட்களில் எந்த சீசனும் இருக்காது. அப்படிப்பட்ட நாட்களை தேர்வு செய்து பயணத்துக்கான டிக்கெட்டுகளை குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யுங்கள். குறைவான கட்டணத்தில் சிறந்த தள்ளுபடியுடன் டிக்கெட்டுகள் கிடைக்கும்.

    நீண்ட தூர பயணத்தின்போது தொடர்ச்சியாக செல்லக்கூடிய ஒரு வழி பயணத்தை தேர்ந்தெடுப்பது சலிப்பை ஏற்படுத்தினாலும், பயனத்துக்கான செலவை குறைக்கும்.

    பயண காலத்துக்கு ஏற்றவாறு நாமே உணவு, தின்பண்டங்கள், தண்ணீர் ஆகியவற்றை எடுத்துச் செல்வது சேமிப்புடன் ஆரோக்கியத்துக்கும் நல்லது. அதேநேரம் உணவு மற்றும் தேவையான பொருட்களை கொண்டு செல்ல தனி பைகளை பயன்படுத்துவதை தவிர்த்து, ஒரே ஒரு பையுடன் பயணத்தை மேற்கொள்வது லக்கேஜ்ஜுக்கு ஏற்படும் செலவுகளை தவிர்க்க உதவும்.

    அதுமட்டுமில்லாமல், பயணத்தின்போது தேவையின்றி வாங்கக்கூடிய பொருட்களின் மீதுள்ள நாட்டத்தை குறைத்து பணத்தை மிச்சப்படுத்தலாம். தேவைக்கேற்ப நாம் தங்கும் இடங்களை நாள் கணக்கில் பதிவு செய்வதை விட, மணிக்கணக்கிற்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் முன்பதிவு செய்வது செலவை குறைக்க சிறந்த வழி.

    பயண நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் உணவுக்கான செலவை கட்டுப்படுத்த நீங்கள் உண்ணும் உணவின் தன்மையை தெளிவாக முடிவு செய்யுங்கள். பயணத்தின்போது பொரித்த எண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்குவதையும். சாப்பிடுவதையும் தவிர்க்கலாம். அவை அதிக செலவை ஏற்படுத்துவதுடன், ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

    பயணத்தின்போது நாம் பொதுவாக செய்யும் மற்றொரு தவறு. சுற்றுலா சென்ற இடத்தில் நாம் பயன்படுத்தும் லோக்கல் வாகனங்கள். சுற்றுலாவின்போது நமக்கென தனியாக வாகனங்களை' பயன்படுத்தாமல் பொது போக்குவரத்தை பயன்படுத்துவது வீண் செலவை குறைப்பதுடன், சுற்றுலா செல்வதன் அசல் உணர்வை உணரும்படியான புதிய அனுபவத்தை பெறவும், சுய ஒழுக்கத்தை மேம்படுத்தவும் உதவும்.

    • சுசீந்திரம், சாமிதோப்பு, கொட்டாரம் பகுதிகளிலும் இன்று காலை சாரல் மழை பெய்தது.
    • தக்கலையில் அதிகபட்சமாக 4.2 மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. திடீரென சாரல் மழையும் பெய்தது. சுசீந்திரம், சாமிதோப்பு, கொட்டாரம் பகுதிகளிலும் இன்று காலை சாரல் மழை பெய்தது. தக்கலை, குலசே கரம், தடிக்காரன்கோணம், அருமனை, குழித்துறை பகுதிகளிலும் மழை பெய்தது. தக்கலையில் அதிகபட்சமாக 4.2 மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அங்கு ரம்ய மான சூழல் நிலவு கிறது.

    அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.அவர்கள் குடும்பத்தோடு அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டி ருக்கிறது. அணைகளில் இருந்து 783 கன அடி தண்ணீர் சாகுபடிக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 18.36 அடியாக உள்ளது. அணைக்கு 563 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 583 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.80 அடியாக உள்ளது. அணைக்கு 213 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • சாம்பவர் வடகரை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் சூரியகாந்தி மலர்களை பயிரிட்டுள்ளனர்.
    • கேரளா சுற்றுலா பயணிகளின் வருகை எதிரொலி யாக ஆங்காங்கே உள்ளூர் பொதுமக்கள் சிறிய, சிறிய கடைகளையும் அமைத்துள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்து வருவது குற்றால அருவிகள் என்பதை கடந்து விவசாயிகள் அதிகம் பயிரிட்டுள்ள சூரியகாந்தி மலர்களும் சுண்டி இழுத்து வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் ஆய்க்குடியில் இருந்து சுரண்டை செல்லும் பகுதி களான சுந்தர பாண்டியபுரம், சாம்பவர் வடகரை உள்ளிட்ட பகுதி களில் இருபுறமும் இருக்கும் வயல்வெளிகளில் விவசாயி கள் அதிக அளவில் சூரியகாந்தி மலர்களை பயிரிட்டுள்ளனர்.

    இதனை அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கண்டதும் வாகனங்களை சாலை ஓரம் நிறுத்திவிட்டு தன்னை அறியாமலேயே செல்பி எடுத்துக் கொள்ளும் ஆர்வத்தை தூண்டி வருகிறது.

    குறிப்பாக உள்ளூர் பகுதியில் மக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள சுற்றுலா பயணிகள் சூரியகாந்தி மலர்கள் பயிரிட்டுள்ளதை அறிந்து கார்கள் மூலம் குடும்பம், குடும்பமாக படை யெடுத்து வந்து புகைப் படங்கள் எடுத்துச் செல்கின்றனர்.

    அது மட்டுமின்றி கேரளாவில் திருமணமான தம்பதிகள் 'போட்டோ சூட்' எடுப்பதற்கும் சூரியகாந்தி மலர்கள் பயிரிட்டுள்ள விவசாய நிலங்களில் முகாமிட்டுள்ளனர்.

    விவசாயிகளும் சுற்றுலா பயணிகள் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள எவ்வித தடையும் விதிப்பதில்லை.

    கேரளா சுற்றுலா பயணி களின் வருகை எதிரொலி யாக ஆங்காங்கே உள்ளூர் பொதுமக்கள் சிறிய, சிறிய கடைகளையும் அமைத்துள்ளனர். அவர்களிடம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை ஆர்வமுடன் சுற்றுலா பயணிகள் வாங்கி சுவைத்து செல்கின்றனர்.

    விபத்து ஏற்படும் அபாயம்

    சூரியகாந்தி மலர்களை பார்க்க செல்லும் சுற்றுலா பயணிகள் ஆய்க்குடி- சுரண்டை செல்லும் பிரதான சாலை ஓரங்களில் வாகனங்களை வரிசையாக நிறுத்துகின்றனர்.

    இதனால் அந்தச் சாலையில் பயணம் மேற்கொள்ளும் மற்ற வாகனங்கள் எதிரெதிரே வரும்பொழுது சிறிய, சிறிய விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே வாகனங்களை தனியாக நிறுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் தனி ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


    சூரியகாந்தி மலர்களை பார்க்க படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்.

    சூரியகாந்தி மலர்களை பார்க்க படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்.


     


    • ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வரு கிறது.
    • ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக மாக இருந்ததால் கடைகளி லும் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

    சேலம்:

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்ைட மாநி லங்களில் இருந்தும் ஏராள மான சுற்றுலாபயணிகள் வந்து செல்வார்கள். குறிப்பாக விடுமுறை நாட்க ளில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் .

    ஏற்காட்டில் சாரல் மழை

    ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வரு கிறது. நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலை வரை சாரல் மழை யாக நீடித்தது.இதனால் ஏற்காட்டில் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    இதை தொடர்ந்து சனிக்கிழமையான இன்று காலை முதலே ஏற்காட்டிற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் சாரை சாரையாக வர தொடங்கினர். குடும்பம் , குடும்பமாகவும், காதல் ஜோடிகளும் அதிக அள வில் வாகனங்களில் ஏற்காட்டிற்கு வந்தனர்.இதனால் ஏற்காடு அண்ணா பூங்கா, மான் பூங்கா, மீன் பண்ணை, சேர்வராயன் கோவில், பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், படகு குழாம் உள்பட பல பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. குறிப்பாக படகு குழாமில் குடும்பத்துடன் உற்சாகமாக சவாரி சென்று மகிழ்ந்தனர்.

    ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக மாக இருந்ததால் கடைகளி லும் கூட்டம் அதிக அளவில் இருந்தது. மேலும் தங்கும் விடுதிகளும் கூட்டம் நிரம்பி காட்சி அளித்தன. இதனால் லாட்ஜ் உரிமை யாளர்கள் மற்றும் வியா பாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேட்டூர் அணை

    விடுமுறை நாட்களில் வழக்கமாக மேட்டூர் அணை பூங்காவிற்கு சேலம், ஈரோடு, தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். அதன்படி மேட்டூர் அணை பூங்காவிலும் இன்று காலை முதலே சுற்றுலா பய ணிகள் அதிக அளவில் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள அணை முனி யப்பனை தரிசனம் செய்து மீன் இறைச்சிகளை வாங்கி சமைத்து குடும்பத்துடன் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர்.

    மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஊஞ்சல் ஆடியும், சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனர். அங்குள்ள பாம்புகள் , முதலைகளையும் ஆர்வத்து டன் பார்வையிட்டனர். அணையின் பவள விழா கோபுரத்திற்கும் சென்று அணையின் அழகை பார்த்து ரசித்தனர். காவிரியியில் குடும்பத்துடன் உற்சாகமாக ஏராளமானோர் குளித்து மகிழ்ந்தனர்.

    உயிரியல் பூங்கா

    இேத போல குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிலும் காலை முதலே சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் காதல் ஜோடிகள் அதிக அள வில் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள குரங்கு கள், மயில்கள், மான்கள், பாம்புகள், பறவைகளையும் பார்த்து மகிழ்ந்தனர். தொடர்ந்து பட்டாம்பூச்சி பூங்கா, செயற்கை அருவி முன்பு நின்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 

    • குழந்தைகள் நலம் பெற எத்தனை கோவில்களுக்கு வேண்டுமானலும் செல்ல தயாராகின்றனர்.
    • முன்னொரு காலத்தில் இப்பகுதி மழநாடு என்ற பெயரில் அழைக்கப்பட்டது.

    பெற்றோர் வேண்டுதலை ஏற்று குழந்தைகளுக்கு நலம் அருளும் மாற்றுரைவரதர்!

    குடும்பங்களின் எதிர்காலம் குழந்தைகள் கையில்.

    அதனால் தான் அவர்களின் நலனில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

    கண்ணின் மணிபோல குழந்தைகளை ேபணி வளர்க்கின்றனர்.

    குழந்தைகளுக்கு எதாவது நோய்கள், கஷ்டங்கள் வரும்போது பெற்றோர்கள் துடித்து விடுகின்றனர்.

    அப்போது அவர்கள் வேண்டாத தெய்வங்களே கிடையாது.

    குழந்தைகள் நலம் பெற எத்தனை கோவில்களுக்கு வேண்டுமானலும் செல்ல தயாராகின்றனர்.

    பெற்றோரின் வேண்டுதலை கேட்டு குழந்தைகளுக்கு நலம் அருளும் தெய்வம் திருச்சி அருகே உள்ள திருவாசி கிராமத்தில் வீற்றிருக்கிறார்.

    இங்குதான் மாற்றுரைவரதீஸ்வரர் கோவில் கொண்டுள்ளார்.

    முன்னொரு காலத்தில் இப்பகுதி மழநாடு என்ற பெயரில் அழைக்கப்பட்டது.

    இப்பகுதியை கொல்லி மழவன் எனும் மன்னன் ஆட்சி செய்து வந்தான்.

    மன்னனின் மகள் தீராத கொடிய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாள்.

    மன்னன் எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் அவளைக் குணப்படுத்த முடியவில்லை.

    எனவே, அவளை இக்கோவிலில் கிடத்தி விட்டு, அவளது பிணியை குணப்படுத்தும் பொறுப்பை சுவாமியிடம் விட்டுவிட்டு சென்று விட்டான்.

    அச்சமயத்தில் திருத்தல யாத்திரையாக திருஞான சம்பந்தர் இத்தலம் வந்தார்.

    அவர் சுவாமியின் முன்பு கிடந்த பெண்ணைக் கண்டார்.

    அந்நேரத்தில் சம்பந்தர் வந்திருப்பதை அறிந்த மன்னன் கோவிலுக்கு வந்தான்.

    திருஞானசம்பந்தரிடம் மன்னன், தன் மகளின் நோயைக் கூறி அவள் குணமடைய வழி சொல்லும்படி கேட்டுக்கொண்டான்.

    மன்னனின் நிலையை அறிந்த சம்பந்தர் நடராஜரைக் குறித்து பதிகம் பாடினார்.

