search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூரியகாந்தி மலர்கள்"

    • மஞ்சள் நிறத்தில் கொத்து கொத்தாக வசீகரிக்கிறது
    • சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

    அரவேணு, 

    கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்நாட்டு, வெளிநாட்டு தாவரங்கள் வளர தேவையான காலநிலை நிலவுகிறது. மேலும் இங்கு ஆங்கிலேயர் காலத்தில் நிலச்சரிவை தடுக்கும் வகையில் காட்டு சூரிய காந்தி விதைகள் தூவப்பட்டன.

    இவை தற்போது மண்ணின் உறுதி தன்மையை அதிகரித்து உள்ளன. மேலும் நிலச்சரிவையும் கட்டுப்படுத்தி வருகிறது. கோத்தகிரியில் வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் காட்டு சூரிய காந்தி மலர்கள் பூக்க தொடங்கும். அதன்படி இவை தற்போது கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் வரையிலும், அரவேனு முதல் குஞ்சப்பனை வரையிலும் சாலையோரங்களில் மஞ்சள் நிறத்தில் கொத்து கொத்தாக பூத்துக்குலுங்குகின்றன.

    வாசம் இல்லாத மலராக இருந்தபோதிலுலும் அவை தற்போது காண்போரின் கண்களுக்கு குளிர்ச்சி தரும் வகையில் மலர்ந்து நிற்கின்றன. எனவே அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் காட்டு சூரியகாந்தி மலர்கள் பூத்துக்குலுங்குவதை ரசிப்பதுடன், புகைப்படம் எடுத்தும் மகிழ்ச்சியை பரிமாறி வருகின்றனர்.

    • சாம்பவர் வடகரை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் சூரியகாந்தி மலர்களை பயிரிட்டுள்ளனர்.
    • கேரளா சுற்றுலா பயணிகளின் வருகை எதிரொலி யாக ஆங்காங்கே உள்ளூர் பொதுமக்கள் சிறிய, சிறிய கடைகளையும் அமைத்துள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்து வருவது குற்றால அருவிகள் என்பதை கடந்து விவசாயிகள் அதிகம் பயிரிட்டுள்ள சூரியகாந்தி மலர்களும் சுண்டி இழுத்து வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் ஆய்க்குடியில் இருந்து சுரண்டை செல்லும் பகுதி களான சுந்தர பாண்டியபுரம், சாம்பவர் வடகரை உள்ளிட்ட பகுதி களில் இருபுறமும் இருக்கும் வயல்வெளிகளில் விவசாயி கள் அதிக அளவில் சூரியகாந்தி மலர்களை பயிரிட்டுள்ளனர்.

    இதனை அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கண்டதும் வாகனங்களை சாலை ஓரம் நிறுத்திவிட்டு தன்னை அறியாமலேயே செல்பி எடுத்துக் கொள்ளும் ஆர்வத்தை தூண்டி வருகிறது.

    குறிப்பாக உள்ளூர் பகுதியில் மக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள சுற்றுலா பயணிகள் சூரியகாந்தி மலர்கள் பயிரிட்டுள்ளதை அறிந்து கார்கள் மூலம் குடும்பம், குடும்பமாக படை யெடுத்து வந்து புகைப் படங்கள் எடுத்துச் செல்கின்றனர்.

    அது மட்டுமின்றி கேரளாவில் திருமணமான தம்பதிகள் 'போட்டோ சூட்' எடுப்பதற்கும் சூரியகாந்தி மலர்கள் பயிரிட்டுள்ள விவசாய நிலங்களில் முகாமிட்டுள்ளனர்.

    விவசாயிகளும் சுற்றுலா பயணிகள் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள எவ்வித தடையும் விதிப்பதில்லை.

    கேரளா சுற்றுலா பயணி களின் வருகை எதிரொலி யாக ஆங்காங்கே உள்ளூர் பொதுமக்கள் சிறிய, சிறிய கடைகளையும் அமைத்துள்ளனர். அவர்களிடம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை ஆர்வமுடன் சுற்றுலா பயணிகள் வாங்கி சுவைத்து செல்கின்றனர்.

    விபத்து ஏற்படும் அபாயம்

    சூரியகாந்தி மலர்களை பார்க்க செல்லும் சுற்றுலா பயணிகள் ஆய்க்குடி- சுரண்டை செல்லும் பிரதான சாலை ஓரங்களில் வாகனங்களை வரிசையாக நிறுத்துகின்றனர்.

