என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rahul Gandhi"
- அமேதி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியடைந்தார்.
- ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட சோனியா காந்தி, மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் சார்பில் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களாக நிறுத்தப்படப்போவது யார் என்பதுதான் மில்லியன் கேள்வியாக எழுந்துள்ளது. அமேதி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியடைந்த நிலையில், இந்த முறை வயநாடு தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறார்.
ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட சோனியா காந்தி, உடல்நல காரணமாக மக்களவை தொகுதியில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துவிட்டார்.
இந்த இரண்டு தொகுதிகளில் காந்தி குடும்பங்களின் பாரம்பரிய தொகுதிகள் ஆகும். இதனால் ராகுல் காந்தி அமேதியிலும், பிரியங்கா காந்தி ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் விரும்புகிறார்கள். உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் இதைத்தான் விரும்புகிறார்கள்.
அமேதியில் இன்று காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு மே மாதம் 20-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. வருகிற 3-ந்தேதிதான வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்வுக்குழு இன்னும் வேட்பாளரை அறிவிக்காமல் உள்ளது.
கடந்த சனிக்கிழமை இந்த குழு ஆலோசனை நடத்தியது. இருந்தபோதிலும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இதனால் அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் யார் என்பதில் சஸ்பென்ஸ் தொடர்ந்து நீடித்து வருகிறது.
- கடந்த சனிக்கிழமை ரேபரேலி, அமேதி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை தேர்வு செய்ய காங்கிரஸ் தேர்தல் குழுவின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் மத்திய மந்திரி ஸ்மிருதிஇரானியை எதிர்த்து களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதி காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க கோட்டையாக திகழும் தொகுதி ஆகும்.
1951-ம் ஆண்டு தேர்தல் முதல் இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சி தனது வசம் வைத்திருக்கிறது. இந்திய அரசியலில் எத்தனையோ அரசியல் மாற்றங்களும், புயல்களும் வீசினாலும் இந்த தொகுதி காங்கிரசுக்கு விசுவாசமிக்க தொகுதியாக உள்ளது.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ரேபரேலி தொகுதியில் இருந்து 3 முறை பாராளுமன்றத்துக்கு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் பெரோஸ் 1952-ம் ஆண்டு முதல் 1957-ம் ஆண்டு வரை இந்த தொகுதியில் எம்.பி.யாக இருந்து உள்ளார்.
இவர்களை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் சோனியா அடுத்தடுத்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் அந்த தொகுதியில் 4 தடவை தொடர்ந்து எம்.பி.யாக இருந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சோனியா பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாக தேர்வாகி உள்ளார். ரேபரேலி தொகுதியில் போட்டியிடவில்லை என்பதை அவர் கடந்த ஆண்டே அறிவித்து விட்டார். இதனால் ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்பதில் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்திரா, சோனியாவை தொடர்ந்து பிரியங்காவை அந்த தொகுதியில் களம் இறக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும் விருப்பம் தெரிவித்தனர். ரேபரேலி தொகுதியில் இருந்தும் பிரியங்காவை வரவேற்று கடிதங்கள் அனுப்பப்பட்டன. எனவே பிரியங்கா ரேபரேலி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
கடந்த சனிக்கிழமை ரேபரேலி, அமேதி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை தேர்வு செய்ய காங்கிரஸ் தேர்தல் குழுவின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் அந்த 2 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவிக்கும் அதிகாரம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த 2 தொகுதிகளிலும் மே 20-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வருகிற 3-ந்தேதி மனுதாக்கலுக்கு கடைசி நாளாகும்.
எனவே ஓரிரு நாளில் ரேபரேலி தொகுதி வேட்பாளராக பிரியங்கா அறிவிக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக பிரியங்கா பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று கூறி விட்டதாக தெரிய வந்துள்ளது. தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி இருந்து பிரசார பணிகளை மட்டும் மேற்கொள்ள அவர் முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற கேள்விக்குறி எழுந்தது. அதற்கு விடை அளிக்கும் வகையில் இன்று காலை காங்கிரஸ் வட்டாரங்களில் இருந்து பரபரப்பு தகவல் வெளியானது. அதன்படி ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் களம் இறக்கப்படுவார் என்று தெரிகிறது.
இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று வெளியிட உள்ளார். இந்த திடீர் திருப்பத்தால் ரேபரேலி தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
அந்த தொகுதியில் ரோடு ஷோ நடத்தி ராகுல் வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.
வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் மத்திய மந்திரி ஸ்மிருதிஇரானியை எதிர்த்து களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே சமயத்தில் அமேதி தொகுதியில் ஸ்மிருதிஇரானியை எதிர்த்து வெற்றி பெற இயலுமா? என்பதிலும் ராகுலுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் அவர் அமேதியில் களம் இறங்க சற்று தயக்கத்துடன் இருந்து வந்தார். அதை உறுதிபடுத்தும் வகையில் அமேதியில் போட்டியிட தயாராக இருப்பதாக பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா அடிக்கடி சொல்லி வந்தார்.
ஆனால் ராபர்ட் வதேராவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட மாட்டாது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் அது மேலும் சர்ச்சையை உருவாக்கி விடும் என்று சோனியா குடும்பத்தினர் கருதுகிறார்கள்.
இந்த நிலையில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் புதுமுகம் களம் இறங்குவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷீலா கவுலின் பேரனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஷீலா கவுலும் சோனியா குடும்பத்து உறவினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- எதிர்க்கட்சியினர் பிரதமர் பதவியை ஏலம் விடுவதில் மும்முரமாக உள்ளனர்
- இந்தியா கூட்டணியில் ஒரு வருடத்திற்கு ஒரு பிரதமர் என்ற பார்முலாவை உருவாக்க திட்டமிட்டு வருகின்றனர்
பீகாரின் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அமித் ஷா, "பாஜக 2014-ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 30 ஆண்டுகளாக இந்த நாட்டில் ஸ்திரமற்ற அரசாங்கங்கள் இருந்தன. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் நாடு வலுவான தலைமையைப் பெற்றுள்ளது, ஸ்திரத்தன்மையைப் பெற்றுள்ளது. அரசியல் ஸ்திரத்தன்மை மட்டுமல்ல, கொள்கைகளிலும் வளர்ச்சித் திட்டங்களிலும் ஸ்திரத்தன்மை பெற்றுள்ளது.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு ஸ்டாலின் பிரதமராக இருப்பார். அதேபோல மம்தா, சரத் பவாரும் தலா ஓராண்டுக்கு பிரதமராக இருப்பார்கள். ஏதேனும் ஒரு ஆண்டு மிச்சமிருந்தால் ராகுல் பிரதமராவார்" என்று பேசியுள்ளார்.
இதற்கு முன்னதாக, "எதிர்க்கட்சியினர் பிரதமர் பதவியை ஏலம் விடுவதில் மும்முரமாக உள்ளனர். இந்தியா கூட்டணி கட்சியினர் ஒரு வருடத்திற்கு ஒரு பிரதமர் என்ற பார்முலாவை உருவாக்க திட்டமிட்டு வருகின்றனர்" என்று பிரதமர் மோடி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வேறு யாரை அங்கு வேட்பாளராக களம் இறக்குவது என்று ஆலோசனை நடந்து வருகிறது.
- காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தொகுதிகளாக கருதப்படுகின்றன. ரேபரேலி தொகுதியில் இருந்து சோனியா தேர்வு செய்யப்பட்டு வந்தார். தற்போது அவர் மேல்சபை எம்.பி. ஆகி விட்டதால் அந்த தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியானது. இதற்கிடையே ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் களம் இறங்குவார் என்று தகவல்கள் வெளியானது. கடந்த முறை ராகுல் அமேதி தொகுதியில் ஸ்மிருதிஇரானியிடம் தோல்வியை தழுவினார். வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அவர் எம்.பி. யாக முடிந்தது. இந்த தடவையும் அவர் வயநாடு தொகுதியில் களம் இறங்கி உள்ளார். அந்த தொகுதியில் ஓட்டுப்பதிவு முடிந்துவிட்டது.
