search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்னாவிஸ்"

    • பண்டிகை காலம் நெருங்குவதால் வெங்காயம் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு
    • டிசம்பர் 31-ந்தேதி வரை கட்டுப்பாடு நீடிக்கும் என்றதால், விவசாயிகள், வியாபாரிகள் எதிர்ப்பு

    வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைக்கவும், உள்ளூர் மார்க்கெட்டில் சப்ளையை அதிகரிக்கவும் மத்திய அரசு, வெங்காயம் மீது 40 சதவீதம் ஏற்றுமதி வரி விதித்தது. மேலும், இந்த வரிவிதிப்பு டிசம்பர் 31-ந்தேதி வரை நீடிக்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

    இதற்கு மகாராஷ்டிராவில், முக்கியமாக நாசிக் மாவட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியது. வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாசிக் மார்க்கெட் வியாபாரிகள், காலவரையின்றி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். மத்திய அரசு இந்த உத்தரவை திரும்பப்பெறும் வரை, எந்தவொரு ஏலத்திலும் பங்கேற்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், குவிண்டாலுக்கு 2410 ரூபாய் விதம், 2 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை மத்திய அரசு கொள்முதல் செய்யும் என மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

    தற்போது ஜப்பானில் இருக்கும் தேவேந்திர பட்னாவிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ''நான் மத்திய உள்துறை மந்திரி, மத்திய வணிக மந்திரி பியூஷ் கோயல் ஆகியோரிடம் வெங்காயம் தொடர்பான பிரச்சனை குறித்து பேசினேன். மத்திய அரசு இரண்டு லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை குவிண்டாலுக்கு 2410 ரூபாய் அடிப்படையில் வாங்கிக் கொள்ளும்.

    நாசிக் மற்றும் அகமதுநகர் மாவட்டங்களில் இதற்காக சிறப்பு கொள்முதல் மையம் அமைக்கப்படும். இது வெங்காயம் பயிரிட்டோருக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும்'' என்றார்.

    • உத்தவ் தாக்கரேவின் பேச்சுக்கு பா.ஜனதாவினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
    • உங்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. நீங்கள் தான் மகாராஷ்டிரத்தின் களங்கம்.

    மும்பை:

    முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் நாக்பூரில் கட்சியினர் இடையே பேசினார். அப்போது அவர், தேசியவாத காங்கிரசுடன் இனி ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம் என தேவேந்திர பட்னாவிஸ் கூறிய பழைய வீடியோ பற்றி பேசினார். மேலும் தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூரின் களங்கம் எனவும் கூறினார்.

    உத்தவ் தாக்கரேவின் பேச்சுக்கு பா.ஜனதாவினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். நாக்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பா.ஜனதாவினர் உத்தவ் தாக்கரேக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர். உத்தவ் தாக்கரே கொடும்பாவியை எரித்தனர்.

    மேலும் மத்திய மந்திரி நிதின் கட்காரி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்களும் உத்தவ் தாக்கரேயை கண்டித்தனர். நாக்பூரில் பா.ஜனதாவினர் உத்தவ் தாக்கரேக்கு இறுதி சடங்கு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    முன்னாள் சட்ட மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் பிரவின் தாரேக்கர் கூறுகையில், "பா.ஜனதாவை முதுகில் குத்திய உத்தவ் தாக்கரே தான் இந்துத்வாவுக்கு ஏற்பட்ட களங்கம். அவர் எங்கள் தலைவர் பற்றி அதுபோன்ற கருத்துகளை கூற கூடாது" என்றார்.

    மாநில பா.ஜனதா தலைவர் சந்திரசேகர் பவன்குலே கூறும்போது, "உத்தவ் தாக்கரே, தேவேந்திர பட்னாவிஸ் பற்றி பேசியது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவருக்கு தைரியம் இருந்தால் மீண்டும் நாக்பூர் வரவேண்டும். மக்கள் அவரை செருப்பால் அடிப்பார்கள்" என்றார்.

    இதேபோல பா.ஜனதாவின் முகநூல் பக்கத்திலும் அந்த கட்சி உத்தவ் தாக்கரேயை கடுமையாக விமர்சித்து உள்ளது. அதில், "உங்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. நீங்கள் தான் மகாராஷ்டிரத்தின் களங்கம். உங்களுக்கு மனநல ஆஸ்பத்திரியில் சிகிச்சை தேவைப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் உத்தவ் தாக்கரே பேச்சு குறித்து தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

    தற்போதைய அரசியல் சூழலால் எனது முன்னாள் நண்பர் (உத்தவ் தாக்கரே) பாதிக்கப்பட்டு இருப்பதை பார்க்கும்போது வேதனை அளிக்கிறது. அவர் மனநல மருத்துவரை சந்திக்க வேண்டும் என நினைக்கிறேன். அவருடைய தற்போதைய மனநிலையை கருத்தில் கொண்டு அவரது பேச்சுக்கு பதில் அளிப்பது சரியாக இருக்காது என நினைக்கிறேன். அவரது தற்போதைய மனநிலை அந்த அளவுக்கு உள்ளது. நாம் அதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே அவர் கூறியதை பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அஜித் பவார் உடன் இணைந்ததால் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி
    • ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தகவல் வெளியானது

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த அஜித் பவார் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராக பதவியேற்றதிலிருந்து அங்கு ஒரு குழப்பமான சூழ்நிலை இருந்து வருகிறது.

    அஜித் பவாரை அரசில் இணைத்ததால் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. சிவசேனாவுக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான சித்தாந்தம் முற்றிலும் வேறுபாடு. பால் தாக்கரே ஒருபோதும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட விரும்பவில்லை. மேலும், அக்கட்சியின் எம்.எல்.ஏ.-க்கள் தங்களுக்கு பதவி கிடைக்க வாய்ப்பு குறைவு எனக் கருதினர். இதனால் அஜித் பவார் இணைந்து செயல்பட ஷிண்டே முடிவு செய்ததால் அதிருப்தியில் இருந்தனர்.

    இதனால் ஏக்நாத் ஷிண்டே கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே ஷிண்டே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் மகாராஷ்டிரா மாநில அரசியலில் குழப்பமான சூழ்நிலை நிலவியது.

    ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை. தங்களுக்கு 200 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், நாங்கள் ராஜினாமா கடிதத்தை பெறுவோம் தவிர, கொடுக்கமாட்டோம் எனவும் தெரிவித்தது. மகாராஷ்டிர மாநில பா.ஜனதா தலைவர் சந்திரசேகர் பவன் குலே, எதிர்க்கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ராஜினாமா செய்யமாட்டார் எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் மற்றொரு துணைமுதல்வரும், பா.ஜனதா தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் நேற்றிரவு ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது தற்போது நடைபெற்று வரும் சூழ்நிலை குறித்து இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது.

    சரத் பவார் நேற்று டெல்லியில் செயற்குழு கூட்டத்தை கூட்டி, நாங்கள்தான் தேசியவாத காங்கிரஸ் எனக் கூறினார். அதற்கு அஜித் பவார், தேர்தல் கமிஷனில் சின்னம் மற்றும் கட்சி குறித்து மனு அளித்துள்ளோம். இதனால் சட்டப்பூர்வமாக அந்த கூட்டம் செல்லத்தக்கது அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ×