search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சியில்   ரியல் எஸ்டேட் அலுவலக கண்ணாடிஉடைப்பு:    :வாலிபர் கைது
    X

    கைது செய்யப்பட்ட அய்யப்பன்.

    கள்ளக்குறிச்சியில் ரியல் எஸ்டேட் அலுவலக கண்ணாடிஉடைப்பு: :வாலிபர் கைது

    • மணி என்ற சுப்ரமணியன் (வயது 42) இவர் கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
    • சம்பவத்தன்று ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர்கள் அலுவலக கண்ணாடி மற்றும் மின் சாதனங்களை உடைத்து சேதப்படுத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே பொரசக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி என்ற சுப்ரமணியன் (வயது 42) இவர் கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர்கள் அலுவலக கண்ணாடி மற்றும் மின் சாதனங்களை உடைத்து சேதப்படுத்தினர். இதனை கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்த சுப்ரமணியன் சம்பந்தப்பட்ட நபர்களான கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அய்யப்பன் (38), ராமச்சந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (40) ஆகியோரை நேரில் சென்று ஏன் எனது அலுவலக கண்ணாடியை உடைத்தீர்கள் என கேட்டுள்ளார். அப்பொழுது அய்யப்பன் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் அவரை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சுப்ரமணியன் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் வழக்கு பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கிருஷ்ணகுமாரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×