search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலை"

    • சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு

    திருச்சி:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து பா.ஜ.க., இந்து முன்னணி போன்ற அமைப்பினர் விநாயகர் சதுர்த்திக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு ள்ளனர்.

    இந்த பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில், விநாயகர் சிலை களுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணிகளில் கைவினைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் அருகே உள்ள கொண்டயம்பேட்டை மற்றும் திருவானை கோயி லில் பல தலைமுறைகளாக விநாயகர் சிலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    மூலப் பொருள்கள் விலை ஏற்றம்

    தற்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு வகையான விநாய கர் சிலைகள் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள களிமண்ணை கொண்டு வந்து செய்து வருகின்றனர். இதில் வீடுகளில் பூஜை செய்வதற்கு ஏற்ப ஒன்று முதல் இரண்டு அடி வரையிலான சிறிய சிலை கள் செய்யப்படுகி ன்றன.

    மேலும் ஊர்வலத்துக்கு தேவையாக 3 முதல் 15 அடி வரையிலான ராட்சத சிலைகளும் மோல்டிங் டைஸ் மூலம் தயாரிக்கி றார்கள்.

    தயாரிக்கும் முறை

    இந்த விநாயகர் சிலை தயாரிப்பதற்கு முக்கிய மூலப் பொருட்களாக காகி தக் கூழ் மற்றும் மரவள்ளி க்கிழங்கு மாவு பயன்படுத்த ப்படுகிறது, பாரம்பரியமாக சிலைகள் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள கொண்டயம்-பேட்டையைச் சேர்ந்த சிற்பி சாந்தி கூறும்போது,

    4 கிலோ மரவள்ளிக்கி ழங்கு மாவு 10 கிலோ காகித கூழுடன் அரைக்கும் இயந்திரத்தில் கலக்கப்படுகி றது. அது சிலை விரும்பிய நிலைத்தன்மையை அடையவும்,சரியான வலி மையை உறுதி செய்யவும் உதவுகிறது.

    சிலையின் ஒவ்வொரு பகுதியான தலை, கைகள், கால்கள் ஆகியவை தனித்த னியாக மோல்ட் டைஸைப் பயன்படுத்தி பின்னர் உடற்பகுதியில் இணைத்து வருகிறோம். தற்போது அந்த சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணியில் சிற்பிகள் ஈடுபட்டு ள்ளனர்.

    சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வெல்ஸ் மற்றும் வண்ணமயமான நீர் சார்ந்த மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களை மட்டு மே பயன்படுத்துகி றோம்.

    விநாயகர் சிலைகள் தயாரிப்பதற்கான ஆயத்தப் பணிகள் கடந்த ஜனவரி பிப்ரவரி மாதத்தில் தொட ங்கப்பட்டது. சேலம் மாவ ட்டத்தில் இருந்து மூலப்பொ ருட்களை கொள்முதல் செய்தோம்.

    மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது

    கடந்த ஆண்டை விட தற்போது மூலப்பொருட்க ளின் விலை அதிகரித்து ள்ளது. மேலும் தொழிலா ளர்க ளுக்கான கூலியும் உயர்ந்து விட்டது. இதனால் விநாயகர் சிலை உற்பத்தி செய்யும் பணிகள் சவால் நிறைந்ததாக உள்ளது என்றார். மற்றொரு கைவி னைஞர் பி.மணிகண்டன் பேசும்போது,

    கோவிட்-19 தொற்றுநோய்களின் போது எங்கள் தொழில் முடங்கி யது. திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அதற்கு காரணமாக இருந்தது.

    ஆனால் தற்போது இயல்பு நிலை திரும்பி இருந்தாலும் தேவைகள் குறைந்துள்ளது என்றார். பல கைவினைஞர்கள், வெளிச்சந்தையில் சிலைகளை அளவு மற்றும் வடிவமைப்பைப் பொறுத்து ரூ.12,000 முதல் 25,000 வரை விற்கின்றனர். திருச்சியில் தயாரிக்கப்படும் சிலைகளுக்கு தனி மவுசு உள்ளது. அதனால் திருச்சி மட்டுமல்லாமல் ராமநாதபுரம், தஞ்சாவூர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களுக்கும் இங்கிருந்து சிலைகள் அனுப்பப்படுகிறது.

    சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் பண்டிகையை கொண்டாடுவதன் அவசியத்தை வலியுறுத்தி, சிலைகள் தயாரிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

    அதனை பின்பற்றியே கொண்டையம் பேட்டை மற்றும் திருவானைக்கோவில் பகுதிகளில் கலைஞர்கள் சிலைகள் உற்பத்தி செய்து வருகின்றனர்.

    இதனை அவ்வப்போது அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும் சிற்பிகள் தெரிவித்தனர்.

    • சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி அம்பேத்கர் தெரு செல்லும் பகுதியில் பி.எஸ்.என்.எல். கேபிள் பதிப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
    • நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் அந்த பகுதியில் மண்ணை தோண்டியபோது திடீரென பாறை உடைபடுவது போன்ற சத்தம் கேட்டது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி அம்பேத்கர் தெரு செல்லும் பகுதியில் பி.எஸ்.என்.எல். கேபிள் பதிப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

    நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் அந்த பகுதியில் மண்ணை தோண்டியபோது திடீரென பாறை உடைபடுவது போன்ற சத்தம் கேட்டது.

    கருங்கல் சிலை

    இதையடுத்து அங்கு பார்த்தபோது கருங்கல் சிலை மண்ணுக்குள் தென்பட்டது. உடனடியாக இதுபற்றி வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் துறை அதிகாரிகள் சிலையை மீட்டு பார்த்தபோது அது 10 கைகளுடன் 2 அடி உயரம் கொண்ட பத்ரகாளியம்மன் கற்சிலை என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த சிலையை நங்கவள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவ லகத்திற்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

    மக்கள் வழிபாடு

    சிலை கண்டெடுக் கப்பட்டது குறித்து தகவல் அறிந்து சுற்றுவட்டார கிராம பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் சாமி சிலைக்கு புடவை மற்றும் மாலை அணிவித்து வழிபட்டு சென்றனர்.

    ஒப்படைப்பு

    இதனிடையே மீட்கப்பட்ட பத்ரகாளியம்மன் சிலை சேலம் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இதன்படி இன்று வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்த தொல்லியல் துறை அதிகாரிகளிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது.

    இப்பகுதியில் பழமையான கோவில்கள் ஏராளமாக உள்ளதால் தொல்லியல் துறையினர் இந்த பகுதிகளில் ஆய்வு நடத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மதுரையில் வீரன் அழகுமுத்து கோன் சிலை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • மாவட்ட தலைவர் நாட்டாமை ஜெயக்குமார் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மதுரை

    மதுரையில் தமிழ்நாடு யாதவா மகா சபை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் நாட்டாமை ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் வருகிற செப்டம்பர் 2-ந்தேதி திருச்சியில் நடைபெறும் யாதவா மாசபை மாநாட் டில் மதுரையிலிருந்து 10 ஆயிரம் பேருடன் பங்கேற்போம் என்றும் மதுரையில் முக்கிய சாலை சந்திப்புகளில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து கோனுக்கு தமிழ்நாடு அரசு சிலை அமைக்க வேண்டும், மேலும் தமிழ் இனத்தின் மூத்த குடியாக திகழும் யாதவ சமுதாயத்தினரை மிகவும் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் சுப்பையா, சுடலை,கருணாநிதி, ராஜேந்திர பிரசாத், வெங்க டாஜலம், செல்லையா, சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    • 3-ம் ஆண்டு நினைவு நாள்
    • விஜய்வசந்த் எம்.பி. அலுவலகத்திலும் இன்று வசந்தகுமார் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது

    நாகர்கோவில் :

    முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி குமரி மாவட்டம் அகஸ்திஸ்வ ரத்தில் உள்ள அவரது மணி மண்டபத்தில் அரசியல் கட்சியினர் திரண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.

    அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ., அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு ஆகியோர் காலையிலேயே மணி மண்டபம் வந்து அங்குள்ள வசந்தகுமார் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னர். மேலும் வசந்தகுமா ரின் நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    வசந்தகுமாரின் மனைவி தமிழ்ச்செல்வி வசந்தகுமார், மகள் தங்கமலர், மகன்கள் விஜய்வசந்த் எம்.பி., வினோத், மருமகன் ஜெகநாத், மைத்துனர் காமராஜ் ஆகியோரும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் தி.முக. வினர் திரளாக பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

    நினைவு தினத்தை முன்னிட்டு வசந்தகுமார் மணி மண்டபத்தில் இன்று பொதுமக்களுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.தொடர்ந்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.நாகர்கோவிலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்.பி. அலுவலகத்திலும் இன்று வசந்தகுமார் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது.

