search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குவிந்தனர்"

    • ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வரு கிறது.
    • ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக மாக இருந்ததால் கடைகளி லும் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

    சேலம்:

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்ைட மாநி லங்களில் இருந்தும் ஏராள மான சுற்றுலாபயணிகள் வந்து செல்வார்கள். குறிப்பாக விடுமுறை நாட்க ளில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் .

    ஏற்காட்டில் சாரல் மழை

    ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வரு கிறது. நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலை வரை சாரல் மழை யாக நீடித்தது.இதனால் ஏற்காட்டில் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    இதை தொடர்ந்து சனிக்கிழமையான இன்று காலை முதலே ஏற்காட்டிற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் சாரை சாரையாக வர தொடங்கினர். குடும்பம் , குடும்பமாகவும், காதல் ஜோடிகளும் அதிக அள வில் வாகனங்களில் ஏற்காட்டிற்கு வந்தனர்.இதனால் ஏற்காடு அண்ணா பூங்கா, மான் பூங்கா, மீன் பண்ணை, சேர்வராயன் கோவில், பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், படகு குழாம் உள்பட பல பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. குறிப்பாக படகு குழாமில் குடும்பத்துடன் உற்சாகமாக சவாரி சென்று மகிழ்ந்தனர்.

    ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக மாக இருந்ததால் கடைகளி லும் கூட்டம் அதிக அளவில் இருந்தது. மேலும் தங்கும் விடுதிகளும் கூட்டம் நிரம்பி காட்சி அளித்தன. இதனால் லாட்ஜ் உரிமை யாளர்கள் மற்றும் வியா பாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேட்டூர் அணை

    விடுமுறை நாட்களில் வழக்கமாக மேட்டூர் அணை பூங்காவிற்கு சேலம், ஈரோடு, தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். அதன்படி மேட்டூர் அணை பூங்காவிலும் இன்று காலை முதலே சுற்றுலா பய ணிகள் அதிக அளவில் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள அணை முனி யப்பனை தரிசனம் செய்து மீன் இறைச்சிகளை வாங்கி சமைத்து குடும்பத்துடன் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர்.

    மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஊஞ்சல் ஆடியும், சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனர். அங்குள்ள பாம்புகள் , முதலைகளையும் ஆர்வத்து டன் பார்வையிட்டனர். அணையின் பவள விழா கோபுரத்திற்கும் சென்று அணையின் அழகை பார்த்து ரசித்தனர். காவிரியியில் குடும்பத்துடன் உற்சாகமாக ஏராளமானோர் குளித்து மகிழ்ந்தனர்.

    உயிரியல் பூங்கா

    இேத போல குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிலும் காலை முதலே சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் காதல் ஜோடிகள் அதிக அள வில் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள குரங்கு கள், மயில்கள், மான்கள், பாம்புகள், பறவைகளையும் பார்த்து மகிழ்ந்தனர். தொடர்ந்து பட்டாம்பூச்சி பூங்கா, செயற்கை அருவி முன்பு நின்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 

    • ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கடைகளி லும் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
    • மேட்டூர் அணை பூங்காவிலும் காலை முதலே குவிந்தனர். அவர்கள் அங்குள்ள அணை முனியப்பனை தரிசனம் செய்து குடும்பத்துடன் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர்.

    சேலம்:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்ைட மாநி லங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுல ாபயணிகள் வந்து செல்வார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    ஏற்காட்டில் குவிந்தனர்

    அதன்படி சனிக்கிழமையான இன்று காலை முதலே ஏற்காட்டிற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வர தொடங்கினர். குடும்பம், குடும்பமாகவும், காதல் ஜோடிகளும் அதிக அளவில் வாகனங்களில் ஏற்காட்டிற்கு வந்தனர்.

    இதனால் ஏற்காடு அண்ணா பூங்கா, மான் பூங்கா, மீன் பண்ணை, சேர்வராயன் கோவில், பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், படகு குழாம் உள்பட பல பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக படகு குழாமில் குடும்பத்துடன் உற்சாகமாக சவாரி சென்று மகிழ்ந்தனர்.

    ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கடைகளி லும் கூட்டம் அதிக அளவில் இருந்தது. மேலும் தங்கும் விடுதிகளிலும் கூட்டம் நிரம்பி காட்சி அளித்தன. இதனால் லாட்ஜ் உரிமையா ளர்கள் மற்றும் வியாபாரி கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    உயிரியல் பூங்கா

    இேத போல குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள குரங்குகள், மயில்கள், மான்கள், பாம்புகள், பறவைகளையும் பார்த்து மகிழ்ந்தனர்.சேலம் மற்றும் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மேட்டூர் அணை பூங்காவிலும் காலை முதலே குவிந்தனர். அவர்கள் அங்குள்ள அணை முனியப்பனை தரிசனம் செய்து குடும்பத்துடன் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர்.

    மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஊஞ்சல் ஆடியும் சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனர். அங்குள்ள் பாம்புகள், முதலைகளையும் பார்வை யிட்டனர். அணையின் பவள விழா கோபுரத்திற்கும் சென்று அணையின் அழகை பார்த்து ரசித்தனர். காவிரியி லும் குடும்பத்துடன் உற்சாக மாக ள குளித்து மகிழ்ந்தனர்.

    • வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.
    • அலைமோதும். கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

    ஈரோடு, 

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஈரோடு ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி கடைகள் வார கடைகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெற்று வருகிறது.

    இந்த ஜவுளி சந்தை உலகப் புகழ்பெற்றது. இதில் மகராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள். மற்ற இடங்களை காட்டிலும் இங்கு விலை குறைவாக இருப்பதால் இங்கு எப்போது மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்களில் கூட்டம் அலைமோதும். கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை முதல் வழக்கம் போல் ஜவுளி வார சந்தை கூடியது. சென்ட்ரல் தியேட்டர் அருகே உள்ள வளாகத்திலும் வாரச்சந்தை கூடியது. இதே போல் அசோகபுரம் பகுதிகளிலும் ஜவுளி சந்தை கூடியது.

    ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஜவுளி சந்தையில் குவிந்தனர். கேரளாவில் இருந்து குறைந்த அளவிலும் , தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் வியாபாரிகள் வந்திருந்தனர்.

    தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு வாரம் இருப்பதால் பள்ளி சீருடைகள் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதே போல் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காட்டன் சம்பந்தமான துணிகள் விற்பனை மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    குறிப்பாக ஆந்திரா , கர்நாடகா மாநில வியாபாரிகள் காட்டன் துணிகளை மொத்தமாக வாங்கி சென்ற னர். இதனால் இன்று மொத்த வியாபாரம் 40 சதவீதம் நடைபெற்றது. இதேப்போல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்திருந்தனர்.

    இதனால் இன்று சில்லரை விற்பனையும் 45 சதவீதம் நடைபெற்றது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது.

    குறிப்பாக காட்டன் துணிகள் வேஷ்டிகள் விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் பள்ளி குழந்தைகளின் லன்ச் டவல் விற்பனையும் அதிகமாக இருந்ததாக தெரிவித்தனர்.

    இன்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை

    கன்னியாகுமாரி, மார்ச்.14-

    குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.

    இக்கோவிலில் மாசிக்கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். இந்த வருடத்தின் மாசிக் கொடை விழா கடந்த 5-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடந்து வருகிறது.

    நேற்று 9-ம் நாள் விழாவை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷ பூஜை, காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, பகல் 11 மணிக்கு உண்ணாமலைக்கடை பட்டாரியர் சமுதாயம் பத்திர காளியம்மன் கோவிலிலிருந்து யானை மீது சந்தன பவனி வருதல், நண்பகல் 12 மணிக்கு பைங்குளம் ஸ்ரீகண்டன் சாஸ்தா கோவிலிலிருந்து சந்தன குடம் மற்றும் காவடி பவனி, மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை ஆகியவை நடந்தது. மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா, 6.15 மணிக்கு கூட்டுமங்கலம் ஊர் பக்தர்கள் சந்தனகுடம் சார்பில் பவனி புறப்பட்டு மண்டைக்காடு கோவில் வந்தடைந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7 மணிக்கு சிறப்பு வில்லிசை, 9 மணிக்கு அத்தாழ பூஜை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதலும் பெரிய சக்கர தீவட்டி வீதி உலா வருதலும் நடந்தது.

    ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் காலை 6 மணி முதல் 7.30 மணிவரை லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம், 7.30 மணி முதல் மாலை 9 மணிவரை பக்தி பஜனை, 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை சமய மாநாடு, 2 மணிமுதல் 3.30 மணிவரை பக்தி பஜனை, 3.30 மணிமுதல் மாலை 6 மணிவரை வில்லிசை, 6 மணிமுதல் இரவு 10 மணி வரை சமய மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதலும், இரவு 10 மணிமுதல் ஆன்மீக அருளிசை நிகழ்ச்சியும் நடந்தது.

