search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காந்தி,காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவிப்பு
    X

    காந்தி,காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவிப்பு

    • அரியலூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு காந்தி,காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
    • நகர காங்கிரஸ் சார்பில் இனிப்புகளும் வழங்கப்பட்டது

    அரியலூர்,

    சுதந்திர தினத்தையொட்டி அரியலூர் செட்டிஏரிக்கரையிலுள்ள மகாத்மா காந்தி, காமராஜர் சிலைகளுக்கு நகர காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    முன்னதாக அக்கட்சியின் மாவட்டத் தலைவர் ஆ.சங்கர் தேசிய கொடியை ஏற்றி வைத்து, பின்னர் மகாத்மா காந்தி மற்றும் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் நகர தலைவர் மா.மு.சிவகுமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஏ.பி. எஸ்.பழனிசாமி, மாவட்ட பொதுச் செயலர் ரவிச்சந்திரன், நகரச் செயலாளர்கள் செந்தில்வேல் ,பொன் முத்துக்குமரன், வட்டாரத் தலைவர் பாலகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அரியலூர் சிமென்ட் ஆலையில், ஹெச்.எம்.எஸ் தொழிற்சங்கம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அச்சங்க தலைவர் மா.மு.சிவகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். தொழிற்சங்க பொறுப்பாளர்கள் தென்னரசு, நாகராஜன், ஆனந்தன், பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×