search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி தந்தை மார்சல் நேசமணிக்கு நட்டாலத்தில் சிலை அமைக்கப்படும்
    X

    குமரி தந்தை மார்சல் நேசமணிக்கு நட்டாலத்தில் சிலை அமைக்கப்படும்

    • மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
    • காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் மார்த்தாண் டம் வடக்கு தெருவில் உள்ள எம்.பி. அலுவல கத்தில் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமை தாங்கினார். நகர, வட்டார தலைவர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு விருந்தி னர்களாக விஜய்வசந்த் எம்.பி. மற்றும் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் குமரி மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட எல்லா பஞ்சாயத்துகளிலும் 15 நாட்களில் வார்டு தலைவர்கள் நியமனம் செய்ய வேண்டும், வருகிற 19-ந் தேதி ராகுல்காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு குமரி மேற்கு மாவட்டம் சார்பாக தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் ரத்ததான முகாம் மற்றும் ரத்த சேவை மையம் தொடங்குவது. மேலும் அனைத்து பஞ்சாயத்துகளிலும் இனிப்பு வழங்கி கொண்டாடுவது.

    மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களாக மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் அம்பிளி மற்றும் செலின் மேரி ஆகியோர் கட்சி வேட்பாளர்களாக போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது,

    குமரி தந்தை மார்சல் நேசமணி பிறந்த நட்டாலம் கிராமத்தில் அவருக்கு சிலை வைப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஐ.ஜி.பி.லாரன்ஸ் ஏற்பாட்டில் விஜய்வசந்த் எம்.பி மற்றும் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் அக்கட்சி களில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ், மாநில பொதுச்செயலாளர்கள் ஆஸ்கர் பிரடி, ரமேஷ் குமார், அகில இந்திய காரிய கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் ரெத்னகுமார், மாநில மீனவர் அணி தலைவர் ஜார்ஜ் ராபின்சன், மேற்கு மாவட்ட சிறுபான்மை தலைவர் செல்வகுமார், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் அம்பிளி, செலின்மேரி, ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் தம்பி விஜயகுமார், வட்டார தலைவர்கள் ஜெபா, குமார், களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர் ஜெபசிங்குமார், உண்ணாமலை கடை பேரூராட்சி தலைவி பமலா மற்றும் மாவட்ட, வட்டார, நகர, பேரூர், காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×