    இதனால் அந்தச் சாலையில் பயணம் மேற்கொள்ளும் மற்ற வாகனங்கள் எதிரெதிரே வரும்பொழுது சிறிய, சிறிய விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே வாகனங்களை தனியாக நிறுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் தனி ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


    சூரியகாந்தி மலர்களை பார்க்க படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்.

    சூரியகாந்தி மலர்களை பார்க்க படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்.


     


    • மலர்களுக்கு நடுவே நின்று தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து வருகின்றனர்.
    • திடீரென முளைத்த இந்த சுற்றுலா தலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதால் ஆங்காங்கே சாலையோரத்தில் புதிய வியாபார கடைகளும் தோன்றியுள்ளன.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் என்றாலே முதலில் அனைவருக்கும் ஞாபகம் வருவது குற்றால அருவிகள் தான். இந்த குற்றால அருவிகளில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை காலத்தில் 3 மாதங்கள் சீசன் களைகட்டும்.

    அதே வேளையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆய்க்குடி, அகரக்கட்டு, சாம்பவர்வடகரை, சுரண்டை, கம்பளி, சுந்தரபாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சூரியகாந்தி மலர்கள் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராகும். அவை முழுவதுமாக பூத்து குலுங்கும் காட்சி பார்ப்பவர்களை மிகவும் கவரும். அந்த வகையில் தற்போது அகரக்கட்டு பகுதியில் சூரியகாந்தி மலர்கள் பூத்துள்ளன. இந்த சூரியகாந்தி மலரை காண்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் தற்போது அந்த பகுதிகளுக்கு படையெடுத்துள்ளனர்.

    அவர்கள் மலர்களுக்கு நடுவே நின்று தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து வருகின்றனர். தற்போது சீசன் காலகட்டம் என்பதால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கு குளித்துவிட்டு கடையநல்லூர், ஆய்க்குடி வழியாக சாம்பவர்வடகரை உள்ளிட்ட பகுதிகளில் பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி மலர்களை காண வருகின்றனர்.

    இதனால் சாம்பவர்வடகரை-சுரண்டை சாலையில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தில் இருந்தும் பெரும்பாலானோர் குற்றாலத்திற்கு வந்துவிட்டு, இங்கு வந்து சூரியகாந்தியின் அழகை ரசிக்கின்றனர். அவர்கள் மலரின் நடுவே நின்றபடி தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

    திடீரென முளைத்த இந்த சுற்றுலா தலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதால் ஆங்காங்கே சாலையோரத்தில் புதிய வியாபார கடைகளும் தோன்றியுள்ளன.

    அதாவது அந்த பகுதியில் மற்ற நிலங்களில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த சுரைக்காய், சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். மேலும் சிலர் சுரண்டை மார்க்கெட்டில் இருந்து தக்காளி, பல்லாரி, பீட்ரூட், காய்கறிகளை வாங்கி வந்து சாலையோரத்தில் கடை அமைத்து விற்பனை செய்கின்றனர். இதனால் போதிய லாபம் கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    • சேவல் கொண்டை மலர்களும் ஏராளமாக பூத்துள்ளன.
    • புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

    கோத்தகிரி பகுதியில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு தாவர இனங்களும் வளருவதற்கான இதமான காலநிலை நிலவுகிறது. நிலச்சரிவை தடுக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் காட்டு சூரியகாந்தி விதைகள் கோத்தகிரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தூவப்பட்டன.'டித்தோனியா டிவர்சிபோலியா' என்ற தாவர இனத்தை சேர்ந்த இந்த செடி அடர்த்தியாக வளர்கிறது. வறட்சி காலங்களில் பூத்துக்குலுங்கும் இந்த பூக்களால், மண்ணின் உறுதித் தன்மை அதிகரிப்பதுடன், நிலச்சரிவையும் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் பூக்கும் பருவம் கொண்ட காட்டு சூரிய காந்தி பூக்கள் இந்த ஆண்டு சற்று முன்னதாகவே பூக்கத் தொடங்கியுள்ளன. மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் பிரதான மாநில நெடுஞ்சாலையில் ஓரங்களிலும், தேயிலை தோட்ட சரிவுகளிலும் கொத்துக்கொத்தாக இந்த மலர்கள் பரவலாக பூத்துள்ளன. வாசமில்லாத மலராக இருந்தாலும், கண்களுக்கு குளிர்ச்சி தரும் மஞ்சள் வண்ணத்தில் பூத்துக்குலுங்கி காண்போரை வசீகரிக்கிறது. இதே போல பிளேம் ஆப் பாரஸ்ட் என்ற செங்காந்தள் மலர்களும், சேவல் கொண்டை மலர்களும் ஏராளமாக பூத்துள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன், அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

    ×