    அவரது படத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் கட்சியினர் கலந்து கொண்ட னர்.

    • முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பெரம்பலூரில் சிலை வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது
    • பாரதிய ஜனதா கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் நான்குமேம்பாலம் பகுதியில் முன்னாள் பிரதமர் வாய்பாய்க்கு சிலை வைக்கவேண்டும் என நகர பாஜக வலியுறுத்தியுள்ளது.

    பெரம்பலூர் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் நான்கு ரோடு கட்சி கொடிகம்பம் பகுதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் -யின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி தினத்தையொட்டி அவரது உருவ படத்திற்கு நகர தலைவர் சுரேஷ் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் பட்டியல் அணி மாநில செயலாளர் பிச்சைமுத்து, மாவட்ட பொது செயலாளர்கள் முத்தமிழ்செல்வன், ஜெயபால், ராமச்சந்திரன், பொருளாளர் சசிகுமார், மாவட்ட தொழில் துறை பிரிவு மாவட்ட தலைவர் முருகேசன், ஓபிசி அணி மாவட்ட பொது செயலாளர் உதயகுமார் ,வர்த்தக அணி மாவட்ட தலைவர் அருள், ராணுவ பிரிவு மாவட்ட தலைவர் முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    பின்னர் நடந்த நினைவஞ்சலி கூட்டத்தில் தங்க நாற்கரச்சாலை கொண்டு வந்த முன்னாள் பிரதமர் வாய்பாய்-க்கு பெரம்பலூர் நான்குரோடு மேம்பாலம் பகுதியில் உருவ சிலை அமைக்கவேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • அரியலூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு காந்தி,காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
    • நகர காங்கிரஸ் சார்பில் இனிப்புகளும் வழங்கப்பட்டது

    அரியலூர்,

    சுதந்திர தினத்தையொட்டி அரியலூர் செட்டிஏரிக்கரையிலுள்ள மகாத்மா காந்தி, காமராஜர் சிலைகளுக்கு நகர காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    முன்னதாக அக்கட்சியின் மாவட்டத் தலைவர் ஆ.சங்கர் தேசிய கொடியை ஏற்றி வைத்து, பின்னர் மகாத்மா காந்தி மற்றும் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் நகர தலைவர் மா.மு.சிவகுமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஏ.பி. எஸ்.பழனிசாமி, மாவட்ட பொதுச் செயலர் ரவிச்சந்திரன், நகரச் செயலாளர்கள் செந்தில்வேல் ,பொன் முத்துக்குமரன், வட்டாரத் தலைவர் பாலகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அரியலூர் சிமென்ட் ஆலையில், ஹெச்.எம்.எஸ் தொழிற்சங்கம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அச்சங்க தலைவர் மா.மு.சிவகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். தொழிற்சங்க பொறுப்பாளர்கள் தென்னரசு, நாகராஜன், ஆனந்தன், பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சேலம் கிச்சிப்பாளையத்தில் தேசிய புனரமைப்பு காலனி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
    • இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் முனியப்பன் கோவில் அருகே இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.

    சேலம் கிச்சிப்பாளையத்தில் தேசிய புனரமைப்பு காலனி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் முனியப்பன் கோவில் அருகே இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நள்ளிரவு 1 மணியளவில் முனியப்பன் கோவில் எதிரில் உள்ள காவல் தெய்வம் சிலை மற்றும் நாய் சிலைகள் உடைக்கப்பட்டன.மேலும் அந்த பகுதியில் நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் குடிநீர் பைப்புகள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் இரவு நேரங்களில் கத்தி, பைப், ராடுகள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சிலர் சுற்றி வருகிறார்கள்.இதனால் இந்த பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிச்சிபாளையம் போலீஸ் நிலையத்திலும் அந்த பகுதியினர் மனு கொடுத்துள்ளனர். கேமிரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகாராஷ்டிரா தேக்குகளால் கோவில் கதவுகள் செய்யப்பட்டுள்ளன. 152 தூண்களில் 4500 விக்ரகங்கள் செதுக்கப்பட்டு வருகின்றன.
    • கர்நாடக மாநிலத்தில் இருந்து கிருஷ்ண சிலா எனப்படும் அரியவகை கருங்கல்லும் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்படுகிறது. 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில், 3 தளங்களாக கோவில் அமைகிறது. கோவில் கட்டுமானத்தில் மார்பிள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

    மகாராஷ்டிரா தேக்குகளால் கோவில் கதவுகள் செய்யப்பட்டுள்ளன. 152 தூண்களில் 4500 விக்ரகங்கள் செதுக்கப்பட்டு வருகின்றன. தூண்களை செதுக்கும் பணியில் கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 40 கைவினைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு தூணிலும் 24 விக்ரகங்கள் செதுக்கப்படுகின்றன. 5 வயதான குழந்தை வடிவ ராமர் சிலை, முதல் தளத்தில் நிறுவப்படும்.

