search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sharad pawar"

    • தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சில எம்.எல்.ஏ.க்களுடன் அஜித் பவார் தனியாக செயல்பட்டு வருகிறார்
    • அவர் துணை முதல்வராக பதவி ஏற்ற நிலையில், சில எம்.எல்.ஏ.-க்கள் மந்திரிகளாக பதவி ஏற்றனர்

    இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் சரத் பவார். அரசியல் களத்தில் முக்கியமான நேரத்தில் அதிரடி முடிவு எடுக்கக் கூடியவர். எந்த நேரத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர்.

    அப்படி இருந்தபோதிலும், மகாராஷ்டிராவில் அவரது அண்ணன் மகன் அஜித் பவார், கட்சியில் குழப்பதை ஏற்படுத்தி ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா அரசில் இணைந்து துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார். அவருடன் மேலும் சில எம்.எல்.ஏ.-க்கள் மந்திரியாக பதவி ஏற்றனர்.

    நாங்கள்தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று சரத் பவார் தெரிவித்து வருகிறார். அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக நாங்கள்தான் தேசியவாத காங்கிரஸ் என்று அஜித் பவார் தெரிவித்து வருகிறார்.

    இதற்கிடையே இருதரப்பிலும் இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றிற்கு உரிமை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது வருகிற 6-ந்தேதி (அக்டோபர்) இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அன்றைய தினம் இருதரப்பிலும் இருந்து பிரதிநிதிகளை அனுப்பி வைக்க தேர்தல் ஆணையம் சரத் பவார் பிரிவுக்கும், அஜித் பவார் பிரிவுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இரு தரப்பிலும் இருந்து வழங்கப்படும் முழுமையான பிரமாண பத்திரத்தின் அடிப்படையில், இந்திய தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும்.

    இதுகுறித்து அஜித் பவார் கூறுகையில் "எல்லோருக்கும் அவர்களுடைய தரப்பு வாதங்களை முன்னெடுத்து வைக்க உரிமை உள்ளது. அதன் அடிப்படையில் நாங்கள் எங்களுடைய தரப்பு வாதத்தை இந்திய தேர்தல் ஆணையம் முன் எடுத்து வைப்போம்'' என அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

    • அஜித் பவார் தலைமையிலான குழு தனியாக இயங்கி வருகிறது
    • தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு இல்லை என சரத் பவார் உறுதியாக கூறுகிறார்

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவார் உருவாக்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அவரது அண்ணன் மகன் அஜித் பவார், சில ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் உடன் தனியாக செயல்பட்டு வருகிறார். நாங்கள்தான் தேசியவாத காங்கிரஸ் என அவர்கள் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    அரசியலில் எப்படி காய் நகர்த்த வேண்டும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கும் சரத் பவாரே, தனது கட்சியை தக்கவைத்துக் கொள்வதில திண்டாடி வருகிறார். பொதுவாக ஒரு கட்சி பிளவுப்படும்போது எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் அதிகமாக யார் பக்கம் இருக்கிறார்களோ? அவர்கள் கைதான் ஓங்கியிருக்கும்.

    ஆனால், சரத் பவார் எம்.எல்.ஏ.-க்கள் ஒட்டுமொத்த கட்சிகள் என்று அர்த்தம் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறுகையில் ''தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு இல்லை. சில எம்.எல்.ஏ.-க்கள் விலகியுள்ளனர் என்பது உண்மைதான். ஆனால், எம்.எல்.ஏ.-க்கள் அரசியல் கட்சி என்று அர்த்தம் கிடையாது. அவர்களுடைய பெயர்கள் கூறி, பிரிந்து சென்றவர்களுக்கு ஏன் முக்கியத்தும் கொடுக்க வேண்டும்.

    நேற்று சரத் பவாரின் மகளும், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் செயல் தலைவருமான சுப்ரியா சுலே, ''தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு இல்லை. அஜித் பவார் அதன் தலைவராக தொடர்கிறார்'' என்றார்.

    இதற்கு முதலில் பதில் அளித்த சரத் பவார், ''இந்த விசயத்தில் எந்த சர்ச்சையும் இல்லை'' எனக் கூறியிருந்தார். பின்னர், இதுகுறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்தார்.

