search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிசிக்கொம்பன் யானை"

    • பூப்பாறையில் அரிசிக்கொம்பன் பிரண்ட்ஸ் என்ற பெயரில் தேனீர் கடையும் தொடங்கப்பட்டுள்ளது.
    • யானை பல்வேறு பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டபோது மனம் உருகி கண்கலங்கினார்.

    மேலச்சொக்கநாதபுரம்:

    கேரளமாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சாந்தம்பாறை, வட்டக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 8 வருடங்களாக தனிக்காட்டு ராஜாவாக சுற்றிவந்த அரிசிக்கொம்பன் யானை தாக்கி 10 பேர் உயிரிழந்தனர். இதனால் அந்த யானையை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என போராட்டம் நடைபெற்றது.

    இதனைதொடர்ந்து கேரளவனத்துறையினர் அரிசிக்கொம்பன் யானை கழுத்தில் சிக்னல் காலர் ஐடி பொருத்தி தேக்கடி வனப்பகுதியில் விட்டனர். அங்கிருந்து லோயர்கேம்ப் வழியாக படிப்படியாக முன்னேறிய அரிசிக்கொம்பன் கடந்த மாதம் 27-ந்தேதி தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். சுமார் ஒரு வார போராட்டத்திற்கு பின்பு கும்கி யானைகள் உதவியுடன் அரிசிக்கொம்பன் பிடிக்கப்பட்டு கன்னியாகுமரி மாவட்டவனப்பகுதியில் விடப்பட்டது.

    ஆனால் மூணாறு பகுதி மக்கள் அரிசிக்கொம்பன் யானையை மீண்டும் தங்கள் பகுதிக்கே கொண்டு வந்து விடவேண்டும் என தொடர் போராட்டம் நடத்தினர். மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்ததாக அரிசிக்கொம்பன் யானையை மீண்டும் இதேபகுதிக்கு கொண்டுவராவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என்றும் தெரிவித்தனர். அவர்களை போலீசார் மற்றும் அதிகாரிகள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். அரிசிக்கொம்பன் யானைக்கு ரசிகர் மன்றமும் தொடங்கப்பட்டது. மேலும் பூப்பாறையில் அரிசிக்கொம்பன் பிரண்ட்ஸ் என்ற பெயரில் தேனீர் கடையும் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மூணாறு அருகே கஞ்சிக்குழி ஊராட்சிக்குட்பட்ட தல்லக்காணம் பகுதியை சேர்ந்த வியாபாரி பாபு என்பவர் அரிசிக்கொம்பன் யானைக்கு 8 அடி உயரத்தில் சிலை அமைத்துள்ளார். சிறுவயது முதலே யானை மற்றும் வனவிலங்குகள் மீது ஆர்வம் கொண்ட இவர் அரிசிக்கொம்பன் யானைமீது மிகுந்த பாசம் கொண்டவராக இருந்து வந்தார். தற்போது அந்த யானை பல்வேறு பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டபோது மனம் உருகி கண்கலங்கினார். அரிசிக்கொம்பன் யானை வடிவில் ரூ.2 லட்சம் செலவில் அமைத்துள்ள சிலை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் பொதுமக்கள் அதனை பாதுகாக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

    • நீண்ட ஆயுள்-நலம்பெற வேண்டி திருச்சூர் கோவிலில் சிறப்பு பூஜைகள்
    • ரேடியோ காலர் மூலம் கண்காணிப்பு தீவிரம்

    திருவனந்தபுரம், ஜூன்.12-

    களக்காடு முண்டந்துறை வனச்சரகத்தில் விடப்பட்டுள்ள அரிசிக்கொம்பன் யானை, நமது குடியிருப்பு பகுதிக்கு வந்துவிடுமோ என்ற அச்சம் ஒருபுறம், கேரளாவுக்கு சென்று விடும் என்ற நம்பிக்கை மறுபுறம் என கடந்த சில நாட்களாக திருநெல்வேலி, கன்னியாகுமரி மலையோர கிராம மக்கள் உள்ளனர்.

