search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீரன் அழகுமுத்து கோன்"

    • மதுரையில் வீரன் அழகுமுத்து கோன் சிலை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • மாவட்ட தலைவர் நாட்டாமை ஜெயக்குமார் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மதுரை

    மதுரையில் தமிழ்நாடு யாதவா மகா சபை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் நாட்டாமை ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் வருகிற செப்டம்பர் 2-ந்தேதி திருச்சியில் நடைபெறும் யாதவா மாசபை மாநாட் டில் மதுரையிலிருந்து 10 ஆயிரம் பேருடன் பங்கேற்போம் என்றும் மதுரையில் முக்கிய சாலை சந்திப்புகளில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து கோனுக்கு தமிழ்நாடு அரசு சிலை அமைக்க வேண்டும், மேலும் தமிழ் இனத்தின் மூத்த குடியாக திகழும் யாதவ சமுதாயத்தினரை மிகவும் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் சுப்பையா, சுடலை,கருணாநிதி, ராஜேந்திர பிரசாத், வெங்க டாஜலம், செல்லையா, சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    ×