search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சரத் பவாருக்கு மேலும் பின்னடைவு.. நாகாலாந்திலும் தேசியவாத காங். எம்.எல்.ஏ.க்கள் அஜித் பவாருக்கு ஆதரவு
    X

    சரத் பவாருக்கு மேலும் பின்னடைவு.. நாகாலாந்திலும் தேசியவாத காங். எம்.எல்.ஏ.க்கள் அஜித் பவாருக்கு ஆதரவு

    • அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 8 பேர் பாஜக-சிவசேனா கூட்டணி அரசில் இணைந்தனர்.
    • சிவசேனாவில் இருந்து ஷிண்டே எப்படி பிரிந்தாரோ, அதேபோன்று அஜித் பவாரின் அரசியல் நகர்வு இருக்கிறது.

    மகாராஷ்டிர மாநிலத்தில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அவரது அண்ணன் மகன் அஜித் பவார் தனி அணியாக பிரிந்தார். அவரும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 8 பேரும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக-சிவசேனா (ஷிண்டே) கூட்டணி அரசில் இணைந்தனர். அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். இதன்மூலம் சரத்பவரால் நிறுவப்பட்ட தேசியவாத கட்சி பிளவுபட்டது.

    இந்நிலையில் நாகாலாந்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 7 எம்எல்ஏக்களும் அஜித் பவாருக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். நாகாலாந்தில் உள்ள ஒட்டுமொத்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களும் அஜித் பவார் பக்கம் சென்றது. சரத் பவாருக்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்தபோது சிவசேனாவில் இருந்து ஷிண்டே எப்படி பிரிந்தாரோ, அதேபோன்று அஜித் பவாரின் அரசியல் நகர்வு இருக்கிறது. ஷிண்டே இறுதியில் சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை கைப்பற்றினார். கடந்த ஆண்டு ஆட்சி கவிழ்ந்ததும், கட்சியை உடைத்து தனியாக பிரிந்த ஷிண்டே, பாஜகவுடன் கைகோர்த்து புதிய அரசை அமைத்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×