    ஆனால் அரிசிக்கொம்பன் நடமாட்டத்தை ரேடியோ காலர் சிக்னல் மூலம் கண்காணிக்கும் 2 மாவட்ட வனத்துறையினரும், யானை குடியிருப்பு பகுதிக்கு வர வாய்ப்பில்லை. தான் விடப்பட்ட மேல்கோதையாறு பகுதியில் தான் அரிசிக்கொம்பன் சுற்றி வருகிறது. அங்கிருந்து சுமார் 5 அல்லது 6 கி.மீட்டருக்குள் தான் அதன் நகர்வு உள்ளது. முத்துக்குழிவயல், குற்றியார் பகுதிகளில் தேவையான உணவு, குளிர்ந்த குடிநீர் கிடைப்பதால் அரிசிக் கொம்பன் யானை நல்ல நிலையில் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில் அரிசிக்கொம்பன் தற்போது இருக்கும் வனப்பகுதி கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயம், கேரள மாநிலம் நெய்யாறு வனவிலங்கு சரணாலயம் பகுதிகளை ஒட்டியே உள்ளது. இதனால் கேரள வனத்துறையினரும் அரிசிக்கொம்பன் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நெய்யாறு வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் இருக்கும் அரிசிக்கொம்பன், கேரள மாநிலத்துக்குள் நுழைய வாய்ப்பு இருப்பதாக கருதும் அவர்கள், ரேடியோ காலர் சிக்னலை பெறும் ஆண்டெனாவை, பெரியார் வனச்சரக அலுவலகத்தில் கேட்டனர். அதன்படி திருவனந்தபுரம் வனவிலங்கு பிரிவுக்கு விரைவில் இந்த ஆண்டெனா கொண்டு வரப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    அரிசிக் கொம்பன் யானை காட்டில் நலமாக உள்ளதாக வனத்துறையினர் கூறி வந்தாலும், யானை பிரியர்கள் அதனை நம்ப மறுக்கின்றனர்.இரவும் பகலுமாக தினமும் 40 முதல் 50 கி.மீட்டர் தூரம் நடக்கும் யானை, தற்போது 6 கி.மீட்டர் தூரம் மட்டுமே நடந்துள்ளதாக தெரிகிறது. அரிசிக்கொம்பன் காலிலும், தும்பிக்கையிலும் காயத்துடன் இருப்பதால் தான் அதிக தூரம் பயணிக்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

    இதற்கிடையில் அரி சிக்கொம்பன் நலம் பெறவும் நீண்ட ஆயுள் பெறவும் கேரள மாநிலத்தில் சிறப்பு பூஜைகளை சிலர் நடத்தி வருகின்றனர். அதன்படி திருச்சூர் மாவட்டம் அந்திகாடு அருகே வல்லூர் கிராமத்தில் உள்ள ஆலும்தாழம் மகாவராஹதி தேவி கோவிலில் முழுநாள் பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • உணவு, குளிர்ந்த குடிநீர் கிடைப்பதால் அரிசிக் கொம்பன் யானை நல்ல நிலையில் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    • அரிசிக்கொம்பன் நடமாட்டத்தை ரேடியோ காலர் சிக்னல் மூலம் கண்காணிக்கும் 2 மாவட்ட வனத்துறையினரும், யானை குடியிருப்பு பகுதிக்கு வர வாய்ப்பில்லை.

    திருவனந்தபுரம்:

    களக்காடு முண்டந்துறை வனச்சரகத்தில் விடப்பட்டுள்ள அரிசிக் கொம்பன் யானை, நமது குடியிருப்பு பகுதிக்கு வந்துவிடுமோ என்ற அச்சம் ஒருபுறம், கேரளாவுக்கு சென்றுவிடும் என்ற நம்பிக்கை மறுபுறம் என கடந்த சில நாட்களாக திருநெல்வேலி, கன்னியாகுமரி மலையோர கிராம மக்கள் உள்ளனர்.

