என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
- பிப்ரவரி மாதம் 28 ம் தேதி வீட்டில் இருந்து சிறுமி மாயமானார்.
- பலமுறை சிறுமியுடன் பாலியல் உறவு வைத்துள்ளார்.
உடுமலை :
உடுமலை அடுத்த போடிப்பட்டி சேர்ந்தவர் 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 28 ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் போடிபட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் லோகேஷ்( வயது 22) . தொழிலாளி யான இவர் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றுள்ளார். உடுமலையில் உள்ள கோவிலின் முன்பு வைத்து சிறுமிக்குக்கு தாலி கட்டியுள்ளார் . பின்னர் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை சென்று கணவன் மனைவி என்று சொல்லி வீடு எடுத்து தங்கி உள்ளனர். மேலும் பலமுறை சிறுமியுடன்பாலியல் உறவு வைத்துள்ளார். இதில் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து உடுமலை மகளிர் போலீசார் விசாரணை நடத்தி லோகேசை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்