search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சி அருகே சிறுமி பலாத்காரம்
    X

    பொள்ளாச்சி அருகே சிறுமி பலாத்காரம்

    • புகாரின் பேரில் போலீசார் சிறுமியை தேடி வந்தனர்.
    • வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள காளியாபுரத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு வெப்பரை பகுதியை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் தங்களது மகளை கண்டித்தனர். இது குறித்து சிறுமி தனது காதலனிடம் தெரிவித்தார்.

    கடந்த ஏப்ரல் மாதம் சிறுமி தனது பெற்றோரிடம் வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்க வில்லை. சிறுமியை அவரது காதலன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரிய வந்தது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஆனைமலை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

    சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் அவரை கோட்டூர் திருவள்ளுவர் காலனியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினார். அங்கு சிறுமியை வாலிபர் அடைத்து வைத்து கடந்த 2 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்தார். போலீசார் விசா ரணை நடத்தி வாலிபருடன் சிறுமி இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். பின்னர் வாலிபரிடம் இருந்து சிறுமி யை மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை வாலிபர் ஆசை வார்த்தை கூறி கடந்த 2 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து ஆனை மலை போலீசார் இந்த வழக்கை வால்பாறை அனைத்து மகளிர் போலீ சாரிடம் ஒப்படைத்தனர். வால்பாறை அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாதகாரம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×