    ஆனால் அரிசிக்கொம்பன் நடமாட்டத்தை ரேடியோ காலர் சிக்னல் மூலம் கண்காணிக்கும் 2 மாவட்ட வனத்துறையினரும், யானை குடியிருப்பு பகுதிக்கு வர வாய்ப்பில்லை. தான் விடப்பட்ட மேல்கோதையாறு பகுதியில் தான் அரிசிக்கொம்பன் சுற்றி வருகிறது. அங்கிருந்து சுமார் 5 அல்லது 6 கி.மீட்டருக்குள் தான் அதன் நகர்வு உள்ளது. முத்துக்குழிவயல், குற்றியார் பகுதிகளில் தேவையான உணவு, குளிர்ந்த குடிநீர் கிடைப்பதால் அரிசிக் கொம்பன் யானை நல்ல நிலையில் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில் அரிசிக்கொம்பன் தற்போது இருக்கும் வனப்பகுதி கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயம், கேரள மாநிலம் நெய்யாறு வனவிலங்கு சரணாலயம் பகுதிகளை ஒட்டியே உள்ளது. இதனால் கேரள வனத்துறையினரும் அரிசிக்கொம்பன் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நெய்யாறு வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் இருக்கும் அரிசிக்கொம்பன், கேரள மாநிலத்துக்குள் நுழைய வாய்ப்பு இருப்பதாக கருதும் அவர்கள், ரேடியோ காலர் சிக்னலை பெறும் ஆண்டெனாவை, பெரியார் வனச்சரக அலுவலகத்தில் கேட்டனர். அதன்படி திருவனந்தபுரம் வனவிலங்கு பிரிவுக்கு விரைவில் இந்த ஆண்டெனா கொண்டு வரப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    அரிசிக் கொம்பன் யானை காட்டில் நலமாக உள்ளதாக வனத்துறையினர் கூறி வந்தாலும், யானை பிரியர்கள் அதனை நம்ப மறுக்கின்றனர். இரவும் பகலுமாக தினமும் 40 முதல் 50 கி.மீட்டர் தூரம் நடக்கும் யானை, தற்போது 6 கி.மீட்டர் தூரம் மட்டுமே நடந்துள்ளதாக தெரிகிறது. அரிசிக்கொம்பன் காலிலும், தும்பிக்கையிலும் காயத்துடன் இருப்பதால் தான் அதிக தூரம் பயணிக்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

    இதற்கிடையில் அரிசிக்கொம்பன் நலம் பெறவும் நீண்ட ஆயுள் பெறவும் கேரள மாநிலத்தில் சிறப்பு பூஜைகளை சிலர் நடத்தி வருகின்றனர். அதன்படி திருச்சூர் மாவட்டம் அந்திகாடு அருகே வல்லூர் கிராமத்தில் உள்ள ஆலும்தாழம் மகாவராஹதி தேவி கோவிலில் முழுநாள் பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • சின்னக்கானல் முதல் முண்டந்துறை வரை 38 நாட்கள் பரபரப்பை ஏற்படுத்தியது
    • குமரி வனத்துறையினர் ½ மணி நேரத்திற்கு ஒருமுறை ஆய்வு

    நாகர்கோவில் :

    கேரளாவில் அரிக்கொம்பன்... தமிழகத்தில் அரிசிக்கொம்பன்.. இது தான் கடந்த சில நாட்களாக இரு மாநில மக்கள் அச்சத்துடன் உச்சரித்த பெயர்கள். ஆரம்பத்தில் ரேஷன் கடைகளை குறிவைத்து தாக்கி அரிசியை சாப்பிட்ட யானை முதலில் பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் நாளடைவில் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட பெரும் பேசு பொருளாக மாறியது அரிக்கொம்பன் யானை.

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியில் சுற்றித் திரிந்த இந்த யானை, மக்களுக்கு தொல்லை கொடுத்ததால் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி கேரள வனத்துறையி னரால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் தமிழக-கேரள எல்லையில் உள்ள பெரியார் புலிகள் காப்பக பகுதியில் யானை விடப்பட்டது.