இந்த நிலையில் அவர் அமேதியிலும் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அமேதியில் ராகுலையும், ரேபரேலியில் பிரியங்காவையும் களம் இறக்குவது பற்றி காங்கிரஸ் தேர்தல் மையக்குழு ஆலோசனை கூட்டம் கடந்த சனிக்கிழமை டெல்லியில் நடந்தது. அதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அமேதி, ரேபரேலி தொகுதி நிலவரம் பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ராகுல் மற்றும் பிரியங்காவை இந்த தொகுதிகளில் போட்டியிட வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விருப்பம் தெரிவித்தனர். ராகுல் போட்டியிடுவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அமேதி தொகுதியில் ராகுல் போட்டியிடுவது தொடர்பாக அறிவிப்பை காங்கிரஸ் வெளியிடவில்லை.
இந்த நிலையில் அமேதி தொகுதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26-ந்தேதி தொடங்கியது. வருகிற 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். இந்த நிலையில் இன்று பா.ஜ.க. வேட்பாளர் ஸ்ருமிதி இரானி மனுதாக்கல் செய்து உள்ளார். அவரை எதிர்த்து ராகுல் களத்தில் இறங்குவாரா? என்பதில் தற்போது கேள்விக்குறி எழுந்துள்ளது. ஸ்ருமிதிஇரானியை எதிர்த்து போட்டியிட ராகுல் மிகவும் தயங்குவதாக தெரிய வந்துள்ளது. கடந்த முறை ராகுலை சுமார் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இரானி வீழ்த்தி இருந்தார். அதன் பிறகு அவர் அமேதி தொகுதியில் ஏராளமான வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு அந்த தொகுதியில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. இதனால் அமேதியில் போட்டியிட்டால் மீண்டும் தோல்வியை தழுவ நேரிடுமோ? என்று ராகுல்காந்தி தயங்குவதாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து வேறு யாரை அங்கு வேட்பாளராக களம் இறக்குவது என்று ஆலோசனை நடந்து வருகிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். அவரை அமேதியில் காங்கிரஸ் களம் இறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரியல் எஸ்டேட் உள்பட பல்வேறு தொழில்கள் செய்து வரும் ராபர்ட் வதேரா மீது ஏற்கனவே மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- நவாப்கள், நிஜாம்கள், சுல்தான்கள், பாத்ஷாக்கள் செய்த அட்டூழியங்களைப் பற்றி வயநாடு எம்பி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை
- முகலாயப் பேரரசர் ஔரங்கசீப், நமது ஆயிரக்கணக்கான கோவில்களை அழித்ததை காங்கிரஸ் மறந்துவிட்டதாக தெரிகிறது
கர்நாடகாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி "பல ராஜாக்கள், மகாராஜாக்கள் நம்மை மீண்டும் ஆட்சி செய்தனர். அவர்கள் விரும்பியதைச் செய்து, விவசாயிகளின் நிலத்தை விருப்பப்படி பறித்தார்கள்.
காங்கிரசும் அதன் தொண்டர்களும்தான், சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் சேர்ந்து, ஒடுக்குமுறையாளர்களிடமிருந்து இந்திய மக்களுக்கு சுதந்திரம் அளித்து, நாட்டில் ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் மீட்டெடுத்தார்கள் என்று பேசியிருந்தார்.
ராகுல்காந்தியை இந்த பேச்சிற்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவின் பெலகாவியில் இன்று நடைபெற்ற மெகா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், "காங்கிரஸ் கட்சியின் இளவரசன் (ராகுல்காந்தி), அன்றைய நமது ராஜாக்களும், மகாராஜாக்களும் இரக்கமற்றவர்கள் என்றும் அவர்கள் ஏழைகளின் எளிய சொத்துக்களைப் பறித்தனர்.
சத்ரபதி சிவாஜி மகாராஜ் மற்றும் கிட்டூர் இராணி சென்னம்மா ஆகியோரின் நல்லாட்சி மற்றும் தேசபக்தி இன்னும் நம்மை தேசப் பெருமையையும் கௌரவத்தையும் நிரப்புகின்றன. அப்படிப்பட்டவர்கர்களை ராகுல்காந்தி அவமதித்துள்ளார்.
நாம் அனைவரும் மிகவும் உயர்வாகக் கருதும், பெருமைப்படும் மைசூர் அரச குடும்பத்தின் பங்களிப்பு பற்றி அவருக்குத் தெரியாதா?
நவாப்கள், நிஜாம்கள், சுல்தான்கள், பாத்ஷாக்கள் செய்த அட்டூழியங்களைப் பற்றி வயநாடு எம்பி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை.
முஸ்லிம் பேரரசர்கள் தங்கள் விவசாயிகளுக்கு இழைத்த அத்துமீறல்கள் மற்றும் அட்டூழியங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் மௌனமாக இருக்கிறார்.
முகலாயப் பேரரசர் ஔரங்கசீப், நமது ஆயிரக்கணக்கான கோவில்களை அழித்ததை காங்கிரஸ் மறந்துவிட்டதாகத் தெரிகிறது.
ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் வாக்கு வங்கியை பெறுவதற்காக அவர் பேசுகிறார். ராகுலுக்கு கவலை அளிப்பது அவரது வாக்கு வங்கி மட்டுமே.
நமது புனிதத் தலங்களை அழித்த, கொள்ளையடித்த, நம் மக்களைக் கொன்று குவித்த கால்நடைகளையும் படுகொலை செய்த மன்னர்களைப் பற்றி அவர் பேசுவதில்லை
முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப்-ஐ புகழ்ந்து பேசுவபர்கள் உடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது
பெனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அந்நாளில் நகரத்தை ஆண்ட அரசரின் உதவியின்றி நிறுவப்பட்டிருக்க முடியாது.
பரோடாவின் மகாராஜா கெய்க்வாட், பாபா சாகேப் அம்பேத்கரை வெளிநாட்டில் உயர்கல்வி படிக்க உதவியிருக்கிறார்.
இதெல்லாம் காங்கிரசின் இளவரசனுக்கு தெரியாது" என்று அவர் தெரிவித்தார்.
- அன்வர் மீது எர்ணாகுளத்தை சேர்ந்த பிஜூ நோயல் என்பவர் மன்னார்காடு முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் புகார் செய்தார்.
- அன்வர் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் நீலம்பூர் தொகுதி இடதுசாரி ஜனநாயக முன்னணியின் எம்.எல்.ஏ. அன்வர். இவர் பாலக்காடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளர் விஜயராகவனை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தபோது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பற்றி மிகவும் அவதூறாக பேசினார்.
அதாவது காந்தி என்ற குடும்ப பெயருடன் அழைக்க தகுதியற்ற நான்காம் தர குடிமகனாக ராகுல் காந்தி மாறிவிட்டார். காந்தி என்ற குடும்ப பெயரை விடுவித்து ராகுல் என்று தான் அவரை அழைக்க வேண்டும். ராகுலின் டி.என்.ஏ.வை ஆய்வு செய்யவேண்டும் என்று பேசினார்.
அவரது இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அன்வர் எம்.எல்.ஏ. மீது தேர்தல் ஆணையத்தில் கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் ஹாசன் புகார் செய்தார். மேலும் அவர் மீது எர்ணாகுளத்தை சேர்ந்த பிஜூ நோயல் என்பவர் மன்னார்காடு முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் புகார் செய்தார்.
