என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாஜ்பாய்க்கு சிலை வைக்க வலியுறுத்தல்
- முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பெரம்பலூரில் சிலை வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது
- பாரதிய ஜனதா கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
பெரம்பலூர்
பெரம்பலூர் நான்குமேம்பாலம் பகுதியில் முன்னாள் பிரதமர் வாய்பாய்க்கு சிலை வைக்கவேண்டும் என நகர பாஜக வலியுறுத்தியுள்ளது.
பெரம்பலூர் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் நான்கு ரோடு கட்சி கொடிகம்பம் பகுதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் -யின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி தினத்தையொட்டி அவரது உருவ படத்திற்கு நகர தலைவர் சுரேஷ் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பட்டியல் அணி மாநில செயலாளர் பிச்சைமுத்து, மாவட்ட பொது செயலாளர்கள் முத்தமிழ்செல்வன், ஜெயபால், ராமச்சந்திரன், பொருளாளர் சசிகுமார், மாவட்ட தொழில் துறை பிரிவு மாவட்ட தலைவர் முருகேசன், ஓபிசி அணி மாவட்ட பொது செயலாளர் உதயகுமார் ,வர்த்தக அணி மாவட்ட தலைவர் அருள், ராணுவ பிரிவு மாவட்ட தலைவர் முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் நடந்த நினைவஞ்சலி கூட்டத்தில் தங்க நாற்கரச்சாலை கொண்டு வந்த முன்னாள் பிரதமர் வாய்பாய்-க்கு பெரம்பலூர் நான்குரோடு மேம்பாலம் பகுதியில் உருவ சிலை அமைக்கவேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்