    ஆனால் அரிசி ருசி கண்ட அரிக்கொம்பன் யானை அடர்ந்த வனப்பகுதி வழியாக தமிழகத்தின் வண்ணாத்திப்பாறை வழியாக தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஹைவேவிஸ் மலைப்பகு திக்கு வந்தது. கடந்த மாதம் 26-ந்தேதி நள்ளிரவில் குமுளி பகுதியில் யானை மக்கள் நிறைந்த பகுதிக்கு வர பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கம்பம் நகருக்கு ள்ளும் அரிசிக்கொம்பன் யானை வலம் வர பொது மக்கள் அச்சம் அடைந்தனர்.

    இதனை தொடர்ந்து ஒரு வார கால போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அரிசிக்கொம்பன் யானையை பிடித்தனர். பின்னர் கும்கி யானைகள் உதவியுடன், வனத்துறைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனமான பிரத்யேக லாரியில் அரிசிக்கொம்பன் ஏற்றப்பட்டது. அந்த யானையை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் விட முடிவு செய்யப்பட்டு பலத்த பாதுகாப்புடன் பயணம் தொடங்கியது.

    உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று (ஜூன் 5-ந்தேதி) மணிமுத்தாறு வன சோதனை சாவடியை கடந்து மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, நாலுமுக்கு வழியாக மேல்கோதையாறு பகுதிக்கு லாரி சென்றது. அங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் யானையை வனத்துறையினர் இறக்கி விட்டனர்.

    யானை இறக்கிவிடப்பட்ட வனப்பகுதி கன்னியாகுமரி மாவட்டம் முத்துக்குழி என கூறப்படுகிறது. இதன் காரணமாக குமரி மாவட்ட மலையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏனென்றால், குமரி வனப்பகுதியில் விடப்பட்ட அரிசிக்கொம்பன் யானை, அங்கிருந்து கீழ் இறங்கி வந்தால், பேச்சிப்பாறை உள்ளிட்ட குமரி மாவட்ட வனப்பகுதிக்குள் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் காணியின மக்கள் உள்ளிட்ட பலர் வசிக்கின்றனர்.

    எனவே அரிசிக்கொம்பன் யானை இங்கு வந்தால், இவர்களுக்கு ஆபத்து என தகவல் பரவ அவர்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் குமரி மாவட்ட வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இதுபற்றி மாவட்ட வன அலுவலர் இளையராஜா கூறுகையில், யானையின் நடமாட்டம் பற்றி கண்காணிக்க அதன் கழுத்தில் ஒரு கருவி பொருத்தப்பட்டிருக்கும். அதனை வைத்து ½ மணி நேரத்திற்கு ஒருமுறை யானை எங்குள்ளது?அது எந்த பகுதியை நோக்கி செல்கிறது? என்பதை அறியமுடியும். இருப்பினும் அதுபற்றி தெரிந்து கொள்ளும் ஆப், குமரி மாவட்ட வனத்துறையிடம் இல்லை. அதனை அரசிடம் கேட்டுள்ளோம்.

    அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டுள்ள அரிசிக்கொம்பன், வனப் பகுதியில் தான் சுற்றி வரும். அப்படியே அது இடம் பெயர்ந்தாலும் முத்துக்குழிவயல், நெய்யாற்றின்கரை வழியாக கேரளா செல்லவே வாய்ப்புள்ளது. இருப்பினும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

    அரிசிக்கொம்பன் யானை சின்னக்கானல் முதல் மேல்கோதையாறு வரை 38 நாட்கள் பல்வேறு தட்பவெப்ப நிலைகளில் பயணம் செய்துள்ளது. இதன் காரணமாக யானையின் உடல் நலத்தில் சிறிது மாற்றம் ஏற்படலாம். ஆனால் பெரிய பாதிப்பு இருக்காது என யானையை கண்காணித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ள னர். யானை முதலில் வசித்த சின்னக்கானல் மிகவும் குளிரான சூழல் நிறைந்தது. அதன்பிறகு விடப்பட்ட பெரியார் புலிகள் காப்பக பகுதியிலும் இதே சூழ்நிலைதான். ஆனால் கம்பம், தேனி பகுதியில் பகலில் வெப்பமாகவும், இரவில் குளிர்ச்சியாகவும் இருந்தது. தற்போது யானை விடப்பட்ட முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியிலும் அதே சூழல் தான் உள்ளது. இருப்பினும் இன்னும் சில நாட்களுக்கு அரிசி க்கொ ம்பன் யானையின் உடல்நலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

