என் மலர்

    நீங்கள் தேடியது "onion price"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரு கிலோ வெங்காயம் வாங்கவேண்டுமானால் ஒரு நாள் ஊதியத்தை விட அதிகம் செலவாகிறது.
    • பணவீக்கம் அதிகரித்து வருவதால், உலகளவில் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன.

    பிலிப்பைன்ஸ் நாட்டின் உணவுகளில் வெங்காயம் அத்தியாவசியமான இடத்தை பிடித்துள்ளது. பெரும்பாலான உணவுப் பொருட்களில் வெங்காயம், பூண்டு ஆகியவை பிரதானமாக சேர்க்கப்படுகிறது. பிலிப்பைன்ஸில் மட்டும் சராசரியாக மாதத்திற்கு சுமார் 17,000 மெட்ரிக் டன் காய்கறிகள் தேவைப்படுகிறது.

    இந்த நிலையில்தான் மக்களின் முக்கிய காய்கறிகளில் ஒன்றான வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கிலோவுக்கு 600 பிசோஸ் (இந்திய மதிப்பு ரூ.887) என்ற விலையில் விற்கப்படுகிறது. இது கோழி இறைச்சியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு விலை அதிகம் ஆகும். பன்றி இறைச்சி அல்லது மாட்டிறைச்சியை விட 25-50 சதவீதம் அதிகம்.

    ஒரு கிலோ வெங்காயம் வாங்கவேண்டுமானால் ஒரு நாள் வேலைக்கான பிலிப்பைன்ஸின் குறைந்தபட்ச ஊதியத்தை விட அதிகம் செலவு செய்ய வேண்டி உள்ளது.

    உள்நாட்டு உற்பத்தி, விநியோகம் குறைந்து வருவதாலும், அதிகரித்து வரும் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் மார்ச் மாதத்திற்குள் சுமார் 22,000 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டும் என வேளாண் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

    ரஷ்யா-உக்ரைன் போர், விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் தீவிர காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் உலகளாவிய பணவீக்கம் அதிகரித்து, உலகளவில் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன. இதன் தாக்கம் பிலிப்பைன்சிலும் எதிரொலித்துள்ளதாக கூறப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்னவெங்காயம் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து காணப்பட்டது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கை, கள்ளிமந்தயம், இடையகோட்டை, மூலச் சத்திரம் கேதையெறும்பு, விருப்பாச்சி, சத்திரப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிட்டு வருகின்றனர். இந்த வெங்காயங்கள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு அதிக அளவு கேரள பகுதிக்கு அனுப்பப்படுகிறது.

    மேலும் கோவை, மதுரை, திருச்சி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட நகரங்களுக்கும் அனுப்பப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே சின்ன வெங்காயம் விலை குறைந்தே காணப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். பலர் வெங்காயங்களை விற்பனைக்கு கொண்டு வராமல் விரக்தி அடைந்தனர்.

    தினசரி 4 ஆயிரம் 60 கிலோ பைகளில் வெங்காயம் வருவது வழக்கம். ஆனால் தற்போது மழையின்மையால் வெங்காய சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் தற்போது 2 ஆயிரம் 60 கிலோ பைகளே வருகிறது. இதனால் விலை ஓரளவு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது. கோடைகாலம் தொடங்குவதால் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு லாரி லாரியாக வெங்காயம் வருவதால் கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. #Onionprice
    சென்னை:

    மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில்தான் வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. நாட்டின் மொத்த வெங்காய தேவையில் 50 சதவீதம் நாசிக் மாவட்டத்தில் இருந்து மட்டுமே கிடைக்கிறது. இதற்கு அடுத்தபடியாக ஆந்திராவில் அதிகம் விளைகிறது.

    நாசிக் மாவட்டத்தில் சந்திரகாந்த் பிகான் தேஷ்முக் என்பவர் தனது வயலில் அறுவடை செய்த வெங்காயத்தை வேளாண் விளைபொருள் சந்தை கமிட்டிக்கு கொண்டு சென்றார். அங்கு கடந்த 5-ந்தேதி ஏலம் விட்டதில் 1 கிலோ வெங்காயத்துக்கு வெறும் 51 பைசா மட்டுமே விலை நிர்ணயிக்கப்பட்டது. வேறு வழியின்றி தான் கொண்டு சென்ற வெங்காயத்தை விற்றார்.

