search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடைப்பு"

    • குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை உடன் வைத்துக்கொண்டு குழாய்கள் உடைக்கப்படாமல் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.
    • உடைப்பை சரி செய்யாமல் அதற்கு மேலே ரோடு போடும் பணி இன்று காலை நடைபெற்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் தாராபுரம் சாலையிலிருந்து காங்கேயம் சாலை செல்லக்கூடிய மாநகராட்சிக்கு உட்பட்ட 44 வது வார்டு பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சுமார் 600 மீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

    சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளும் முன்பாகவே சாலை அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டும்போது மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை உடன் வைத்துக்கொண்டு குழாய்கள் உடைக்கப்படாமல் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    ஆனால் இதனை பொருட்படுத்தாமல் நேற்று இரவு பணிகள் மேற்கொண்ட போது சுமார் 2000 வீடுகளுக்கு செல்லக்கூடிய 8 மெயின் குடிநீர் குழாய்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்களும் உடைக்கப்பட்டது. அந்த உடைப்பை சரி செய்யாமல் அதற்கு மேலே ரோடு போடும் பணி இன்று காலை நடைபெற்றது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் 44 வது வார்டு கவுன்சிலர் கண்ணப்பன் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் கிடைத்ததும் அங்கு வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக மாநகராட்சி கவுன்சிலர் கண்ணப்பன் கூறும்போது, நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாக தொடர்ந்து அப்பகுதியில் குடிநீர் குழாய்கள் உடைக்கப்படுவதாகவும் இதனால் கடந்த ஒரு மாத காலமாக முறையாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத சூழல் நிலவி வருகிறது. நெடுஞ்சாலைத்துறை தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டு வருவதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தியும் கூட நெடுஞ்சாலை துறையினர் கண்டும் காணாமல் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதே நிலை தொடருமானால் நெடுஞ்சாலை துறை மற்றும் ஒப்பந்ததாரரை கண்டித்து மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார்.

    • காவிரியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு காடை யாம்பட்டி கூட்டுக்குடி நீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையம் மூலம் நாளொன்றுக்கு 28 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
    • குடிநீர் குழாயானது மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் இதே பகுதியில் பல முறை குழாயில் உடைப்பு ஏற்பட்டு தற்காலிகமாக சரி செய்யப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் அடுத்த தொட்டில்பட்டி காவிரியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு காடை யாம்பட்டி கூட்டுக்குடி நீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையம் மூலம் நாளொன்றுக்கு 28 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டம் மூலம் மேச்சேரி, தொப்பூர், காடையாம்பட்டி, ஓமலூர், தாரமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை அனல்மின் நிலைய சாலையில் உள்ள காடையாம்பட்டி செல்லும் கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. இதனால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வீணாகியது.

    இதனை அறிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நீரேற்று நிலையத்தில் தண்ணீர் பம்ப் செய்வதை உடனடியாக நிறுத்தினர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக தண்ணீர் வெளியேறியதால் சாலை முழுவதும் வெள்ளமாக காட்சியளித்தது.

    அவ்வழியே சாலையில் சென்ற வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றது. குடிநீர் குழாயில் உடைப்பு காரணமாக பல ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணானது. இதனால் காடையாம்பட்டி பகுதிக்கு குடிநீர் வினியாகம் பாதிக்கப்பட்டது .

    உடைப்பு ஏற்பட்ட பகுதியை மாலை 4 மணி அளவில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் சரி செய்தனர். அதன் பின்னர் நீர் திறந்து விடப்பட்டது.

    குடிநீர் குழாயானது மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் இதே பகுதியில் பல முறை குழாயில் உடைப்பு ஏற்பட்டு தற்காலிகமாக சரி செய்யப்பட்டு வருகிறது. பழுதான நிலையில் உள்ள ராட்சத குழாய்களை மாற்றினால் மட்டுமே பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க முடியும் என அப்பகுதி மக்கள் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கோவில் முன்பு படுத்திருந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை
    • நாகர்கோவில் இருளப்பபுரத்தில் பசுபதீஸ்வரர்-பிரசன்னபார்வதி கோவில் உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் இருளப்பபுரத்தில் பசுபதீஸ்வரர்-பிரசன்னபார்வதி கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்வது வழக்கம். நேற்று சரசுவதி பூஜை என்பதால் பக்தர்கள் அதிக அளவில் கோவிலுக்கு வந்தனர்.