    கடந்த ஜூலை 2-ந்தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து அஜித் பவார் உள்ளிட்ட 9 சட்டசபை உறுப்பினர்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா மந்திரிசபையில் இணைந்தனர்.

    • விவசாயிகள் உற்பத்தி செய்யும் வெங்காயத்திற்கு போதுமான விலையை வழங்குவது அரசின் பொறுப்பு
    • விவசாயிகளின் செலவைக் கருத்தில் கொண்டு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்

    விலையை கட்டுப்படுத்துவதற்காக வெங்காயம் மீதான ஏற்றுமதி வரியை 40 சதவீதமாக உயர்த்திய மத்திய அரசு, இந்த வரிவிதிப்பு டிசம்பர் 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

    இதற்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், வெங்காயம் மீதான ஏற்றுமதி வரியை திரும்பப் பெற வேண்டும் என சரத் பவார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    கடந்த நில தினங்களாக நாசிக் பகுதியில் உள்ள விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுடைய உற்பத்தி வெங்காயத்திற்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். இந்தியாவில் இருந்து வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், அரசு அதன்மீது 40 சதவீதம் வரி விதித்துள்ளது.

    விவசாயிகள் உற்பத்தி செய்யும் வெங்காயத்திற்கு போதுமான விலையை வழங்குவது அரசின் பொறுப்பு. ஆனால், இதுகுறித்த உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

    வெங்காயத்தை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,410-க்கு கொள்முதல் செய்வதாகவும், 2 லட்சம் டன் ஏற்றுமதிக்கு அனுமதிப்பதாகவும் அரசு அறிவித்தது. விவசாயிகளின் செலவைக் கருத்தில் கொண்டு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.

    எப்படி இருந்தாலும் 40 சதவீத ஏற்றுமதி வரி திரும்பப்பெறுதல் வேண்டும். சர்க்கரை உற்பத்தியில் மகாராஷ்டிரா 2-வது மிகப்பெரிய மாநிலமாக உள்ளது. உலகிலளவில் பிரேசில் முதல் இடத்தில் உள்ளது. கடந்த வருடம் பிரேசிலில் ஏற்பட்ட வறட்சியால் சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளது.

    இதனால் இந்தியாவில் உள்ள சர்க்கரை உற்பத்தியாளர்களுக்கு சாதகமாக சூழ்நிலை நிலவுகிறது. அவர்கள் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால், தற்போது சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்க அரசு யோசனை செய்து வருகிறது. அப்படி நடந்தால், மாநில அரசு கரும்புக்கு நல்ல விலை கொடுக்க முடியாது.

    இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.

    • சரத் பவாரை அஜித் பவார் சந்தித்தது கூட்டணியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது
    • சரத் பவார் இல்லாமல் காங்கிரஸ் தேர்தலை சந்திக்க இருப்பதாக வதந்தி வெளியானது

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்தி ஏக்நாக் ஷிண்டே அரசியல் அங்கம் வகித்துள்ளார் அஜித் பவார். அம்மாநில துணைமுதல்வராக இருக்கும் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவராருக்கு அண்ணன் மகன் ஆவார்.

    இருவருக்கும் இடையில் அரசியல் மோதல் இருந்து வரும் நிலையில், குடும்ப விசயமாக சந்தித்துள்ளனர். முன்னதாக ஒருமுறை சரத் பவார் மனைவி, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில் அஜித் பவார் சரத் பவார் வீட்டிற்கு சென்றிருந்தார்.

    இந்த நிலையில் கடந்த வாரம் சரத் பவாரை அஜித் பவார் ரகசிய சென்று சந்தித்தார். இது குடும்ப சந்திப்பு என்று சரத் பவார் தெரிவித்திருந்தார்.

    ஆனால் சரத் பவார் உடன் கூட்டணி வைத்துள்ள உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள் இந்த சந்திப்பை விரும்பவில்லை.

    சிவசேனா தனது கட்சி பத்திரிகையில் இதுகுறித்து விமர்சனம் செய்திருந்தது. தொடர் சந்திப்பு சரத் பவாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் எனக் குறிப்பிட்டிருந்தது.

