search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rape"

    • வாலிபர்கள் இருவரும் அந்த பெண்ணுக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்துள்ளனர்.
    • உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் சர்வதேச சுற்றுலா தலமாக திகழ்வதால் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி, பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஆண்டு முழுவதும் வருவார்கள். அதேபோன்று அமெரிக்கா கலிபோர்னியாவில் இருந்து 44 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த மாதம் கேரளாவுக்கு வந்திருந்தார்.

    கேரளாவில் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்ட அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள ஆசிரமம் ஒன்றுக்கு சென்றார். அங்கு தங்கியிருந்த அவர், சம்பவத்தன்று அந்த பகுதியில் இருந்த கடற்ரைக்கு சென்று அமர்ந்திருந்தார்.

    கடற்கரையில் அமர்ந்து பொழுதை கழித்துக் கொண்டிருந்த அவரிடம் 2 வாலிபர்கள் பேச்சு கொடுத்துள்ளனர். நட்பாக பழகுவது போன்று பேசியதால், அவர்களுடன் அந்த பெண் பேசியிருக்கிறார். இதையடுத்து அந்த வாலிபர்கள், அமெரிக்க பெண்ணை மது குடிப்பதற்காக தங்களது இருசக்கர வாகனத்தில அழைத்துச் சென்றுள்ளனர்.

    பின்பு 3 பேரும் சேர்ந்து மது குடித்துள்ளனர். வாலிபர்கள் இருவரும் அந்த பெண்ணுக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்துள்ளனர். இதனால் அமெரிக்க பெண்ணுக்கு போதை தலைக்கேறி மயக்க நிலைக்கு சென்றார்.

    இதையடுத்து அந்த பெண்ணை ஒதுக்குப்புறமான பகுதியில் இருந்த ஒரு பழைய கட்டிடத்துக்கு அழைத்துச்சென்று இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். போதை தெளிந்தபிறகே அந்த பெண், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்தார்.

    தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தான் தங்கியிருந்த ஆசிரம அதிகாரிகளுடம் அமெரிக்க பெண் தெரிவித்தார். அந்த பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமெரிக்க பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து கருநாகப்பள்ளி போலீஸ் நிலைத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, அமெரிக்க பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது யார்? என்று விசாரணை நடத்தினர். அப்போது செரிய ஜீக்கல் பகுதியை சேர்ந்த நிகில் (வயது28), ஜெயன்(39) ஆகிய இருவர் தான் அமெரிக்க பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கடற்கரையில் அமர்ந்து பொழுதை கழித்துக் கொண்டிருந்த அமெரிக்க பெண்ணிடம் நட்பாக பேசுவது போல் நடித்து, அவருக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்து மயங்க செய்து பாலியல் பாலத்காரம் செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    • கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
    • ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா பகுதியில், பெற்றோருடன் வசித்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 5 வயது சிறுமி திடீரென மாயமானாள். தொடர்ந்து நடைபெற்ற போலீசாரின் விசாரணையில், அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    அந்த பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்டிருந்த சிறுமி உடலை போலீசார் மீட்டனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக அதே பகுதியில் வசித்த அஸ்பாக் ஆலம் (வயது 23) என்பவன் கைது செய்யப்பட்டான். இவனும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவன் என்பதும் வேலைக்காக கேரளாவில் இருப்பதும் தெரியவந்தது.

    களமசேரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுமியின் உடல், அவள் படித்த பள்ளிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

    அப்போது சிறுமியின் தாயார் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடன டியாக அவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து சிறுமியின் உடல் ஆலுவா கீழ்மடுவில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. அப்போது சிறுமியின் தோழி ஒருவர், தகனப்பெட்டியின் மீது கரடிப் பொம்மையை வைத்து கதறினார்.

    இது அங்கிருந்தவர்களை மேலும் சோகத்திற்கு ஆளாக்கியது. சிறுமியின் உடல் தகனத்தில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    இந்நிலையில் கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் கூறினர். இதுகு றித்து மந்திரி வீணா ஜார்ஜ் கூறுகையில், நீதிக்கான அவர்களது போராட்டத்தில் அரசு துணை நிற்கும் என்றார். அவர்கள் என்னிடம் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என கூறினர். அதனை நான் உறுதி செய்வேன் என்றும் அவர் கூறினார்.

    இதற்கிடையில் கைது செய்யப்பட்ட அஸ்பாக் ஆலத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவனுக்கு திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அஸ்பாக் ஆலம் மீது வேறு ஏதும் வழக்குகள் உள்ளனவா? அவனது பின்னணி என்ன என்பது பற்றி அறிய, ஆலுவா போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு பீகார் செல்ல உள்ளது.

    கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் காவலில் ஆலுவா துணை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அஸ்பாக் ஆலத்துக்கு வேறு யாருடனும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்
    • போலீசார் பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவர் சதீசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள கப்பலாங்கரையை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். சம்பவத்தன்று இவர் தனது வீட்டு முன்பு நின்று கொண்டு செல்போனை பார்த்து கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த டிரைவர் சதீஸ் (வயது 37) என்பவர் இளம்பெண்ணின் வாயை மூடி அவரை வீட்டிற்குள் தூக்கி சென்றார். பின்னர் அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். அதிர்ச்சி யடைந்த இளம்பெண் சத்தம் போட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர்.

    உடனே சதீஸ், இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து இளம்பெண் நெகமம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இளம்பெண்ணை வீட்டிற்குள் தூக்கி சென்ற பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவர் சதீசை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • சங்கராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை விசாரணையின்றி தூக்கிலிட வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட் டம் சங்கராபுரத்தில் ஒன்றிய, நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு ஒன்றிய செயலாளர் தலிச்சந்திரன் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் சிந்தனைவளவன், ஒன்றிய பொருளாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி பொறுப்பாளர் சிலம்பன், வணிகரணி மாநில செயலாளர் திராவிட சந்திரன் ஆகியோர் பேசினர். மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் பழங்குடியின பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை விசார ணையின்றி தூக்கிலிட கோரியும் இந்த ஆர்ப்பாட் டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 17 வயதுடைய நபரை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் படந்தால் பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் பக்கத்து கிராமங்களை சேர்ந்த 17 வயதுடைய ஆணும், இளம்பெண்ணும் வேலை பார்த்து வந்தனர். அப்போது அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

    பெண்ணின் காதல் குறித்து அவரது குடும்பத்தினருக்கு தெரியவரவே அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் 2 பேரையும் அழைத்து பேசி எச்சரித்தனர்.

    அதன்பின் இளம்பெண் தனது வீட்டிற்கு செல்லாமல் காப்பகத்திற்கு செல்ல விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை காப்பகத்தில் சேர்த்தனர். இந்த நிலையில் அந்த பெண் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் தான் காப்பகத்தில் இருந்த போது காதலன் தனது வீட்டில் யாரும் இல்லை என அழைத்தார்.

    இதையடுத்து நான் அவரது வீட்டிற்கு சென்றேன். அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலன் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

    இதன் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 17 வயதுடைய நபரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் தற்போது கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குற்ற சம்பவ தொகுப்புகளை அடிப்படையாக கொண்டு ‘ஜி.ஐ.எஸ்’ எனப்படும் புவியியல் தகவல் அமைப்பு வரைபட திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.
    • ரூ.6.5 கோடி மதிப்பு கொண்ட இந்த புவியியல் தகவல் அமைப்பு வரைப்பட திட்டத்தை போலீஸ் கமிஷன் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.

    சென்னையில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக குற்றம் நடைபெறும் இடங்களை உடனே தெரிந்து கொண்டு அங்கு விரைந்து செல்லும் வகையிலும், குற்றங்கள் நடக்காதவாறு தடுக்கும் வகையிலும் குற்ற சம்பவ தொகுப்புகளை அடிப்படையாக கொண்டு 'ஜி.ஐ.எஸ்' எனப்படும் புவியியல் தகவல் அமைப்பு வரைபட திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இத்திட்டத்துக்காக கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளில் சென்னையில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, ஆள்கடத்தல் ஆகிய குற்ற சம்பவங்கள் நிகழ்ந்த 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் துல்லியமாக சேகரித்து தொகுக்கப்பட்டு உள்ளன.

    இவை எந்த வகை குற்றங்கள், எந்த இடத்தில், எந்த தினத்தில், எந்த நேரத்தில் நடைபெற்றது என்பது உள்பட அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டு வரைபடமாக்கப்பட்டு உள்ளது.

    102 போலீஸ் நிலையங்களில் இருந்தும் 385 போலீசார் குற்ற சம்பவங்கள் அதிகம் நடக்கும் இடங்களை கண்டறிந்து தகவல்களை சேகரிக்க கிட்டத்தட்ட 6 மாதங்கள் செலவிட்டனர். இந்த வரை படம் ஒவ்வொரு நாளும் நிகழ்நேர அடிப்படையில் புதுப்பிக்கப்படுகிறது.

    சென்னை நகரம் முழுவதும் உள்ள 67 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்களின் அமைவிடம் பள்ளிகள், கல்லூரிகள், பெண்கள் விடுதிகள், மருத்துவமனைகள், அரசு கட்டிடங்கள், வழிபாட்டுத் தலங்கள், வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள், விபத்து பகுதிகள் போன்றவையும் புவியியல் தகவல் அமைப்பு வரைபடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

    இந்த வரைபடத்தில் ஒரு வழக்கு மட்டும் பதிவாகியுள்ள பகுதிகளை குறிக்க மஞ்சள் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 3-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகும் இடங்களில் ஆரஞ்சு புள்ளி உள்ளது. அதிக குற்றங்கள் நடைபெறும் பகுதி சிவப்பு நிறமாக உள்ளது.

    பாலியல் தொல்லை, கற்பழிப்பு, போக்சோ போன்ற குற்றங்களுக்கு வெவ்வேறு குறியீடுகள் ஒதுக்கப்படுகிறது.

    இந்த வரைப்படத்தின் படி கடந்த 7 ஆண்டுகளில் வடசென்னை பகுதிகளில் கொலை, பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை, கற்பழிப்பு குற்றங்கள் அதிகம் நிகழ்ந்து உள்ளன. குடிசைப்பகுதிகள் மற்றும் ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நடந்துள்ளன.

    தென்சென்னை, மேற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திருட்டு சம்ப வங்கள் அதிகம் நடந்து உள்ளன. சென்னை நகரம் முழுவதும் பரவலாக வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன.

    இந்த வரைப்பட திட்டத்தின் மூலம் குற்றங்கள் ஒரு இடத்தில் நடைபெற்றால் அருகில் உள்ள ரோந்து போலீசாரை உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து செல்ல வைக்க முடியும். மேலும் குற்றவாளி தப்பிச் சென்றால் அவர் எந்த வழியாக தப்பிச் சென்றார், அவரது உருவம் எந்த கேமராவில் துல்லியமாக பதிவாகி இருக்கும் என்பது போன்ற விவரங்களையும் புவியியல் தகவல் அமைப்பு வரைபடம் மூலம் தெளிவாக உடனடியாக கண்டறிய முடியும்.

    இதன் மூலம் ஒரு குற்றத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுக்க முடியும். குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய முடியும். குற்ற சம்பவங்களை உடனடியாக தடுக்கும் நடவடிக்கைகளில் 5 ஆயிரம் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்ட போலீஸ் ரோந்து வாகனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளது. சிறப்பு மொபைல் செயலியுடன் 2000 ரோந்து போலீசாரும் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    இந்த வரைபட திட்டத்தில் உள்ள தானியங்கி வாகன இருப்பிட அமைப்பானது குற்றம் நடைபெறும் இடத்தின் அருகில் உள்ள ரோந்து வாகனத்தை அனுப்புவதற்கு பயன்படுத்தப்படும். இதனால் போலீசாருக்கு நேரம் மிச்சமாவதுடன் விரைவாக சம்பவ இடத்தை அறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும்.

    ரூ.6.5 கோடி மதிப்பு கொண்ட இந்த புவியியல் தகவல் அமைப்பு வரைப்பட திட்டத்தை போலீஸ் கமிஷன் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில்,

    "சென்னை நகரில் நடக்கும் குற்றங்களின் முறைகள் மற்றும் அதன் போக்கை ஆய்வு செய்ய இது எங்களுக்கு உதவியாக இருக்கும். சென்னை நகரில் நடக்கும் பாலியல் குற்றங்கள், கற்பழிப்பு, போக்சோ குற்றங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அனைத்தையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ குற்றங்கள் அதிக மாக இருந்தால் குற்றங்களை தடுக்க அந்த பகுதிகளுக்கு போலீசார் அதிக ரோந்து வாகனங்களை ஒதுக்கலாம். அந்த பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் அல்லது அனைத்து பெண் போலீ சாரையும் போலீசார் நியமிக்கலாம்" என்றார்.

    • வாலிபர் கைது
    • பஸ் நிலையத்தில் தவிக்க விட்டு சென்ற பரிதாபம்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (25), வெல்டிங் ஷாப் நடத்தி வருகிறார். இவர் அருகிலுள்ள ஒரு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.

    மேலும் விஸ்வநாதன், சிறுமியை கடந்த 22-ந் தேதி ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்றார். அதே பகுதியில் உள்ள கோவிலில் சிறுமியை திருமணம் செய்து கொண்டு, விஸ்வநாதன் நண்பர் வீட்டிற்கு அழைத்து சென்றார். அன்றிரவு தங்கி உள்ளார். அப்போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் விஸ்வநாதன் கடந்த 24-ந் தேதி குடியாத்தம் பஸ் நிலையத்தில் சிறுமியை தவிக்கவிட்டு சென்றுவிட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி தனது பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

    சிறுமியை மீட்ட பெற்றோர், வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த விஸ்வநாதனை போலீசார் கைது செய்தனர்.

    • சம்பவம் நடந்தபோது அந்த பெட்டியில் பயணம் செய்த மற்ற பயணிகள் யாரும் அந்த பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை.
    • போலீசார் சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் 3 வாலிபர்களையும் தேடிவருகிறார்கள்.

    போபால்:

    பீகார் மாநிலம் முசாபர்பூரில் இருந்து குஜராத் மாநிலம் சூரத்துக்கு, சூரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.

    அந்த ரெயிலில் 32 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பயணம் செய்தார். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருடன் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் 22 வயது மதிக்கத்தக்க அவரது ஆண் நண்பர் ஒருவரும் சென்றார்.

    அவர்கள் இருவரும் ஜார்க்கண்டில் இருந்து சூரத்துக்கு சென்றபோது இணைப்பு ரெயிலை தவறவிட்டதால் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இரவு 10 மணியளவில் சூரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பொதுபெட்டியில் ஏறினார்கள். அந்த ரெயிலில் சுமார் 60 பயணிகள் இருந்தனர்.

    இந்த நிலையில் குவாலியரை தாண்டி ரெயில் சென்று கொண்டிருந்தபோது 3 வாலிபர்கள் அந்த இளம்பெண்ணின் ஆடைகளை பிடித்து கிழித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். அப்போது அவருடன் வந்த நண்பர் தடுத்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் இளம்பெண்ணையும், அவரது நண்பரையும் ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசினார்கள். சம்பவம் நடந்தபோது அந்த பெட்டியில் பயணம் செய்த மற்ற பயணிகள் யாரும் அந்த பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை.

    ரெயிலில் இருந்து கீழே விழுந்ததில் அந்த பெண் பலத்த காயம் அடைந்தார். அவரது நண்பருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இளம்பெண்ணால் எழுந்து நடக்க முடியவில்லை.

    இதையடுத்து அவரது நண்பர் கிழிந்த ஆடைகளால் பெண்ணின் உடலை மூடி, மருத்துவ உதவி பெறுவதற்காக அடர்ந்த காட்டில் கொட்டும் மழையில் 5 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்றார். ஆனால் 2 கிராமங்களில் இருந்து மக்களிடம் அவர் உதவி கேட்டும் யாரும் உதவ முன்வரவில்லை.

    இதையடுத்து அவர் 3-வதாக ஒரு கிராமத்துக்கு சென்று உதவி கேட்டார். அந்த கிராமத்தில் வசித்த ஒரு வயதான தம்பதிகள் அவர்களை தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். அந்த பெண்ணுக்கு ஒரு சேலையை கொடுத்து அணிவித்தனர்.

    பின்னர் அவரது காயங்களுக்கு மருந்து தடவினார்கள். அதன்பிறகு அந்த பெண்ணும், அவரது நண்பரும் மருத்துவமனைக்கு செல்லவும் உதவினார்கள். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் கடந்த 19-ந்தேதி நடந்து உள்ளது.

    இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் 3 வாலிபர்களையும் தேடிவருகிறார்கள்.

    • 13 வயது மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
    • போக்சோவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே சாமி நத்தம் பகுதியை சேர்ந்த சிறுமி 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தெருவில் செல்லும்போது ஈஞ்சார் பகுதிைய சேர்ந்த மாரிமுத்து என்பவர் அவரை கேலி, கிண்டல் செய்து தன்னை காதலிக்கும் படி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் சிறுமி மறுத்துள்ளார்.

    சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அத்துமீறி நுழைந்து அவரை செண்பக தோப்பு பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். அந்த சிறுமி இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் சிறுமியின் தாயிடம் பெண் கேட்டு மாரிமுத்து தகராறு செய்தார்.

    ஆனால் சிறுமியின் தாய் அதற்கு மறுப்பு தெரிவித்தார். அப்போது சிறுமியை தான் பலாத்காரம் செய்து விட்டதாகவும், அதனால் தனக்கு திருமணம் செய்து தர ேவண்டும் என்றும், இல்லாவிட்டால் இருவரையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து மகளிடம் நடந்ததை பற்றி தாய் கேட்டு தெரிந்து கொண்டார். உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை தேடி வருகின்றனர்.

    சிவகாசி மீனம்பட்டி பகுதியை சேர்ந்த 3 சிறுவர்களுக்கு அதே பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து ஒரு சிறுவன் தந்தையிடம் கூறினார். அவரது தந்தை உடனடியாக சிவகாசி கிழக்கு போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். போலீசார் அவர் மீது போக்சோவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புகாரின் பேரில் போலீசார் சிறுமியை தேடி வந்தனர்.
    • வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள காளியாபுரத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு வெப்பரை பகுதியை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் தங்களது மகளை கண்டித்தனர். இது குறித்து சிறுமி தனது காதலனிடம் தெரிவித்தார்.

    கடந்த ஏப்ரல் மாதம் சிறுமி தனது பெற்றோரிடம் வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்க வில்லை. சிறுமியை அவரது காதலன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரிய வந்தது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஆனைமலை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

    சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் அவரை கோட்டூர் திருவள்ளுவர் காலனியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினார். அங்கு சிறுமியை வாலிபர் அடைத்து வைத்து கடந்த 2 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்தார். போலீசார் விசா ரணை நடத்தி வாலிபருடன் சிறுமி இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். பின்னர் வாலிபரிடம் இருந்து சிறுமி யை மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை வாலிபர் ஆசை வார்த்தை கூறி கடந்த 2 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து ஆனை மலை போலீசார் இந்த வழக்கை வால்பாறை அனைத்து மகளிர் போலீ சாரிடம் ஒப்படைத்தனர். வால்பாறை அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாதகாரம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அந்த மூதாட்டியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • மூதாட்டி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது பக்கத்து வீட்டில் 74 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வந்தார்.

    இவரது வீடு நேற்று முழுவதும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது அங்கு மூதாட்டி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.

    அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அந்த மூதாட்டியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மூதாட்டி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் மூதாட்டியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மூதாட்டி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் வழக்க பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மூதாட்டியின் வீடு அருகே வசித்து வந்த ராஜன், அவரை கற்பழித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரம்
    • சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்

    செய்யாறு:

    செய்யாறு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி. அதே பகுதியில் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவரது பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். இதனால் சிறுமி தாயுடன் வசித்து வருகிறார்.

    பெரியப்பா உறவு முறையான கூலி தொழிலாளி சிறுமி இருக்கும் வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கம். இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் சிறுமியின் தாயார் வீரம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.

    அங்கிருந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    அப்போது சிறுமி 2 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதனால் தாயார் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்ததில், தனது பெரியப்பா அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறினார்.

    பின்னர் சிறுமியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தொழிலாளியை தேடி வருகின்றனர்.

    ×