search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pregnant"

    • கள்ளக்காதல் மூலம் கர்ப்பிணியான பெண் குழந்தையுடன் மாயமானார்.
    • அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் விவேகானந்தர் புரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 36). இவரது மனைவி அழகு ராணி (25). இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    கடந்த சில மாதங்களாக அழகு ராணி தூத்துக்குடியைச் சேர்ந்த பாண்டி என்பவருடன் பழகி வந்தார். இது குறித்து கணவர் கேட்டபோது தான் சகோதர முறையில் பழகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அழகு ராணி தனது கணவரிடம் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அதற்கு தூத்துக்குடியைச் சேர்ந்த பாண்டி தான் காரணம் என கூறியுள்ளார். இதனால் மாரிமுத்து அதிர்ச்சி அடைந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த அழகு ராணி தனது 5 வயது மகளுடன் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாரிமுத்து அம்மாபட்டி போலீசில் புகார் செய்தார். அதில் தனது மனைவி மாயமான தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த பாண்டி மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏற்காட்டில் ஒரு பெண்ணுக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது.
    • ஆம்புலன்சை சாலையின் ஓரமாக நிறுத்திய ஊழியர்கள், பெண்ணுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 25). கூலி தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (20). நிறைமாத கர்ப்பிணியான நந்தினிக்கு இன்று அதிகாலை 1 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஏற்காடு அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் பணியில் இருந்த சிகாமணி மற்றும் ஓட்டுநர் ஆசைத்தம்பி ஆகியோர் வந்து நந்தினியை வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் ஆத்து பாலம் அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது நந்தினிக்கு பிரசவ வலி அதிகமானது. அதை தொடர்ந்து ஆம்புலன்சை சாலையின் ஓரமாக நிறுத்திய ஊழியர்கள், நந்தினிக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர்.

    இதையடுத்து 1.30 மணி அளவில் நந்தினிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக நந்தினி, குழந்தையை சேலம் அரசு மருத்துவமனை கொண்டு வந்து சேர்த்தனர். குறித்த நேரத்தில் பிரசவம் பார்த்து தாயையும், சேயையும் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர் சிகாமணி மற்றும் ஓட்டுநர் ஆசைத்தம்பி ஆகியோருக்கு நந்தினியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

    • 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு சீதன பொருட்களை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
    • ரூ.43 ஆயிரம் மதிப்பில் முதியோர், ஆதரவற்ற விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகைகளையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கி பேசினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், நரிக்குடி மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

    இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை வழங்கினார்.

    மேலும் கர்ப்பிணி பெண்களின் இரும்புச் சத்து குறைபாட்டை சரி செய்ய மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மூலம் இரும்பு பெண்மணி என்ற சிறப்பு திட்டத்தையும் தொடங்கி வைத்து, இரும்பு சத்து மற்றும் ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அமைச்சர் பயனாளிகளுக்கு வழங்கினார்.

    கருப்பு உலர் திராட்சை, உலர் அத்தி பழம், சிவப்பு அவல், புரதச்சத்து மற்றும் இரும்புச் சத்து பொருட்கள் அடங்கிய இந்த தொகுப்பு மாதம் ஒரு முறை 3 மாதங்களுக்கு வழங்கப்படும். பின்னர் 43 பயனாளி களுக்கு ரூ.43 ஆயிரம் மதிப்பில் முதியோர், ஆதரவற்ற விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகைகளையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கி பேசினார்.

    விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் யசோதாமணி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், திருச்சுழி யூனியன் தலைவர் பொன்னுதம்பி, வட்டாட்சியர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 17 வயது சிறுமி ஒருவர் கடந்த வருடம் பள்ளி விடுமுறைக்கு இவரது வீட்டிற்கு வந்துள்ளார்.
    • சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கண்டியன்கோவில் பகுதியில் வசித்து வருபவர் விமல்ராஜ் (வயது26) .இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இந்த நிலையில், இவரது உறவினரான 17 வயது சிறுமி ஒருவர் கடந்த வருடம் பள்ளி விடுமுறைக்கு இவரது வீட்டிற்கு வந்துள்ளார்.

    அப்போது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தை வெளியில் கூறினால் கொன்று விடுவதாக மிரட்டி உள்ளார். இதேபோல மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கர்ப்பமான அந்த சிறுமிக்கு நேற்று முன்தினம் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமி கொடுத்த புகாரின் பேரில், விமல் ராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து, பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 11 வயதில் இரட்டை ஆண் குழந்தையும், 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
    • வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் பச்சிளம் குழந்தை உடல் புதைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா, வேடம்பூர் தோப்புத் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்.இவரது மனைவி ரேவதி. இவர்களது மூத்த மகள் ரேணுகா (வயது 33).

    இவருக்கும் நாகை மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்த முத்து என்பவருக்கும் 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 11 வயதில் இரட்டை ஆண் குழந்தையும், 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

    முத்து கடந்த 7 வருடங்களாக ரேணுகாவை பிரிந்து விட்டு திருப்பூரில் பணியாற்றி வருகிறார். இதனால் ரேணுகா தனது மூன்று குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். அங்கிருந்து குடவாசலில் உள்ள ஒரு ஜவுளி கடையில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது இவருக்கு கமலேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளகாதலாக மாறியது. இவர்கள் நெருங்கி பழகியதால் ரேணுகா கர்ப்பமடைந்து கடந்த 22 -ஆம் தேதி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் இவரது வீட்டு பின்புறம் உள்ள இடத்தில் அந்த பச்சிளம் குழந்தை உடல் புதைக்கப்பட்டு உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தை தோண்ட முடிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் குழந்தை இறந்து அதன் பிறகு புதைக்கப்பட்டதா? அல்லது கள்ளகாதலில் பிறந்த குழந்தை என்பதால் கொன்று புதைக்கப்பட்டதா? என்ற பல்வேறு கோணங்களில் ரேணுகா, கமலேஷ் உள்ளிட்ட சிலரிடம் துருவி துருவி விசாரித்து வருகின்றனர். விசாரணையின் முடிவில் உண்மை நிலவரம் என்னவென்று தெரியவரும்.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பிப்ரவரி மாதம் 28 ம் தேதி வீட்டில் இருந்து சிறுமி மாயமானார்.
    • பலமுறை சிறுமியுடன் பாலியல் உறவு வைத்துள்ளார்.

    உடுமலை :

    உடுமலை அடுத்த போடிப்பட்டி சேர்ந்தவர் 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 28 ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் போடிபட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் லோகேஷ்( வயது 22) . தொழிலாளி யான இவர் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றுள்ளார். உடுமலையில் உள்ள கோவிலின் முன்பு வைத்து சிறுமிக்குக்கு தாலி கட்டியுள்ளார் . பின்னர் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை சென்று கணவன் மனைவி என்று சொல்லி வீடு எடுத்து தங்கி உள்ளனர். மேலும் பலமுறை சிறுமியுடன்பாலியல் உறவு வைத்துள்ளார். இதில் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

    இந்த சம்பவம் குறித்து உடுமலை மகளிர் போலீசார் விசாரணை நடத்தி லோகேசை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். 

    • அரசு மருத்துவமனையில் எலிகள் தொல்லையால் மகப்பேறு வார்டில் அச்சத்துடன் கர்ப்பிணிகள் உள்ளனர்
    • உணவு பொருட்களை கண்ட இடங்களில் வீசக்கூடாது

    திருச்சி:

    சமீபத்தில் தெலுங்கான மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தையை எலிகள் கடித்துக்குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல் ஜார்கண்ட் மாநிலத்திலும் சிகிச்சைக்காக வந்த பெண் ஒருவரின் கண்களில் எலி கடித்ததால் பார்வையிழக்கும் நிலை உருவானது. தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் மகப்பேறு வார்டில் உள்ள முதல் தளத்தில் எலிகள் தொல்லை அதிகமாக இருப்பதாக அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர்.

    இதுகுறித்து அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவரின் கணவர் கூறுகையில், என் மனைவியை பிரசவத்திற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு வார்டில் சேர்த்து இருக்கிறேன். இங்கு மிகவும் சுகாதாரம் இல்லாமல் வார்டுகள் இருக்கிறது. குறிப்பாக கழிப்பறைக்கு சென்றால் தண்ணீர் இல்லாத நிலை உள்ளது.

