search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    13 வயது மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்
    X

    13 வயது மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்

    • 13 வயது மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
    • போக்சோவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே சாமி நத்தம் பகுதியை சேர்ந்த சிறுமி 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தெருவில் செல்லும்போது ஈஞ்சார் பகுதிைய சேர்ந்த மாரிமுத்து என்பவர் அவரை கேலி, கிண்டல் செய்து தன்னை காதலிக்கும் படி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் சிறுமி மறுத்துள்ளார்.

    சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அத்துமீறி நுழைந்து அவரை செண்பக தோப்பு பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். அந்த சிறுமி இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் சிறுமியின் தாயிடம் பெண் கேட்டு மாரிமுத்து தகராறு செய்தார்.

    ஆனால் சிறுமியின் தாய் அதற்கு மறுப்பு தெரிவித்தார். அப்போது சிறுமியை தான் பலாத்காரம் செய்து விட்டதாகவும், அதனால் தனக்கு திருமணம் செய்து தர ேவண்டும் என்றும், இல்லாவிட்டால் இருவரையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து மகளிடம் நடந்ததை பற்றி தாய் கேட்டு தெரிந்து கொண்டார். உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை தேடி வருகின்றனர்.

    சிவகாசி மீனம்பட்டி பகுதியை சேர்ந்த 3 சிறுவர்களுக்கு அதே பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து ஒரு சிறுவன் தந்தையிடம் கூறினார். அவரது தந்தை உடனடியாக சிவகாசி கிழக்கு போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். போலீசார் அவர் மீது போக்சோவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×