    வழிபாடுகள் முடிந்ததும் இரவில் கோவிலை அர்ச்சகர் பூட்டிச் சென்றார். பின்னர் அவர் இன்று காலை கோவிலுக்கு வழக்கம்போல் வந்தார். அப்போது கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் உண்டியலின் அருகே காணிக்கை சில்லறைகள் சிதறி கிடந்தன. இந்த தகவல் அந்த பகுதியில் வேகமாக பரவ பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனை தொடர்ந்து கோவில் நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அப்போது, உடைக்கப்பட்ட உண்டியலின் அருகே வாலிபர் ஒருவர் படுத்திருந்தது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது ஏதேதோ கூறி உள்ளார்.

    இதனைத்தொடர்ந்து அந்த வாலிபரை, கோட்டார் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர், புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது. அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசி வருவதால் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருச்சி மலைக்கோட்டை அருகே மாநகராட்சியின் குடிநீர் தொட்டி உடைக்கப்பட்டது
    • குடிநீர் தொட்டியை உடைத்ததாக தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு

    திருச்சி,

    திருச்சி வரகனேரி நடுத்தெருவை சேர்ந்தவர் சரவணன். மாநகர தி.மு.க.வர்த்தக அணி அமைப்பாளர். இவரது வீட்டு அருகே மாநகராட்சி குடிநீர் தொட்டி உள்ளது.இந்த குடிநீர் தொட்டி தங்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி சரவணனும், மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரும் சேர்ந்து உடைத்ததாக கூறப்படுகிறது . இது குறித்து திருச்சி மாநகராட்சி உதவி ஆணையர் ரவி காந்திமார்க்கெட் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வரகனேரியைச் சேர்ந்த திமுக பிரமுகர் சரவணன், மலைக்கோட்டையைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.திருச்சி மாநகராட்சி குடிநீர் தொட்டியை திமுக பிரமுகர் உடைத்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சமயபுரம் அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது
    • உடைப்பின் காரணமாக ஏராளமான குடிநீர் வீணாகியது

    மண்ணச்சநல்லூர்,

    திருச்சி நெம்பர் 1 டோல்கேட்டில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஆழ்துளை கிணறு அமைத்து பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக பிச்சாண்டார்கோயில், பளூர், பணமங்கலம், கூத்தூர், ச.கண்ணனூர் பேரூராட்சி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களுக்கு தினமும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமயபுரம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பளூர் பகுதியில் கொள்ளிடம் ச. கண்ணனூர் பேரூராட்சி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.இந்த குழாயில் இருந்து பல்லாயிரம் கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வெளியே செல்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து வீணாகும் குடிநீரை தடுத்து நிறுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.

    • சேலம் கிச்சிப்பாளையத்தில் தேசிய புனரமைப்பு காலனி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
    • இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் முனியப்பன் கோவில் அருகே இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.

    சேலம் கிச்சிப்பாளையத்தில் தேசிய புனரமைப்பு காலனி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் முனியப்பன் கோவில் அருகே இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நள்ளிரவு 1 மணியளவில் முனியப்பன் கோவில் எதிரில் உள்ள காவல் தெய்வம் சிலை மற்றும் நாய் சிலைகள் உடைக்கப்பட்டன.மேலும் அந்த பகுதியில் நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் குடிநீர் பைப்புகள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் இரவு நேரங்களில் கத்தி, பைப், ராடுகள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சிலர் சுற்றி வருகிறார்கள்.இதனால் இந்த பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிச்சிபாளையம் போலீஸ் நிலையத்திலும் அந்த பகுதியினர் மனு கொடுத்துள்ளனர். கேமிரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பல இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடி தண்ணீர் ஆறாக ஓடி வருவது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
    • அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடிநீர் சீராக விநியோகிக்கப்படாத நிலையில் பல இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடி தண்ணீர் ஆறாக ஓடி வருவது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 2 மற்றும் 3 வது குடிநீர் திட்டங்களின் கீழ் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. தற்போது அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, அம்ரூத் திட்டத்தில் 4-வது குடிநீர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு சோதனை அடிப்படையில் பெரும்பாலான பகுதிகளில் சப்ளை தொடங்கி நடந்து வருகிறது.

    இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட, 2வது குடிநீர் திட்டத்தில் பல இடங்களில் பிரதான குழாய்கள் சேதமடைந்து குடிநீர் வீணாவது தொடர் கதையாகி வருகிறது. இது போன்ற இடங்களில் சீரமைப்பு பணிகள் செய்தும், அதற்கு வழியில்லாத இடங்களில் குழாய்கள் மாற்றியும் குடிநீர் வினியோகம் தொடர்ந்து நடக்கிறது.

