search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியில் பெண் காவலர் கூட்டு பலாத்காரம்: அவமானத்தில் தற்கொலை
    X

    டெல்லியில் பெண் காவலர் கூட்டு பலாத்காரம்: அவமானத்தில் தற்கொலை

    • அவமானம் அடைந்த அந்த பெண் காவலர் விஷத்தை குடித்துவிட்டார்.
    • சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    புதுடெல்லி:

    டெல்லி அருகில் உள்ள காஜியாபாத் ஹவுசிங் சொசைட்டியில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 19 வயது பெண் காவலர் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் பணியில் இருந்தபோது அவரது மேற்பார்வையாளர் அஜய்(32) என்பவர் உள்ளிட்ட 3 பேர் தாக்கியுள்ளனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து அவரை கூட்டு பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதனால் அவமானம் அடைந்த அந்த பெண் காவலர் விஷத்தை குடித்துவிட்டார்.

    உடனே அவரை சக காவலர்கள் மீட்டு டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அஜய்யை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×