search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pregnant"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழந்தையை பார்த்ததும், அவருக்கு பிரசவம் பார்த்த டாக்டர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
    • டாக்டர்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

    பாட்னா:

    பீகார் மாநிலம், சாப்ராவை அடுத்த ஷியாம்சாக் பகுதியை சேர்ந்தவர் பிரசுதா பிரியா தேவி.

    நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரசுதா பிரியா தேவியை உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் நர்சிங் ஹோமில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் பிரசவம் பார்த்தனர்.

    இதில் அந்த பெண், அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். குழந்தையை பார்த்ததும், அவருக்கு பிரசவம் பார்த்த டாக்டர்கள் ஆச்சரியம் அடைந்தனர். காரணம் அந்த குழந்தைக்கு 4 கால்கள், 4 கைகள், 4 காதுகள் மற்றும் 2 முதுகுகள் இருந்தன. இதுபோல குழந்தையின் உடலை பரிசோதித்தபோது, குழந்தைக்கு 2 இதயங்களும் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த குழந்தையை டாக்டர்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். என்றாலும் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பிறந்த 20 நிமிடங்களிலேயே பரிதாபமாக இறந்தது.

    இதற்கிடையே இரண்டு இதயம் மற்றும் 4 கால், கைகளுடன் பிறந்த குழந்தை பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதனை பார்த்த மக்கள், அந்த குழந்தை கடவுளின் குழந்தை என்றும், அதனை பார்க்க வேண்டும் என்றும் கருத்து பதிவிட்டனர். இந்த தகவல் வைரலானதை தொடர்ந்து அந்த குழந்தை பிறந்த ஆஸ்பத்திரி முன்பு ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் குழந்தை இறந்த தகவலை டாக்டர்கள் தெரிவித்த பின்னர், அங்கு திரண்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

    • கர்ப்பிணிகளுக்கு அரசு பரிசு பெட்டகத்தை கவுன்சிலர் போஸ் முத்தையா வழங்கினார்.
    • தி.மு.க. வட்ட செயலாளர் பாலா என்ற பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி 84-வது வார்டில் புதிய நகர்புற நலவாழ்வு மையத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். வார்டு கவுன்சிலர் போஸ் முத்தையா குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்.

    பின்னர் இல்லம் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு அரசின் மருந்து பெட்டகப்பரிசுகளை வழங்கினார். இந்த விழாவில் மருத்துவர்கள் அம்பிகா, வினோத், வார்டு உதவி பொறியாளர் முருகன், தி.மு.க. வட்ட செயலாளர் பாலா என்ற பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.

    புதிதாக திறக்கப்பட்டுள்ள நலவாழ்வு மையத்தில் சர்க்கரை நோய் கண்டறிதல், ரத்த அழுத்த பரிசோதனை, பெண்களுக்கு கருப்பை வாய் மற்றும் மார்பகப் புற்றுநோய் ஆகிய பரிசோதனைகள் செய்யப்படும். மேலும் பல்வேறு நோய்களுக்கு டாக்டர்கள் அறிவுறுத்தலின்படி மருந்துகள் வழங்கப்படம். 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இல்லம் தேடி திட்டத்தின் கீழ் மருந்துகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • காடையாம்பட்டி கரட்டு கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் மணிகண்டன். டிப்பர் லாரி உரிமையாளர்.
    • கோபிகாஸ்ரீ (வயது 19) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடை பெற்றது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி கரட்டு கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் மணிகண்டன். டிப்பர் லாரி உரிமையாளர்.

    4 மாத கர்ப்பிணி

    இவருக்கும் தாசசமுத்தி ரம் பகுதியை சேர்ந்த சந்திரன்- சத்தியா ஆகியோ ரது மகள் கோபிகாஸ்ரீ (வயது 19) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடை பெற்றது. கோபிகா ஸ்ரீ 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்த நிலையில் கோபிகாஸ்ரீயின் தந்தை சந்திரனின் பாட்டி மெல்லியம்மாள் என்பவர் நேற்று முன்தினம் இரவு இறந்துவிட்டார். இதற்கு துக்கம் விசாரிக்க தனது தந்தை வீட்டிற்கு செல்ல வேண்டுமென கோபிகாஸ்ரீ கூறியதாக தெரிகிறது.

    வாக்குவாதம்

    இதற்கு மணிகண்டன், தனது தந்தை மாரியப்பனுக்கு உடல்நிலை சரியில்லை, அவரைப் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மணிகண்டன் தனது மனைவி கோபிகா ஸ்ரீயை அவரது தந்தை வீட்டிற்கு அனுப்பி உள்ளார்.

    தற்கொலை

    இதுபற்றி கோபிகா ஸ்ரீ தனது தந்தை வீட்டாரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து நேற்று கோபிகா ஸ்ரீயை அவரது கணவர் வீட்டில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.

    பின்னர் மதியம் மெல்லி யம்மாள் உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது, கோபிகா ஸ்ரீ உடல்நிலை பாதிக்கப்பட்டு காடை யாம்பட்டி அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டு உள்ளதாக அவரது கணவன் வீட்டார், சந்திரன் வீட்டாரிடம் தெரிவித்தனர்.

    இதனை அடுத்து சந்திரன் உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது, கோபிகா ஸ்ரீ இறந்து உள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து கேட்ட போது, கோபிகாஸ்ரீ தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

    மறியல்

    இதனால் ஆத்திரமடைந்த கோபிகா ஸ்ரீயின் தந்தை சந்திரன் மற்றும் அவரது உறவினர்கள் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்ப தாகவும் அவரது சாவிற்கு காரணமான கணவர் மணிகண்டன், மாமனார் மாரியப்பன், மாமியார் அலமேலு ஆகியோரை கைது செய்ய வேண்டும் என கூறி தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையம் முன்பு, சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    போலீசார் விசாரணை

    இதனை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா, இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த தின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, கோபிகாஸ்ரீயின் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் திருமணம் நடந்து 7 ஆண்டுகளுக்கு குறைவாக இருப்பதால் மேட்டூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்தனர். அவர் இதுபற்றி விசாரணை நடத்த உள்ளார். கோபிகா ஸ்ரீ யின் கணவர் மணிகண்டன், மாமனார் மாரியப்பன், மாமியார் அலமேலு ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட இருக்கிறது. 4 மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறுமி 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தார்.
    • சாத்தப்பன் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார்.

    கோவை

    கோவை சாந்திமேடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவருக்கு தாய், தந்தை இல்லை. இதனால் இவர் தனது தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த சாத்தப்பன் (வயது 31) என்பவர் மிஸ்டு கால் மூலமாக நண்பராக பழகினார். சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது அங்கு சென்ற சாத்தப்பன் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார். பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து திருமணம் செய்து ஒரு ஆண்டுகளாக கணவன் -மனைவியாக வாழ்ந்து வந்தனர். இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானார். இதனை அறிந்த ஒருவர் துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • 13 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது.
    • சிறுமியின் பெற்றோா் கடந்த 2022ல் உடுமலை மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டம், உடுமலை அமராவதி நகரைச் சோ்ந்தவா் கோகுலகண்ணன் (வயது 21). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது. இதனால் அந்த சிறுமி கா்ப்பமடைந்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் கடந்த 2022ல் உடுமலை மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

    இந்தப் புகாரின் பேரில் போக்சோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் கோகுலகண்ணனை கைது செய்தனா். இந்த வழக்கானது திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி பாலு தீா்ப்பு வழங்கினாா். இதில், கோகுலகண்ணனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தாா். இந்த சிறுமிக்கு தற்போது குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அவர்களுக்குஇடையேயான தொடர்பு அவரது அக்கா கணவரான உடுமலை தாலுகா சர்க்கார் புதூரைச் சேர்ந்த தங்கராஜ்(29) என்பவருக்கு தெரியவந்தது.
    • உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதாவிடம் புகார் தெரிவித்தார்.

    உடுமலை:

    மடத்துக்குளத்தை அடுத்த நரசிங்காபுரத்தை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 23) , டிரைவர் .இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க பெண்ணை காதலித்து வந்து உள்ளார். அந்தப் பெண் பத்தாம் வகுப்பில் பாதியில் நின்று விட்டார். இதை சாதகமாகக் கொண்டு அந்த பெண்ணை வீரமுத்து ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் உறவில் ஈடுபட்டு உள்ளார்.

    அவர்களுக்குஇடையேயான தொடர்பு அவரது அக்கா கணவரான உடுமலை தாலுகா சர்க்கார் புதூரைச் சேர்ந்த தங்கராஜ்(29) என்பவருக்கு தெரியவந்தது. அதைத் தொடர்ந்து தங்கராஜ் அவர்கள் இருவருக்குமான உறவை வெளியில் சொல்லி விடுவேன் என்று மிரட்டி அந்த பெண்ணை பாலியல் உறவுக்கு உட்படுத்தி உள்ளார். இருவரும் மாறி மாறி சிறுமியை பாலியல் உறவுக்கு உட்படுத்தியதில் அவரது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டது.

    அதைத்தொடர்ந்து அந்த சிறுமி பரிசோதனை மேற்கொண்டார்.அதில் நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து தனது காதலனான வீரமுத்துவை சந்தித்து திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமி கேட்டு உள்ளார். அதற்கு அவர் உனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு நான் தகப்பன் அல்ல உனது அக்கா வீட்டுக்காரரை போய் கேள் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த அந்த சிறுமி உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதாவிடம் புகார் தெரிவித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அதன் முடிவில் வீரமுத்து மற்றும் தங்கராஜ் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆசை வார்த்தை கூறி காதலனும், அக்கா வீட்டுக்காரரும் சிறுமியை கர்ப்பம் ஆக்கிய சம்பவம் மடத்துக்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அதிகாரிப்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தியா (வயது 23) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
    • கதவை திறந்து வெளியே வந்த சந்தியா, வாந்தி எடுத்த நிலையில் அருகில் இருந்த சாக்கடை கால்வாய் தவறி விழுந்தார்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை அதிகாரிப்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தியா (வயது 23) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    தற்போது சந்தியா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு வாந்தியுடன், தலை சுற்றல் ஏற்பட்டது. கதவை திறந்து வெளியே வந்த சந்தியா, வாந்தி எடுத்த நிலையில் அருகில் இருந்த சாக்கடை கால்வாய் தவறி விழுந்தார்.

    இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்தியா பரிதாபமாக இருந்தார். தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

    சாக்கடை கால்வாயில் கர்ப்பிணி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சந்தியாவின் உடலை பார்த்து அவரது கணவர், உறவினர்கள் கதறி அழுதது காண்போர் கண்களை குளமாக்கியது.

    • ஆசை வார்த்தை கூறி அஜய் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
    • அஜய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    கோவை,

    கோவை பேரூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது கல்லூரி மாணவி. இவர் தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு ஈச்சனாரியை சேர்ந்த தொழிலாளி அஜய் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி அஜய் மாணவியை மருதமலை ரோட்டில் உள்ள காலி இடத்துக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அஜய் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    கடந்த சில நாட்களாக மாணவி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

    இது குறித்து மாணவி தனது காதலன் அஜயிடம் தெரிவித்தார். மேலும் தன்னை உடனடியாக திருமணம் செய்யும்படி கூறினார். அதற்கு அவர் கருவை கலைத்து விடு என கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதனால் அதிர்ச்சிய டைந்த மாணவி இது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அனைத்து மகளிர் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த புகாரின் பேரின் கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி அஜய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • கர்ப்பிணி பெண் மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை

    மதுரை பெத்தானியாபுரம் மோதிலால் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (26). இவரது மனைவி சிவரஞ்சனி (19). இருவருக்கும் கடந்த ஆகஸ்டு மாதம் நடந்தது. கர்ப்பிணியான சிவரஞ்சனி கடந்த 7-ந்தேதி இரவு தனது அண்ணன் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து கணவர் கருப்பசாமி கொடுத்த புகாரின்பேரில் கரிமேடு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம்
    • கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் நலத்திட்ட உதவி

     தாராபுரம்:

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம் அலங்கியம் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.முகாமுக்கு வட்டார மருத்துவர் டாக்டர் தேன்மொழி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.மகேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் தேவிகுப்பு, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குணர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்‌.

    முகாமில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    • கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், காய்கறி பிரியாணி போன்றவை வழங்கபட்டது.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில், தமிழக அரசின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

    தி.மு.க. மாவட்ட செயலா ளரும், சட்டமன்ற உறுப்பி னருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஏற்பாட்டில் 286 கர்ப்பிணி பெண்களுக்கு இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார், தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன், கமுதி நகர செயலாளர் பாலமுருகன், அபிராமம் நகர செயலாளர் முத்து ஜாகிர்உசேன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மணிமேகலை, ராஜ கோபால், ஒன்றிய கவுன்சி லர்கள் முத்துக்கிளி, உதயகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் நாகரத்தினம், நாகமணி, காவடிமுருகன் மற்றும் சமூக நலத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

    அனைவரும் கர்ப்பிணி பெண்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினர். பின்னர் தமிழக அரசின் சார்பில் வளையல், குங்குமம், சேலை, அனைத்து வகை பழங்களுடன் கொண்ட சில்வர் தட்டு வழங்கப்பட்டது.

    பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், காய்கறி பிரியாணி போன்றவை வழங்கபட்டது.

    நன்னிலம் அருகே சேங்காலிபுரம் கிராமத்தில் 16 வயது பெண்ணை கர்ப்பமாக்கிய டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள குடவாசல் தாலுக்கா சேங்காலிபுரம் கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் மகன் பாபு (வயது 23). லோடு வேன் டிரைவர். 

    இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகி உள்ளார். இதில் கர்ப்பமான சிறுமி இதுபற்றி தனது தாய்-தந்தையிடம் கூறியுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் இதுபற்றி நன்னிலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் பாபு மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
    ×