    முக்கிய பிரச்சினையாக முதல் தளத்தில் உள்ள வார்டுகளில் எலிகள் அதிகமாக நடமாடுகிறது. திடீரென பொது மக்கள் அசந்த நேரத்தில் பிறந்த குழந்தைகளை கூட கடிக்கும் அபாயமும் உள்ளது. ஆகவே இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவும் எலிகள் மிகப்பெரிய அளவில் எடை கொண்டதாக இருப்பதால் அதை சமாளிப்பதற்கு பொது மக்கள் பெரும் சிரமம் அடைகிறார்கள்.

    இரவு நேரத்தில் நோயாளிகள் தூங்கி கொண்டிருக்கும் போது அவர்கள் உண்பதற்காக வைத்திருக்கும் உணவு பொருட்களை எலிகள் சாப்பிடுவதற்காக சரளமாக வார்டிற்குள் நுழைகிறது. மேலும் இதுகுறித்து முதல் தளத்தில் இருக்கு அச்சப்பட்டு வேறு தளத்திற்கு தங்களை மாற்றுங்கள் என்று மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் நோயாளிகள் முறையிடுகின்றனர்.

    மேலும் நோயாளிகளுக்கு காலில் புண்கள் இருந்தால் அந்த ரத்த வாசனைக்கு எலிகள் வந்து காலை கடித்து விடுகின்றன. கழிப்பறைக்கு சென்றால் உள்ளே பெரிய அளவிலான எலிகள் உலாவிக் கொண்டிருக்கிறது. இதனால் மகப்பேறு வார்டில் முதல் தளத்தில் இருப்பதே ஒரு பெரும் சவாலாக உள்ளது. ஆகவே எலிகள் தொல்லையை ஒழிக்க திருச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை டீன் நேரு கூறுகையில், எலிகள் மருத்துவமனை வார்டிற்குள் வர காரணம் பொதுமக்கள் தான். என்னவென்றால் தாங்கள் கொண்டு வரும் உணவு பொருட்களை சாப்பிட்டு விட்டு மீதமுள்ள உணவுகளை குப்பை தொட்டியில் போடாமல் கண்ட இடங்களில் வீசுகிறார்கள் இதனால் எலிகள் அதை சாப்பிடுவதற்காக வருகிறது.

    மேலும் சுவர்களில் அதிக துளைளையும் ஏற்படுத்தி இருக்கிறது.அதை அடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்கள் தாங்கள் கொண்டு வரும் உணவு கழிவுகளை குப்பை தொட்டியில் போடுங்கள். மருத்துவமனையை சுகாதாரமாக பயன்படுத்துங்கள்.எலிகளை அழிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    ஆண்டிப்பட்டி அருகே காதலிப்பதாக கூறி மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே சித்தார்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் குருநாதன் மகன் நிதீஷ்குமார் (வயது21). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 15 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    அந்த மைனர் பெண் தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். இதனால் அடிக்கடி அங்கே சென்ற நிதீஷ்குமார் இளம்பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் உறுதி அளித்துள்ளார்.

    மேலும் அடிக்கடி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த சில நாட்களாக அந்த பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் சோதனை செய்து பார்த்தபோது 2 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

    இது குறித்து ராஜதானி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதீஷ்குமாரை தேடி வருகின்றனர்.

    பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுப்பதாக வாலிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    மதுரை:

    அவனியாபுரம் தந்தை பெரியார் நகர் ஜெகதீஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன் பிரவீன்குமார் (வயது22). இவர் 17 வயது பிளஸ்-2 மாணவியுடன் நெருங்கி பழகி உள்ளார்.

    மேலும் மாணவிக்கு திருமண ஆசை காட்டி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமானார்.

    இதனை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாணவி கேட்டார். ஆனால் பிரவீன் குமார் மறுத்து விட்டார். இதுகுறித்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை ஏமாற்றிய பிரவீன்குமாரை தேடி வருகின்றனர்.