    அரிசிக்கொம்பன் யானை விடப்பட்ட காடுகள், நிறைந்த செங்குத்தான மலைத்தொடர்களுக்கு எதிர்புறம் உள்ளது. அங்கு அடிமரம் இல்லை. இதனால் யானையை கவனிப்பது எளிதாக இருக்கும். மழை நிழலான பகுதி என்பதால் பகலில் வறட்சியான காலநிலைக்கு ஏற்ப யானைகள் பழகுவது முக்கியம் என்றும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

    • யானைக்கு 2 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்தனர்.
    • உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதினால் அதனை 2 நாட்கள் காணிப்பதற்காக வனத்துறையினர் அங்கு முகாமிட்டு அதன் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றனர்.

    நெல்லை:

    தேனி மாவட்டம் கம்பம் வனப்பகுதியில் சண்முகநதி அணைப்பகுதியில் சின்ன ஓவலாபுரம் பகுதியில் பிடிப்பட்ட அரிசி கொம்பன் யானை சாலை மார்க்கமாக நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிக்கு நேற்று மாலை 6 மணி அளவில் கொண்டு வரப்பட்டது.

    மணிமுத்தாறு வன சோதனை சாவடியில் இருந்து மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, நாலுமுக்கு வழியாக மேல கோதையாறு அணையில் உள்ள அடர்ந்த வனப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டம் முத்துக்குழி வயல் என்ற வனப்பகுதிக்கு அரிசி கொம்பன் யானை கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு யானைக்கு 2 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்தனர். ஆனால் அதற்கு ஏற்ற சாத்திய கூறுகள் இல்லாததால் யானைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு இன்று அதிகாலை வனப்பகுதியில் விடப்பட்டது.

    மேலும் அதன் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதினால் அதனை 2 நாட்கள் காணிப்பதற்காக வனத்துறையினர் அங்கு முகாமிட்டு அதன் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றனர். ஏற்கனவே முத்துக்குழி வயல் பகுதியில் யானை வழித்தடம் இருப்பதினாலும், அந்த வழித்தடம் அதன் பூர்வீக இடமான கேரளா வனப்பகுதிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் அதன் வழியாக அரிசி கொம்பன் கேரள மாநிலத்திற்கு செல்ல வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • டிரோன் சத்தத்தால் மிரண்ட அரிசி கொம்பன் யானை அங்கிருந்து வெளியேறி சாலையில் ஓடியது.
    • கம்பம் போலீசார் ஹரீசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    கம்பம் மின் வாரிய அலுவலகம் அருகே புளியந்தோப்பில் அரிசி கொம்பன் யானை முகாமிட்டு இருந்தது. அப்போது சின்னமனூரைச் சேர்ந்த ஹரீஷ் என்பவர் டிரோன் கேமராவை பறக்க விட்டு யானையை படம் எடுக்க முயன்றார்.

    டிரோன் சத்தத்தால் மிரண்ட அரிசி கொம்பன் யானை அங்கிருந்து வெளியேறி சாலையில் ஓடியது. இதனால் அப்பகுதி பொதுமக்களும் அதிர்ச்சியடைந்து தெரித்து ஓடினர். எனவே இதுகுறித்து கம்பம் போலீசார் ஹரீசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வனப்பகுதியில் மட்டுமே சுற்றித்திரிந்த அரிசிக்கொம்பன் தற்போது முதல்முறையாக மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    • பொள்ளாச்சியில் இருந்த 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட உள்ளது.

    கம்பம்:

    கம்பம் நகருக்குள் இன்று காலை ஒய்யாரமாக வந்த அரிசிக்கொம்பன் யானையை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தனியார் திருமண மண்டபத்திற்குள் நுழைந்து அங்கு எதுவும் கிடைக்காததால் அருகில் இருந்த டாஸ்மாக் கடையையும் நோட்டமிட்டு பின்னர் தெருவில் கோவில் யானை போல ஒய்யாரமாக நடந்து வந்தது. அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியது. யானை ஊருக்குள் புகுந்த விபரம் தெரியவரவே வனத்துறையினர் விரைந்து வந்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.