    மொத்தம் 545 கிலோ வெங்காயத்தை விற்றதில் வேளாண் சந்தை கமிட்டி கட்டணம் போக அவருக்கு வெறும் ரூ.216 மட்டுமே கிடைத்தது. இதனால் மிகவும் வேதனை அடைந்த தேஷ்முக் அந்த பணத்தை மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிற்கு அனுப்பி தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

    என்னுடைய வெங்காயம் தரமானதாக இருந்தும் நல்ல விலை கிடைக்கவில்லை. அதனால் அந்த பணத்தை முதல்வருக்கு அனுப்பி விட்டேன். இனி என் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவேன், வாங்கிய கடனை எப்படி அடைப்பேன் என்று வேதனையில் கேள்வி கேட்கிறார் தேஷ்முக்.

    இதே போல் 750 கிலோ வெங்காயத்தை ரூ.1064-க்கு விற்ற மற்றொரு விவசாயி சஞ்சய் சாத்தோ அந்த பணத்தை பிரதமர் மோடிக்கு மணியார்டரில் அனுப்பி உள்ளார்.

    சென்னையில் கடந்த சில நாட்களாக வெங்காயம் விலை நாளுக்கு நாள் இறங்கி வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் 1 கிலோ வெங்காயம் ரூ.12 முதல் ரூ.15 வரை விற்கப்படுகிறது.

    ஆந்திராவில் இருந்து வரவழைக்கப்படும் நடுத்தர அளவு வெங்காயம் கிலோ ரூ.12-க்கும், நாசிக் வெங்காயம் கிலோ ரூ.15-க்கும் விற்கப்படுகிறது.

    மளிகை கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் கிலோ ரூ.20 வரை விற்கிறார்கள். சின்ன வெங்காயம் கிலோ ரூ.40-க்கு விற்கப்படுகிறது. #Onionprice
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    750 கிலோ வெங்காயத்திற்கு வெறும் 1064 ரூபாய் கிடைத்த விரக்தியில், தனது வருமானத்தை பிரதமர் அலுவலகத்துக்கு மகாராஷ்டிரா விவசாயி அனுப்பி வைத்துள்ளார். #MumbaiFormer #PMModi
    மும்பை:

    மகாரஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள நிபாட் பகுதியில் வசித்து வருபவர் சஞ்சய் சாதே. விவசாயியான இவர் தனது நிலத்தில் வெங்காயம் பயிரிட்டு வந்தார்.

    தனது நிலத்தில் விளைந்த வெங்காயத்தை அறுவடை செய்தார். மொத்தம் 750 கிலோ இருந்தது. அவற்றை நாசிக் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றார். அங்கு ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய் மட்டுமே விலை போனது.

    இதனால் மனம் நொந்துபோன சஞ்சய், ஒரு கிலோவுக்கு 1.40 ரூபாய் என பேசி முடித்தார். தன்னிடம் இருந்த மொத்த வெங்காயத்தையும் விற்றார். அதில் கிடைத்த பணத்துடன் வீடு வந்து சேர்ந்தார். கடந்த 4 மாத காலமாக கஷ்டப்பட்டு உழைத்தும் சரியான பலன் கிடைக்கவில்லையே என கடும் விரக்தியில் இருந்தார்.

    உடனடியாக அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. இப்படி கஷ்டப்பட்டு கிடைக்கும் பணம் விவசாயிகளின் வாழ்க்கையை எப்படி கரை சேர்க்கும் என்பதை அதிகாரிகளுக்கு புரிய வைக்க முடிவெடுத்தார்.

    இந்நிலையில், வெங்காயம் விற்று கிடைத்த பணத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்ப முடிவு செய்தார். அருகிலுள்ள  
    தபால் அலுவலகம் சென்ற அவர், அங்கு மணியார்டர் மூலம் பிரதமர் நிதிக்கு அந்த தொகையை அனுப்பி வைத்தார்.

    இதுகுறித்து சஞ்சய் கூறுகையில், 4 மாதம் கஷ்டப்பட்டு உழைத்தும் பலன் கிடைக்கவில்லை. எங்கள் கஷ்டம் உயர் அதிகாரிகளுக்கு தெரியவில்லை. எனவேதான் பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளேன் என விரக்தியுடன் தெரிவித்தார்.

    கடந்த 2010-ம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய அதிபர் பராக் ஒபாமாவுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் மத்திய வேளாண் துறையினரால் தேர்வு செய்யப்பட்டவர் சஞ்சய் சாதே என்பது குறிப்பிடத்தக்கது.
    ×