    இதேபோல் மதுரை எஸ்.ஆலங்குளம் குலமங்கலம் மெயின்ரோடு அன்பு நகரைச் சேர்ந்தவர் ராஜபூபதி, கூலி தொழிலாளி (35). இவருக்கும், 17 வயது கல்லூரி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    தினமும் கல்லூரிக்கு சென்றுவரும்போது அவர்களிடையே நெருக்கம் அதிகரித்தது. இதனை தொடர்ந்து மாணவியை தனது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தண்டான்தோப்பு பகுதிக்கு ராஜபூபதி அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பம் அடைந்தார்.

    இதுகுறித்து ராஜபூபதியிடம் தெரிவித்தபோது அவரும், உறவினர்கள் செல்வராணி, முருகேச பாண்டியன், வளர்மதி ஆகியோரும் கருவை கலைக்கும்படி கூறி உள்ளனர். மேலும் அதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் மாணவி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜபூபதி மற்றும் முருகேசபாண்டியனை கைது செய்தனர்.

    ஊத்தங்கரை அருகே கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். வயிற்றிலேயே இறந்த குழந்தையை ஆபரேசன் மூலம் டாக்டர்கள் அகற்றினர்.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி அருகே புதூர்பூகுனை பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் ஊத்தங்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    அந்த மாணவியின் தாயார் கணவரை பிரிந்து கோவையில் உள்ள ஒரு தனியார் நூல் மில்லில் பணியாற்றி வருகிறார்.

    மாணவி தனது தாத்தா-பாட்டியுடன் புதூர் பூகுனை பகுதியில் வசித்து வந்தார். இங்கிருந்து தான் தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வயிறு பகுதி வீக்கம் அடைந்து வலியால் அவதியடைந்தார்.

    இதுகுறித்து அவரது தாத்தா கோவையில் உள்ள மாணவியின் தாயாருக்கு தகவல் கொடுத்தார். அவர் தனது மகளை ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு கல்லூரி மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், மாணவியின் வயிற்றில் 7 மாத குழந்தை இறந்து கிடப்பதாகவும் தெரிவித்தனர்.

    பின்னர் மாணவியை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு ஆபரேசன் மூலம் இறந்த குழந்தையை வெளியே எடுத்தனர். மாணவியின் உயிரை காப்பாற்றி விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து மாணவியின் தாயார் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த 3 குழந்தைகளின் தந்தையான தமிழரசன் (வயது30) கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதுபற்றி மாணவி யாரிடமும் சொல்லாமல் இருந்து உள்ளார். இதனால் மாணவி கர்ப்பம் ஆனது தெரியவந்தது.

    போலீசார் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ததால் தமிழரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர்.

    கோவையில் 9-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் அடைந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சிறுமியின் வயிறு பெரிதாக காணப்பட்டதோடு அடிக்கடி உடல்நலக்குறைவும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் சிறுமியை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். 

    இதுகுறித்த தகவலின் பேரில் செல்வபுரம் மற்றும் மாநகர மேற்கு பிரிவு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியாங்குப்பத்தில் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த ரவுடியை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 9-ந் தேதி வீட்டில் இருந்தபோது காணாமல் போனார்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்தனர். அதில், தனது மகளை யாரோ கடத்தி சென்று விட்டனர் என்று கூறி இருந்தனர்.

    இந்த புகாரை அடுத்து போலீசார் கடத்தல் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அந்த சிறுமியை கடத்தி சென்றது அவரது உறவினரான ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த ரமணா என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சிறுமி தானாகவே வீட்டுக்கு வந்தார். இதை அறிந்த அரியாங்குப்பம் போலீசார் அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக எல்லைப் பிள்ளைச்சாவடியில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அப்போது டாக்டர்கள் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். அதில் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து டாக்டர்கள் குழந்தைகள் நலக்குழு ராஜேந்திரனுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதில், சிறுமியை ரமணா கர்ப்பமாக்கியது தெரிய வந்தது.

    இதையடுத்து குழந்தைகள் நலக்குழுவினர் சீனியர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார்.

    இதன் மீது விசாரணை நடத்திய போலீசார் கடத்தல் வழக்கை குழந்தைகளுக்கு எதிரான பாலியல் (போக்சோ) வழக்காக மாற்றி ரமணவை தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ரமணா ரவுடியாக செயல்பட்டு வந்தார். அவர் மீது 2 கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×