    சரத் பவார்- அஜித் பவார் சந்திப்பு மகாராஷ்டிரா அரசியலில் மட்டுமல்ல. எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணியில் அதிர்வலையை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

    ஏனென்றால் இந்த மாத இறுதியில் மகாராஷ்டிராவில் இரண்டு நாட்கள் I.N.D.I.A. கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே கட்சிகள் உள்ளன.

    இந்த கூட்டணியின் முக்கிய நோக்கமே, பா.ஜனதா தலைமையிலான கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதுதான். மேலும், பொதுத்தேர்தலில் பா.ஜனதா கூட்டணியை தோற்கடித்து கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் முகத்தில் கரியை பூச வேண்டும் என உத்தவ் தாக்கரே நினைக்கிறார். இவ்வாறு இருக்கும்போது பவார்கள் சந்திப்பு கூட்டணி கட்சிகளுக்கு சரியென்று படவில்லை.

    இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோல், பவார்களின் சந்திப்பு கவலைக்குரிய விசயம் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நானா பட்டோல் கூறியதாவது:-

    இருவரின் சந்திப்பு எங்களை பொறுத்தவரை கவலைக்குரிய விசயம்தான். ரகசிய இடத்தில் நடைபெற்ற இருவருடைய சந்திப்பை நாங்கள் ஏற்கவில்லை. எனினும், இந்த விசயம் குறித்து காங்கிரஸ் தலைமையிடம் விவாதிப்பார்கள். எதிர்க்கட்சி கூட்டணி விவாதிக்கும். ஆகவே, இது குறித்து மேலும் விவாதிப்பது ஏற்புடையதாக இருக்காது. காங்கிரஸ் மக்களவை தேர்தலில் சரத் பவார் கட்சி இல்லாமல் போட்டியிடும் என்பதில் எந்த உண்மையும் இல்லை'' என்றார்.

    • சரத் பவாருடன் அஜித் பவார் ரகசிய சந்திப்பு
    • அண்ணன் மகனை சந்திப்பதில் தவறு ஏதும் இல்லை என்றார் சரத் பவார்

    மகாராஷ்டிரா மாநில தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் ஒன்றிணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சி செய்து வந்தன. சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்து, ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியை கைப்பற்றி பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தார்.

    சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பூசலை உண்டாக்கிய அஜித் பவார் ஏக்நாத் ஷிண்டே ஆட்சியில் பங்கேற்று துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.

    அதில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கிய சரத் பவாருக்கும், அஜித் பவாருக்கும் இடையில் அரசியல் மோதல் இருந்து வருகிறது. துரோகி என்ற அளவிற்கு அஜித் பவாரை சாடினார் சரத் பவார். தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் கட்சி சின்னத்தை பயன்படுத்துவது தொடர்பாக இருதரப்பும் தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது.

    சரத் பவாரின் அண்ணன் மகன்தான் அஜித் பவார். கட்சி பிளவுக்குப் பிறகு ஏற்கனவே இருவரும் சந்தித்துள்ளனர். நேற்று முன்தினம் இருவரும் ரகசியமாக சந்தித்தது மகாராஷ்டிரா அரசியலில் பேசும்பொருளாக உருவெடுத்தது.

    சந்திப்பு குறித்து சராத் பவார், தனது அண்ணன் மகனான அஜித் பவாரை சந்திப்பதில் தவறு இல்லை. ஒருபோதும் பா.ஜனதாவில் இணையமாட்டேன் என தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில், உத்தவ் தாக்கரேயின் கட்சி பத்திரிகையான சாம்னா, சரத் பவார் தொடர்ந்து அஜித் பவாரை சந்திப்பது அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

    மேலும், அதில் ''அஜித் பவார் தொடர்ந்து சரத் பவாரை சந்திப்பதை பார்க்க நகைப்புக்குரியதாக உள்ளது. அவர் அதை தவிர்க்கவில்லை.

    பா.ஜனதாவின் சாணக்கியர் குழப்பத்தை ஏற்படுத்த தொடர்ந்து அஜித் பவரை சரத் பவாருடன் சந்திக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். எனினும், இதுபோன்ற சந்திப்பு சரத் பவாரின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும். இது நல்லது அல்ல'' எனக் குறிப்பிட்டுள்ளது.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதில் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சிகள் இடம் பிடித்துள்ளன.

    • தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து துணை முதல்வரானார் அஜித் பவார்
    • அஜித் பவார், சரத் பவார் ஆகியோருக்கு எத்தனை எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு என்பது உறுதியாக தெரியவில்லை

    மகாராஷ்டிர மாநிலத்தில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அவரது அண்ணன் மகன் அஜித் பவார், தனது ஆதரவாளர்களுடன் பிரிந்து சென்றார். அத்துடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் இணைந்தார். அவர் துணை முதல்வராகவும், அவருடன் சென்ற 8 எம்.எல்.ஏ.-க்கள் அமைச்சராக பதவி ஏற்றனர்.

    இதனால் சரத் பவார்- அஜித் பவார் இடையே அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பிலும் இருந்தும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு உரிமை கோரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தில் உள்ளது.

    பா.ஜனதா- ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தற்போது ஆட்சியில் உள்ளன. ஏக்நாத் ஷிண்டே தொடர்ந்து முதல்வராக நீடிப்பாரா? என்ற கேள்வி கடந்த சில வாரங்களுக்கு முன் எழுந்தது. பின்னர் அவர்தான் நீட்டிப்பார் என பா.ஜனதா உறுதியாக கூறியதால், அந்த பிரச்சனை அப்படியே அமர்ந்தது.

    இந்த நிலையில் நேற்று சரத் பவார்- அஜித் பவார் இடையே ரகசிய சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பு மகாராஷ்டிர அரசியலில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    இந்த சந்திப்பு புனேவில் உள்ள தொழில் அதிபர் அதுல் சோர்டியா பங்களாவில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் அமேல் மிட்கரி கூறுகையில் ''இரு தலைவர்களுடைய சந்திப்பு, குடும்பம் தொடர்பானதாக இருந்திருக்கும்'' என்றார்.

    பா.ஜனதா எம்.எல்.ஏ. அதுல் பட்கால்கர் ''இதுகுறித்து ஜெயந்த் பாட்டீல் மற்றும் பவார்களிடம், சந்திப்பு குறித்து கேட்டால் சிறந்ததாக இருக்கும்'' என்றார்.

    தேசியவாத காங்கிரசில் 54 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். இவர்கள் சரத் பவாருக்கு ஆதரவு எவ்வளவு உள்ளது, அஜித் பவாருக்கு ஆதரவு எவ்வளவு உள்ளது? என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை.

    சிவசேனா கட்சியில் இருந்து 40 எல்.எல்.ஏ.-க்களுடன் பிரிந்து ஏக்நாத் ஷிண்டே பா.ஜனதாவுடன் இணைந்து முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு, அஜித் பவார் தேசியவாத காங்கிரசில் இருந்து பிரிந்து துணை முதல்வராகியுள்ளார்.

    • அஜித் பவார், துணை முதல் மந்திரியாக சமீபத்தில் பதவியேற்றார்.
    • அவரது ஆதரவாளர்கள் 8 பேர் மந்திரிகளாகவும் பதவியேற்றனர்.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் அஜித் பவார், துணை முதல் மந்திரியாக சமீபத்தில் பதவியேற்றார்.

    முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இணைந்து துணை முதல் மந்திரியாகவும், அவரது ஆதரவாளர்கள் 8 பேர் மந்திரிகளாகவும் பதவியேற்றcர்.

    அஜித் பவார் தரப்பினர் எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டம் பாந்திராவில் நடந்தது. அதன்பின், தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் அஜித் பவார் தரப்பினர் மனு அளித்தார்.

    இதேபோல், சரத் பவார் தரப்பினரும் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம்  மனு அளித்தனர்.

    இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் சரத்பவார், அஜித்பவார் இரு தரப்பினரும் தங்களின் ஆவணங்களை தனித்தனியாக 3 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    • அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 8 பேர் பாஜக-சிவசேனா கூட்டணி அரசில் இணைந்தனர்.
    • சிவசேனாவில் இருந்து ஷிண்டே எப்படி பிரிந்தாரோ, அதேபோன்று அஜித் பவாரின் அரசியல் நகர்வு இருக்கிறது.

    மகாராஷ்டிர மாநிலத்தில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அவரது அண்ணன் மகன் அஜித் பவார் தனி அணியாக பிரிந்தார். அவரும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 8 பேரும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக-சிவசேனா (ஷிண்டே) கூட்டணி அரசில் இணைந்தனர். அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். இதன்மூலம் சரத்பவரால் நிறுவப்பட்ட தேசியவாத கட்சி பிளவுபட்டது.

    இந்நிலையில் நாகாலாந்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 7 எம்எல்ஏக்களும் அஜித் பவாருக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். நாகாலாந்தில் உள்ள ஒட்டுமொத்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களும்  அஜித் பவார் பக்கம் சென்றது. சரத் பவாருக்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்தபோது சிவசேனாவில் இருந்து ஷிண்டே எப்படி பிரிந்தாரோ, அதேபோன்று அஜித் பவாரின் அரசியல் நகர்வு இருக்கிறது. ஷிண்டே இறுதியில் சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை கைப்பற்றினார். கடந்த ஆண்டு ஆட்சி கவிழ்ந்ததும், கட்சியை உடைத்து தனியாக பிரிந்த ஷிண்டே, பாஜகவுடன் கைகோர்த்து புதிய அரசை அமைத்தது குறிப்பிடத்தக்கது.

    • எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூரில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
    • டெல்லியிலும், பெங்களூரிலும் போட்டிக் கூட்டம் நடப்பதால் கட்சி தலைவர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடை பெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும் ஓரணியில் திரளதிட்டமிட்டுள்ளனர்.

    இதன்படி எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த மாதம் 23-ந்தேதி பாட்னாவில் நடை பெற்றது. பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் முயற்சியால் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, தி.மு.க., ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டீரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் எதிர்க் கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதற்கான ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் மீது ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் சில கருத்துக்களை தெரிவித்தனர். குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்தும் விரிவாக பேசப்பட்டது. ஆனால் இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    இதைத் தொடர்ந்து மீண்டும் அடுத்த கூட்டத்தில் இது பற்றி பேசலாம் என முடிவு செய்தனர். அதன்படி அடுத்த கூட்டத்தை இமாச்சல பிரதேசத்தின் தலை நகரான சிம்லாவில் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டது.

    ஆனால் கன மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டது. ஜெய்ப்பூர் அல்லது ராய்ப்பூரில் கூட்டத்தை நடத்தலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டது. இறுதியாக கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது ஆேலாசனை கூட்டம் பெங்களூரில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி கலந்து கொள்கிறார்கள்.

    உடல்நிலை பாதிப்பு காரணமாக முதல் கூட்டத்தில் பங்கேற்காத சோனியாகாந்தி, இக்கூட்டத்தில் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது.

    இதே போல் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி மூத்த தலைவர் லல்லு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்ப வார் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    இது தவிர தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அனைத்து இந்திய பர்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் பங்கேற்க உள்ளன. இதற்காக இந்த கட்சிகளின் தலைவர்கள் உள்பட 24 கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடந்த வாரம் கடிதம் எழுதி இருந்தார்.

    நமது ஜனநாயக கொள்கைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முடிந்ததாலும், அடுத்த பொதுத் தேர்தலை ஒற்றுமையாக எதிர்கொள்ள ஒருமனதான முடிவு எட்டப் பட்டதாலும் முதல் கூட்டம் வெற்றிகரமாக அமைந்தது.

    இந்த விவாதத்தை தொடர்வதும், நாம் உரு வாக்கிய ஒற்றுமையை கட்டி எழுப்புவதும், மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.

    நமது நாடு சந்திக்கும் சவால்களுக்கான தீர்வுகளுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம்.

    அதன் தொடர்ச்சியாக ஜூலை 17-ந்தேதி பெங்களூரில் நடக்கும் கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு நடக்கும் இரவு விருந்திலும் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன். கூட்டம் 18-ந்தேதி முற்பகல் 11 மணிக்கு மீண்டும் தொடங்கும். உங்கள் அனைவரையும் பெங்களூர் கூட்டததில் சந்திக்கிறேன்.

    இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறி இருந்தார்.

    இதைத் தொடர்ந்து பெங்களூர் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார்? என்பதை முடிவு செய்ய மீண்டும் ஆலோசிக்கிறார்கள். இதில் ஒருமித்த கருத்து எட்டப்படுமா? என்பது நாளை தெரிந்துவிடும்.

    இன்று சோனியாகாந்தி அளிக்கும் விருந்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த்சோரன், சிவசேனா உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இந்த விருந்தில் பங்கேற்காமல் நாளைய கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிகிறது.

    பெங்களூரில் இன்று முக்கிய கட்சிகளின் தலைவர்கள் வருவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

    இந்த நிலையில் எதிர்க் கட்சிகளின் இந்த திட்டத்தை முறியடிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து டெல்லியில் நாளை (18-ந்தேதி) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கூட்டத்தை நடத்துகிறது.

    நாளை மாலை நடைபெறும் இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    நாளை மாலை நடை பெறும் இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இந்த கூட்டணியில் உள்ள அ.தி.மு.க., பா.ம.க., த.மா.கா. கட்சிகளுக்கும் அழைப்பு வந்துள்ளது.

    அதன்படி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை டெல்லி செல்கிறார்.

    டெல்லியில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்குமாறு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளார்.

    இதனை ஏற்று பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் பங்கேற்க உள்ளன.

    மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி அஜித்பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் அணி ஆகியவையும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றன.

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர் பாக கூட்டணி கட்சிகளுடன் பாரதிய ஜனதா கட்சி முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளது.

    மாநிலங்களில் இருக்கும் கூட்டணி கட்சிகளை அர வணைத்து போதிய இடங்களை ஒதுக்கி தேர்தலை சந்தித்து வெற்றி பெற இக்கூட்டத்தில் வியூகம் வகுக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    டெல்லியிலும், பெங்களூரிலும் போட்டிக் கூட்டம் நடப்பதால் கட்சி தலைவர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

    • தேசியவாத காங்கிரஸ் கட்சியில இருந்து பிரிந்த அஜித் பவார் ஷிண்டே அரசில் இணைந்துள்ளார்
    • சரத் பவார்- அஜித் பவார் இடையே அரசியல் தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அஜித் பவார் குரூப், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் பங்கேற்றுள்ளது. அஜித் பவார் துணை முதல்வராகவும், மற்ற 8 எம்.எல்.ஏ.-க்கள் அமைச்சராகவும் பதவி ஏற்றனர். இவர்களுக்கு நேற்று மந்திரி பதவி ஒதுக்கப்பட்டது. அஜித் பவார் நிதித்துறை மந்திரியாகியுள்ளார்.

    அஜித் பவார் கட்சியை உடைத்த சம்பவம் கடந்த ஜூலை 2-ந்தேதி அரங்கேறியது. அதன்பின் சரத் பவார் முறைமுகமாக அஜித் பவரை கடுமையாக விமர்சனம் செய்தார். அஜித் பவார் விமர்சனம் செய்யவில்லை என்றாலும் கட்சியை கைப்பற்றுவதற்காக சரத் பவாருக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

    இந்த நிலையில் சரத் பவாருக்கு வீட்டிற்கு அஜித் பவார் நேற்று சென்றுள்ளார். சரத் பவாரின் மனைவின் பிரதிபா பவாருக்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டில மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அதன்பின் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்ததும், அவரை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

    2019-ம் ஆண்டு அஜித் பவார் திடீரென பட்னாவிஸ் உடன் இணைந்து மகாராஷ்டிராவில் பதவி ஏற்றார். அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட இருந்த பிளவை தடுத்து நிறுத்த பிரதீபா மூளையாக செயல்பட்டார் எனக் கூறப்படுகிறது.

    மேலும், கட்சியின் முக்கியமான முடிவுகளை எடுக்க ஆலோசனைகளையும் அவ்வப்போது தெரிவித்துள்ளார் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ஆனால், அரசியல் தொடர்பான நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டது கிடையாது.