    அவ்வகையில் பெத்திச்செட்டிபுரம் பகுதியில் 2வது குடிநீர் திட்டத்தில் பதிக்கப்பட்ட குழாய் சேதமடைந்துள்ளது. இதில் இருந்து அதிக அளவு குடிநீர் வெளியேறி கழிவுநீர் கால்வாயில் சென்று கலந்து வீணாகிறது. சமீபத்தில் இந்த குழாய் சேதமான இடத்தில் அதன் மீது இரும்பு தகடு பொருத்தி குடிநீர் கசிவது தடுக்கப்பட்டது.இருப்பினும் சேதமான குழாயில் இருந்து குடிநீர் தொடர்ந்து வெளியேறுகிறது. எனவே சேதமான குழாயில் நிரந்தரமாக முறையாக சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை திருமூர்த்தி நகர் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீண்ட நாட்களாக தண்ணீர் உடுமலை- திருமூர்த்திமலை பிரதான சாலையில் வெளியேறி வருகிறது.இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.அது மட்டுமின்றி உடைப்பின் வழியாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து சென்று பொதுமக்களுக்கு தொற்று நோய்களை ஏற்படுத்தி வருகிறது.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    இந்த ஆண்டு நிலவிய கடும் வறட்சியின் காரணமாக திருமூர்த்தி அணையில் குறைவான நீர் இருப்பே உள்ளது.தென்மேற்கு பருவமழையும் கைகொடுத்து உதவாததால் அணையின் நீர் இருப்பும் உயரவில்லை. காண்டூர் கால்வாயில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் தண்ணீர் திறப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    இந்த சூழலில் அணையில் உள்ள நீர் இருப்பை வீணாகாமல் பாதுகாத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும். ஆனால் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைப்பதில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் குடிநீர் யாருக்கும் உபயோகமில்லாமல் சாலையில் வீணாகி வருகிறது.

    பொதுமக்களும் தண்ணீர் பற்றாக்குறையால் போராட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே திருமூர்த்தி நகர் அருகே குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைத்து சீரான முறையில் தண்ணீர் வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    மேலும் சாலையில் ஆறாக ஓடும் குடிநீரால் அப்பகுதி சாலைகள் சேதமடைகின்றன.இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

    இதே போன்று தளி பேரூராட்சியின் நுழைவுப்பகுதியில் பஸ் நிறுத்தத்தின் அருகே சாலை சேதமடைந்து மழை நீர் தேங்கி உள்ளது.இதனால் ஆனைமலை சாலை வழியாக உடுமலைக்கு வருகை தருகின்ற வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.இது குறித்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பஸ் நிறுத்தத்தின் அருகே தண்ணீர் தேங்காதவாறு சாலையை சீரமைப்பதற்கு முன்வர வேண்டும். இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள இயலும் என்றனர்.

    இதேப்போல் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் உடைப்புகளை சரி செய்து சீராக குடிநீர்விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    • சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் அரிதாஸ் இவர் தினமும் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று ஓசியில் மது குடித்து வந்தார்.
    • ஆத்திரமடைந்த டாஸ்மாக் ஊழியர் ராஜூ மது பாட்டிலை எடுத்து ஹரிதாஸ் மண்டையில் அடித்தார். இதில் அரிதாஸ் மண்டையில் காயம் ஏற்பட்டு ரத்த கொட்டியது.

    சேலம்:

    சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் அரிதாஸ் (40). இவர் தினமும் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று ஓசியில் மது குடித்து வந்தார்.

    தகராறு

    இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ஓசியில் மது கேட்டுள்ளார். அவர்கள் கொடுக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து அரிதாஸ் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த டாஸ்மாக் ஊழியர் ராஜூ மது பாட்டிலை எடுத்து ஹரிதாஸ் மண்டையில் அடித்தார். இதில் அரிதாஸ் மண்டையில் காயம் ஏற்பட்டு ரத்த கொட்டியது.

    வழக்கு

    இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலூர் டவுன் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
    • கந்தசாமியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், ஊசூர்-அணைக்கட்டு மெயின் ரோடு பஸ் நிறுத்தத்தில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது.

    இன்று காலை ஊசூர் காலனியை சேர்ந்த கந்தசாமி (வயது 53) கூலி தொழிலாளி. என்பவர் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார்.

    ஏ.டி.எம். எந்திரத்தில் ஏ.டி.எம். கார்டை சொருகி பணம் எடுக்க பலமுறை முயற்சி செய்து உள்ளார். ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த கந்தசாமி வீட்டிற்கு சென்று கோடாரியை எடுத்து வந்தார்.

    ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தார். ஏ.டி.எம். எந்திரம் உடைக்கும் சத்தம் கேட்டு அக்கப் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கந்தசாமியை தடுத்தனர்.

    இருப்பினும் ஆத்திரம் அடங்காத கந்தசாமி ஏ.டி.எம். எந்திரம் முழுவதையும் உடைத்தார். எந்திரம் முழுவதும் துண்டு, துண்டாக நொறுங்கியது.

