search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sunflowers"

    • மஞ்சள் நிறத்தில் கொத்து கொத்தாக வசீகரிக்கிறது
    • சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

    அரவேணு, 

    கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்நாட்டு, வெளிநாட்டு தாவரங்கள் வளர தேவையான காலநிலை நிலவுகிறது. மேலும் இங்கு ஆங்கிலேயர் காலத்தில் நிலச்சரிவை தடுக்கும் வகையில் காட்டு சூரிய காந்தி விதைகள் தூவப்பட்டன.

    இவை தற்போது மண்ணின் உறுதி தன்மையை அதிகரித்து உள்ளன. மேலும் நிலச்சரிவையும் கட்டுப்படுத்தி வருகிறது. கோத்தகிரியில் வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் காட்டு சூரிய காந்தி மலர்கள் பூக்க தொடங்கும். அதன்படி இவை தற்போது கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் வரையிலும், அரவேனு முதல் குஞ்சப்பனை வரையிலும் சாலையோரங்களில் மஞ்சள் நிறத்தில் கொத்து கொத்தாக பூத்துக்குலுங்குகின்றன.

    வாசம் இல்லாத மலராக இருந்தபோதிலுலும் அவை தற்போது காண்போரின் கண்களுக்கு குளிர்ச்சி தரும் வகையில் மலர்ந்து நிற்கின்றன. எனவே அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் காட்டு சூரியகாந்தி மலர்கள் பூத்துக்குலுங்குவதை ரசிப்பதுடன், புகைப்படம் எடுத்தும் மகிழ்ச்சியை பரிமாறி வருகின்றனர்.

    • எண்ைணய் வித்து பயிரான சூரியகாந்தி, 120 நாட்களில் வளரும் வீரிய ஒட்டுப்பயிராகும்.
    • வாகனஓட்டிகள் செல்பி எடுத்து மகிழ்ச்சி

    ஊட்டி,

    ஊட்டி அடுத்த மசினகுடி, மாவனல்லா உள்ளிட்ட பகுதிகளில் குண்டுமல்லி, சூரியகாந்தி மலர்கள் ஆகியவை பயிரிடப்பட்டு உள்ளன.

    இது மைசூர் சாலையில் பந்திப்பூர் தாண்டி குண்டல்பேட் வரை, பல ஏக்கர் பரப்பளவில் செழித்து வளர்ந்து நிற்கின்றன. இதில் எண்ைணய் வித்து பயிரான சூரியகாந்தி, 120 நாட்களில் வளரும் வீரிய ஒட்டுப்பயிராகும். குறைந்த நீரில் வளர்ந்து அதிக மகசூல் தரக்கூடியது.

    தமிழகத்தில் நீலகிரி முதல் கர்நாடகாவின் குண்டல்பேட் வரை கண்களை பறிக்கும் அழகுடன் சூரியகாந்தி மலர்கள் பூத்து குலுங்குவது, அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. எனவே அவர்கள் சூரிய காந்தி மலர்களுக்கு மத்தியில் நின்றபடி செல்போனில் செல்பி எடுத்து நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.

    • சேவல் கொண்டை மலர்களும் ஏராளமாக பூத்துள்ளன.
    • புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

    கோத்தகிரி பகுதியில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு தாவர இனங்களும் வளருவதற்கான இதமான காலநிலை நிலவுகிறது. நிலச்சரிவை தடுக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் காட்டு சூரியகாந்தி விதைகள் கோத்தகிரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தூவப்பட்டன.'டித்தோனியா டிவர்சிபோலியா' என்ற தாவர இனத்தை சேர்ந்த இந்த செடி அடர்த்தியாக வளர்கிறது. வறட்சி காலங்களில் பூத்துக்குலுங்கும் இந்த பூக்களால், மண்ணின் உறுதித் தன்மை அதிகரிப்பதுடன், நிலச்சரிவையும் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் பூக்கும் பருவம் கொண்ட காட்டு சூரிய காந்தி பூக்கள் இந்த ஆண்டு சற்று முன்னதாகவே பூக்கத் தொடங்கியுள்ளன. மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் பிரதான மாநில நெடுஞ்சாலையில் ஓரங்களிலும், தேயிலை தோட்ட சரிவுகளிலும் கொத்துக்கொத்தாக இந்த மலர்கள் பரவலாக பூத்துள்ளன. வாசமில்லாத மலராக இருந்தாலும், கண்களுக்கு குளிர்ச்சி தரும் மஞ்சள் வண்ணத்தில் பூத்துக்குலுங்கி காண்போரை வசீகரிக்கிறது. இதே போல பிளேம் ஆப் பாரஸ்ட் என்ற செங்காந்தள் மலர்களும், சேவல் கொண்டை மலர்களும் ஏராளமாக பூத்துள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன், அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

    ×