    • சரத் பவார் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது என அஜித் பவார் பேசினார்.
    • நான் மக்களுக்கு சேவை செய்யவே விரும்புகிறேன் என சரத் பவார் தெரிவித்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிர சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அஜித் பவார் மற்றும் சரத் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டங்கள் சமீபத்தில் தனித்தனியாக நடைபெற்றன.

    அஜித் பவார் தரப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள மனுவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கான உரிமையை தங்களிடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

    மேலும் அஜித் பவார் பேசுகையில், சரத் பவார் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. என்சிபியின் ஆட்சியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும். பா.ஜ.க. தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். உதாரணமாக எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் உள்ளனர். இது புதிய தலைமுறையை உயர்த்த அனுமதிக்கிறது. உங்கள் ஆசீர்வாதங்களை எங்களுக்குக் கொடுங்கள். நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ நாங்கள் பிரார்த்தனை செய்வோம் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நான் சோர்வடையவில்லை, ஓய்வு பெறவும் இல்லை. நெருப்பு போல் வேலை செய்து வருகிறேன்.

    மொரார்ஜி தேசாய் எந்த வயதில் பிரதமர் ஆனார்?

    நான் பிரதமர் ஆகவோ, மந்திரி ஆகவோ ஆசைப்படவில்லை.

    நான் மக்களுக்கு சேவை செய்யவே விரும்புகிறேன்.

    அனைத்து கிளர்ச்சியாளர்களும் கட்சியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

    சுப்ரியா சுலே அரசியலுக்கு வரவேண்டும் என கட்சியினர் விரும்பினர், அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    பிரபுல் படேலுக்கு 10 ஆண்டுகள் மத்திய அமைச்சர் பதவி கொடுத்தோம். மக்களவை தேர்தலில் அவர் தோல்வி அடைந்ததால் அவருக்கு ராஜ்யசபா சீட் கொடுத்தோம் என தெரிவித்தார்.

    • அஜித் பவார் உடன் இணைந்ததால் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி
    • ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தகவல் வெளியானது

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த அஜித் பவார் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராக பதவியேற்றதிலிருந்து அங்கு ஒரு குழப்பமான சூழ்நிலை இருந்து வருகிறது.

    அஜித் பவாரை அரசில் இணைத்ததால் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. சிவசேனாவுக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான சித்தாந்தம் முற்றிலும் வேறுபாடு. பால் தாக்கரே ஒருபோதும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட விரும்பவில்லை. மேலும், அக்கட்சியின் எம்.எல்.ஏ.-க்கள் தங்களுக்கு பதவி கிடைக்க வாய்ப்பு குறைவு எனக் கருதினர். இதனால் அஜித் பவார் இணைந்து செயல்பட ஷிண்டே முடிவு செய்ததால் அதிருப்தியில் இருந்தனர்.

    இதனால் ஏக்நாத் ஷிண்டே கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே ஷிண்டே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் மகாராஷ்டிரா மாநில அரசியலில் குழப்பமான சூழ்நிலை நிலவியது.

    ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை. தங்களுக்கு 200 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், நாங்கள் ராஜினாமா கடிதத்தை பெறுவோம் தவிர, கொடுக்கமாட்டோம் எனவும் தெரிவித்தது. மகாராஷ்டிர மாநில பா.ஜனதா தலைவர் சந்திரசேகர் பவன் குலே, எதிர்க்கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ராஜினாமா செய்யமாட்டார் எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் மற்றொரு துணைமுதல்வரும், பா.ஜனதா தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் நேற்றிரவு ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது தற்போது நடைபெற்று வரும் சூழ்நிலை குறித்து இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது.

    சரத் பவார் நேற்று டெல்லியில் செயற்குழு கூட்டத்தை கூட்டி, நாங்கள்தான் தேசியவாத காங்கிரஸ் எனக் கூறினார். அதற்கு அஜித் பவார், தேர்தல் கமிஷனில் சின்னம் மற்றும் கட்சி குறித்து மனு அளித்துள்ளோம். இதனால் சட்டப்பூர்வமாக அந்த கூட்டம் செல்லத்தக்கது அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ×