search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rape"

    • 3 குழந்தைகளின் தந்தை போக்சோவில் கைது
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது 38). இவர் வேலூரில் உள்ள சுவீட் கடை ஒன்றில் சரக்கு மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவரது மனைவி உஷா கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இறந்து விட்டார்.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை ஆசை வார்த்தைக்கூறி தனது வீட்டிற்கு வரவழைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இதனால் சிறுமியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதால் சந்தேகமடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர்.

    அப்போது நடந்ததை கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதைதொடர்ந்து போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மோகன்தாசை கைது செய்தனர்.

    • இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற மரியராஜாவை கைது செய்தனர்.
    • தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோவை:

    கோவை சூலூர் அருகே உள்ள மலையாண்டி பாளையத்தை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் கடந்த 8 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது வீட்டிற்குள் ஜே.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி மரியராஜா என்ற மரியலூயிஸ்ராஜா (வயது 42) என்பவர் அத்துமீறி உள்ளே நுழைந்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் ஆடைகளை கழற்றி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டார்.

    இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற மரியரா ஜாவை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் இது குறித்து சுல்தான் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற மரியராஜாவை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பள்ளி நிர்வாகம் சார்பில் சைல்டுலைனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
    • கிருஷ்ணன் குட்டி நாயரை போஸ்கோ சட்டத்தின் கீழ் மங்களபுரம் போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கன்னியாபுரத்தை சேர்ந்த முதியவர் கிருஷ்ணன் குட்டி நாயர் (வயது 72). இவர் கீழவூர் சந்திப்பில் மளிகை கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு பொருட்கள் வாங்கு வதற்கு வந்த ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனை அந்த சிறுமி தனது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரிடம் தெரிவித்திருக்கிறார். சிறுமியை முதியவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் சைல்டுலைனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கிருஷ்ணன் குட்டி நாயரை போஸ்கோ சட்டத்தின் கீழ் மங்களபுரம் போலீசார் கைது செய்தனர்.

    • சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதை பெற்றோரிடம் கூறினர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே ஒரு கிராமத்தில் 15 வயது பெண் மனநலம் பாதிக்கப்பட்டு பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த 6-ந்தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த 25 வயது சிறுவன், சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்து சென்று, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    மேலும், அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியில் வரும் போதெல்லாம், மறைவான இடத்திற்கு அழைத்து சென்ற சிறுவன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமியை, அவரது பெற்றோர் மருத்து வமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதை பெற்றோரிடம் கூறினர். சிகிச்சை முடிந்து சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதன்படி சிறுமியின் தாயார், பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.

    • கைது செய்யப்பட்ட முர்ஷித் முகம்மதை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
    • இதுபோன்று எத்தனை சிறுமிகளை சீரழத்தார் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் முர்ஷித் முகம்மது(வயது24). தனியார் பஸ் ஒன்றில் டிரைவராக பணிபுரிந்து வந்த இவர் மீது மலப்புரத்தை சேர்ந்த ஒரு மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.

    அவர்கள் தங்களது புகாரில், பஸ்சில் சென்ற தங்களின் மகளுடன் முர்ஷித் முகம்மது நட்பாக பழகி ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதனை யாரிடமும் கூறக்கூடாது என்று மாணவிக்கு மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்திருந்தனர்.

    இதையடுத்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். முர்ஷித் முகம்மது டிரைவராக வேலைபார்த்த பஸ்சில் மாணவி சென்று வந்திருக்கிறார். அப்போது அவரிடம் நட்பாக பழகியிருக்கிறார். அதனடிப்படையில் அந்த மாணவியும் அவருடன் பேசி வந்துள்ளாளர்.

    இதையடுத்து அந்த மாணவியை வயநாட்டில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். மேலும் அதனை வெளியில் கூறக்கூடாது என்று மாணவியை மிரட்டியிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து டிரைவர் முரஷித் முகம்மது மீது போக்சோ சட்டத்தில் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர். தலைமறைவாக இருந்த அவரை ரகசியமாக தேடி வந்தனர். அவரது செல்போன் சிக்னல் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டறிந்த போலீசார், அவர் இருந்த ரிசார்ட்டுக்கு அதிரடியாக சென்று கைது செய்தனர்.

    அப்போது அவர் மற்றொரு மைனர் பெண்ணுடன் இருந்தார். அந்த பெண்ணும் பஸ்சில் பயணம் செய்தபோது ஏற்பட்ட பழக்கத்தில், டிரைவர் அழைத்தபடி ரிசார்ட்டுக்கு வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. அந்த மைனர் பெண்ணுக்கு போலீசார் அறிவுரை கூறி, அவர்களது குடும்பத்தினருடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

    கைது செய்யப்பட்ட முர்ஷித் முகம்மதை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் பல சிறுமிகளை அதேபோன்று சீரழித்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

    தனது பஸ்சில் பயணிக்கக்கூடிய மைனர் சிறுமிகளிடம் நட்பாக பழகுவது போல் பேசி, ரிசார்ட்டுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். தனது செயல் யாருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தாத வகையில் பழகி, சிறுமிகளை ரிசார்ட்டுக்கு காலையில் அழைத்துச் சென்று, பின்னர் மாலையில் மீண்டும் சிறுமிகளை திரும்பி விட்டுவிடுவாராம்.

    அவர் இதுபோன்று எத்தனை சிறுமிகளை சீரழித்தார் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போதையில் இளம்பெண்ணிடம் போலீஸ்காரர் அத்துமீறி நடந்துள்ளார்.
    • போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் அந்த காவலர் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் கோர்பச்சேவ். இவர் இதற்கு முன்பு பணியாற்றிய இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் தேவ கோட்டை டவுன் போலீஸ் நிலையத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.

    நேற்று மதுபோதையில் சீருடை அணிந்து காவலர் பணிக்கு சென்றுள்ளார். இரவு 8 மணியளவில் பஸ் நிலையம் அருகே அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு இளம் பெண் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்த பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் காவலர் பின் தொடர்ந்து சென்றார். ஒத்தக்கடை ஆற்றுப்பாலம் அருகே இருள் சூழ்ந்த பகுதியில் சென்ற போது திடீரென காவலர் அந்தப் பெண்ணை வழிமறித்துள்ளார். ஏன் ஹெல்மெட் போட வில்லை? என போதையில் உளறியபடி அந்த பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயன்றுள்ளார்.

    அந்த பெண் கூச்சலிட்டதால் அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் காவலரை சிறைபிடித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். டவுன் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களின் பிடியிலிருந்த காவலரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    இதுகுறித்து தகவலறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் அந்த காவலர் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    • அவமானம் அடைந்த அந்த பெண் காவலர் விஷத்தை குடித்துவிட்டார்.
    • சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    புதுடெல்லி:

    டெல்லி அருகில் உள்ள காஜியாபாத் ஹவுசிங் சொசைட்டியில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 19 வயது பெண் காவலர் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் பணியில் இருந்தபோது அவரது மேற்பார்வையாளர் அஜய்(32) என்பவர் உள்ளிட்ட 3 பேர் தாக்கியுள்ளனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து அவரை கூட்டு பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதனால் அவமானம் அடைந்த அந்த பெண் காவலர் விஷத்தை குடித்துவிட்டார்.

    உடனே அவரை சக காவலர்கள் மீட்டு டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அஜய்யை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிர்ச்சியடைந்த புதுப்பெண் இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார்.
    • வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோவை:

    கோவை ராமநாதபுரம் அருகே உள்ள 80 அடி ரோட்டை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண்.

    இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. புதுப்பெண் அவரது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று புதுப்பெண்ணின் கணவர் வேலைக்கு சென்றுவிட்டார். அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    புதுப்பெண் மதியம் சமையல் வேலைகளை முடித்து சாப்பிட்டு விட்டு வீட்டில் அமர்ந்து டி.வி. பார்த்து கொண்டு இருந்தார்.

    அப்போது வாலிபர் ஒருவர் இளம்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார்.

    வாலிபர் இளம்பெண்ணை கீழே தள்ளி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டார்.

    இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் இளம்பெண்ணின் வீட்டிற்கு விரைந்து சென்றனர். அதற்குள் வாலிபர் நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இதில் அதிர்ச்சியடைந்த புதுப்பெண் இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வீட்டில் தனியாக இருந்த புதுப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தர்மபுரியை சேர்ந்தவரும் தற்போது 80 அடி ரோட்டில் வசித்து வரும் கட்டிட தொழிலாளி ஆனந்த் (வயது 21) என்பது தெரிய வந்தது.

    அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஆனந்தை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    வீட்டில் தனியாக இருந்த புதுப்பெண்ணை பட்டப்பகலில் வாலிபர் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • செல்போன் சிக்னலின் அடிப்படையில் அந்த பகுதிக்கு போலீசார் சென்றனர்.
    • தப்பிஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், அதே பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி படித்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென மாயமானார்.

    அவரை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் தங்களது மகள் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.

    அவர் எங்கு இருக்கிறார்? என்பதை கண்டறிய அவரது செல்போன் சிக்னலை போலீசார் கண்காணித்தனர். அப்போது அந்த மாணவி, குட்டியாடி அருகே தொட்டில்பாலம் குண்டுதோடு பகுதியில் இருப்பது போன்று காண்பித்தது. இதையடுத்து செல்போன் சிக்னலின் அடிப்படையில் அந்த பகுதிக்கு போலீசார் சென்றனர்.

    மாணவி இருப்பதாக காட்டப்பட்ட வீட்டுக்கு சென்றனர். வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வெகுநேரமாக தட்டியும் கதவை திறக்காததால், கதவை உடைத்து வீட்டுக்குள் போலீசார் சென்றனர். அப்போது அங்கு அந்த மாணவி சுய நினைவின்றி அலங்கோலமான நிலையில் நிர்வாணமாக கிடந்தார்.

    அவரது உடலில் காயங்களும் இருந்தன. சுய நினைவின்றி கிடந்த மாணவியை போலீசார் அங்கிருந்து மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மாணவி மீட்கப்பட்ட வீட்டில் சில போதை மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்திருக்கிறார்கள். அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தியதில் அந்த வீட்டில் வாலிபர் ஒருவர் மட்டும் தங்கியிருந்து தெரிய வந்துள்ளது. அந்த வாலிபர் போதை பழக்கத்துக்கு அடிமையானவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    அந்த வாலிபர் உள்ளிட்ட சிலர் போதையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கலாம் என்றும், போலீசார் வந்ததும் மாணவியை நிர்வாணமாக போட்டுவிட்டு தப்பிச்சென்றிருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர். ஆகவே தப்பிஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மாயமான கல்லூரி மாணவி, வாலிபரின் வீட்டின் நிர்வாணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சம்பவத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று சிறுமியை மிரட்டியுள்ளனர்.
    • சிறுமியை கடத்தி சென்று 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கொசவம்பாளையம் சாலையில் காதலனுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பல்லடம் அண்ணா நகரை சேர்ந்த ரமேஷ் குமார்(வயது 31), ஜான்சன் (26), ஊஞ்சப்பாளையத்தை சேர்ந்த பார்த்தீபன் (25) ஆகியோர் வந்தனர். அவர்கள் 2 பேரிடமும் இங்கு தனியாக என்ன செய்து கொண்டிக்கிறீர்கள் என்று கேட்டனர். மேலும் சிறுமியின் காதலனை சரமாரி தாக்கி அங்கிருந்து விரட்டியடித்தனர்.

    பின்னர் சிறுமியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்வதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றனர். காளி வேலம்பட்டி அருகே காட்டுப்பகுதி வழியாக செல்லும்போது திடீரென 3 பேரும், சிறுமியை அங்குள்ள புதர் பகுதிக்கு கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும் அதனை தங்களது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று சிறுமியை மிரட்டியதுடன், பல்லடம்- கோவை சாலையில் உள்ள செட்டிப்பாளையத்தில் இறக்கி விட்டு விட்டு சென்றுவிட்டனர்.

    இதையடுத்து வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இது குறித்து பல்லடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் காளி வேலம்பட்டி, செட்டிப்பாளையம் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்ட போது, ரமேஷ்குமார், ஜான்சன், பார்த்தீபன் ஆகியோர் சிறுமியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து பல்லடம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர். பின்னர் திருப்பூர் சிறையில் அடைத்தனர். சிறுமியை கடத்தி சென்று 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கண்ணீர் மல்க சோகத்தில் நின்று கொண்டிருந்த அவரது தந்தை திடீரென எரியும் சிதையில் குதித்தார்.
    • லேசான தீக்காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள பில்வாரா கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் கடந்த வாரம் ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது இறுதி சடங்கு மயானத்தில் நடந்தது. அந்த பெண்ணின் உடல் எரியூட்டப்பட்டது.

    அந்த சமயம் மகளின் சிதை அருகே கண்ணீர் மல்க சோகத்தில் நின்று கொண்டிருந்த அவரது தந்தை திடீரென எரியும் சிதையில் குதித்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை உடனே வெளியே இழுத்து காப்பாற்றினார்கள்.

    இதில் லேசான தீக்காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகள் இறந்ததில் இருந்து அவர் மனம் உடைந்து காணப்பட்டதாகவும், இதனால் அவர் துக்கம் தாங்காமல் இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    • வாலிபர்கள் இருவரும் அந்த பெண்ணுக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்துள்ளனர்.
    • உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் சர்வதேச சுற்றுலா தலமாக திகழ்வதால் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி, பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஆண்டு முழுவதும் வருவார்கள். அதேபோன்று அமெரிக்கா கலிபோர்னியாவில் இருந்து 44 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த மாதம் கேரளாவுக்கு வந்திருந்தார்.

    கேரளாவில் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்ட அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள ஆசிரமம் ஒன்றுக்கு சென்றார். அங்கு தங்கியிருந்த அவர், சம்பவத்தன்று அந்த பகுதியில் இருந்த கடற்ரைக்கு சென்று அமர்ந்திருந்தார்.

    கடற்கரையில் அமர்ந்து பொழுதை கழித்துக் கொண்டிருந்த அவரிடம் 2 வாலிபர்கள் பேச்சு கொடுத்துள்ளனர். நட்பாக பழகுவது போன்று பேசியதால், அவர்களுடன் அந்த பெண் பேசியிருக்கிறார். இதையடுத்து அந்த வாலிபர்கள், அமெரிக்க பெண்ணை மது குடிப்பதற்காக தங்களது இருசக்கர வாகனத்தில அழைத்துச் சென்றுள்ளனர்.

    பின்பு 3 பேரும் சேர்ந்து மது குடித்துள்ளனர். வாலிபர்கள் இருவரும் அந்த பெண்ணுக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்துள்ளனர். இதனால் அமெரிக்க பெண்ணுக்கு போதை தலைக்கேறி மயக்க நிலைக்கு சென்றார்.

    இதையடுத்து அந்த பெண்ணை ஒதுக்குப்புறமான பகுதியில் இருந்த ஒரு பழைய கட்டிடத்துக்கு அழைத்துச்சென்று இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். போதை தெளிந்தபிறகே அந்த பெண், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்தார்.

    தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தான் தங்கியிருந்த ஆசிரம அதிகாரிகளுடம் அமெரிக்க பெண் தெரிவித்தார். அந்த பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமெரிக்க பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து கருநாகப்பள்ளி போலீஸ் நிலைத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, அமெரிக்க பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது யார்? என்று விசாரணை நடத்தினர். அப்போது செரிய ஜீக்கல் பகுதியை சேர்ந்த நிகில் (வயது28), ஜெயன்(39) ஆகிய இருவர் தான் அமெரிக்க பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கடற்கரையில் அமர்ந்து பொழுதை கழித்துக் கொண்டிருந்த அமெரிக்க பெண்ணிடம் நட்பாக பேசுவது போல் நடித்து, அவருக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்து மயங்க செய்து பாலியல் பாலத்காரம் செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    ×