    அவரது பாடல் கேட்ட நடராஜர் ஆனந்த நடனம் ஆடினார்.

    மன்னன் மகளை பிடித்திருந்த நோயை அழித்து நாகத்தின் மீது ஆடினார்.

    மன்னன் மகள் குணமாகி எழுந்தாள். இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள நடராஜர் தலையில் சேர்த்துக் கட்டிய சடைமுடியுடன், ஒரு காலை நாகத்தின் மீது ஊன்றி ஆடும் கோலத்தில் இருக்கிறார்.

    இவரை "சர்ப்ப நடராஜர்" என்கின்றனர். நடராஜரின் இந்த தரிசனம் அபூர்வமானதாகும்.

    இத்தலத்து அம்பாள் பாலாம்பிகை, கமலன் எனும் வணிகனின் மகளாக பிறந்தாள்.

    வன்னிமரத்தின் அடியில் சுவாமியை வேண்டி தவம் இருந்து தகுந்த காலத்தில் அவரை மணந்து கொண்டாள்.

    இவள் பிரகாரத்தில் தனிச்சன்னதியில் தாமரை மலர் மீது நின்ற கோலத்தில், மேற்கு பார்த்தபடி இருக்கிறாள்.

    இவளது சன்னதியில் வித்தியாசமாக துவார பாலகிகளுக்கு பெண்கள் மஞ்சள் கயிறு, தொட்டில் கட்டி வழிபடுகின்றனர்.

    இவர்கள் மூலமாக அம்பாள் பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்கிறாள் என்பது நம்பிக்கை.

    அர்த்தஜாம பூஜையில் மட்டும் முதலில் அம்பாளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு அதன்பிறகு சுவாமிக்கு பூஜைகள் நடக்கிறது.

    குழந்தை பிறந்தவர்களும், பாலதோஷம் உள்ள குழந்தைகளின் பெற்றோர்களும் அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

    இவ்வாறு செய்வதால் குழந்தைகள் வாழ்வில் நோய்கள் இன்றி சிறப்பாக வாழ்வர் என்பது நம்பிக்கை.

    • 108 வைணவ தலங்களில் இதுவும் ஒன்று.
    • சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் வியாபாரம் விருத்தி அடையும்.

    நினைத்ததை அருளும் திருமோகூர் காளமேகப் பெருமாள்!

    மதுரையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் திருமோகூர் தலம் அமைந்துள்ளது.

    இவ்வாலயத்தில் காளமேகப் பெருமாள், மோகன வள்ளித் தாயார், சக்கரத்தாழ்வார், ஸ்ரீஆண்டாள் சந்நதிகள் இருக்கின்றன.

    108 வைணவ தலங்களில் இதுவும் ஒன்று.

    தொடர்ந்து பனிரெண்டு வாரம் அர்ச்சனை செய்தால், நினைத்த காரியம் நடக்கும்.

    திருமணம் ஆகாத கன்னிப்பெண்களும், ஆண்களும், தொடர்ந்து 12 வெள்ளி, 12 புதன் கிழமைகளில் அர்ச்சனை செய்து வந்தால் திருமணம் நடைபெறும்.

    குழந்தைப் பேறு இல்லாதவர்கள் புதன், வியாழக்கிழமைகளில் 12 வாரம் குழந்தை வேண்டி அர்ச்சனை செய்தால் குழந்தைப்பேறு கிடைக்கும்.

    வியாபார விருத்தி அடைய சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் வியாபாரம் விருத்தி அடையும்.

    செய்வினைக் கோளாறு உள்ளவர்கள் 12 செவ்வாய்க்கிழமை தோறும் தொடர்ந்து வழிபட்டால் குறைகள் நிவர்த்தி ஆகும்.

    • குஜராத்தில் லட்சுமி பூஜை ஒரு விசேஷ நிகழ்ச்சியாகும்.
    • இந்தோ சீனாவிலும் திருமகளின் வழிபாடு நிலவுகிறது.

    இரு யானைகளுடைய லட்சுமி

    யானைகள் இரு புறமும் கலச நீராட்டும் லட்சுமியே எங்கும் சாதாரணமாகத் தென்படும் உருவம்.

    முதன் முதல் இந்த கஜலட்சுமியின் வடிவிலேயே சிற்பியின் கனவு எழுந்தது.

