search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது
    X

    தஞ்சையில், அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

    • கற்களை தூக்கி பஸ்சில் வீசியதில் முன்பக்க கண்ணாடி சுக்கு நூறாக நொறுங்கியது.
    • குடிபோதையில் கற்களை வீசி பஸ்ஸை சேதப்படுத்தியது தெரிய வந்தது.‌

    தஞ்சாவூர்:

    தஞ்சை கரந்தையில் போக்குவரத்து பணிமனை உள்ளது.

    இந்த பணிமனையில் இருந்து தினமும் ஏராளமான அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பணிமனையில் இருந்து கும்பகோ ணத்துக்கு செல்லும் அரசு பஸ்சை தஞ்சை அடுத்த மாத்தூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த டிரைவர் ரத்தினசாமி (வயது 53 ) தஞ்சை புதிய பஸ் நிலையத்துக்கு சென்று பயணிகளை ஏற்றுவதற்காக ஓட்டினார்.

    பணிமனையில் இருந்து பஸ் வெளியே புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.

    அப்போது கீழவாசல் பூமால் ராவுத்தன்கோவில் தெருவை சேர்ந்த கார்த்தி (25) திடீரென கற்களை தூக்கி பஸ்சில் வீசினார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்கு நூறாக நொறுங்கியது.

    இது குறித்து ரத்தினசாமி தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    முதல் கட்ட விசார ணையில் கார்த்தி, குடிபோதையில் கற்களை வீசி பஸ்ஸை சேதப்படுத்தியது தெரிய வந்தது.‌

    இருந்தாலும் பஸ்சை சேதப்படுத்தியதற்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா ? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×