    இதுவரை வனப்பகுதியில் மட்டுமே சுற்றித்திரிந்த அரிசிக்கொம்பன் தற்போது முதல்முறையாக மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    வனத்துறையினர் தொடர்ந்து அதனை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கம்பத்தில் இன்று காலையில் அரிசிக்கொம்பன் ஊருக்குள் புகுந்ததால் வேலைக்கு செல்பவர்கள் கூட வீட்டிற்குள்ளேயே முடங்கிகிடக்கும் நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் அரிசிக்கொம்பன் யானையை பிடிக்க தேனி மாவட்டம் கம்பத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    அரிசிக்கொம்பன் யானை பிடிபடும் வரை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அரிசிக்கொம்பன் யானையை விரட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சியில் இருந்த 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட உள்ளது.

    மக்கள் பாதுகாப்பு கருதி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

    • கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மேகமலை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானை மீண்டும் பெரியாறு புலிகள் சரணாலய பகுதிக்குள் வந்தது.
    • இன்று காலை கம்பம் நகருக்குள் ஒய்யாரமாக வந்த அரிசிக்கொம்பன் யானையை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    கம்பம்:

    இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கானல் மற்றும் அதனை ஒட்டிய வனப்பகுதிகளில் சுற்றிவந்த அரிசிக்கொம்பன் யானையை கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் குமுளி பகுதியில் கொண்டுவிட்டனர். ஆனால் அதன்பிறகு அரிசிக்கொம்பன் மாவடி, வட்டதொட்டி வனப்பகுதிக்கு மேல் உள்ள மேகதானமெட்டு வழியாக தமிழக வனப்பகுதிக்குள் புகுந்தது.

    கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மேகமலை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானை மீண்டும் பெரியாறு புலிகள் சரணாலய பகுதிக்குள் வந்தது. அதன்பின் குமுளி ரோசாப்பூ கண்டம் பகுதியில் புகுந்தது. ஜி.பி.எஸ். சிக்னல் மூலம் அரிசிக்கொம்பன் யானை நடமாட்டத்தை கண்டறிந்த வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டும், வேட்டுகளை வெடிக்கச்செய்தும் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அதன்பின்பு தேக்கங்காடு வழியாக கம்பம் பகுதிக்குள் புகுந்தது.

    இன்று காலை கம்பம் நகருக்குள் ஒய்யாரமாக வந்த அரிசிக்கொம்பன் யானையை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தனியார் திருமண மண்டபத்திற்குள் நுழைந்து அங்கு எதுவும் கிடைக்காததால் அருகில் இருந்த டாஸ்மாக் கடையையும் நோட்டமிட்டு பின்னர் தெருவில் கோவில் யானை போல ஒய்யாரமாக நடந்து வந்தது. அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியது. யானை ஊருக்குள் புகுந்த விபரம் தெரியவரவே வனத்துறையினர் விரைந்து வந்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.

    இதனால் கம்பம் நகரில் பொதுமக்கள் வீடுகளை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருந்தனர். தொடர்ந்து யானை ஊருக்குள் நடமாடி ஆக்ரோசத்துடன் சென்றது. அப்போது யானையை படம்பிடிக்க முயன்ற ஒருவரை தூக்கிவீசியது. உடனே வனத்துறையினர் அவரை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுவரை வனப்பகுதியில் மட்டுமே சுற்றித்திரிந்த அரிசிக்கொம்பன் தற்போது முதல்முறையாக மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் தொடர்ந்து அதனை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கம்பத்தில் இன்று காலையில் அரிசிக்கொம்பன் ஊருக்குள் புகுந்ததால் வேலைக்கு செல்பவர்கள் கூட வீட்டிற்குள்ளேயே முடங்கிகிடக்கும் நிலை ஏற்பட்டது.

    ×