    இனறு நள்ளிரவு முக்கிய வழிபாடான ஒடுக்கு பவனியும், பூஜையும் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் இந்த பூஜையின் சிறப்பு அம்சமாக பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் அடங்கிய சுமார் 20-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் சுத்தமான முறையில் விரதம் இருந்தவர்களால் தயாரிக்கப்படுகிறது. பின்னர் சன்னதி அருகே உள்ள சாஸ்தான் கோவில் பக்கம் இருந்து ஒடுக்கு பவனி வருகிறது.

    பூஜைக்கு எடுத்துக் கொள்ளப்படும் உணவு வகைகளை பானைகளில் வெள்ளை துணிகளால் மூடி ஊர்லமாக எடுத்து வரப்படும். பூஜைக்கான உணவு வகைகள் தலையில் சுமந்து கோவிலுக்கு எடுத்து வருகிறார்கள். பின்னர் கோவிலை ஒரு முறை வலம் வந்து அம்மனின் முன்பு உணவு வகைகள் வைக்கப்படும். பின்னர் நடை அடைக்கப்பட்டு உணவு வகைகள் அம்மனுக்கு படைக்கப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து கும்ப ளங்காய் மஞ்சள், நீர், சுண்ணாம்பு, பூ ஆகிய பொருட்களால் குருதி கொ டுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக புறைமேளம் அடிக்கப்படுகிறது. பின்னர் நடை திறக்கப்பட்டு ஒடுக்கு பூஜை நடக்கிறது. ஒடுக்கு பவனியின் போதும் பூஜை நடக்கும்போதும் கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் பூரணமான அமைதி சூழலில் எந்தவித ஓசையும் இன்றி காணப்படும்.

    பின்னர் கொடி இறக்கு தலும் நடக்கிறது. இவ்வாறு நடக்கும் பூஜையைக்காண கோவில் வளாகத்திலும் ஒடுக்கு பவனிவரும் வளா கத்திலும் அலை கடலென பக்தர்கள் திரண்டு நிற்பார் கள். இதற்காக மண்டைக்காட்டில் இப்போதே பக்தர்கள் குவியத்தொடங்கி உள்ளனர்.

    பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களில் 2-ம் நாளாக இன்று ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர்.

    சேலம்:

    உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.

    பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களில் 2-ம் நாளாக இன்று ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர். குறிப்பாக ஏற்காட்டில் சேலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று வந்திருந்தனர். அங்கு கடும் குளிர் நிலவிய நிலையிலும், சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாகவே இருந்தது.

    ஏற்காட்டிற்கு வந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள மான் பூங்கா, ரோஜா தோட்டம், அண்ணா பூங்கா, மீன் பண்ணை, படகு குழாம், சேர்வராயன் கோவில், பக்கோடா பாயிண்ட், ஜென்ஸ்சீட், லேடிஸ் சீட் உட்பட பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

    குருவம்பட்டி

    குருவம்பட்டி உயிரியல் பூங்காவுக்கு இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்றனர். பின்னர் அங்குள்ள குரங்குகள், கிளிகள், பாம்பு, மான்கள், மயில்கள் உட்பட அனைத்தையும் பார்வையிட்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து சிறுவர்கள் அங்குள்ள ஊஞ்சல்கள், சருக்கு விளையாட்டுகளிலும் விளையாடி மகிழ்ந்தனர்.

    மேட்டூர் அணை

    இதே போல மேட்டூர் அணை பூங்காவுக்கும் சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று காலை முதலே குவிந்தனர். அவர்கள் அங்குள்ள பகுதிகளை பார்வையிட்ட பின் வீடுகளில் இருந்து சமைத்துக் கொண்டு வந்த உணவுகளை குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    மேலும் காவேரி ஆற்றிலும் உற்சாகத்துடன் குளித்தனர். மேட்டூர் அணையின் அழகை அங்குள்ள கோபுரத்தின் மேல் நின்றும் பார்வை யிட்டனர்.

    சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்த தால், அந்த பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

    • புத்தாடைகள் மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்துள்ளனர்.
    • நாமக்கல்லில் கடைவீதிகளில் உள்ள நகைக்கடை, ஜவுளி கடை களில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

    நாமக்கல்:

    பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் நாளை மறுநாள் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி புத்தாடைகள் மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்துள்ளனர்.

    குறிப்பாக நாமக்கல்லில் கடைவீதிகளில் உள்ள நகைக்கடை, ஜவுளி கடை களில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பெரும்பாலானோர் தங்க ளது குடும்பத்தினருடன் வந்து புத்தம் புதிய டிசைன்க ளில் தங்களுக்கு தேவையான பிடித்தமான துணிகளை தேர்வு செய்தனர். இதே போல நகைக்கடைகளிலும் குடும்பத்துடன் வந்த பெண்கள் புதிய டிசைன்களில் நகைகளை தேர்வு செய்து அணிவித்து மகிழ்ந்தனர்.

    பொங்கல் பண்டிகையை யொட்டி பூஜைக்கு படைக்க தேவையான காய்கறிகளை வாங்க, இன்றே நாமக்கல்லில் காய்கறி சந்தைகளிலும் மற்றும் உழவர் சந்தைகளிலும் அதிக அளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. இதனால் காய்கறி விற்பனையும் சூடு பிடித்தது.

    மேலும் மாடுகளை அலங்கரிக்கும் பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளிலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. பல வண்ணங்களில் கயிறுகள், கொம்பு கயிறுகள், திருஷ்டி கயிறு, சங்கு, குஞ்சங்கள், கழுத்தில் அணியும் பலவகை மணிகள், சலங்கைகள், குப்பி, பட்டை சங்கிலி, ஜங்குபட்டை, வண்ணபூச்சிகள், வாய் பூட்டு, சாட்டை ஆகிய அலங்கார பொருட்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருந்தன. இதனையும் ஏராளமான விவசாயிகள் மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளை அழகு படுத்துவதற்காக வாங்கி சென்றனர்.

    நாமக்கல் மாவட்ட புறநகர் பகுதிகளான ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், குமாரபாளையம், பள்ளிபாளையம், மோக னூர் உள்பட பல பகுதி களிலும் பொங்கல் பண்டி

    கையொட்டி ஜவுளிக்கடை கள், நகை கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் பொங்கல் பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ளது. நாளை மேலும் கூட்டம் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். 

    • ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பவானிசாகர் அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    • இதையொட்டி பாது காப்பு கருதி அணையை காண பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஆடி பெருக்கு விழாவை யொட்டி சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை பூங்காவுக்கு இன்று காலை முதலே ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கனைள சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பூங்காவுக்கு சென்றனர்.

    தொடர்ந்து அவர்கள் பூங்காவில் ஊஞ்சல் விளையாடி மகிழ்ந்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் சறுக்கு விளையாடி குதுகளித்தனர்.

    ஆடி 18 அன்று மட்டும் பவானிசாகர் அணையின் மேல் பகுதியை காண பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படும். இதற்காகவே சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அணையை காண வரு வார்கள்.

    இந்த நிலையில் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை 102 அடியை எட்டும் நிலையில் உள்ளது. இதனால் அணை கடல் போல் காட்சி அளிக்கிறது.

    இதையொட்டி பாது காப்பு கருதி அணையை காண பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அணை யின் மேல் பகுதிக்கு செல்லும் நுழைவுவாயில் அடைக்கப்பட்டு தடை என அறிவிப்பு பலகை வைக்கப் பட்டுள்ளது. இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணி க்கப் பட்டு வருகிறது.

    இதே போல் ஆடிப்பெ ருக்கு விழாவையொட்டி பண்ணாரியம்மன் கோவி லில் இன்று அதிகாலை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த னர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர் களின் கூட்டமாக காண ப்பட்டது.

    சென்னிமலை முருகன் கோவிலில் இன்று காலை முருகப் பெருமானுக்கு பால், தயிர், இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையொட்டி பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.

    இதே போல் திண்டல் முருகன், கோபிசெட்டி பாளையம் சாரதா மாரி யம்மன், பாரியூர் கொண்ட த்து காளியம்மன், பச்சை மலை, பவளமலை முருகன், கொளப்பலூர் அஞ்சநேயர், அளுக்குழி செல்லாண்டி யம்மன், பவானி கூடுதுறை சங்க மேஸ்வரர், செல்லா ண்டியம்மன் உள்பட அனைத்து கோவில்களில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ×