என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது 38). இவர் வேலூரில் உள்ள சுவீட் கடை ஒன்றில் சரக்கு மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவரது மனைவி உஷா கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இறந்து விட்டார்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை ஆசை வார்த்தைக்கூறி தனது வீட்டிற்கு வரவழைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் சிறுமியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதால் சந்தேகமடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர்.
அப்போது நடந்ததை கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதைதொடர்ந்து போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மோகன்தாசை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்