    கர்ப்பகிரகத்தில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் பணி விரைவில் நடைபெற உள்ளது. ராம நவமி நாளில் சூரியனின் கதிர்கள் நேரடியாக ராமரின் நெற்றியில் விழும் வகையில் சிலையின் உயரம் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி கருவறையில் 5 அடி உயரத்தில் நிற்கும் நிலையில் வில்-அம்பு தாங்கிய தோற்றத்தில் ராமர் சிலை அமைய உள்ளது.

    கருவறையில் வைக்கப்படும் சிலை என்பதால் எதிர்மறை எண்ணங்களை அகற்றி, ஐஸ்வர்யம் பெருக செய்து நேர்மறை அதிர்வுகளை தரக்கூடிய புனித கற்களை பயன்படுத்த சிற்பிகள் திட்டமிட்டனர். இதற்காக ஏற்கனவே ராமர் சிலை வடிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் கற்கள் தேர்வு செய்யப்பட்டன.

    நேபாளத்தின் காளி கண்டகி ஆற்றில் இருந்து சுமார் 7 அடி நீளமும், 350 டன் எடையும் கொண்ட 2 சாளக்கிராம கற்கள் அயோத்திக்கு கொண்டு செல்லப்பட்டு அதில் ராமர் சிலை வடிக்க முதலில் திட்டமிடப்பட்டது. மேலும் கர்நாடக மாநிலத்தில் இருந்து கிருஷ்ண சிலா எனப்படும் அரியவகை கருங்கல்லும் கொண்டு வரப்பட்டு உள்ளது. சாளக்கிராம கல்லை முதலில் தேர்வு செய்த சிற்பிகள் தற்போது அதை தவிர்த்து கிருஷ்ணசிலா கருங்கல்லில் சிலை வடிக்க உள்ளனர்.

    ராமர் சிலைக்கான கருங்கல் கர்நாடகாவின் நெல்லிகரு கிராமத்தில் இருந்து கடந்த மாதம் அயோத்திக்கு எடுத்து செல்லப்பட்டது. நெல்லிக்கருங்கல் என்று அழைக்கப்படும் இந்த பாறை , தனித்துவமான பண்புகளைக் கொண்டது. பல பிரபலமான சிற்பங்கள் இதில் வடிக்கப்பட்டு உள்ளன. அவை துங்கபத்ரா ஆற்றின் கரையில் உள்ள ஒரு சிறிய மலையில் இருந்து நிபுணர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

    ராமர் சிலையை மைசூரை சேர்ந்த சிற்பி அருண்யோகிராஜ் வடிக்கிறார். இதற்கான பணியை அவர் தொடங்கி உள்ளார். சிற்பி அருண் யோகிராஜ் ஏற்கனவே உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்பிரயாக் மாவட்டத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் அமர்ந்த நிலையில் ஆதிகுரு சங்கராச்சாரியாரின் 12 அடி உயர சிலை, இந்தியா கேட்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 30 அடி உயர சிலை போன்ற சிலைகளை வடித்தவர்.

    மைசூரில் உள்ள சிற்பக் குடும்பத்தைச் சேர்ந்த அருண் யோகிராஜின் தந்தை யோகிராஜ் மற்றும் அவரது தாத்தா பசவண்ண ஷில்பி ஆகியோர் புகழ்பெற்ற சிற்பிகள். அவர்கள் மைசூர் அரண்மனை மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் சிலைகளை செதுக்கினர். அருண் யோகிராஜ் தனது படைப்புகளுக்காக 10-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற விருதுகளை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு இவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு 2 அடி நீள சுபாஷ் சந்திரபோஸ் சிலையையும் பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பழமையான பெருமாள் சாமி கருங்கல் சிலை இருப்பது தெரியவந்தது.
    • அப்பகுதி மக்கள் பூக்கள் தூவி வழிபட்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நெடுவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட செறுடம்பனூர் கிராமத்தில் சிங்கமட வாய்க்கால் தூர்வாரும் பணி நடக்கிறது.

    பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடந்த போது சத்தம் கேட்டது.