    ஸ்ரீசுக்தத்தின் வருணனையே இதற்கு அடிப்படையாகும்.

    வேத காலத்திலேயே வேரூன்றிப்போன இந்தக் கற்பனையை கல்லில் எங்கும் காணலாம்.

    லட்சுமி வழிபாடும் பூஜையும்

    பில்லர்கள் எனும் தொல்குடியினரின் தெய்வம் லட்சுமியே.

    தென்னாட்டில் மாலர் என்ற வகுப்பினர் ஆறு கலயங்களை அடுக்கி அவற்றைத் திருமகளாகப் பாவித்து கும்பிடுகின்றனர்.

    குஜராத்தில் லட்சுமி பூஜை ஒரு விசேஷ நிகழ்ச்சியாகும்.

    ஆனால் நம் ரீதியில் அன்று லட்சுமியின் கையில் வீணை இருக்கும்.

    சுக்ரநீதி சாரத்தில் வீணை ஏந்திய தியான ஸ்லோகம் வருகிறது.

    மகாராஷ்டிரத்தில் உழவர்கள் லட்சுமியைத் தொழுகின்றனர்.

    பயிர் வளத்தைக் காட்டும் தேவதை அவள். ஒரு மரத்தின் கீழ் ஐந்து கற்களை நிறுத்தி அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டுக் கோதுமை மாப்படையல் சாத்துவர்.

    மாலைப்பொழுது இளங்கதிர்களைக் கொய்து வீட்டுக்குக் கொண்டு வருவார்கள்.

    அத்துடன் துணியில் மறைத்து ஒரு விளக்கினையும் ஏந்தி வருவர். அதுவே அவர்களுடைய லட்சுமி.

    ராஜபுதனத்தில் லட்சுமியை அன்ன பூரணியாக உபசரிக்கின்றனர்.

    தாணியம் அளக்கும் "காரி" என்ற மரக்காலை லட்சுமி வடிவமாக அமைத்து தாமரைப் பூக்களால் அலங்கரிப்பார்கள்.

    இந்தோ சீனாவிலும் திருமகளின் வழிபாடு நிலவுகிறது.

    அவள் தலையில் முத்துக் கிரீடமும், கைகளில் வளையல்களும் அணிந்திருப்பாள்.

    மேற்புறக் கைகளில் சங்கு சக்கரம் இருக்கும். நாகக்குடை பூண்டிருப்பாள்.

    கல்லறைகள் மீது திருமகள் உருவைப் பொறிப்பது அந் நாட்டு வழக்கம்.

    தெலுங்கரும், தமிழகத்தில் ஸ்மார்த்த மரபினரும் வரலட்சுமி விரதத்தைக்கொண்டாடுவார்கள்.

    கோஜாகர பூர்ணிமை விரதம் வங்காளிகளிடையே நிலவும் லட்சுமி பூஜை.

    • இவளை வணங்குபவர்களை, அதிகப்பசி, அதிக தாகம் என்ற லட்சுமி அடையமாட்டாள்.
    • மகாலட்சுமி பொன் நிறத்தை உடையவள்

    மகாலட்சுமியின் பெருமை

    மகாலட்சுமி பொன் நிறத்தை உடையவள். தங்கம், வெள்ளி இவற்றாலான மாலைகளை அணிந்திருப்பாள்.

    சந்திரன் போன்று இருப்பவள் இவளுடைய திருவருளால்தான் பொன், பசுக்கள் குதிரைகள், பணியாட்கள் இவைகளை நிறையப் பெற முடியும். ரத, கஜ, துரகம் முதலியவற்றையும் அளிப்பவள்.

    மந்தகாச முகமுடையவள். தங்க பிராகாரங்களைக் கொண்டது இவள் பவனம், கருணையுடையவள்.

    வஸ்திரம், ஆபரணம், அழகு இவற்றால் மிகவும் பிரகாசிப்பவள்.

    அனைத்தும் தன்னிடம் நிரம்பியிருப்பதால் திருப்தியுடையவள் பக்தர்களையும் திருப்திப்படுத்துபவள்.

    தாமரைமலரில் அமர்ந்திருப்பவள். தேவர்களால் சேவிக்கத் தகுந்தவள் மிக்க உதார குணமுடையவள்.

    இவள் "ஈம்" என்ற பீஜாட்சரத்தை உடையவள் இவள் பக்தர்கள் சரணடையத் தகுந்தவள்.