அதனை விசாரித்த கோர்ட்டு, அன்வர் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்பேரில் அன்வர் எம்.எல்.ஏ. மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் 153(1) ஏ மற்றும் 125 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
- கண்ணூர் பினராயி அரசு ஆரம்ப பள்ளியில் முதல்-மந்திரி பினராயி விஜயன் வாக்களித்தார்.
- மலையோர பகுதிகளில் எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை.
திருவனந்தபுரம்:
நாடு முழுவதும் 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19-ந்தேதி 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளும் அடங்கும்.
2-வது கட்டமாக 88 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் ஆர்வமுடன் ஓட்டு போட்டனர்.
அதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், மந்திரிகள், நடிகர்களும் ஆர்வமுடன் அவர்களுக்குரிய வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர். முதியவர்களும், முதல் தலைமுறை வாக்காளர்களும் ஆர்வமுடன் வந்து வாக்களித்ததை காணமுடிந்தது.
கண்ணூர் பினராயி அரசு ஆரம்ப பள்ளியில் முதல்-மந்திரி பினராயி விஜயன் வாக்களித்தார். எர்ணாகுளத்தில் உள்ள ஒரு பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் நடிகர் மம்முட்டி ஓட்டு போட்டார்.
சில வாக்குச்சாவடிகளில் எந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமானது. மேலும் எந்திரத்தில் சின்னம் மாறியதாலும் பிரச்சனை ஏற்பட்டது. சில இடங்களில் கள்ள ஓட்டு போடப்பட்டதாகவும் பிரச்சனை எழுந்தது.
அந்த வகையில் கண்ணூர் சப்பாரபடா வாக்குச்சாவடியில் கதீஜா என்பவரின் ஓட்டு கள்ளஓட்டு போடப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு டெண்டர் ஓட்டு போட அனுமதி அளிக்கப்பட்டது. காசர்கோட்டில் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் சேர்குளா அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் கள்ளஓட்டு போட முயற்சிப்பதாக இடதுசாரி முன்னணி தொண்டர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் அளித்தனர்.
கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் மலையோர பகுதியில் உள்ள மாவோயிஸ்டுகள் துப்பாக்கியுடன் சில நாட்களுக்கு முன்பு ஊருக்குள் வந்து யாரும் வாக்களிக்கக்கூடாது என மிரட்டி சென்றனர். ஆனாலும் நேற்று பொதுமக்கள் அந்த தொகுதியில் ஆர்வமுடன் வாக்களித்ததை காணமுடிந்தது. மலையோர பகுதிகளிலும் எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. இதனால் ராகுல் தொகுதியில் 71.69 சதவீதம் வாக்குகள் பதிவானது. இது கேரளாவின் மொத்த சதவீதத்தை விட அதிகம்.
இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சை கவுல் கூறுகையில், ''கேரளாவில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. மாலை 6 மணிக்கு முன்னதாக வந்தவர்கள், வாக்குப்பதிவு நேரத்தை கடந்த பிறகு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்'' என்றார்.
கேரளாவில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 77 லட்சத்து 49 ஆயிரத்து 159 ஆகும். இதில் மாநிலம் முழுவதும் 70.35 சதவீதம் பேர் வாக்களித்தனர்.
- அக்னிவீர் திட்டத்தை கொண்டு வந்து இளைஞர்களிடம் இருந்து ராணுவ பணியை பறித்தார்.
- 20 முதல் 25 பேரை கோடீஸ்வரர்களாக்கி, அவர்களுக்கு நாட்டின் வளத்தை கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-
நீங்கள் பிரதமர் மோடியின் பேச்சை கேட்டிருப்பீர்கள். அவர் பயப்படுகிறார். அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும். அக்னிவீர் திட்டத்தை கொண்டு வந்து இளைஞர்களிடம் இருந்து ராணுவ பணியை பறித்தார். 20 முதல் 25 பேரை கோடீஸ்வரர்களாக்கி, அவர்களுக்கு நாட்டின் வளத்தை கொடுத்துள்ளார்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
400 இடங்களில் வெற்றி என்பதை இலக்காக வைத்து பா.ஜனதா தேர்தல் பிரசாரத்தை தொடங்கியது. முதல் கட்ட தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்கவில்லை. இதனால் பா.ஜனதா பிரச்சனையை திசைதிருப்ப முயற்சிக்கிறது என காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது. பாஜனதாவுக்கு 150 இடங்களுக்கு மேல் கிடைக்க வாய்ப்பில்லை எனவும் காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது.
- மணிப்பூரில் கடந்த வருடம் நடைபெற்ற வன்முறையின்போது மனித உரிமை மீறல்.
- ராகுல்காந்திக்கு தண்டனை வழங்கப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் கடந்த வருடம் மணிப்பூரில் நடைபெற்ற வன்முறைக்குப்பிறகு குறிப்பிடத்தகுந்த அளவிற்கு மனிதாபிமான மீறல் நடைபெற்றுள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அறிக்கைக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்து. அந்த அறிக்கை மிகவும் பாரபட்சமானது. இந்திய நாட்டின் மோசமான புரிதலை பிரதிபலிக்கிறது.
மேலும் அந்த அறிக்கையில் பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சுமார் 60 மணி நேரம் விசாரணை நடத்தியது. மோடியின் குடும்ப பெயர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு தண்டனை வழக்கப்பட்டு, அதன்பின் உச்சநீதிமன்றம் அதற்கு தடைவிதித்தது உள்ளிட்ட விவகாரங்களையும் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் மனித உரிமைகள் நடைமுறைகள் குறித்த நாட்டின் அறிக்கைகள் என்ற பெயரில் அறிக்கை வெளியிடும். அதன்படி 2023 மனித உரிமைகள் நடைமுறைகள் குறித்த நாட்டின் அறிக்கைகள்: இந்தியா என்ற பெயரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவ்வாறு தெரிவித்துள்ளது.
- மத்திய பா.ஜ.க., அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகளை சொல்லி நடந்து வரும் தேர்தலில் வாக்குகளை சேகரிக்கிறோம்.
- வாக்காளர்கள் தமிழகம் முழுவதும் விடுபட்டுள்ளார்கள்.
திருப்பூர்:
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க., வேட்பாளருமான ஏ.பி.முருகானந்தம் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாரதிய ஜனதா கட்சிக்கு முதல் வெற்றி குஜராத்தில் தொடங்கியுள்ளது. சூரத் தொகுதியில் பா.ஜ.க., வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் 400 இடங்களுக்கு அதிகமாகவே பா.ஜ.க. கைப்பற்றும்.
தமிழகத்தில் பா.ஜ.க., தலைவர்கள் முதல் பிரதமர் மோடி தொடங்கி அண்ணாமலை வரை அனைவரின் சுற்றுப்பயணம் தமிழகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 39 தொகுதிகளிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசியல் புரட்சியை பா.ஜ.க., மேற்கொண்டுள்ளது. ஜூன் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை முடிவில் இது தெரியும்.
மத்திய பா.ஜ.க., அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகளை சொல்லி நடந்து வரும் தேர்தலில் வாக்குகளை சேகரிக்கிறோம். தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் எந்த வேலையையும் செய்யவில்லை. வாக்காளர்கள் தமிழகம் முழுவதும் விடுபட்டுள்ளார்கள். இது எங்களுக்கு மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க., வாக்கு வங்கி உள்ள பகுதிகளில் இது நடந்திருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. இது ஆளுங்கட்சி தலையீடாக கூட இருக்கலாம்.
ராகுல் காந்தி- பிரியங்கா ஆகியோர் கோவிலுக்கு செல்வது தேர்தல் காலத்தில் மட்டும்தான். இந்தியா கூட்டணி என்பது ஒன்றுமில்லாத ஒன்று.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட தலைவர் செந்தில்வேல் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- கேரள மாநிலம் வயநாட்டில் தற்போது எம்.பி.யாக இருந்து வரும் ராகுல் காந்தி கடந்த தேர்தலில் அமேதி தொகுதியிலும் போட்டியிட்டார்.
- ராகுல் காந்தியும், பிரியங்காவும் மே மாதம் 1-ந்தேதியில் இருந்து 3-ந்தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் நேரு குடும்பத்தின் கோட்டையாக ரேபரேலி தொகுதி இருந்து வருகிறது. கடந்த 1999-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இத்தொகுதி எம்.பி.யாக உள்ளார். சென்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்ற ஒரே தொகுதி ரேபரேலி ஆகும்.
ஆனால் இம்முறை சோனியா காந்தி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. இதையடுத்து அவர் மேல்- சபை எம்.பியாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் வருகிற தேர்தலில் ரேபரேலியில் யார் போட்டியிட போகிறார்கள்? என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இதுவரை காங்கிரஸ் சார்பில் இங்கு போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை.
நேரு குடும்பத்துக்கு சொந்தமானதாக கருதப்படும் இத்தொகுதியில் சோனியா காந்தியின் மகளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி களம் இறக்கப்பட உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வரும் பிரியங்கா முதல் முறையாக தேர்தலை நேரடியாக சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரசேதத்தின் மற்றொரு தொகுதியான அமேதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கேரள மாநிலம் வயநாட்டில் தற்போது எம்.பி.யாக இருந்து வரும் ராகுல் காந்தி கடந்த தேர்தலில் அமேதி தொகுதியிலும் போட்டியிட்டார்.
கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறை எம்.பி.யாக இருந்த அவர் சென்ற தேர்தலில் தற்போதைய மத்திய மந்திரியான ஸ்ருமிதி இரானியிடம் தோல்வியை தழுவினார். இருந்தபோதிலும் இம்முறை பாரதிய ஜனதாவை வீழ்த்தி வெற்றி கனியை எப்படியாவது பறித்து விட வேண்டும் என்ற முனைப்பில் ராகுல் காந்தி அமேதியில் களம் இறங்க உள்ளார். இன்னும் ஓரிரு நாளில் இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட உள்ளனர். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராகுல் காந்தியும், பிரியங்காவும் மே மாதம் 1-ந்தேதியில் இருந்து 3-ந்தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக இருவரும் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று வழிபட முடிவு செய்துள்ளனர்.
அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் 2-ம் கட்டமாக மே மாதம் 20-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 26-ந்தேதி தொடங்கி மே மாதம் 3-ந்தேதியுடன் முடிவடைய இருக்கிறது.
- 16 கோடி இளைஞர்களுக்கு ₹1 லட்சம் சம்பளத்துடன் வேலை கொடுத்திருக்கலாம்.
- இந்திய ராணுவத்தின் 3 ஆண்டுகளுக்கான செலவை செய்திருக்கலாம்
பிரதமர் மோடி தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு தள்ளுபடி செய்த ₹16 லட்சம் கோடியில் என்னென்ன செய்திருக்கலாம் என்று தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார். அதில்,
"இந்த ₹16 லட்சம் கோடி பணத்தை வைத்து,
16 கோடி இளைஞர்களுக்கு ₹1 லட்சம் சம்பளத்துடன் வேலை கொடுத்திருக்கலாம்.
16 கோடி பெண்களுக்கு ஆண்டுக்கு ₹1 லட்சம் உதவித்தொகை வழங்கியிருக்கலாம்.
இந்திய ராணுவத்தின் 3 ஆண்டுகளுக்கான செலவை செய்திருக்கலாம்.
10 கோடி விவசாயிகளின் குடும்பங்களுக்கு கடன் தள்ளுபடி செய்து பல தற்கொலைகளை தடுத்திருக்கலாம்.
20 ஆண்டுகளுக்கு ஒட்டுமொத்த நாட்டுக்கும் ₹400-க்கு கேஸ் சிலிண்டர்கள் கொடுத்திருக்கலாம்.
பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கியிருக்கலாம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்