    இதைத் தொடர்ந்து இந்த இடத்தை தேண்டிப் பார்த்தனர். அப்போது அங்கு சுமார் , 5 அடி உயரத்தில் பழமையான பெருமாள் சாமி கருங்கல் சிலை என்பது தெரியவந்தது.

    உடனே அப்பகுதி மக்கள் பூக்கள் வைத்து வழிபட்டனர்.

    தகவலறிந்த தரங்கம்பாடி தாசில்தார் சரணவணன் மற்றும் பொறையார் போலீசார் அங்கே சென்று சாமி சிலையை பாதுகாப்பாக தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இந்த பகுதியில் பழங்காலத்தில் கோவில் ஏதாவது இருந்ததா அல்லது மழை வெள்ளத்தில் சிலை அடித்து வரப்பட்டதா என்பது குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பூப்பாறையில் அரிசிக்கொம்பன் பிரண்ட்ஸ் என்ற பெயரில் தேனீர் கடையும் தொடங்கப்பட்டுள்ளது.
    • யானை பல்வேறு பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டபோது மனம் உருகி கண்கலங்கினார்.

    மேலச்சொக்கநாதபுரம்:

    கேரளமாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சாந்தம்பாறை, வட்டக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 8 வருடங்களாக தனிக்காட்டு ராஜாவாக சுற்றிவந்த அரிசிக்கொம்பன் யானை தாக்கி 10 பேர் உயிரிழந்தனர். இதனால் அந்த யானையை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என போராட்டம் நடைபெற்றது.

    இதனைதொடர்ந்து கேரளவனத்துறையினர் அரிசிக்கொம்பன் யானை கழுத்தில் சிக்னல் காலர் ஐடி பொருத்தி தேக்கடி வனப்பகுதியில் விட்டனர். அங்கிருந்து லோயர்கேம்ப் வழியாக படிப்படியாக முன்னேறிய அரிசிக்கொம்பன் கடந்த மாதம் 27-ந்தேதி தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். சுமார் ஒரு வார போராட்டத்திற்கு பின்பு கும்கி யானைகள் உதவியுடன் அரிசிக்கொம்பன் பிடிக்கப்பட்டு கன்னியாகுமரி மாவட்டவனப்பகுதியில் விடப்பட்டது.

    ஆனால் மூணாறு பகுதி மக்கள் அரிசிக்கொம்பன் யானையை மீண்டும் தங்கள் பகுதிக்கே கொண்டு வந்து விடவேண்டும் என தொடர் போராட்டம் நடத்தினர். மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்ததாக அரிசிக்கொம்பன் யானையை மீண்டும் இதேபகுதிக்கு கொண்டுவராவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என்றும் தெரிவித்தனர். அவர்களை போலீசார் மற்றும் அதிகாரிகள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். அரிசிக்கொம்பன் யானைக்கு ரசிகர் மன்றமும் தொடங்கப்பட்டது. மேலும் பூப்பாறையில் அரிசிக்கொம்பன் பிரண்ட்ஸ் என்ற பெயரில் தேனீர் கடையும் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மூணாறு அருகே கஞ்சிக்குழி ஊராட்சிக்குட்பட்ட தல்லக்காணம் பகுதியை சேர்ந்த வியாபாரி பாபு என்பவர் அரிசிக்கொம்பன் யானைக்கு 8 அடி உயரத்தில் சிலை அமைத்துள்ளார். சிறுவயது முதலே யானை மற்றும் வனவிலங்குகள் மீது ஆர்வம் கொண்ட இவர் அரிசிக்கொம்பன் யானைமீது மிகுந்த பாசம் கொண்டவராக இருந்து வந்தார். தற்போது அந்த யானை பல்வேறு பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டபோது மனம் உருகி கண்கலங்கினார். அரிசிக்கொம்பன் யானை வடிவில் ரூ.2 லட்சம் செலவில் அமைத்துள்ள சிலை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் பொதுமக்கள் அதனை பாதுகாக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

    • மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
    • காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் மார்த்தாண் டம் வடக்கு தெருவில் உள்ள எம்.பி. அலுவல கத்தில் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமை தாங்கினார். நகர, வட்டார தலைவர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு விருந்தி னர்களாக விஜய்வசந்த் எம்.பி. மற்றும் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் குமரி மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட எல்லா பஞ்சாயத்துகளிலும் 15 நாட்களில் வார்டு தலைவர்கள் நியமனம் செய்ய வேண்டும், வருகிற 19-ந் தேதி ராகுல்காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு குமரி மேற்கு மாவட்டம் சார்பாக தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் ரத்ததான முகாம் மற்றும் ரத்த சேவை மையம் தொடங்குவது. மேலும் அனைத்து பஞ்சாயத்துகளிலும் இனிப்பு வழங்கி கொண்டாடுவது.

    மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களாக மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் அம்பிளி மற்றும் செலின் மேரி ஆகியோர் கட்சி வேட்பாளர்களாக போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது,

    குமரி தந்தை மார்சல் நேசமணி பிறந்த நட்டாலம் கிராமத்தில் அவருக்கு சிலை வைப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஐ.ஜி.பி.லாரன்ஸ் ஏற்பாட்டில் விஜய்வசந்த் எம்.பி மற்றும் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் அக்கட்சி களில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ், மாநில பொதுச்செயலாளர்கள் ஆஸ்கர் பிரடி, ரமேஷ் குமார், அகில இந்திய காரிய கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் ரெத்னகுமார், மாநில மீனவர் அணி தலைவர் ஜார்ஜ் ராபின்சன், மேற்கு மாவட்ட சிறுபான்மை தலைவர் செல்வகுமார், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் அம்பிளி, செலின்மேரி, ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் தம்பி விஜயகுமார், வட்டார தலைவர்கள் ஜெபா, குமார், களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர் ஜெபசிங்குமார், உண்ணாமலை கடை பேரூராட்சி தலைவி பமலா மற்றும் மாவட்ட, வட்டார, நகர, பேரூர், காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பாரதி-செல்லம்மாள் சிலையை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
    மதுரை

    மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மாள். இவர் தென்காசி மாவட்டம், கடையத்தை சேர்ந்தவர். இங்கு பாரதியார் பல வருடங்களாக வசித்து வந்தார். 

    அப்போது அவரது கவி பாடும் திறமையை வெளி உலகத்துக்கு எடுத்துச் செல்ல மனைவி செல்லம்மாள் உந்து சக்தியாக இருந்தார்.      செல்லம்மாளுக்கு கடையத்தில் சிலை வைக்க வேண்டும் என்று சென்னை திருநின்றவூர் சேவாலயா டிரஸ்ட் முயற்சி  மேற்கொண்டு வருகிறது.

    இதற்காக  திருநின்றவூரில் இருந்து ‘செல்லம்மா பாரதி ரதயாத்திரை’ கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி புறப்பட்டது.

    ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா தலைமையில் ரதயாத்திரை, நேற்று இரவு மதுரைக்கு வந்தது. செல்லம்மா பாரதி ரதம் இன்று காலை மதுரை கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.  

    மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் இன்று மாலை பாராட்டு விழா நடக்கிறது.

    இது குறித்து சேவாலயா ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா கூறுகையில்,   “பாரதியாரின் சிலை, அவரோடு தொடர்பு உடைய எட்டையபுரம், புதுச்சேரி, சென்னை மற்றும் பல இடங்களில் உள்ளன. 

    ஆனால் பாரதியின் மனைவி செல்லம்மாளின் பிறந்த ஊரான கடையத்தில் நினைவு சின்னம் எதுவும் இல்லை என்பது வருத்தத்துக்கு உரியது. கடையத்தில் பாரதி 2 ஆண்டுகளுக்கும் மேல் தங்கி உள்ளார். பாரதியாரின் அமரத்தன்மை வாய்ந்த பல கவிதைகள், அரங்கேறியது கடையத்தில் தான்.  

    அங்கு ரூ.3 கோடி மதிப்பில் செல்லம்மா பாரதி கற்றல் மையம் அமைப்பது என்று சேவாலயா அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. அங்கு பாரதி நூலகம், அருங்காட்சியகம், ஆய்வு மையம் மற்றும் பாரதி தொடர்பான கருத்தரங்கு, கவியரங்கு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான மையம் ஏற்படுத்தப்படும். அந்த கட்டிடத்தின் நடுவில் செல்லம்மா பாரதி சிலையை நிறுவ திட்டமிட்டு உள்ளோம்.

    இந்த ரதயாத்திரை வருகிற 31-ந் தேதி கடையத்துக்கு செல்கிறது. அங்கு வருகிற ஜூன் மாதம் 27-ந் தேதி பாரதி செல்லம்மா சிலையை திறந்து வைக்க  முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அனுமதி கேட்டுள்ளோம்” என்றார். 
    ×