    இவளை வணங்குபவர்களை, அதிகப்பசி, அதிக தாகம் என்ற லட்சுமி அடையமாட்டாள்.

    தரித்திரத்தையும் குறைவையும் இவள் அகற்றும் சக்தி படைத்தவள்.

    மகாலட்சுமி சூரியன் போன்றும் பிரகாசிப்பாள் இவளுடைய தவத்திற்காகவே வில்வமரம் தோன்றியது.

    இவளை உபாசனை செய்ய குபேரனும் அவன் கஜானா அதிபதியான மணிபத்ரனும், சிந்தாமணி ரத்னத்துடன் கீர்த்தி என்பவளும் பக்தன் வீடு தேடி வந்தடைவர்.

    இவள் வருவதற்கு வழியாகின்றது சுகந்தம். இவளே செழிப்பைத் தருபவள் கோமியத்தில் வாசம் செய்பவள்.

    சர்வ தேவதைகளுக்கும் இவளே ஈஸ்வரி. ஆசையை நிறைவேற்றி, வாக்குக்கு சத்தியத்தை அளித்து, ரூபமளித்து, உண்ணும் பொருள்களுக்கு ருசியையும் அளிப்பவள்.

    மகாலட்சுமியின் திருக்குமாரர் கர்தமர் சிக்லீதர் என்பவரும் இவள் அன்புக்குமாரரே.

    இவள் கையில் பிரம்பு வைத்திருப்பாள்.

    செங்கோல் செலுத்தும் ராஜலட்சுமி இவள். இந்த பெருமைகளை யெல்லாம் பெற்ற ஸ்ரீமகாலட்சுமி நம்மைவிட்டு அகலாதிருக்க வேண்டும் எனப் பிரார்த்திக்க வேண்டும்.

    • வலம்புரிசங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள் நெருங்காது.
    • ஒரு சங்கின் சுருள்பகுதி அதன் வாய்பகுதியில் இருந்து இடதுபுறம் வந்தால் அது இடம்புரிசங்கு.

    செல்வம் தரும் வலம்புரி சங்கு

    கடலில் வாழும் உயிரினங்களில் கிளிஞ்சல் வகை புழுக்கள் தனக்கு பாதுகாப்பிற்காக கட்டிக் கொள்ளும் மேல் கவசம்தான் சங்கு.

    சிறியதாக குறுகிய அளவானவை பெண் சங்குகள். சற்றுபருத்த திடசங்குகள் ஆண் சங்குகள்.

    சங்குகளின்மேல் உள்ள வரிகளை (கோடுகள்) வைத்து வலம்புரிச்சங்கு, இடம்புரிச்சங்கு என்று கூறுவார்கள்.

    ஒரு சங்கின் சுருள்பகுதி அதனுடைய வாய்பகுதியில் ஆரம்பித்து சுருள் முனைக்கு வலது புறமாக சுற்றி வந்தால் அது வலம்புரி சங்கு எனப்படும்.

    ஒரு சங்கின் சுருள்பகுதி அதன் வாய்பகுதியில் இருந்து இடதுபுறம் வந்தால் அது இடம்புரி சங்கு.

    வலம்புரி சங்கு, இடம்புரி சங்கு அகியவற்றில் வலம் புரிச்சங்குதான் அபூர்வமானதும், சிறப்பானதும் ஆகும்.

    இந்த வலம்புரி சங்கு பொங்கும் கடலில் இருந்து எடுக்கப்படுகிறது. எனவே இதற்கு அரிய தெய்வீக சக்தி உண்டு.

    தூய்மையான வெண்ணிறத்துடன் நீண்டு மூன்றில் ஒருபங்கு நீளத்தில் வாலும், தலைப்பாகத்தில் ஏழு சுற்றும் அமைந்து சங்கின் சுற்றளவு அடிமுடி நீளத்திற்கு சமமாக இருப்பது சிறப்பு நீளம் அதிகமாக இருந்தால் மிகச் சிறப்பு.

    ஸ்ரீ மகாவிஷ்ணுவின் இடது கையில் உள்ளது வலம்புரி சங்கு. இந்தச்சங்கை காதில் வைத்துக்கேட்டால் "ஓம்" என்ற சப்தம் கேட்கும்.

