search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொங்கல் பண்டிகை விடுமுறை ஒட்டி சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குவிந்தனர்
    X

    பொங்கல் பண்டிகை விடுமுறை ஒட்டி சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குவிந்தனர்

    பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களில் 2-ம் நாளாக இன்று ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர்.

    சேலம்:

    உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.

    பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களில் 2-ம் நாளாக இன்று ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர். குறிப்பாக ஏற்காட்டில் சேலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று வந்திருந்தனர். அங்கு கடும் குளிர் நிலவிய நிலையிலும், சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாகவே இருந்தது.

    ஏற்காட்டிற்கு வந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள மான் பூங்கா, ரோஜா தோட்டம், அண்ணா பூங்கா, மீன் பண்ணை, படகு குழாம், சேர்வராயன் கோவில், பக்கோடா பாயிண்ட், ஜென்ஸ்சீட், லேடிஸ் சீட் உட்பட பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

    குருவம்பட்டி

    குருவம்பட்டி உயிரியல் பூங்காவுக்கு இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்றனர். பின்னர் அங்குள்ள குரங்குகள், கிளிகள், பாம்பு, மான்கள், மயில்கள் உட்பட அனைத்தையும் பார்வையிட்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து சிறுவர்கள் அங்குள்ள ஊஞ்சல்கள், சருக்கு விளையாட்டுகளிலும் விளையாடி மகிழ்ந்தனர்.

    மேட்டூர் அணை

    இதே போல மேட்டூர் அணை பூங்காவுக்கும் சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று காலை முதலே குவிந்தனர். அவர்கள் அங்குள்ள பகுதிகளை பார்வையிட்ட பின் வீடுகளில் இருந்து சமைத்துக் கொண்டு வந்த உணவுகளை குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    மேலும் காவேரி ஆற்றிலும் உற்சாகத்துடன் குளித்தனர். மேட்டூர் அணையின் அழகை அங்குள்ள கோபுரத்தின் மேல் நின்றும் பார்வை யிட்டனர்.

    சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்த தால், அந்த பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×