    அங்கிருந்தவர்கள் கந்தசாமியை பிடித்து வைத்துக்கொண்டு இது குறித்து உடனடியாக அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வேலூர் டவுன் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    உடைக்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தை பார்வையிட்டனர். பின்னர் அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கந்தசாமியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து எந்த பணமும் திருடு போகவில்லை ஏடிஎம் எந்திரத்தில் பணம் வராததால் கந்தசாமி ஏடிஎம் எந்திரத்தை உடைத்துள்ளார்.

    கந்தசாமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு உண்மை நிலவரம் தெரியவரும் என்றனர். 

    • நள்ளிரவு அங்கு வந்த மர்மநபர்கள் காரின் முன் பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிச் சென்றனர்.
    • ரவிக்குமார் இது குறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஏரிப்பட்டி ஜெகஜீவன்ராம் வீதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 40). இவர் கோழிக்கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் ரவிக்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார்.

    சம்பவத்தன்று இரவு இவர் அவரது வீட்டு முன்பு காரை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். நள்ளிரவு அங்கு வந்த மர்மநபர்கள் யாரோ காரின் முன் பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிச் சென்றனர்.

    மறுநாள் காலையில் ரவிக்குமார் வந்து பார்த்த போது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இது குறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இந்த கார் கண்ணாடி உடைப்பு சம்பவம் குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    மேலும் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராவில் மர்மநபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • 3 வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகைகள், அங்கு வேலை செய்பவர்கள் தங்குவதற்காக போடப்பட்ட குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
    • கரும்பு வெட்டும் எந்திரம் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த மாதம் 3 வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகைகள், அங்கு வேலை செய்பவர்கள் தங்குவதற்காக போடப்பட்ட குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

    இந்த சம்பவத்தில் கொட்டகையில் இருந்த 3 டிராக்டர்கள் கரும்பு வெட்டும் எந்திரம் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின. இதேபோல் வடகரையாத்தூர் முன்னாள் ஊராட்சி தலைவர் பூங்கொடி வைத்தியநாதன், கரைபாளையம் பகுதியில் பூங்கோதை என்பவரது வீடுகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். கரைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பட்டதாரி பெண் நித்யா என்பவர் கொலை சம்பந்தமாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அந்த பகுதிகளில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட நித்யாவின் உறவினரான விவசாயி குழந்தைவேல் (வயது 52) என்பவருக்கு சொந்தமான தோட்டம், கரைப்பாளையம் பிரிவு சாலை அருகே உள்ளது. நேற்று இரவு இந்த தோட்டத்திற்குள் புகுந்த மர்மநபர்கள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பவர் டில்லர் டிராக்டருக்கு தீ வைத்தனர். மேலும் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக அமைக்கப்பட்டு இருந்த 25-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் குழாயையும் உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

    இதனிடையே அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தோட்டத்துக்குள் தீ எரிவதை பார்த்து, அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் மற்றும் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் வந்து, அங்கு எரிந்து நாசமான பவர் டில்லர் டிராக்டரையும், உடைக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து இதுபோன்று தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இளம்பெண் நித்யா கொலை சம்பந்தமாக அவரது குடும்பத்திற்கு ஆதரவாக செயல்பட்ட உறவினர் குழந்தைவேல் என்பவருக்கு சொந்தமான பவர் டில்லர் டிராக்டருக்கு தீ வைத்தும் தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த குழாய்களை உடைக்கப்பட்டு இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் கொலை செய்து இறந்து போன நித்தியாவின் உறவினர்கள் அவர்கள் சார்ந்த ஜாதி சங்கத் தலைவர்கள் உட்பட பலரையும் அழைத்து சமாதான கூட்டம் நடத்தி உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பட்டமங்கலம்- புதுச்சேரி வாய்கால் அருகே ராட்சத பைப்லைனில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.
    • உடைப்பு காரணமாக பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் ராட்சத குழாய் மூலம் வருகிற குடிநீர், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் உள்ள மெயின் குடிநீர் தொட்டியில் சேகரிக்கப்பட்டு ராட்சத குழாய் மூலமாக கீழ்வேளூர், திருக்குவளை வழியாக வேதாரண்யம் வரை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    குறிப்பாக கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளில் குடி தண்ணீர் இதன் மூலமாக தான் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த பட்டமங்கலம் புதுச்சேரி வாய்கால் அருகே ராட்சத பைப் லைனில் திடீர் என உடைப்பு ஏற்பட்டது குடிநீர் வீணாகி வருகிறது.

    அதிக அழுத்தத்துடன் குழாயின் பக்கவாட்டில் இரண்டு இடங்களில் இருந்து உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீரானது அருகில் உள்ள வாய்காலில் கலந்து பயனற்று போவதாகவும் கிராம குற்றம் சாட்டியுள்ளனர்.

    குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் உள்ளது.

    ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை உடனடியாக தடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×