search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வாலிபரின் வீட்டில் நிர்வாணமாக கிடந்த கல்லூரி மாணவி- பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அம்பலம்
    X

    வாலிபரின் வீட்டில் நிர்வாணமாக கிடந்த கல்லூரி மாணவி- பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அம்பலம்

    • செல்போன் சிக்னலின் அடிப்படையில் அந்த பகுதிக்கு போலீசார் சென்றனர்.
    • தப்பிஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், அதே பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி படித்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென மாயமானார்.

    அவரை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் தங்களது மகள் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.

    அவர் எங்கு இருக்கிறார்? என்பதை கண்டறிய அவரது செல்போன் சிக்னலை போலீசார் கண்காணித்தனர். அப்போது அந்த மாணவி, குட்டியாடி அருகே தொட்டில்பாலம் குண்டுதோடு பகுதியில் இருப்பது போன்று காண்பித்தது. இதையடுத்து செல்போன் சிக்னலின் அடிப்படையில் அந்த பகுதிக்கு போலீசார் சென்றனர்.

    மாணவி இருப்பதாக காட்டப்பட்ட வீட்டுக்கு சென்றனர். வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வெகுநேரமாக தட்டியும் கதவை திறக்காததால், கதவை உடைத்து வீட்டுக்குள் போலீசார் சென்றனர். அப்போது அங்கு அந்த மாணவி சுய நினைவின்றி அலங்கோலமான நிலையில் நிர்வாணமாக கிடந்தார்.

    அவரது உடலில் காயங்களும் இருந்தன. சுய நினைவின்றி கிடந்த மாணவியை போலீசார் அங்கிருந்து மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மாணவி மீட்கப்பட்ட வீட்டில் சில போதை மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்திருக்கிறார்கள். அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தியதில் அந்த வீட்டில் வாலிபர் ஒருவர் மட்டும் தங்கியிருந்து தெரிய வந்துள்ளது. அந்த வாலிபர் போதை பழக்கத்துக்கு அடிமையானவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    அந்த வாலிபர் உள்ளிட்ட சிலர் போதையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கலாம் என்றும், போலீசார் வந்ததும் மாணவியை நிர்வாணமாக போட்டுவிட்டு தப்பிச்சென்றிருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர். ஆகவே தப்பிஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மாயமான கல்லூரி மாணவி, வாலிபரின் வீட்டின் நிர்வாணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×