    வலம்புரிச்சங்கை வீட்டில், வியாபார இடங்களில் சுத்தமாக வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும் மற்றும்பலவித நன்மைகள் கிடைக்கும்.

    மாமிசம் சாப்பிட்ட அன்றும், பெண்கள் மாதவிலக்கான நாட்களிலும் வலம்புரிச்சங்கைத்தொடக்கூடாது.

    சங்கினை தரையில் வைக்கக்கூடாது. சங்கிற்கு சந்தனம், குங்குமம் வைத்து பித்தளை அல்லது வெள்ளி தாம்பாளத்தில் வைக்க வேண்டும். எவர்சில்வர் தட்டில் வைக்கக்கூடாது.

    செல்வத்திற்கு அதி தெய்வமான மகாலட்சுமி பிறந்த ஆடிமாதம் பூர நட்சத்திரலும், இந்திரன் லட்சுமியை வணங்குகிற புரட்டாசி பவுர்ணமியிலும், ஆனி மாதம் சுக்லபட்சம் கூடிய அஷ்டமியிலும், சித்ரா பவுர்ணமியிலும்

    வலம்புரிச்சங்கில் பசும்பால் வைத்து மலர்களால் சங்கினையும், லட்சுமியையும் அலங்கரித்து, சந்தனம் குங்குமம் இட்டு அதிரசம், லட்டு ஆகியவைகளை பசு நெய்யில் செய்துபால்பாயசம் செய்துபசு நெய் ஊற்றி விளக்கேற்றி இரவு 10.00 மணியிலிருந்து 1.00 மணிக்குள் பூஜை செய்ய வேண்டும்.

    இப்படி செய்தால் எல்லாவித செல்வங்களும் வந்து சேரும். இது தவிர செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சங்கிற்கு பூஜை செய்யலாம்.

    ஒவ்வொரு நாளும் சங்கில் தண்ணீர் விட்டு அதில் துளசி, வில்வக்கட்டை, ஏலக்காய்,பச்சைக்கற்பூரம், குங்குமம், பூ சேர்த்து பூஜை செய்துவிட்டு அதில் சிறிது நீரைக்குடித்துவிட்டு, சிறிது நீரை விட்டு வாசற்படியில் தெளிக்கவும்.

    இப்படி 90 நாள் செய்தால் திருஷ்டி, போட்டி பொறாமை நீங்கும்.

    ஆண், பெண் ஆகியோருக்கு இருக்கும் திருமண தோஷம், செவ்வாய் தோஷம் நீங்க சங்கில்பசும்பால் விட்டு 27 செவ்வாய்கிழமை அம்மனை பூஜித்து வந்தால் தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும்.

    குழந்தைகளுக்கு இதில்பசும்பால் ஊற்றி வைத்துப்பாலாடையாகப் புகட்ட நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

    வலம்புரிசங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள் நெருங்காது.

    இச்சங்கில் தண்ணீர் விட்டு பூஜை செய்து அதை அருந்தினால் வியாதிகள் குணமடையும்.

    • காவிரி ஆற்றில் நீராடிவிட்டு அணை பூங்காவில் பொழுதை கழித்து செல்வது வழக்கம்.
    • இந்த நிலையில் விடுமுறை தினமான நேற்று மேட்டூர் அணை பூங்காவிற்கு 7,699 சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர்.

    மேட்டூர் அணை பூங்கா

    அவர்கள் இங்குள்ள காவிரி ஆற்றில் நீராடிவிட்டு அணை பூங்காவில் பொழுதை கழித்து செல்வது வழக்கம். இந்த பூங்காவில் பொதுபணித் துறை சார்பில் நுழைவு கட்டணமாக ரூ.5 வசூல் செய்யபடுகிறது.

    இந்த நிலையில் விடுமுறை தினமான நேற்று மேட்டூர் அணை பூங்காவிற்கு 7,699 சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்களிடம் நுழைவு கட்டணமாக ரூ.38.495 வசூல் செய்யப்பட்டது. சுற்றுலா பயணிகள் பூங்காவில் இருந்த பாம்பு, முயல் பண்ணைகளை கண்டு ரசித்தனர்.

    மேலும் பூங்காவில் இருந்த ஊஞ்சல், ராட்டினம் உள்ளிட்டவற்றை சிறுவர், சிறுமிகள் விளையாடி மகிழ்ந்தனர்.

    ×